ஞாயிறு, 29 அக்டோபர், 2017

இன்று பனிபடர்ந்த அருமையான ..உடுமலைப்பேட்டை மண்ணின் மைந்தர் டாக்டர் .மோகன் பிரசாத் MBBS,M.D., D.M(GASTRO) (Chairman V.G.M.Hospital coimbatore)அவர்களின் தலைமையேற்க ...ரோட்டரி தலைவர் திரு.நாகராஜ் அவர்களின் முன்னிலையில் அருமையான விருது (VOCATIONAL EXCELLENCE AWARD)வழங்கும் விழா ...

வரவேட்புரை..திரு ஆனந்த அவர்களின் பேச்சுடன் ஆரம்பித்தது ..
விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்திய தம்பி திரு .சுல்தான் அவர்கள் ..
திரு .வீ.கணேசன் -இரண்டாம் நிலை நூலகர் அவர்கள்
திரு .எஸ் .தாஸ் ராஜன்  -உடற்கல்வி ஆசிரியர் அவர்கள்
திரு .எஸ் .சரவணன் -ஆசிரியர் அவர்கள்
Ms .ஸ்ரீதேவி -பரத நாட்டிய கலைஞர்
இவர்களின் மதிப்புக்குரிய இன்றைய எதிர்கால தலைமுறையினர்க்கு வழிகாட்டிகளாக உள்ளவர்களுக்கு இந்த விருதை அளித்ததுக்கு உடுமலைப்பேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கத்திற்கு உடுமலை மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

டாக்டர் .மோகன் பிரசாத் அவர்களின் ..நேர மேலாண்மை எப்படி கையாளுகிறார்கள் என்பதை ஒரு புத்தகமே எழுதலாம் ...அந்த அளவுக்கு அவருடைய நேரம் ஓவுவொரு மணித்துளியும் பொன் போன்றது ..மருத்தவ உலகில் இருப்பவர்களுக்கு இது நன்கு தெரியும்...இந்த விழாவிற்கு டாக்டர் அவர்களின் தலைமை என்றவுடன் எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி ..எனது நண்பர் நூலகர் கணேசன் அவர்களுக்கு அவர் பொற்கரங்களால் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி ..

டாக்டர் அவர்களை முதன் முதலில் பார்த்தது கோவையில் நான் உலக பாரம்பரிய மிக்க எனது நிறுவனம் மூலம் 2001 ம் வருடம்   ..என் குருநாதர் ..என் வழிகாட்டி ..திரு .எஸ் .ஜெய்ஷ்ங்கர் சுகுமாரன் அவர்களின் மூலம் தான்..என் குருநாதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
டாக்டர் அவர்களை விழாவில் சந்தித்தது வாழ்க்கையில் மறக்க முடியா நிகழ்வு ..டாக்டர் அவர்களின் கடுமையான நேர பணி சூழலில் அவரை நான்கு முறைதான் சந்தித்து உள்ளேன் .இனி தொடரும் நட்புகளுடன் வழிகாட்டிகளாக ..

பணி அர்ப்பணிப்பு :
டாக்டர் என்று சொல்வதை விட ..இவர் எல்லாத்துறைகளிலும் நிகழ்வுகளை தெரிந்து ஆழந்த அறிவாற்றலுடன் விழாவில் பேசியது செவிக்கு உணவாக அமைந்தது ...அவரின் உடுமலையின் நகர்புறத்தில் அமைந்து உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்த மாணவன் ..அவர் பள்ளியில் மாணவராக இருந்தபோது  ரெட் கிராஸ் -அமைப்பில்  ஆசிரியர் செந்தில் ஆறுமுகம் அவர்களின் மகன் திரு .எஸ் .மூர்த்தி அவர்களோடு இணைந்து ..செய்த தண்ணீர் தொட்டி ,கழிவறை ,சுத்தம் செய்தது .. பற்றி பேசியயது ..எந்த வேலை என்றாலும் அதற்கு மதிப்பு கொடுத்து பணியாற்றியது இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு நல்ல ஊக்சக்தியாக அமைந்தது ..

ஆன்மிகம்
:டாக்டர் அவர்கள் ஆன்மிகம் பற்றி பேசும்பொழுது .முருகக்கடவுள் தெய்வமாக வணங்கும் .கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை அரசு மேல்நிலை பள்ளியில் அவர் ஆற்றிய உரைகளை நினைவுகூர்ந்தார் .டாக்டர் அவர்களின் வீட்டில் தங்கியபோதுஅவரிடம் நோட்டு புத்தகங்களில் அவரின் கையெப்பம் இட்டதை மலரும் நினைவுகளாக பேசியது அருமை .

டாக்டர் அப்துல் கலாம் அய்யா யாவை சந்தித்தபோது ..அவரை ...நீங்கள் தமிழ் புலவர என்று கேட்டதை நினைவுகூரந்தது மகிழ்ச்சி ..டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்கள் ..உங்களின் மருத்தவ நூல்கள் எல்லாம் படித்து உள்ளேன் ..எப்படி புலவராக பிரதிபளிக்க முடிகிறது என்று ஆச்சரியத்துடன் கேட்டது வியப்பில்லை ..இன்று பேசிய நிகழ்வுகள் உடுமலை மக்களுக்கு.இன்றைய மாணவர்கள்,கிடைத்த வரப்பிரசாதம் .

நாட்டியம் ..பாடல்கள் :

டாக்டர் அவர்களின் இரண்டு பெண்  குழந்தைகள் நாட்டியம் பழகிய விதம் ..சென்னையில் ,மதுரை தமிழ் சங்கத்தில் ,அமெரிக்காவில் ..பரதநாட்டியம் அரங்கேற்றிய விதம் குறித்த தகவல் ...நாட்டியத்தின் மீது அவர் பற்று கொண்டிருந்தது ..இன்றைய காலங்களில் மறைந்து வரும் ,ஈடுபாடு இல்லாமல் இருக்கும் குழந்தை செல்வங்களுக்கு உணர்த்தியது வெகு அருமை ...

மருத்துவம் : டாக்டர் அவர்கள்  இரைப்பை குடல் மருத்துவம் படித்து ..உடுமலையில் பணியாற்றியபோது ..அவரின் குருநாதர் வேண்டுகோளுக்கு இணங்க ..தினம் தோறும் கோவை சென்று மருத்தவ பணிசெய்தது..அருமை ..உடுமலையின் மண்ணின் மைந்தரை இப்போது மருத்தவ செல்ல பிள்ளையாக கோவை தத்து எடுத்துக்கொண்டது..இருந்தாலும் உடுமலையில்   பிறந்த பாசம் என்றும் அவர் விடுவதில்லை ..உடுமலை மக்களும் கண்டிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வுக்கு அழைத்து வந்துவிடுவார்கள்..இன்னும் அவர்களின் மதிப்பு மிக்க பேச்சுக்கு ஏங்கி இருக்கும் .;எதிர்கால குழந்தைகளுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பார் .

 Dr.பிரிசில்லா சுந்தர்ராஜன்.Regionalcordinato-விழா விருந்தினர்களை ரோட்டரி விருதின் அருமைகளை தன் பேச்சால் உணர்த்தியது வெகு அருமை ..விருதின் தேர்நதெடுத்தமுறை அவர்களின் செயல்பாடுகளை வைத்து மதிப்பை கூட்டுவதாக இருந்தது ..கடமையை யார் செய்தாலும் உடுமலைமக்களுக்கு செய்த பணிகள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருந்துள்ளது .
 நன்றியுரை :

 திரு.முத்துராமலிங்கம்-Assistant Governer-

திரு போத்திராஜ் -செயலாளர்
 திரு.சம்பத்குமார் -ChairmanVocationalservice
ஆகியோர் வழங்கி விழாவை சிறப்பு  உடுமலையின் வடகிழக்கு பருவ மழைக்கான அறிகுறியாகவே இந்த விழா அமைந்தது ..இன்றய ஞாயிறு அருமையான பயனுள்ள நாளாக அமைந்தது மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது ..


.









































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக