செவ்வாய், 25 மே, 2021

கேள்வி :  நமக்கு பிடித்தவர் நம்மிடம் பேசாமல் போனாலும் , நாம் அவரையே நினைத்து நேரத்தை விரயமாக்கி கொண்டு இருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது?


என் பதில் : 


உண்மையை சொல்லவேண்டுமென்றால், நானும் இதற்கான பதிலை என் வாழ்க்கையில் ஒரு காலத்தில்  தேடிக்கொண்டு இருந்தேன் ..முதலில் எனக்கும்தெரியவில்லை ,இத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று !!..அவர்களது எண்ணம் வந்துகொண்டே இருக்கும் ..சரியாக உண்ணாமல் ,உறங்காமல் தவித்த காலங்களும் உண்டு .

அனால் இப்போது அதிலிருந்து சிறிதளவு வெளியில் வந்துவிட்டேனென்றே தோன்றுகின்றது ...அனால் இப்போதும் முழுமையாக வெளியே வர இயலவில்லை ....ஆனால் என் வாழ்க்கையை கொஞ்சம் எனக்கு பிடித்தது போல் வாழ பழகிக்கொண்டிருக்கிறேன் ...

பிடித்த விஷயங்களை செய்கிறேன் ..பிடித்த உணவுகளை உண்கிறேன்..இசையை ரசித்து கேக்கிறேன் ....சிறிதளவு மாதம் ஏற்பட்டிருக்கிறதென எண்ணுகிறேன் ..இன்னும் சிறி து நாட்கள் சென்றால் ,இதுவும் கூட இன்னும் சிறப்பாக மாறலாம் என தோன்றுகிறது ..கவலை கொள்ளாதீர்கள் பொருமையாக இருங்கள் ...புரிந்துகொள்வார்கள் ,.அதற்க்கு காலம் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும் ..


அதே நேரத்தில் ..நாம் புரிந்துகொள்ளாமல், பேசாமல் விட்ட நமது நண்பனோ ,காதலியோ நாம் பேச காத்திருப்பார்கள் இல்லையா ...அவர்களிடம் பேசுவோம் ...அவர்கள் தவறுகளை மன்னிப்போம் ..ஆம் இது ஒரு வட்டம் ..." நாம் பேச நினைப்பவர்கள் நம்மிடம் பேச மாட்டார்கள் ..நம்மிடம் என நினைப்பவர்களிடம் நாம் பேச மாட்டோம் "....


ஆனால் இங்கு எல்லோரும் சமமே ....அதை புரிந்து கொள்வோம் ...இதே நேரத்தில் இதெல்லாம் ஒரு பகுதியே ...மீதம் உள்ள பகுதி நமது சுய முன்னேற்றம் ...அதை சிறப்பாக செய்வோம் ...காலம் மாறும்போது உண்மையான உறவுகள் புரிந்துகொள்ளும் ..தேவைக்காக பழகியவர்களை நாம் புரிந்துகொள்வோம் ...


நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக