மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களுக்கு இட்ட 10 கட்டளைகள் எவை?
(வருடம் ...2004)
என் மனைவியும் எனக்கு கட்டளைகள் இட்டார்.இந்த கேள்வியை நானே என் மனைவியிடம் கேட்டுப் பெற்றேன்,(வருடம் ...2004)
ஒருநாள் இரவு உணவுக்குப் பின் 11 மணிக்கு உறங்க தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவியிடம் நான் விளையாட்டாக 10 கட்டளைகள் இட்டாள் நான் அதை கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று சொன்னேன்,
உடனே கேட்ட மகிழ்ச்சியில் கட்டளைகள் இட தயாரானார் என் மனைவி, எனக்கோ மனதில் ஒரு பதட்டம் ஒரு வேலை சொல்லிவிட்டார் என்றால் என்ன செய்வது என்று அவரின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை பார்த்தபடி பயப்படாத டா கைப்புள்ளனு எனக்குள் கூறிக்கொண்டு கேட்க தயாரானேன்.
கட்டளை 1: வாரத்தில் ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் அவருடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
கட்டளை 2: நான் கைப்பேசி அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது.
கட்டளை 3: நண்பர்களுடன் சேர்ந்து உலாவுதல் கூடாது.
கட்டளை 4: தன்னுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்வைகள் அலைபாயக் கூடாது.
அடுத்து என்று யோசித்து கொண்டிருக்க…
முதல் கட்டளையே விழி பிதுங்க வைத்து விட்டது அதுவும் நான்காவது கட்டளை சொன்னவுடன் இதற்கு மேல் பொருக்க முடியாது குருநாதா என்று யோசிக்கும் பொழுது என் மனைவி அவ்வளவு தாங்க பத்துலாம் இல்ல இந்த நான்கு கட்டளைகளை கடைப்பிடிங்க என்றார்.
நான் உடனே அதெல்லாம் இல்ல பத்தும் சொன்னால் தான் நான் கடைப்பிடிப்பேன் மீதி ஆறு கட்டளைகள் சொல்லவில்லை என்றால் அந்த நான்கையும் கடைப்பிடிக்க மாட்டேன் என்றேன்..
ஓ அப்படியா என்று யோசிக்க..
எப்படியாவது இந்த ஆட்டத்தை கலைத்துவிடனும்னு இன்னும் இருபது நிமிடத்தில் அந்த ஆறு கட்டளைகளையும் சொல்லிடனும்னு கெடு வைத்தேன்.
என் மனைவி யோசித்து ஒவ்வொன்றும் சொல்ல அவை யாவும் இந்த நான்கிற்குள் அடங்குதுனு சமாளிக்க இப்படியே மீதி ஆறு கட்டளைகளை சொல்ல விடாமல் சமாளித்து இருபது நிமிடத்தை கடக்க வைத்து, நான் நான்கையும் கடைப்பிடிக்க முடியாது என்று சொல்ல
பிறகு என்ன இடியுடன் கூடிய அடை(டி) மழை பொழிய.
கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு இருக்க தூங்கிடுனு தூங்கிட்டேன்.
(வருடம் ...2004)
என் மனைவியும் எனக்கு கட்டளைகள் இட்டார்.இந்த கேள்வியை நானே என் மனைவியிடம் கேட்டுப் பெற்றேன்,(வருடம் ...2004)
ஒருநாள் இரவு உணவுக்குப் பின் 11 மணிக்கு உறங்க தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவியிடம் நான் விளையாட்டாக 10 கட்டளைகள் இட்டாள் நான் அதை கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று சொன்னேன்,
உடனே கேட்ட மகிழ்ச்சியில் கட்டளைகள் இட தயாரானார் என் மனைவி, எனக்கோ மனதில் ஒரு பதட்டம் ஒரு வேலை சொல்லிவிட்டார் என்றால் என்ன செய்வது என்று அவரின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை பார்த்தபடி பயப்படாத டா கைப்புள்ளனு எனக்குள் கூறிக்கொண்டு கேட்க தயாரானேன்.
கட்டளை 1: வாரத்தில் ஒருநாள் இரவு முழுவதும் தூங்காமல் அவருடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
கட்டளை 2: நான் கைப்பேசி அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது.
கட்டளை 3: நண்பர்களுடன் சேர்ந்து உலாவுதல் கூடாது.
கட்டளை 4: தன்னுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்வைகள் அலைபாயக் கூடாது.
அடுத்து என்று யோசித்து கொண்டிருக்க…
முதல் கட்டளையே விழி பிதுங்க வைத்து விட்டது அதுவும் நான்காவது கட்டளை சொன்னவுடன் இதற்கு மேல் பொருக்க முடியாது குருநாதா என்று யோசிக்கும் பொழுது என் மனைவி அவ்வளவு தாங்க பத்துலாம் இல்ல இந்த நான்கு கட்டளைகளை கடைப்பிடிங்க என்றார்.
நான் உடனே அதெல்லாம் இல்ல பத்தும் சொன்னால் தான் நான் கடைப்பிடிப்பேன் மீதி ஆறு கட்டளைகள் சொல்லவில்லை என்றால் அந்த நான்கையும் கடைப்பிடிக்க மாட்டேன் என்றேன்..
ஓ அப்படியா என்று யோசிக்க..
எப்படியாவது இந்த ஆட்டத்தை கலைத்துவிடனும்னு இன்னும் இருபது நிமிடத்தில் அந்த ஆறு கட்டளைகளையும் சொல்லிடனும்னு கெடு வைத்தேன்.
என் மனைவி யோசித்து ஒவ்வொன்றும் சொல்ல அவை யாவும் இந்த நான்கிற்குள் அடங்குதுனு சமாளிக்க இப்படியே மீதி ஆறு கட்டளைகளை சொல்ல விடாமல் சமாளித்து இருபது நிமிடத்தை கடக்க வைத்து, நான் நான்கையும் கடைப்பிடிக்க முடியாது என்று சொல்ல
பிறகு என்ன இடியுடன் கூடிய அடை(டி) மழை பொழிய.
கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சிக்கிட்டு இருக்க தூங்கிடுனு தூங்கிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக