புதன், 18 அக்டோபர், 2017

தீபாவளி ....2017

தீபாவளி விடுமுறை தான் ...பயனுள்ள வழியில் நேற்று மாலை என்
நண்பர்கள் ...தந்தி தொலைக்காட்சி ...ரகுமான்  தம்பியுடன் ,நியூஸ் 18 பரணிஷங்கர் அண்ணனுடன் ...நம் சமுதாயத்திற்கு எதுலப்ப மன்னரின் வரலாற்றை வெளிக்கொணர காரணமாக இருந்த மறைந்த நம் புலவர் பழனிசாமி மாமாவின் வீட்டுக்கு சென்று ...பழனிசாமி மாமாவின் குடும்பத்தினரை சந்தித்து விட்டு ..மாமாவின் பேரனுக்கு ..தீபாவளி பலகாரமும் ,பட்டாசு பொருள்களும் கொடுத்துவிட்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வந்தோம் ...அவர் மறைந்தாலும் அவரின் புகழ் மறையவில்லை ..விட்டு சென்றது .வெறும் அன்பு ,நல்ல மனிதர்களை மட்டும் தான் ...அவரின் ஆசீர்வாதங்ககளால் இன்னும் அடையவேண்டிய பாதை இன்னும் உள்ளது ...எனக்கு ஞாயிறு வந்தாலே அவரின் நினைவுகள் தான் தூக்கம் வராமல் செய்கிறது ...இன்று மாலை 107 வயதான தாயம்மாவின் நேர்காணலுக்காக ..ஜில்லெபி நாயக்கன் பாளையம் ..சென்று வந்தது எங்களுக்கு .மகிழ்ச்சி ..வருடம் வருடம் ..திருமூர்த்தி மலையில் இருக்கும் கஞ்சிமலையான் கடவுளுக்கு ..தீப திருநாள் அன்று ...நம் சமுதாய மக்கள் ..உடுக்கம்பாளையம் ஊரு நாயக்கர் ,JN பாளையம் சேர்வை காரர் தீபம் ஏற்றுவதை கூறியது மிக்க மகிழ்ச்சி ...நம் கம்பள சமுதாய மக்களுக்கு எத்தனை பேருக்கு இந்த தகவல் தெரியும் ..நம் திருமூர்த்தி மலையில் கோவில் களில் நமக்கு நம் கம்பள சமுதாய மக்களுக்கு முன்னுரிமை இன்றும் இருக்கிறது ..இந்த வருட தீபாவளி சிறப்பானமுறையில் முடிந்தது மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் ...

எனக்கு நல்ல நண்பர்களை அறிமுகம் செய்த நம்ம மாப்பிளை செந்தில்ராம் அவர்களுக்கு நன்றிகள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக