சனி, 8 மே, 2021

மாண்புமிகு  மாவட்ட அமைச்சர் பெருமக்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 


தமிழக அமைச்சரவையில்    திருப்பூர் மாவட்ட  மக்களின் மனமறிந்து  பணியாற்ற  இரண்டு அமைச்சர்களை ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்போம்.


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறையாக இருந்த   துறையினை  மக்களுக்கான  செய்தித் துறையாக மாற்றி   அதனை நமது  மாவட்டத்தின்  காங்கேயம் தொகுதியில்  வெற்றி பெற்ற  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய  மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் திருப்பூர் முதல் உடுமலை தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. அது போன்று  மிகச் சிறப்பான  மக்கள் பணிகள் செய்ய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்வோம்.


அதே போல்   ஆதிதிராவிடர ;நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும்  திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் இப்போதுதான் முதன் முறையாகச் சட்டமன்றம் செல்கிறார். 


அவருக்கும் இந்த நல் வாய்ப்பினை வழங்கிய  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துகளையும் பதிவு செய்வோம்.

திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களின்  பணி சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குவோம்.


திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 


இங்ஙனம் 

கீர்த்திவீரர் வீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

உடுமலைப்பேட்டை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக