திங்கள், 4 நவம்பர், 2019

வரவிருக்கும் ஆண்டில் ஒரு பெரிய தொகையைப் பெறுவதற்காக ஒவ்வொரு மாதமும் 1500 முதலீடு செய்ய சிறந்த வழி எது?

உங்களுடைய கேள்வியிலிருந்து, உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டில், பணத்தினை தேவை உள்ளது. அதற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய். 1500 முதலீடு செய்ய தயாராக உள்ளீர்கள் என்று தெரிகிறது.

குறுகிய காலத்தில் பங்கு சந்தையோ, கடன் பத்திரங்களோ வேண்டாம்;

ஒரு ஆண்டு என்பது மிகவும் குறுகிய காலம். இத்தகைய குறுகிய காலத்தில், பங்குகளில் நேரடியாகவோ அல்லது பங்கு சந்தை சார்ந்த, கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதென்பது, மிகவும் அபாயகரமானது. பணத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம்.

குறுகிய காலத்தில் வங்கியை மட்டுமே நம்பவும்;

எனவே, உங்களுடைய கால வரையறையில், வங்கியின் தொடர் வைப்பு நிதிதான் உங்களுடைய பணத்தினை முதலீடு செய்ய சிறந்த இடம். பணத்தை இழக்கும் வாய்ப்பு இல்லை. மேலும், கூட்டு வட்டியின் மூலம், குறைந்த காலத்தில், நல்ல ஒரு பணப் பெருக்கத்தினைப் பெற முடியும்.

எந்த வங்கியை தேர்ந்தெடுப்பது;

பல்வேறு வங்கிகளின் கூட்டு வட்டி கணக்கிடும் காலவரையறை (Compounding Frequency), கூட்டு வட்டி விகிதம் (Interest Rate) போன்றவற்றை கருத்தில் கொண்டு, நல்லதொரு தொடர் வைப்பு நிதியைத்(Recurring Deposit) தேர்ந்தெடுங்கள்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
நிதி ஆலோசகர் -9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக