இன்று சர்வதேச தம்பதியர் தினம் ( மே - 29 )
*அம்மி மிதித்து , அருந்ததி பார்த்து , மங்கல வாத்தியம் முழங்க பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணையும் இரு மனங்கள் காலகாலமாக இணை பிரியாமல் வாழ்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ,
அவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொண்டு , வாழ்வில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து மக்கட் செல்வங்களை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு நல்* *வாழ்கையை அமைத்துக் கொடுத்து , தன் இருவீட்டு குடும்பத்தாரையும் அனுசரித்து அரவணைத்து நடந்து எல்லா சுக- துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்று இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் நல்ல மன நிறைவான வாழ்கையை வாழ்ந்து ஊருக்கே*
*முன்னுதாரணமாக வாழும் தம்பதிகள் என்றென்றும் நினைவு கூறத் தகுந்த வர்கள் மற்றும் வணங்கி மகிழப்பட வேண்டியவர்கள் . வாழ்த்துக்கள் தம்பதியரே . வேற்றுமையில் ஒற்றுமையை காணும் தம்பதியர் ஆகச் சிறந்தவர்கள்* .
*ஆழம் விழுதுகள் போல்*
*உறவு ஆயிரம் வந்தும் என்ன*
*வேர் என நீ இருந்தாய்*
*அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் !*
*பேருக்கு பிள்ளை உண்டு*
*பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு*
*என் தேவையை யார்* *அறிவார்* *உன்னை போல்*
*தெய்வம் ஒன்றே அறியும் !*
ஃஃஃஃஃ
( *சற்று விபரம் அறியாதவர்கள் , தன் குடும்ப சூழ்நிலையை உணராமல் அடுத்தவரை போல் வாழ ஆசைப்படுபவர்கள் , வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் , சகிப்புத்தன்மை குறைவானவர்கள் , குணத்தை விட பணத்திற்கும் பதவிக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் , சரியான வழிகாட்டுதல் இன்றி வளர்க்கப் பட்டவர்கள் இக்காலத்தில் திருமணமான வெகு விரைவில் பிரியும் நிலை உருவாகியுள்ளது சற்று வேதனையான ஒன்று , இந்நிலை மாற வேண்டும் , அதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும்* )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக