செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஜல்லிபட்டி தம்புராஜ்
உடுமலை: பருவமழையால், பசுந்தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளதால், தளி, ஜல்லிபட்டியில், செம்மறி ஆடு வளர்ப்பு தொழில் அதிகரித்து வருகிறது.
விவசாயத்திற்கு உறு துணையாக, கறவை மாடு, ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தளி, ஜல்லிபட்டி பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளது. இரவு நேரங்களில், பட்டிகளிலும், பகல் நேரங்களில் மலைக்கரட்டின் அடிவாரத்தில், ஆடுகளை மேய்த்து வரு
கின்றனர். ஆடுகள் எண்ணிக்கை, எடை அதிகரித்தால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக, தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையால், ஆடு வளர்ப்பு தொழில் கடுமையாக பாதித்தது. இதனால், விவசாயிகள் ஆடுகளை விற்க துவங்கினர்.
இந்தாண்டு, கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை ஓரளவு பெய்துள்ளதால், மீண்டும் ஆடு வளர்ப்பு தீவிரமடைந்துள்ளது.
செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஜல்லிபட்டி தம்புராஜ் கூறுகையில், '' என்னிடம், 50 செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடு உள்ளது. எண்ணிக்கை அதிகரித்தால், பெரிய ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
நிரந்தரமான விலை கிடைப்பதில்லை. ஜோடி, 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. விசேஷ தினங்களில், கூடுதல் விலை கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டதால், ஆடு வளர்க்க முடியவில்லை. தற்போது, மழை பெய்ததால், பசுமை திரும்பியுள்ளது,'' என்றார்---Thanks Dinamalar....
Note.......
எங்கள் தாத்தா காலத்தில் நிலம் நீச்சைவைத்து எங்களை யாரும் எடை போடவில்லை நாங்கள் வளர்த்த ஆடு மாடுகளை வைத்து தான் எடைபோட்டர்கள் ,எங்களின் ஆடுகளும் பசுக்களும் மற்றும் காளை மாடுகள் தான் வாழவைக்கும் எங்கள் குலதெய்வங்கள் ...புது வீடு கட்டி குடிபுகுந்தாலும் முதலில் நுழைபவன் மனிதனல்ல.பசுக்கள்தான்.அவை லக்ஷ்மிக்கு சமம்..என் தாத்தா பிறந்த மண்ணில்.. பில்லாவ நாயக்கன் சாளையூர் ..எரிசினம்பட்டி Shyam summer Holidays Special...🌿🌿🌿🌿💐💐💐💐 — feeling happy in Udumalaippettai. — feeling happy in Udumalaippettai.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக