ஞாயிறு, 27 அக்டோபர், 2019

நியூஸ் 18 நெறியாளர் திருநாவுக்கரசு

காலத்தின் குரல்: 

திருநாவுக்கரசு

தினமலர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் திருநாவுக்கரசர். அதனை தொடர்ந்து நியூஸ் 18 செய்தி சேனலில் மூத்த ஊடகவியாளராக சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார்.  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். திருநாவுக்கரசரின் உடல் மந்தவெளி திருவள்ளூவர் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இரங்கல் தெரிவித்துள்ளது.


மூத்த செய்தியாளர் திருநாவுக்கரசு மறைவுக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி, ஸ்டாலின், திருமாவளவன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உடுமலையில் அவரது சொந்த ஊரான எரிசனம்பட்டியில் இறுதி நிகழ்வில் ..தினமணி பத்திரிகையாளர் ராஜமாணிக்கம் அவர்கள் இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் ..திராவிட கழகத்தின் குளத்தூர் மணி ,தா மு மு கா  அப்துல்கயும் ,தனியரசு ,எழுத்தாளர் பாமரன் ,கம்யூனிஸ்ட் கட்சி பாலபாரதி ,நியூஸ்18 தலைமை செய்தியாளர் குணசேகரன் மற்றும் சொந்தங்கள் ,நண்பர்கள் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டனர் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக