செவ்வாய், 22 அக்டோபர், 2019

கேள்வி : வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்கள் எவை?

பதில் :நான் எழுதும் விஷயங்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்ககையில் நடந்தவை

வசதி இல்லையென்று சொந்தகாரர்கள் நம்மை வெறுப்பதும் மற்றும் தள்ளி வைப்பதும்.
குடும்பமாக வாழ நினைக்கும்போது சொந்தங்களின்  பேச்சைக்கேட்டு தனிக்குடித்தனம் செல்வதும்.
வாழ்க்கையில் ..கணவன் மனைவி வேளைக்கு சென்று .10 வருட சொந்த முயற்சியில் .கொஞ்சம் கொஞ்சமாக ..சொத்து ..வாகனம் ..குழந்தைச்செல்வம் ..அழகா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு செல்லும் வேலையில் ..நண்பர்களோ ..சொந்தங்களோ ..குடும்ப வாழ்க்கையை நிலைகுழைய செய்வது ..

சக மாணவர்கள் என்னிடம் என் அண்ணன் வாங்கி கொடுத்தான்,என் அக்கா வாங்கி கொடுத்தார்கள் என்று சொல்லும் போதும்,நமக்கு யாருமே இல்லையெ என்று எண்ணிய நேரம்.
பிள்ளையின் படிப்பிற்காக கடன் கேட்கும்போது அவன்லாம் படிச்சு என்னத கிளிக்க போறான்னு என்று சொன்னவர்களின் வாக்கியங்களும்.
பிள்ளைகள் கேட்பதை வாங்கி தர முடியாத சூழ்நிலை உள்ள தாய் தந்தையர்களின் நிலைகளும்
நமக்கு உடுத்த துணி எடுத்து கொடுத்து அவர்கள் கிழிந்த துணியை தைத்து போட்டு கொண்டு நிற்கின்ற நேரம்
நமக்கு இரவு உணவு கொடுத்து தாய் தந்தைக்கு உணவு இல்லாமல் தண்ணீரை பருகுகின்ற நேரம்.
நிறைய உண்டு இதுவே போதும் என நினைக்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக