செவ்வாய், 14 நவம்பர், 2017

விருப்பாச்சி (virupatchi) - பதிவு -20.
.
மதுரை சுல்தான்களை விரட்ட வந்தது விஜநகர அரசு .. அதன் வழி -வரி வாசூலிக்க வந்தது நாயக்க அரசு .. அதன் வழி -வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டது பாளையப்பட்டுக்கள். அப்படி உருவாக்கப்பட்ட விருப்பாச்சி பாளையபட்டின் முதல் பாளையக்காரர் திருமலை சின்னப்ப நாயக்கர். அவர் வழி தொட்டு விருப்பாச்சியின் 19-வது பாளையக்காரர் கோபால் நாயக்கர் ... இவரோடு விருப்பாச்சி பாளையப்பட்டு அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டது. அப்படி இறுதியில் ஆங்கிலேயர்களால் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் நிலங்கள் பங்கு போடப்பட்டன .. ஆங்கிலேயர்கள் பங்குபோட்ட நிலங்களை செல்லும்போது விற்றுவிட்டு சென்றனர். தற்போது, அரண்மனை இருந்ததாக சொல்லப்படும் நிலத்தில் விவசாயம் செய்து வருவோர்களுக்கு, கடந்த 60 ஆண்டுகளாக உரிமை உடையதாய் இந்த நிலம் உள்ளது. இதோ வரலாற்று சுவடுகள் சில

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக