கேள்வி : இக்காலத்தில் படித்தவர்களிலும் முட்டாள்தனமாக சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்களா?
என் பதில் :
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அந்நிறுவனமானது குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களுடையது, அங்கே வேலை செய்பவர்களும் பெரும்பாலும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில் நான் கூறப்போகும் விடயங்கள் அவ் இனத்தின் கருத்துக்களா அல்லது அந்த நபர்களின் கருத்துக்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.
நாங்கள் எங்கள் இனப் பெண்களை வேலைக்கு அனுப்புவதை விரும்பவில்லை. காரணம் அவ்வாறு வேலைக்கு செல்லும் போது அங்கு யாரையாவது காதலித்து சுற்றி திரிகிறார்கள். காதலித்தவன் விட்டுச்சென்றால் பிறகு மாப்பிள்ளை தேடுவது கடினம். ஒரு பெண்ணை வீட்டில் வந்து 100 வரன் பார்த்து சென்றாலும் பரவாயில்லை. வேலைக்கு அனுப்பக்கூடாது.
ஒரு பெண் பூப்படைந்துவிட்டால் என்றால் அந்த பெண் திருமணம் மற்றும் குழந்தை பிரசவிக்க தயாராகிவிட்டாள் என்று அர்த்தம். அந்த சிறுமிக்கு 12, 13, 14, 15 எந்த வயதாக இருந்தாலும் சரி. 9 வயதாக இருந்தாலும் சரியே. அந்த காலத்தில் பெண்களுக்கு 12, 13 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அதனால்தான் கற்பழிப்பு அதிகரிக்கிறது. அத்துடன் அந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால் அவள் கணவனே உலகம் என இருப்பாள். தவறான வழியில் செல்லமாட்டாள்.
அவள் திருமணம் முடித்து சுழற்சி முறையில் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்பெண் ஆரோக்கியமாக இருப்பாள்.
எல்லா பெண்களும் ஆண்களும் உணர்ச்சிக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பெண்களை எப்போதும் தங்களுக்கு கீழேயே வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தலைக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.
பெண்கள் இருப்பது அவர்களின் தேவைக்கு மட்டும்தான்.
பெண் பலவீனமானவள்.
ஆண்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. ஆண்கள் எத்தனை பெண்களோடு வேண்டுமென்றாலும் செல்வோம். ஆனால் பெண் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
எல்லா பெண்களையும் போகப் பொருளாகவே பார்ப்பது.
இவற்றையெல்லாம் கேட்டு நொந்து போய் இருக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக