இன்று ..26-10-2019.....கு .க .பிறைசூடிப்பித்தான் -சித்தமருத்துவர் -கவிஞர்
(மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்-கொழுமம் )
சித்தமருத்துவருடன் ஒரு அருமையான சந்திப்பு ...மருத்துவர் அய்யா அவர்கள் ...சித்தமருத்துவ Encyclopedia ....
விண்ணோடும் முகிலோடும் விளையாடி நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்... அருகில் வளைந்து நெளிந்து ஓடும் அமராவதி... காயப்போட்ட பச்சைப் புடவைகளாகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் நெல்வயல்கள்... இடையிடையே தோகைத் தோரணம் வீசும் கரும்புத் தோட்டங்கள்... இப்படி இயற்கையன்னை ஜீவனோடு வாழும் கொழுமம் கிராமத்தில்... இயற்கை வேளாண்மையோடு... மூலிகை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் 86 வயது பெரியவர் பிறைசூடிப் பித்தன்.
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
உடுமலைப்பேட்டையில் இருந்து பழநி செல்லும் வழியில்தான் இருக்கிறது இந்த கொழுமம். இங்கேயுள்ள தன்னுடையத் தோட்டத்தில், மஞ்சள்வெயில் மருதாணி பூசும் மாலை நேரத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை சந்தித்தோம். மகிழ்ச்சி பொங்க வரவேற்றவர், உலாத்தியபடியே பேச ஆரம்பித்தார்.
''எனக்கு மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அதுல 30 ஏக்கர்ல கிணற்றுப் பாசனம். 7 ஏக்கர்ல அமராவதி ஆத்துப் பாசனம் நடக்குது. கடந்த நாலு வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். 10 ஏக்கர்ல தென்னை,
20 ஏக்கர்ல 70 மாமரங்கள், 300 உரிகம்புளி மரங்கள், 500 பெருநெல்லி, 500 சப்போட்டானு கலந்து வெச்சிருக்கேன். அதோட... இந்த 20 ஏக்கர்லயும் ஊடுபயிரா ஏகப்பட்ட மூலிகைச் செடிகளை வெச்சிருக்கேன்'' என்றவர், தென்னை மற்றும் மா ஆகிய பயிர்களில், தான் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விவரித்தார். அது-
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை மருத்துவம்!
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
தென்னை... முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். இந்த நிலங்களில் உழவுபோட்டு நாலு வருஷமாகிறது. முள், விஷச்செடிகளைத் தவிர... மற்றச் செடி, கொடிகளை அகற்றுவதில்லை. பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்துள்ளேன். ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி, மாறி சென்றுகொண்டே இருக்கும். தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளேன். கற்றாழையின் கசப்புத் தன்மை, தென்னை வேர்களுக்குப் போகிறது. இதனால் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட், வாடல் நோய் போன்றவை குறைகிறது. இளம் குரும்பைகள் அதிக அளவில் உதிர்வதும் நின்றுவிட்டது.
சராசரியாக ஒரு மரத்தில் இருந்து,
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்களை அறுவடை செய்கிறேன். தேங்காயின் தரம், கொப்பறையின் பிழிதிறன் அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 10 கிலோ தொழுவுரமும், ஒரு முறை 5 கிலோ மண்புழு உரமும் கொடுக்கிறேன். இயற்கை உரங்களை பருவமழை காலத்துக்கு முன்பாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்பதால், அதை கடைபிடிக்கிறேன். தொடர்ந்து தோப்பினுள் விழுகின்ற தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டு விடுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்படுவதுடன், மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னைக் கழிவுகள்!
மாமரங்களைக் காக்கும் மூலிகை!
மாமரங்கள், தை மாதம் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் 500 மில்லி பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் நீரில் கலந்து புகைமூட்டம் போல வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால், பூக்கள் எல்லாம் உதிராமல் நிற்கும். காய்கள் வளரும் சமயத்தில் மீன் அமிலம்
50 மில்லியை பத்து லிட்டர் நீரில் கலந்து, இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்கள் அனைத்தும் தரமாக வளர இது அவசியம். தொடர்ந்து வாரம் ஒருமுறை பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் இரண்டும் கலந்து செல்வதால்... வேர் அழுகல் நோய் தாக்குவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்த கையோடு மழைக் காலங்களில் மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம் இடுவது அவசியம். பழஈக்களின் 'லார்வாக்கள்’ தோலைச் சுரண்டி, சேதப்படுத்தும். அதைத் தவிர்க்க மூலிகை மருந்து தயாரித்துப் பயன்படுத்துகிறேன்
மாமரத்துக்கு மட்டுமல்ல... தோட்டத்தில் இருக்கின்ற சப்போட்டா, நெல்லி, உரிகம்புளி என எல்லா பழப் பயிர்களுக்கும் இதே முறையைத்தான் கடைபிடிக்கிறேன்.
கூடுதல் மகசூல் இல்லை... கூடுதல் செலவும் இல்லை!
தொழில்நுட்பங்களைப் பேசி முடித்த பிறைசூடிப்பித்தன், ''இயற்கை முறையில காய்கறி சாகுபடியும் செய்றேன். ஆத்துப் பாசனத்துல 6 ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையில நெல் சாகுபடி செஞ்சு, ஏக்கருக்கு 25 குவிண்டால் மகசூல் எடுத்துக்கிட்டிருக்கேன்.
இயற்கை விவசாயம் செய்றதால... எனக்கு அதிகமான மகசூல் கிடைக்கல. ஆனா, மற்ற ரசாயன விவசாயிகளுக்கு கிடைக்குற அதே அளவுக்கு கிடைக்கத்தான் செய்யுது. அதேசமயம், அவங்க அளவுக்கெல்லாம் நான் செலவு செய்றதில்ல. சொல்லப்போனா... செலவுனு பெருசா எதுவுமே இல்ல'' என்றவர்,
''நோய் இல்லாத அடுத்தத் தலைமுறைக்கான உணவையும், மூலிகைகளையும் விட்டுச் செல்றேங்கற பெருமையே போதும்... வருமானக் கணக்கு தேவையில்ல'' என்று விடைகொடுத்தார்.
பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகளை விரட்ட...
சோற்றுக் கற்றாழை, போகன் வில்லா என்கிற காகிதப் பூச்செடி, உண்ணிச்செடி ஆகியவற்றை தலா 5 கிலோ எடுத்து, மண் பாத்திரத்தினுள் போட்டு, மூழ்கும் அளவு சுத்தமான தண்ணீர் நிரப்பி, நன்றாக வேகவைக்க வேண்டும். சிவப்பு நிற திரவமாக மாறியிருக்கும். அதை வடித்து, வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் 250 கிராம் மஞ்சள்தூளைப் போட்டு கலக்கி, 12 மணிநேரம் கழித்து பயன்படுத்தலாம். இதில் 300 மில்லி கரைசலை எடுத்து, 10 லிட்டர் நீரில் கலந்து, காலை நேரம் வயலில் தெளித்தால், பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகள் அறவே அழியும்.
கருவேல் மூலிகை
100 மில்லி கொழுந்து கருவேல் இலைச்சாறு, 300 மில்லி அமுதக்கரைசல் இரண்டையும் 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால்... நெற்பயிரைத் தாக்கும் பல நோய்கள் காணாமல் போய்விடும்.
பழஈக்களுக்கு பூண்டு வைத்தியம்
வெள்ளைப்பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-100 கிராம். இவை இரண்டையும் அம்மியில் போட்டு நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். 250 கிராம் இஞ்சியில் சாறு எடுத்து, இதனுடன் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் 250 மில்லி மண்ணெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட வேண்டும். இதை நன்றாக வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தால், பழஈக்கள் காணாமல் போய்விடும்.
வண்டு விரட்டி!
நொச்சி, எருக்கன், பீநாரி, வேம்பு இலைகளை தலா இரண்டு கிலோ அளவுக்கு எடுத்து, நன்றாக இடித்து, மண் பாத்திரத்தில் போடவேண்டும். கலவை மூழ்கும்படி பசுமாட்டுச் சிறுநீரை ஊற்ற வேண்டும். கூடவே, ஒரு கிலோ மஞ்சள்தூளைப் போட்டுக் கலக்கிவிட்டு, அந்தப் பாத்திரத்தை
12 மணி நேரம் வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் வண்டு விரட்டி தயார். இந்தக் கரைசலை 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளித்தால்... வண்டுத் தாக்குதல் குறைந்து, பழங்கள் தரமானதாக கிடைக்கும்....
அறிஞர் அண்ணா அவர்களின் நட்பு ...பற்றி ஏராளமான தகவல்கள் இன்று தீபாவளி பரிசாக செவிக்கு இனிமையாக அமைந்தது ..அவரின் மூலிகை மருத்துவ தோட்டத்தில் கால்பதித்து வந்தது ..இனிமையான தீபாவளி சந்திப்பு ..மகிழ்ச்சி .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681
(மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்-கொழுமம் )
சித்தமருத்துவருடன் ஒரு அருமையான சந்திப்பு ...மருத்துவர் அய்யா அவர்கள் ...சித்தமருத்துவ Encyclopedia ....
விண்ணோடும் முகிலோடும் விளையாடி நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்... அருகில் வளைந்து நெளிந்து ஓடும் அமராவதி... காயப்போட்ட பச்சைப் புடவைகளாகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்து கிடக்கும் நெல்வயல்கள்... இடையிடையே தோகைத் தோரணம் வீசும் கரும்புத் தோட்டங்கள்... இப்படி இயற்கையன்னை ஜீவனோடு வாழும் கொழுமம் கிராமத்தில்... இயற்கை வேளாண்மையோடு... மூலிகை ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் 86 வயது பெரியவர் பிறைசூடிப் பித்தன்.
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
உடுமலைப்பேட்டையில் இருந்து பழநி செல்லும் வழியில்தான் இருக்கிறது இந்த கொழுமம். இங்கேயுள்ள தன்னுடையத் தோட்டத்தில், மஞ்சள்வெயில் மருதாணி பூசும் மாலை நேரத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை சந்தித்தோம். மகிழ்ச்சி பொங்க வரவேற்றவர், உலாத்தியபடியே பேச ஆரம்பித்தார்.
''எனக்கு மொத்தம் 37 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அதுல 30 ஏக்கர்ல கிணற்றுப் பாசனம். 7 ஏக்கர்ல அமராவதி ஆத்துப் பாசனம் நடக்குது. கடந்த நாலு வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். 10 ஏக்கர்ல தென்னை,
20 ஏக்கர்ல 70 மாமரங்கள், 300 உரிகம்புளி மரங்கள், 500 பெருநெல்லி, 500 சப்போட்டானு கலந்து வெச்சிருக்கேன். அதோட... இந்த 20 ஏக்கர்லயும் ஊடுபயிரா ஏகப்பட்ட மூலிகைச் செடிகளை வெச்சிருக்கேன்'' என்றவர், தென்னை மற்றும் மா ஆகிய பயிர்களில், தான் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி விவரித்தார். அது-
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை மருத்துவம்!
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
தென்னை... முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். இந்த நிலங்களில் உழவுபோட்டு நாலு வருஷமாகிறது. முள், விஷச்செடிகளைத் தவிர... மற்றச் செடி, கொடிகளை அகற்றுவதில்லை. பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்துள்ளேன். ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி, மாறி சென்றுகொண்டே இருக்கும். தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளேன். கற்றாழையின் கசப்புத் தன்மை, தென்னை வேர்களுக்குப் போகிறது. இதனால் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட், வாடல் நோய் போன்றவை குறைகிறது. இளம் குரும்பைகள் அதிக அளவில் உதிர்வதும் நின்றுவிட்டது.
சராசரியாக ஒரு மரத்தில் இருந்து,
ஈரியோபைட் சிலந்திக்கு கற்றாழை !
40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்களை அறுவடை செய்கிறேன். தேங்காயின் தரம், கொப்பறையின் பிழிதிறன் அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 10 கிலோ தொழுவுரமும், ஒரு முறை 5 கிலோ மண்புழு உரமும் கொடுக்கிறேன். இயற்கை உரங்களை பருவமழை காலத்துக்கு முன்பாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்பதால், அதை கடைபிடிக்கிறேன். தொடர்ந்து தோப்பினுள் விழுகின்ற தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டு விடுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்படுவதுடன், மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னைக் கழிவுகள்!
மாமரங்களைக் காக்கும் மூலிகை!
மாமரங்கள், தை மாதம் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் 500 மில்லி பஞ்சகவ்யாவை, 10 லிட்டர் நீரில் கலந்து புகைமூட்டம் போல வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால், பூக்கள் எல்லாம் உதிராமல் நிற்கும். காய்கள் வளரும் சமயத்தில் மீன் அமிலம்
50 மில்லியை பத்து லிட்டர் நீரில் கலந்து, இரண்டு முறை தெளிக்க வேண்டும். காய்கள் அனைத்தும் தரமாக வளர இது அவசியம். தொடர்ந்து வாரம் ஒருமுறை பாசனநீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் இரண்டும் கலந்து செல்வதால்... வேர் அழுகல் நோய் தாக்குவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்த கையோடு மழைக் காலங்களில் மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம் இடுவது அவசியம். பழஈக்களின் 'லார்வாக்கள்’ தோலைச் சுரண்டி, சேதப்படுத்தும். அதைத் தவிர்க்க மூலிகை மருந்து தயாரித்துப் பயன்படுத்துகிறேன்
மாமரத்துக்கு மட்டுமல்ல... தோட்டத்தில் இருக்கின்ற சப்போட்டா, நெல்லி, உரிகம்புளி என எல்லா பழப் பயிர்களுக்கும் இதே முறையைத்தான் கடைபிடிக்கிறேன்.
கூடுதல் மகசூல் இல்லை... கூடுதல் செலவும் இல்லை!
தொழில்நுட்பங்களைப் பேசி முடித்த பிறைசூடிப்பித்தன், ''இயற்கை முறையில காய்கறி சாகுபடியும் செய்றேன். ஆத்துப் பாசனத்துல 6 ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையில நெல் சாகுபடி செஞ்சு, ஏக்கருக்கு 25 குவிண்டால் மகசூல் எடுத்துக்கிட்டிருக்கேன்.
இயற்கை விவசாயம் செய்றதால... எனக்கு அதிகமான மகசூல் கிடைக்கல. ஆனா, மற்ற ரசாயன விவசாயிகளுக்கு கிடைக்குற அதே அளவுக்கு கிடைக்கத்தான் செய்யுது. அதேசமயம், அவங்க அளவுக்கெல்லாம் நான் செலவு செய்றதில்ல. சொல்லப்போனா... செலவுனு பெருசா எதுவுமே இல்ல'' என்றவர்,
''நோய் இல்லாத அடுத்தத் தலைமுறைக்கான உணவையும், மூலிகைகளையும் விட்டுச் செல்றேங்கற பெருமையே போதும்... வருமானக் கணக்கு தேவையில்ல'' என்று விடைகொடுத்தார்.
பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகளை விரட்ட...
சோற்றுக் கற்றாழை, போகன் வில்லா என்கிற காகிதப் பூச்செடி, உண்ணிச்செடி ஆகியவற்றை தலா 5 கிலோ எடுத்து, மண் பாத்திரத்தினுள் போட்டு, மூழ்கும் அளவு சுத்தமான தண்ணீர் நிரப்பி, நன்றாக வேகவைக்க வேண்டும். சிவப்பு நிற திரவமாக மாறியிருக்கும். அதை வடித்து, வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் 250 கிராம் மஞ்சள்தூளைப் போட்டு கலக்கி, 12 மணிநேரம் கழித்து பயன்படுத்தலாம். இதில் 300 மில்லி கரைசலை எடுத்து, 10 லிட்டர் நீரில் கலந்து, காலை நேரம் வயலில் தெளித்தால், பூஞ்சணம் மற்றும் மாவுப்பூச்சிகள் அறவே அழியும்.
கருவேல் மூலிகை
100 மில்லி கொழுந்து கருவேல் இலைச்சாறு, 300 மில்லி அமுதக்கரைசல் இரண்டையும் 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால்... நெற்பயிரைத் தாக்கும் பல நோய்கள் காணாமல் போய்விடும்.
பழஈக்களுக்கு பூண்டு வைத்தியம்
வெள்ளைப்பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-100 கிராம். இவை இரண்டையும் அம்மியில் போட்டு நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். 250 கிராம் இஞ்சியில் சாறு எடுத்து, இதனுடன் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையுடன் 250 மில்லி மண்ணெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட வேண்டும். இதை நன்றாக வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தால், பழஈக்கள் காணாமல் போய்விடும்.
வண்டு விரட்டி!
நொச்சி, எருக்கன், பீநாரி, வேம்பு இலைகளை தலா இரண்டு கிலோ அளவுக்கு எடுத்து, நன்றாக இடித்து, மண் பாத்திரத்தில் போடவேண்டும். கலவை மூழ்கும்படி பசுமாட்டுச் சிறுநீரை ஊற்ற வேண்டும். கூடவே, ஒரு கிலோ மஞ்சள்தூளைப் போட்டுக் கலக்கிவிட்டு, அந்தப் பாத்திரத்தை
12 மணி நேரம் வெயிலில் காயவைத்து, வடிகட்டினால் வண்டு விரட்டி தயார். இந்தக் கரைசலை 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளித்தால்... வண்டுத் தாக்குதல் குறைந்து, பழங்கள் தரமானதாக கிடைக்கும்....
அறிஞர் அண்ணா அவர்களின் நட்பு ...பற்றி ஏராளமான தகவல்கள் இன்று தீபாவளி பரிசாக செவிக்கு இனிமையாக அமைந்தது ..அவரின் மூலிகை மருத்துவ தோட்டத்தில் கால்பதித்து வந்தது ..இனிமையான தீபாவளி சந்திப்பு ..மகிழ்ச்சி .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக