ஞாயிறு, 23 மே, 2021

 

உடுமலை வரலாறு is feeling in love with Lion Raja Sundaram and 

 in Udumalaippettai.



உடுமலை நாராயணகவி பிறந்த  நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை📚📚✍️✍️🙏🙏🙏


உடுமலை தந்த கவிமலை பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நராயணகவி 40 ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்வோம்🙏🙏🙏


தெரிஞ்சாப் பேசணும்

தெரியாட்டிக் கேக்கோணும்

அறிஞ்சாலும் அஞ்சுபேத்த கேட்டாகோணும்

அதம்படி நடக்க வேணும்

எனும் பகுத்தறிவுக் கவிராயரின் வரிகளையும்

மானமெல்லாம் போன பின்னே

வாழ்வது தானொரு வாழ்வா?

வணிகர் குல மரபினுக்கோ

வகைதர ஏன் பிறந்தேனோ?

குஞ்சரமீதும் பஞ்சணை மேலும்

குலவிய காலம் ஓர் காலம்

நஞ்சணையாளின் வஞ்சனையாலே

நடைப்பிண மானதோர் காலம்

கரையடுத்த நீரிருக்க

கானலை நாடிடும் மானினம் போல்

கனிகொடுத்தான் தனை விடுத்தே

கணிகையின் பால் அலைந்தேனே

கற்பகமேவும் கனியருந்தாமல்

காஞ்சிரங்காயை உண்டேனே

காமுகன் யான் கண்ணகியான்

மாமுகம் காணவுமாமோ

தப்பிதம் பலவும் யானே புரிந்தும்

தாசியை நோவதும் வீணே

என உடுமலை நராயணகவியின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை அவது நினைவு நாளில் நினைவுகூர்வோம்.

உடுமலை நாராயண கவி இயற்கை அன்னையைப் போற்றும் வகையில் மரம் வளர்க்க வேண்டும் என்று அவர் எழுதிய பாடல்

உலகம் வாழ மழை

பொழிந்திட வேண்டும் - காலம்

பொழிந்திட நாம் வனமரங்கள்

வளர்த்திட வேண்டும் 0 இந்த (உலகம்)

புலங்கள் தோறும் பூண்டு புல்லும்

வுளம்பெற வேண்டும் - கதிர்

விளைந்திட வேண்டும் - உயிர்

இனங்கள் யாவும் அருந்தி நாளும்

சுகம் பெற வேண்டும் - நாம்

துணை செய்ய வேண்டும் இந்த

வுhனம் வழங்காதெனிலோ

ஊனுடையேது? – உயர்

தூனம் தருமம் தவமெய்ஞ்

ஞாணமும் ஏது? – நலம்

காணும் கடவுள் பணிகள்

காட்சியுமேது? – முதல்

காரணம் மாமழை இலையேல்

தோற்றமும் ஏது – எழுவகைத்

தோற்றமும் ஏது – அதனால்

அனைவரும் மரம் வளர்க்க வேண்டும்

எனும ;உடுமலை நாராயணகவியின் சமூக அக்கறையை நாம் நினைவில் ஏந்துவோம்

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை நாராயணகவியின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தலில் நெஞ்சில் நிறுத்துவோம்.

அவர் சொன்ன சமூக அறிவியல் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவோம்.

கடந்த 2017 ஆம்.ஆண்டு உடுமலை முற்போக்கு அமைப்பு களோடு. உடுமலை நாராயண.கவி.நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்தமூன்றாண்டுகளாக சிறப்பு செய்யப்படுகிறது,உடுமலை நாராயணகவி பிறநத நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை.

மேலும் நாராயணகவி பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தமைக்கு 

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 19,05,2018 இல் இரு பெரும் வரலாற்று த்திருவிழா வை நடத்தி நன்றி தெரிவிக்கப்பட்டது

உடுமலை வரலாறு 23.05.2021📚📚✍️✍️✍️🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக