வெள்ளி, 29 நவம்பர், 2019

எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய சில இங்கிதங்கள் என்ன?

தும்மும் போதும்‌ இருமல் வரும் போதும் பிறரின் மேல் படாமல் கைக்குட்டயால் மறைத்து தும்முவதோ இரும்புவதோ செய்தல் வேண்டும்.

பிறரின்‌ அழைபேசியை பயன்படுத்தும் போது அவர் அனுமதியின்றி வேறு எதுவும்‌ உள்‌நுழைந்து பார்க்காமல் இருப்பது.

கதவை தட்டிய பிறகே பிறரின்‌ அறையில் நுழைவது.

கண்ட இடங்களில் எச்சில் துப்பவதை தவிர்ப்பது. குறைந்த அளவு பிறரின் மேல் படாதவாறு துப்புங்கள்.

திரையரங்கில் முன்‌சீட்டில் காலை தூக்கி வைக்காமல் இருப்பது. பேருந்து இரயில் பயணங்களின்‌ போதும்‌ தான்.


உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவரை மரியாதையுடன்‌ நடத்துத்துதல். அவர் ஒன்றும் உங்களுக்கு அடிமை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக