கேள்வி : நீங்கள் கற்றுக்கொண்ட சமீபத்திய வாழ்க்கை பாடம் எது?
என் பதில் :
ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் ..
ஆம் இதுவே நான் கற்ற வாழ்க்கை பாடம் ..காரணத்தை கூறுகிறேன் கேழுங்கள் ..
நேற்று முன்தினம் எனது அண்ணியின் தாயார் இறந்து போனார் ..அவருக்கு ஒரு 76 வயதுதான் இருக்கும் ..திடீரென யாரும் எதிர்பார்மல்வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார் ,நாங்களெல்லாம் அதிரிச்சி யாகி விட்டோம் ..சரிஎன்று அவரர்களது வீட்டிற்கு சென்றோம் ..அன்று பொது முடக்கம் ஆதலால் நெருங்கிய உறவின்முறைகள் மட்டுமே வந்துஇருந்தனர் ..எமது அண்ணியார் தாய் வழி சொந்தமும் ,தந்தை வழி சொந்தமும் மிகப்பெரியது ,கூடவே எங்களது சொந்தபந்தமும் ..அவர் வயது முதிர்வு காரணமாக மரணித்ததால் உடலை கொரன காலம் என்பதால் நீண்ட நேரம் வைத்து இருக்க முடியவில்லை ....கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தவுடன் ...4 மணிநேரம் வீட்டில் வைத்திருந்து ,உடனே ஆம்புலன்சில் மயானத்திற்கு கொண்டு சென்றோம் ..
...எங்கள் ஊர்களில் ஒருவர் மரணித்தால் செய்யப்படும் சடங்குகல் அதிகம் ..மேலும் அனைத்து உறவினர்களும் வந்தபின்தான் இறுதி யாத்திரை தொடங்கும் ...அனால் அங்கு அது எதுவுமே நடைபெற முடியாமல் போய்விட்டது....அங்கிருந்தபோது எனக்கு இதுதான் தோன்றியது.." இத்தனை உறவுகள் இருந்து என்ன புண்ணியம் .. " என்று . என்ன செய்ய விதி....இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்படித்தானோ என தோன்றியது ...
ஆம் ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை நாம் தனிமையியேயே எதிர்கொள்ள வேண்டும் ....
இதுவே நான் கற்ற சமீபத்திய வாழ்க்கை பாடம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக