சனி, 16 நவம்பர், 2019

பொறியாளன்....
என்ற பொதுப் பெயர் கொண்டவர்கள் நாங்கள் ....
எத்துணை துறைகள் இருக்கட்டும் அத்துணை துறைகளுக்கும் என்றும் துணை எங்கள் துறை ....
அதிக பெண் பிள்ளை கொண்டவர்கள் நாங்கள் ;
ஒவ்வொரு கட்டிடமும் எங்களுக்கு பெண் பிள்ளைதான் ....
பார்த்து , பார்த்து வளர்த்து கட்டிக்கொடுத்து( கட்டி) முடித்து தொலைவில் இருந்து ரசிக்கும் தருணம் ....!!!!
எங்கள் பிறப்பின் பலனை அடைந்த மகிழ்ச்சி ...!!
பலரின் வாழ்க்கை லட்சியம்,கனவு சொந்த வீடு ...
ஒட்டுமொத்த கனவையும் எங்கள் கைகளில் நம்பிக்கொடுத்துவிட்டுச் செல்வார்கள் .
கட்டி முடிப்பதற்குள் இன்னொரு பிறவி எடுப்போம்....
தாய் , சேயை பெற்றெடுப்பது போன்று
கட்டிடத்தை கட்டி முடிப்போம்..!!!
உயிர் பிறிந்து போகலாம் உடலைவிட்டு புகழ் மறைந்து போகாது இந்த மண்ணை விட்டு ....!!!
கடவுள் தூணிலும் இருப்பான் , துரும்பிலும் இருப்பான் .....
நாங்கள் தூணை கொடுத்தோம் ; துரும்பை தூணாகவும் கொடுத்தோம்.....!!!
மண்ணை வைத்து மனிதனை படைத்தான் கடவுள் ..!!
அதே மண்ணை வைத்து இருப்பிடம் படைத்தான் பொறியாளன்- கடவுளுக்கும்.
கொத்தனாரும்,சித்தாளும் கூட பொறியாளர் தான் - அனுபவ பொறியாளர் ;
என்றும் மதிக்க மறந்ததில்லை நாங்கள்.
திரும்பும் திசையெல்லாம் எங்கள் உழைப்பு வானுயர்ந்த நிற்கும்...!!!!
இந்த மண்ணும் எங்கள் சொத்து,
கிடக்கும் கல்லும் எங்கள் சொத்து,
கல்லும் , மண்ணும் , நீரால் ஆன பூமி;
இந்த புவியே எங்கள் சொத்து;
உறுதியேற்றோம் ;;;;
அழிக்க மாட்டோம் ; விளை நிலத்தை;
வீணாய்
கழிக்க மாட்டோம் ; பகல் பொழுதை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக