திங்கள், 31 மே, 2021



வருடம்தோறும் வரும் ஜூன் மாத பசுமை மீள்பதிவுகள் ..June 1.06.2011

❤❤❤🌷🌷🌷
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.ஒவ்வொரு தகப்பனுக்கும் .. முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷ்யாமியை முதன் முறையாக பள்ளிக்கு LKG வகுப்புக்கு(பாரதிவித்யாபவன் -வேடப்பட்டி -கோவை ) அழைத்து செல்லும் போது 4 வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....முதல் 4 மணி நேர பிரிவு ...எனக்குதான் அழுகை அழுகையாக வந்தது ..அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னைகையுடன் வலம் வந்த நாள் .. ....ஷியாம் வெகு சாகுவாசமாக சொன்ன சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க அழுகாம ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் வாங்க....என்று வழியனுப்பிவைத்தவன் .. என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மை கற்று கொண்டவன் ...தைரியம்,சாதுரிய தன்மையை மட்டும் அவள் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...❤❤❤😍😍🌷🌷💐💐⛱⛱

ஞாயிறு, 30 மே, 2021

 கேள்வி : நம் கண்முன் ஒரு விபத்து நடக்கும்போது உடனடியாக செயல்பட முடியாமல் திகைத்து நிற்பதற்கான காரணம் என்ன?


என் பதில் : 


கேள்வி கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு.


ஏன் சரி?


காரில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறீர்கள், டமாரென பக்கவாட்டில் வந்து இடித்து விடுகிறார்கள். கொஞ்சம் ‘ஷாக்’ ஆகி மூளையில் உள்ள நியூரான்கள் குழம்பும், அப்படியே அதிர்ந்து உட்கார்ந்து விடுவீர்கள், எனவே சரிதான்.


ஏன் தவறு?


முதலில் கொஞ்சம் குழம்பினாலும், மூளை உடனே ஆபத்து என ஆபாயமணி ஒலிக்கும், அட்ரினலின் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்.


‘அட்ரினலின்’ (Adrenaline) ஹார்மோனை Flight or Fight hormone என்பார்கள். விபத்து ஏற்படுத்திய நபரிடம் போய் ‘டேய் இடிக்கறதுக்கு என் கார்தான் கிடைச்சுதா’ என ஆக்ரோஷமாக சண்டையிட வைப்பது -Fight. இடித்த மாத்திரத்தில் அந்தநபர் ஜெட் வேகத்தில் ‘எஸ்ஸாகிவிடுவது’ Flight. இரண்டுக்கும், ஐயா ‘அட்ரினலின்’ தான் காரணம்.


எப்படி மூட்டைப்பூச்சி கடிச்சா, வலியே இல்லாம ரத்தம் போகுதோ, அதேமாதிரி அட்ரினலின் சுரந்தா தற்காலிகமாக வலியே தெரியாம போகும்.


டூவீலர் விபத்துல நிறைய பேருக்கு காலில்/கையில் ரத்தகாயம் ஏற்படும். ஆனாலும் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு வந்துருவாங்க, வலி தெரியாது. வீட்ல வந்து பார்த்தா ரத்தம் இருக்கும், அடுத்தநாள் வலிக்கும். இந்த வலியில்லாத நிலை அட்ரினலின் செய்ற வேலைதான்.


சரி, பெரிய விபத்து, ஆபத்தான நிலைமையில் இருந்து மீண்டு வந்தால்? Post traumatic Stress Disorder, (அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம்) வரலாம். நினைவு இழப்பு வரலாம். கஜினி படம் மாதிரி.


விபத்தால் நினைவு இழந்த ஒரு நபர், ஒரு வழக்கின் தீர்ப்பை முடிவு செய்தார். அந்த முக்கிய சம்பவத்தை ப்ளாஷ்பேக்கலாம் .


ஆகஸ்ட் 1997


இதயங்களின் இளவரசி அவள், பேரழகி.கமீலா என்கிற தோழியோடு உறவில் இருந்துகொண்டு, தனக்கு துரோகம் செய்த கணவனையும், அரச பதவியையும் தூக்கி எறிந்தவள். முன்னாள் கணவனை பழிவாங்குவதாக எண்ணியோ அல்லது உண்மையான அன்புக்கு ஏங்கியோ, சில தவறான உறவுகளிலும் சிக்கிக் கொண்டவள். எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இந்த ஏக்கப்பார்வை,சாந்தமான பேச்சு, மக்களை ‘நம் இளவரசி தூயவள்’ என்றே சொல்லவைத்தன. விவாகரத்தாகி பிள்ளைகளை விட்டு தனியாக வசித்தாலும், அரசி எலிசபெத், சார்லஸ் எல்லாரையும் விட பிரபலமாக இருந்தாள் டயானா. அதற்கு கொடுத்த விலை ‘பேப்பரஸி’ எனப்படும் ‘எங்கு சென்றாலும் தொடரும் அடாவடி புகைப்படக்காரர்கள்’.


அந்த நாள்-


பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டலில் டயானா, காதலனும் எகிப்திய தொழிலதிபர் டோடி அல் ஃபயீத்துடன் தங்கியிருக்கிறார். இருவரும் பாரில் நன்றாக குடித்து இருந்தார்கள், திரும்ப ஹோட்டல் கிளம்ப யத்தனித்தனர். அவர்களோடு, ஓட்டுநர் பால், டோடியின் மெய்காப்பாளர் ரீஸ் ஜோன்ஸ் இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.


இவர்கள் காரை, பேப்பரஸி படை சிலமைல் தொலைவில் துரத்துகிறது. ஓட்டுநர் பேப்பரஸியை தவிர்க்க வேகமாக ஓட்ட, ஒரு டனலில் கார் கவிழ்ந்து விபத்து. டோடியும், ஓட்டுநர் பாலும் spot out.

டயானாவுக்கு பெரிதாக காயமில்லை என்றனர் முதலில். வரவேண்டிய ஆம்புலன்ஸ் வழக்கம்போல தாமதமாக வந்தது! மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காது, டயானா இறந்ததாக அறிவித்தனர்.

இந்த கோர விபத்தில் பிழைத்த ஒரே ஒருவர் மெய்காப்பாளர், ரீஸ் ஜோன்ஸ் மட்டுமே.

இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் இருநாடுகளிலும் பிரிட்டிஷ் அரச குடும்பம்தான் டயானாவை சதி செய்து தீர்த்து கட்டியதாக வதந்தி பரவியது.

டயானா, டோடி மூலம் கர்ப்பமானதாகவும், இது இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு தெரிந்து ‘கவுரவ கொலை’ செய்துவிட்டார்கள் என எல்லாரும் நம்ப துவங்கினர். விபத்துக்கு இருந்த ஒரே சாட்சி ‘ரீஸ் ஜோன்ஸ்’ உயிருக்கு போராடி வந்தார்.

ரீஸ் ஜோன்ஸ் 1 மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு, உயிர் பிழைத்தார். டோடியின் அப்பா, Mohammed al fayed இவருக்கு ஏகப்பட்ட பிரஷர் கொடுத்தார். ம்ஹும், ரீஸ் ஜோன்ஸுக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை, காரில் ஏறியது, விபத்தானது மட்டுமே நினைவில் இருந்தது.


வலது டிரெவர் ரீஸ் ஜோன்ஸ் (Trevor Rees Jones), இடது டயானா சென்ற கார், பாரீஸில் விபத்தான போது

டோடியின் தந்தை முகமது அல் ஃபயீத், இச்சம்பவமே ஒரு திட்டமிட்ட கொலை, ரீஸிற்கும் இதில் தொடர்பு உண்டு என விசாரணை கமிஷன்முன் வாதிட்டார். ரீஸ் வேண்டுமென்றே நினைவு தப்பியதாக நடிப்பதாகவும், இவரை இங்கிலாந்து ‘secret service’ இயக்குவதாகவும் குற்றம் சுமத்தினார்.

விசாரணை கமிஷன், உளவியல் நிபுணர்களை வைத்து சோதித்தது. Post traumatic stress disorder (PSTD) ஆல் ரீஸ் நினைவு இழந்தது உண்மையே என தீர்ப்பானது. மேலும் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று விசாரணையை மூடியது.

தப்பிப்பிழைத்த ரீஸ், தனக்கு இருந்த பாதி நினைவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்போது ஒரு சின்ன ஊரில், sports store இல் வேலை பார்த்து ஜீவனைக் கழித்துக்கொண்டு இருக்கிறார்.

ஆக ஒரு Memory loss ஆன PTSD நபரால் சாட்சியளிக்கப்பட்டு, டயானா இறப்பு, விபத்தாகவே வரலாற்றில் பதியப்பட்டது.


முடிவாக-


விபத்தினால் முதலில் அதிர்ச்சி, பின்னர் அட்ரினலின் பாய்ச்சல், வலிமறக்க செய்யும் நிலை, அட்ரினலின் அதிகமாக சுரந்ததால் வரும் அதீத செயல்பாடு (ADHD), நினைவு இழப்பு (permanent Memory loss), அதிர்ச்சிக்கு பிறகான மன அழுத்தம் (PTSD), குறிப்பிட்ட சம்பவம் மட்டும் மறப்பது (Selective Amnesia) என உளவியல் ரீதியில் பல பின்விளைவுகள் ஏற்படலாம். விபத்து ஏற்பட்டால், உடம்போடு, மனசையும் உற்றுநோக்குங்கள்!


கேள்வி என்னவோ, ‘ஏன் திகைக்கிறோம்’ என்கிறது. ஆனா, பந்தை ஏரியாதாண்டி அடித்தது விழிப்புணர்வாக இருக்கட்டுமே என்றுதான்.


சனி, 29 மே, 2021

கேள்வி :..15000 சம்பளம் வாங்கும் நான் எந்த வழியில் சேமிப்பை துவங்கலாம்? தகுந்த ஆலோசனைகள் வேண்டும்..


என் பதில் : 


சேமிக்கும் பழக்கம் இருப்பது எப்போதும் நம்மை பாதுகாக்கும்.

தேவையற்ற செலவு செய்யாமல் இருந்தாலே நிறையே சேமிக்கலாம்.

நீங்கள் குறைந்தது 3000 சேமிக்க பாருங்கள். நல்ல பரஸ்பர நிதியில் மாதம் 1000 (அ) 2000, வீதம் SIP முறையில் குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள்.(முதலீடு செய்யும் முன்பு நன்கு ஆய்வு செய்யுங்கள்). இது உங்களுக்கு நல்ல லாபம் ஈட்டி தரும்.

நல்ல வட்டி தரும் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்யுங்கள்.

முடிந்தவரை ஆரோக்கிய உணவுகள் சாப்பிட்டு மருத்துவ செலவுகளை குறையுங்கள்.

இன்சூரன்ஸ் எடுத்து கொள்ளுங்கள்.

இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். 

நன்றி.📚✍️🙏

சிவக்குமார் ...V.K

நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com

9944066681..📚✍️✍️👍👍🚗🚗🏡🏡

வெள்ளி, 28 மே, 2021

இன்று சர்வதேச தம்பதியர் தினம் ( மே - 29 )


 *அம்மி மிதித்து , அருந்ததி பார்த்து , மங்கல வாத்தியம் முழங்க பெற்றோர்கள்,  பெரியோர்கள் மற்றும் உற்றார்,உறவினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணையும் இரு மனங்கள் காலகாலமாக இணை பிரியாமல் வாழ்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , 

அவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் ஏற்றுக் கொண்டு , வாழ்வில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து மக்கட் செல்வங்களை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு நல்* *வாழ்கையை அமைத்துக் கொடுத்து , தன் இருவீட்டு குடும்பத்தாரையும் அனுசரித்து அரவணைத்து நடந்து எல்லா சுக- துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்று இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் நல்ல மன நிறைவான வாழ்கையை வாழ்ந்து ஊருக்கே* 

*முன்னுதாரணமாக வாழும் தம்பதிகள் என்றென்றும் நினைவு கூறத் தகுந்த வர்கள் மற்றும் வணங்கி மகிழப்பட வேண்டியவர்கள் . வாழ்த்துக்கள் தம்பதியரே . வேற்றுமையில் ஒற்றுமையை காணும் தம்பதியர் ஆகச் சிறந்தவர்கள்* . 


 *ஆழம் விழுதுகள் போல்* 

 *உறவு ஆயிரம் வந்தும் என்ன* 

 *வேர் என நீ இருந்தாய்* 

 *அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் !* 


 *பேருக்கு பிள்ளை உண்டு* 

 *பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு* 

 *என் தேவையை யார்* *அறிவார்* *உன்னை போல்*

*தெய்வம் ஒன்றே அறியும் !* 

         

                   ஃஃஃஃஃ


( *சற்று விபரம் அறியாதவர்கள் , தன் குடும்ப சூழ்நிலையை உணராமல்  அடுத்தவரை போல் வாழ ஆசைப்படுபவர்கள் , வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் , சகிப்புத்தன்மை குறைவானவர்கள் , குணத்தை விட பணத்திற்கும் பதவிக்கும் தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ,  சரியான வழிகாட்டுதல் இன்றி வளர்க்கப் பட்டவர்கள் இக்காலத்தில் திருமணமான வெகு விரைவில் பிரியும் நிலை உருவாகியுள்ளது சற்று வேதனையான ஒன்று , இந்நிலை மாற வேண்டும் , அதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும்* )

வியாழன், 27 மே, 2021

 கேள்வி : நீங்கள் வீடு வாங்கும் போது உங்கள் சக்தி / தேவைக்கு ஏற்ப தெரிவு செய்வீர்களா அல்லது அக்கம்பக்கம், கெளரவம், ஆடம்பரம் இவற்றுக்கு முதன்மை கொடுப்பீர்களா?


என் பதில் : 


நான் வீடு வாங்குவதற்கு மூன்று விடயங்களைக் கொண்டு முடிவு செய்வேன்.


1. எனது தேவை என்ன?


2. என்னால் முடிந்த நிதி எவ்வளவு?


3. எனக்கு பொருத்தமானது, தனிவீடா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீடா ?


4. எனது தேவையை முதலில் முடிவு செய்வேன். எனது குடும்பத்தின் தற்கால, எதிர்காலத் தேவையைக் கொண்டு வீட்டினை முடிவு செய்வேன்.


நன்றி ...

சிவக்குமார் .V.K 

நிதி ஆலோசகர் 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com


செவ்வாய், 25 மே, 2021

கேள்வி :  நமக்கு பிடித்தவர் நம்மிடம் பேசாமல் போனாலும் , நாம் அவரையே நினைத்து நேரத்தை விரயமாக்கி கொண்டு இருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது?


என் பதில் : 


உண்மையை சொல்லவேண்டுமென்றால், நானும் இதற்கான பதிலை என் வாழ்க்கையில் ஒரு காலத்தில்  தேடிக்கொண்டு இருந்தேன் ..முதலில் எனக்கும்தெரியவில்லை ,இத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று !!..அவர்களது எண்ணம் வந்துகொண்டே இருக்கும் ..சரியாக உண்ணாமல் ,உறங்காமல் தவித்த காலங்களும் உண்டு .

அனால் இப்போது அதிலிருந்து சிறிதளவு வெளியில் வந்துவிட்டேனென்றே தோன்றுகின்றது ...அனால் இப்போதும் முழுமையாக வெளியே வர இயலவில்லை ....ஆனால் என் வாழ்க்கையை கொஞ்சம் எனக்கு பிடித்தது போல் வாழ பழகிக்கொண்டிருக்கிறேன் ...

பிடித்த விஷயங்களை செய்கிறேன் ..பிடித்த உணவுகளை உண்கிறேன்..இசையை ரசித்து கேக்கிறேன் ....சிறிதளவு மாதம் ஏற்பட்டிருக்கிறதென எண்ணுகிறேன் ..இன்னும் சிறி து நாட்கள் சென்றால் ,இதுவும் கூட இன்னும் சிறப்பாக மாறலாம் என தோன்றுகிறது ..கவலை கொள்ளாதீர்கள் பொருமையாக இருங்கள் ...புரிந்துகொள்வார்கள் ,.அதற்க்கு காலம் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும் ..


அதே நேரத்தில் ..நாம் புரிந்துகொள்ளாமல், பேசாமல் விட்ட நமது நண்பனோ ,காதலியோ நாம் பேச காத்திருப்பார்கள் இல்லையா ...அவர்களிடம் பேசுவோம் ...அவர்கள் தவறுகளை மன்னிப்போம் ..ஆம் இது ஒரு வட்டம் ..." நாம் பேச நினைப்பவர்கள் நம்மிடம் பேச மாட்டார்கள் ..நம்மிடம் என நினைப்பவர்களிடம் நாம் பேச மாட்டோம் "....


ஆனால் இங்கு எல்லோரும் சமமே ....அதை புரிந்து கொள்வோம் ...இதே நேரத்தில் இதெல்லாம் ஒரு பகுதியே ...மீதம் உள்ள பகுதி நமது சுய முன்னேற்றம் ...அதை சிறப்பாக செய்வோம் ...காலம் மாறும்போது உண்மையான உறவுகள் புரிந்துகொள்ளும் ..தேவைக்காக பழகியவர்களை நாம் புரிந்துகொள்வோம் ...


நன்றி ....


திங்கள், 24 மே, 2021

கேள்வி : உண்டியலானது எதற்காக பன்றியின் வடிவத்தில் செய்யப்படுகிறது?



என் பதில் :  உண்டியல்கள் பன்றி வடிவிற் செய்யப்படுவதன் காரணம் அவற்றின் பெயரே PIGGY BANK என்பதால் தான்.


600ஆண்டுகளுக்கு மனிதர்கள் தமது சில்லறைகளை சமையற்கட்டில் இருந்த சீல் பண்ணிய ஒரு மூடியிடப்பட்ட களீமண் சாடியிற் சேர்த்து வைத்தனர். இந்தச்சாடி இறுதியில் உடைக்கப்பட வேண்டியதென்பதால் அது PYGG என்னும் மஞ்சள் நிறமான தரம் குறைந்த களிமண்ணாற் செய்யப்பட்டது PYGG களிமண்ணாற் செய்யப்பட்ட சாடி PYGGY JAR ஆகிற்று


PYGGY JAR என்பதே பின்னாளில் PIGGY BANK என்றானது. பெயரின் காரணத்தையே மறந்துவிட்ட உண்டியல் செய்வோர் அதனைப் பன்றியுருவிலேயே செய்யலாயினர். சேமிப்புப் பழக்கமும் வளர்ந்தோர் கையிலிருந்து இளையோர் கைக்கு மாறிவிட்டதனால் பன்றி வடிவம் உட்பட எல்லா மாற்றமுமே வெகு SMOOTH ஆக நடந்து முடிந்து விட்டன..


நன்றி ..

ஞாயிறு, 23 மே, 2021

 கேள்வி : திராவிட கட்சிகளின் அங்கிள்கள் ஆட்சிக்கு வந்தால் 90-ஸ் கிட்ஸூக்கு இலவசமாக பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பார்களா? அப்படி எதாவது தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?..தற்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் ..


என் பதில் : 


அடா-அடாடா, இதுவல்லவோ கேள்வி!! சான்றமை வினா கோருநர் ஆக வரவேண்டியவர் நீங்க, இப்படி அனானியா கேட்டுட்டீங்களே ப்ரோ!!


கிராமத்துல சொல்லுவாங்க ‘கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வையி’ அதுமாதிரி, ‘(தேர்தல்) நடக்கறது நடக்கட்டும், எனக்கு கல்யாணத்த நடத்தி வை’ என்கிற 90ஸ் குழந்தையின் உள்ளக்குமுறல் இது. கேட்குது ப்ரோ!


இப்போ, ரமணா போல புள்ளிவிவரங்கள்-


2001 இல் எடுத்த சென்சஸ் (மக்கள்தொகை) கணக்கு இது. இதன்படி 90களில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் பிறந்து இருக்காங்க. பற்றாக்குறை 26 (முதல் வரிசை 1991, இரண்டாவது 2001)

பாண்டிச்சேரியிலும்/கேரளாவிலும் உபரியாக பெண்கள் உள்ளனர், என்பதை ஜிமிக்கி கம்மல் ஃபேன்களுக்கு கோடிட்டு காண்பித்துக் கொள்கிறேன். ரோடு போட வேண்டியது உங்கள் வேலை ஆமா! 


சரி 90களில் தான் பெண்கள் குறைவோ, என தேடினால், இல்லை 70,80 களிலும் பாலின விகிதம் குறைவாதான் இருந்து இருக்கு (1970–928 பெண்கள், 1980- 977)

இதனால் தெரிய வருவது என்னவெனில், பெண் சிசுக்கொலையால் தான் பெண்கள் சதம் குறைந்து, ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்ற வாதம் உண்மையானது அல்ல, அல்ல அல்ல…

சரி அப்போ, என்னதான் பிரச்சினை? இது உலக அளவில் நடந்து வரும் சமூகமாற்றம். உலகமயமாக்கப்பட்ட இந்தியாவிலும் எதிர் ஒலிக்குது, அவ்வளவுதான்.


Early millieanials என்றால் 30களில் உள்ளவர்கள், late millieanials என்றால் 20கள். இந்த மில்லினியல்களை சர்வே எடுத்ததுல, தெரிய வந்தது இது.


அதிகமா படிச்ச மில்லினியல்கள் இந்திய முறைப்படி நிச்சயம் செய்த திருமணம் செய்வதை வெறுக்கிறாங்க.

நகர்வாழ் பெண்களில் 41% பேர் காதல் திருமணம்தான் சிறந்தது என்று கருத்து வைத்து இருக்கிறார்கள்.


வேறு எந்த தலைமுறையை விட, தற்போது dating செய்வது, live in உறவுகளும் வெளிப்படையாக நடக்கிறதாம்.

நகர்வாழ் மக்களிடம் ‘premarital Sex’ அதாவது திருமணத்திற்கு முன்னான உறவு பற்றிய கருத்து மாறிவிட்டதாம். சகஜமாக நடக்கிறது என்கிறார்கள், அதனால் திருமணம் செய்வது இரண்டாம்பட்சம் என்கிறார்கள். (கிராமத்தில் சர்வே எடுக்கப்படவில்லை, அதனால் நிலவரம் தெரியவில்லை)

60000 க்கு மேல் சம்பாதிக்கும் மில்லினியல்கள் மட்டுமே திருமணத்திற்கு தயார் என்கிறார்களாம். 10000 க்கும் குறைவாக சம்பாதிப்போர், திருமணம் வேண்டாம் என்கிறார்களாம்.


வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் இடையே ஜாதி இரண்டாம்பட்சம், அந்தஸ்தே திருமணத்தை முடிவு செய்கிறது. வசதி குறைந்தவர்கள் இடையே ‘ஜாதி’க்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.


ரொம்ப நாள் வரன் தேடிய 35% பேர், திருமணம் கசக்கும் என்று வெளியேறிவிட்டார்களாம்.

அதேபோல, பெண்கல்வி சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க, பெண்கள் திருமணத்தை சார்ந்து இயங்குவது குறைந்து உள்ளதாம் (1960 களில் 20% பெண்கள் 25 வயது வரை திருமணம் ஆகாது இருந்துள்ளனர், இப்போதோ, 43% பேர்)

எனவே, அதிகரிக்கும் ‘பணத்தேவை’, பெண் கல்வியால் ஏற்பட்ட விழிப்புணர்வு, picky ஆன பெற்றோர்கள், பாலின உறவுக்கு திருமணம் தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை குறைந்தது, டேடிங் கலாசாரம் அனைத்தும் சேர்ந்துதான் இந்த 90s kids திருமணத் தடைகளுக்கு காரணம். இது 2000,2010 gen இல் இன்னும்தான் அதிகரிக்கும். எனவே, இன்றைய பெற்றோர் better get used to it!


சரி திராவிட அங்கிள்ஸ் கல்யாணம் பண்ணிவைப்பாங்களா?


திராவிட அங்கிள்ஸ் பலத்த கைராசி உள்ளவர்கள், பல ‘வீடுகளை’ பார்த்தவர்கள்தான்,திருமண நிகழ்ச்சியிலேயே கூட்டணி பேசுபவர்கள்தாம், but நிலைமை இப்போ changed பிரதர்.


எனவே,90s kids எல்லாம் RSS இல் சேர்ந்து பிரம்மசாரியாகி. தேசநலனுக்கு பாடுபட்டு…


சரிசரி வெந்த புண்ணில் உப்பை தடவாது இதோட எஸ்ஸாகிக் கொள்கிறேன் 😜


நன்றி ....


 

உடுமலை வரலாறு is feeling in love with Lion Raja Sundaram and 

 in Udumalaippettai.



உடுமலை நாராயணகவி பிறந்த  நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை📚📚✍️✍️🙏🙏🙏


உடுமலை தந்த கவிமலை பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நராயணகவி 40 ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்வோம்🙏🙏🙏


தெரிஞ்சாப் பேசணும்

தெரியாட்டிக் கேக்கோணும்

அறிஞ்சாலும் அஞ்சுபேத்த கேட்டாகோணும்

அதம்படி நடக்க வேணும்

எனும் பகுத்தறிவுக் கவிராயரின் வரிகளையும்

மானமெல்லாம் போன பின்னே

வாழ்வது தானொரு வாழ்வா?

வணிகர் குல மரபினுக்கோ

வகைதர ஏன் பிறந்தேனோ?

குஞ்சரமீதும் பஞ்சணை மேலும்

குலவிய காலம் ஓர் காலம்

நஞ்சணையாளின் வஞ்சனையாலே

நடைப்பிண மானதோர் காலம்

கரையடுத்த நீரிருக்க

கானலை நாடிடும் மானினம் போல்

கனிகொடுத்தான் தனை விடுத்தே

கணிகையின் பால் அலைந்தேனே

கற்பகமேவும் கனியருந்தாமல்

காஞ்சிரங்காயை உண்டேனே

காமுகன் யான் கண்ணகியான்

மாமுகம் காணவுமாமோ

தப்பிதம் பலவும் யானே புரிந்தும்

தாசியை நோவதும் வீணே

என உடுமலை நராயணகவியின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை அவது நினைவு நாளில் நினைவுகூர்வோம்.

உடுமலை நாராயண கவி இயற்கை அன்னையைப் போற்றும் வகையில் மரம் வளர்க்க வேண்டும் என்று அவர் எழுதிய பாடல்

உலகம் வாழ மழை

பொழிந்திட வேண்டும் - காலம்

பொழிந்திட நாம் வனமரங்கள்

வளர்த்திட வேண்டும் 0 இந்த (உலகம்)

புலங்கள் தோறும் பூண்டு புல்லும்

வுளம்பெற வேண்டும் - கதிர்

விளைந்திட வேண்டும் - உயிர்

இனங்கள் யாவும் அருந்தி நாளும்

சுகம் பெற வேண்டும் - நாம்

துணை செய்ய வேண்டும் இந்த

வுhனம் வழங்காதெனிலோ

ஊனுடையேது? – உயர்

தூனம் தருமம் தவமெய்ஞ்

ஞாணமும் ஏது? – நலம்

காணும் கடவுள் பணிகள்

காட்சியுமேது? – முதல்

காரணம் மாமழை இலையேல்

தோற்றமும் ஏது – எழுவகைத்

தோற்றமும் ஏது – அதனால்

அனைவரும் மரம் வளர்க்க வேண்டும்

எனும ;உடுமலை நாராயணகவியின் சமூக அக்கறையை நாம் நினைவில் ஏந்துவோம்

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை நாராயணகவியின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தலில் நெஞ்சில் நிறுத்துவோம்.

அவர் சொன்ன சமூக அறிவியல் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவோம்.

கடந்த 2017 ஆம்.ஆண்டு உடுமலை முற்போக்கு அமைப்பு களோடு. உடுமலை நாராயண.கவி.நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்தமூன்றாண்டுகளாக சிறப்பு செய்யப்படுகிறது,உடுமலை நாராயணகவி பிறநத நாளையும்  அரசு விழாவாக அறிவிக்க. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை.

மேலும் நாராயணகவி பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தமைக்கு 

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 19,05,2018 இல் இரு பெரும் வரலாற்று த்திருவிழா வை நடத்தி நன்றி தெரிவிக்கப்பட்டது

உடுமலை வரலாறு 23.05.2021📚📚✍️✍️✍️🙏🙏🙏

புதன், 19 மே, 2021

 உடுமலைப்பேட்டை ,கரட்டுமடம் காந்தி கலாநிலையம் முன்னாள் மாணவர் கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியரகாப் பொறுப்பேற்றுள்ளார்.📚📚✍️✍️🥰🥰👍👍⛱️🙏



தமிழ்நாடு மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இணைச் செயலராக உள்ள கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்திற்குப் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கார்மேகம், கடந்த 2003 - 2004ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிவர். 

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஐஏஎஸ் ஆக பதவி உயர்வுபெற்ற வெகுசிலரில் கார்மேகமும் ஒருவர். பள்ளிக்கல்வித்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர்பெற்றவர்.🙏

 கேள்வி : திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்த தம்பதிகள் யாரேனும் தெரியுமா? அவர்கள் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது?


என் பதில் : 


எனது உறவினர் பெண். அவருக்கு வரன் பார்க்கும் போது மாப்பிள்ளை புகைப்படம் பார்த்து இருவருக்கும பிடித்து விட்டது.. ஆனால் ஜாதகத்தில் பொருத்தம் இல்லை…இருவரும் பிடிவாதமாக இருந்தனர்.. திருமண மாகி நன்றாக உள்ளனர்..


எனது அண்ணன் மற்றும் பெரியம்மா மகள் எல்லாம் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து நன்றாக உள்ளனர்


ஆஹா ..ஏகப்பட்ட பார்வையாளர்கள்…


ஜோதிடக்கலை வேதத்திற்கு ஒப்பானது…


நான் சொல்ல வருவது கல்யாண விஷயத்துல வெற்றி என்பது இருவர் கையில உள்ளது..

நன்றி ....

 கேள்வி : ஒரு மனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து விஷயங்கள் யாவை?


என் பதில் : 


தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கைத் துணையோடு மட்டுமே சாத்தியம் :))

ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம்.

வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள் வாழ்கிறோம்.

வாழ்நாள் இறுதியில் ஒருவருக்கு மிகவும் விருப்பமான நபர் என்றால் அவருடைய வாழ்க்கை துணையே. ஆதலினால் காதல் செய்வீர் :))

மனிதர்கள் அன்பு, கோபம் இரண்டு குணங்களையும் ஒருங்கே கொண்டவர்கள்.

நம்மிடம் தொடர்ந்து ஏதோவொரு குணத்தை மட்டுமே ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால், தவறு நம்மிடமா அல்லது அவரிடமா என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உறவு மற்றும் நட்பு வட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

அவர்களால் சிலநேரங்களில் தொல்லையே என்றாலும், சிறந்த, உறுதியான வாழ்க்கைக்கான உந்துதலை அளிக்கிறார்கள்.

இன்னும் 10 வருடங்கள் கழித்து, இன்றய தேதியில் நடந்ததில் 1% கூட நமக்கு ஞாபகத்தில் இருக்காது.

யாரோ உடனான மனவருத்தத்தை இன்றே மறந்து விடலாமே.

இன்று தீய்ந்து போன உப்புமா/ பிரியாணி வைத்துக்கொண்டு கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்?அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சமைத்து சாப்பிட்டால் போச்சு.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி யாருடனும் நட்பு கூட பாராட்ட இயலாது. எங்கேயும் நிரந்தர நட்பு/பகை இல்லை. Whatsapp,facebook,instagram..-விலும் கூட.

சில நொடி மகிழ்ச்சிக்காக…இன்றைய என்னுடைய பதிவுகள் பிடிக்கலாம். இன்னும் சில மாதங்களில் நிதி/தத்துவம்/ஆன்மீகம் சார்ந்த பதிவுகளுக்கு நகரலாம்.

தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக சிலர் என் பதிவுகளை படித்ததில் எனக்கே ஆச்சரியம் தான்:)) 


நன்றி!!!


செவ்வாய், 18 மே, 2021

கேள்வி : கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால், மனைவி இன்னொருவரிடம் அன்பைப் பெற நினைப்பது சரியா இல்லை அது துரோகமா?


என் பதில் : 


பெரும்பாலான தம்பதியர் திருமணமாகி இரண்டு மூன்று வருடங்கள் கழித்து மன ஒற்றுமை குறைந்து வாழ்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்தால்


இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம்.


கணவர் மனைவியிடம் அன்பாக இல்லை என்றால் ஆரம்ப கட்டத்தில் ஒரு குழந்தைக்காக மட்டுமல்லாமல் குடும்பத்தின் நிலைமை உணர்ந்து பெண் அனுசரித்து வாழ்கிறாள்.


இந்த அன்பு இல்லாமைக்கு காரணம் என்ன என்று முதலில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.


திருமணத்தின் போது அந்த பெண்ணை இந்த ஆணுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

வேறு பெண்ணை இந்த ஆணுக்கு பிடித்திருக்கலாம்.

பெற்றோர் வற்புறுத்தி திருமணம் நடந்திருக்கலாம்.

திருமணத்திற்குப் பின்னர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

இருவருடைய உண்மையான குணாதிசயம் திருமணத்திற்குப்பின் வெளிப்பட்டு அது மற்றவருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

உடலுறவில் இருவருக்கும் வேறு வேறு உணர்வுகள் ஆசைகள் திருப்பி நிலைகள் இருக்கலாம்.

ச***** படங்களையும் புத்தகங்களையும் சினிமாக்களையும பார்த்து பழக்கமாகி ஆணுக்கு அதில் வரும் பெண்ணை போல் தன் மனைவி இல்லையே என்பது வருத்தத்தை தரலாம். அதை வெளிப்படுத்தி தன்னுடைய மனைவியை காயப்படுத்தியும் இருக்கலாம்.

இத்தனை பிரச்சினைகளில் எது ஒன்று இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய கணவன் தன்னை வெறுக்கிறான் என்ற உண்மை தெரிந்தால் அதற்குப்பின் யோகி போல வாழ அதிகபட்சமான பெண்களுக்கு விருப்பம் இருக்காது.

பல ஆண்களுக்கு தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை அன்பை வார்த்தைகளோ செயலாலோ வெளிப்படுத்த இயலாதவர்களாக இருக்கலாம். இது மற்றவர்களுக்கு அன்பு இல்லாத நிலைமையாக தெரியலாம்.

பெண்கள் எப்போதுமே தன்னுடைய உணர்வுக்கும் அழகுக்கும் திறமைக்கு மதிப்பு அளிக்க கூடிய ஆண்களில் விரும்புகிறார்கள். ஆண்கள் கூட அப்படித்தான்.

சிக்கன் பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து போட்ட பின்னும் அதை ராகி கஞ்சி போல உண்டுவிட்டு போகும் கணவனை அந்தப் பெண் எப்படி உணர்வாள்?

பல மக்களுக்கு எப்பொழுதும் பிறருடைய குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும. அவற்றை அருமையாக வெளிப்படுத்தவும் தெரியும். நிறைகளை சொல்ல வாழ்த்த பெருமைப்படுத்த வார்த்தைகள் தெரியாது.

இப்படிப்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையால் கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை அல்லது அன்பு காண்பிக்க முடியவில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் என்ன செய்ய வேண்டும் என்று நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

பல பெண்களுக்கு குழந்தை ஆன பின்பு தான் தெரிகிறது இந்த உண்மை. குழந்தை இருப்பதால் அவர்கள் சகித்துக் கொண்டு இந்த வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள். இது ஆணுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களே நாம் தொந்தரவு செய்யக்கூடாது.

எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு கசப்பு வருத்தம் இருக்கலாம்.அவரவர் எதிர்பார்ப்புக்கு வாழ்க்கை அமையாமல் இருக்கலாம். தன்னைப்பலவே குணாதிசயம் உள்ள வாழ்க்கைத் துணை கிடைப்பது அரிது.

அதனால் நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போம். பிரச்சனை முற்றுவதற்கு முன், அடுத்த தெரு ஆண் நம் பிள்ளைகளை மயக்கும் முன் நாம் ஒரு விதி செய்வோம்.ஒருவருக்கு ஒருவர் வீட்டில் இருக்கும் பெரியவர் இல்லை உறவினரை கலந்து ஆலோசித்து அந்த பாதிக்கும் நபரை திருத்த முயற்சிக்க வேண்டும். இதையெல்லாம் எப்படி வெளியே சொல்லுவது என்று பொறுத்திருந்து வெந்து சாவதைவிட வாழ்க்கையை நெறிப்படுத்தி ஆனந்தமாக வாழ்வது நல்லது.

இதற்கு மேல் பல கருத்துக்கள் மற்ற பதில்களில் உள்ளன.

ஆணுக்குப் பெண் பிடிக்கவில்லையா இல்லை பெண்ணுக்கு ஆணை பிடிக்கவில்லையா? இரண்டுமே இருக்கிறது.

உறவுகளை சரி செய்ய உறவினர் நண்பர்கள் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். எதையும் முத்தவிட்டு வெடிக்க வைக்க வேண்டாம்.

நல்லதையே எதிர்பார்ப்போம்.

திங்கள், 17 மே, 2021

 கேள்வி : நெப்ட், ஆர்டிஜிஎஸ், என்றால் என்ன ?  


என் பதில் : 


ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்பச் சென்றால், ஆர்டிஜிஎஸ் (RTGS) நம்பர் எழுதுங்க, என்இஎப்டி நம்பர் (NEFT) என்ன என்று கேட்டு குடைவார்கள்.

அது தெரியாவிட்டால் பணம் அனுப்பவே முடியாத நிலை ஏற்படும். அது என்ன ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி நம்பர்?


ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement. என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.


ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.


குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.


ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். 

சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.


ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.


கட்டணம் எவ்வளவு?:


என்இஎப்டி மூலம் ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.

ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.

ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி


ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்ப ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ரூ. 30 கட்டணம்

ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.


நன்றி ..


சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

ஞாயிறு, 16 மே, 2021

இன்று என் நண்பரிடம்  பேசிக்கொண்டு இருந்தேன்  கோவை விவசாய பல்கழகத்தில் படித்தவர் ..என் மதிப்பு மிக்க வாடிக்கையாளர் ..குடும்ப நண்பர் ..
அதிகம் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் அதிகம் ..IAS ,IPS ..தேர்வு எழுதி ..இந்தியாவில் ,தமிழ்நாட்டில் ..பொறுப்புமிக்க பதவியில் உள்ளார்கள் ..காரணம் கேட்டேன் ..விடைசொல்கிறேன் என்று கூறிருக்கிறார்கள் ...வந்தவுடன் பதிவிடுகிறேன் ..எனக்கு தெரிந்து ..சில ஆளுமைகளை மட்டும் புகைப்படங்களை பகிர்கிறேன் ..

சனி, 15 மே, 2021

 ஆசிரியர் விஜயலட்சுமி-சதீஷ்குமார்  அவர்களின் அன்பு மகளின் திருமணம்  காலை மதுரையில் நடைபெற உள்ளது

 மதுரை சென்று மணமுடித்து  மணமகனோடு திரும்பும்  ஆசிரியர் சதீஷ்குமார் விஜயலட்சுமி ஆகியோரையும்

புதுமணத்தம்பதிகள்  மினு சூர்யா ஆகியோரையும்  வாழ்த்தி,மணவிழா ஏற்கும் மணமக்களுக்கு


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் 🌈


சார்பில்  திருமண வாழ்த்துக்களைப் பதிவு செய்வோம்🥰🥰🥰📚📚✍️✍️🙏🙏🙏🙏🌴🌷🌹🌧️🌦️🌱🌳⛱️http://zerogravityphotography.live/suriya_minu/


கேள்வி : ரத்த சொந்தத்திற்குள் திருமணம் செய்யகூடாது என்பது ஏன்?


என் பதில் : 


இந்தக் கேள்வியும் இதற்கான பதிலும் பல சந்ததிகளைக் காப்பாற்றும் சங்கதிகள் கொண்டது.


இந்த கேள்விக்கு வெகுகாலமாக பதில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது, தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைப்பது என இன்றைக்கும் தமிழ்நாட்டில் அதிக அளவில் உறவுகளுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது.


இந்து மதத்தினர் அதிக அளவில் உறவுகளுக்குள் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இவ்வாறு உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் மூலம் பரம்பரையாக வியாதிகள் சந்ததிகளுக்குள் கடத்தப்படுவதோடு புதிது புதிதாக நோய்கள் ஏற்படுகின்றன.


ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் சந்ததியினர் குறைபாடுடைய மரபணுக்களோடு பிறக்க வாய்ப்புண்டு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.



வெண்குஷ்டம்


பொதுவாக வெண்குஷ்டத்தைப் பொறுத்தவரை 20,000 நபர்களில் ஒருவருக்குத் தோன்றலாம். ரத்த சொந்த சந்ததியினருக்கு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.



சிறுநீர் குறைபாடு


ஃபினைல்கீடோன்யூரியா (Phenylketonuria) என்னும் சிறுநீரகக் குறைபாடு சாதாரணமாக 25,000 நபர்களில் 1 நபருக்குத்தான் ஏற்படும்.ஆனால் உறவுத் திருமண சந்ததியினைரப் பொறுத்தவரை 25,000 நபர்களில் 13 நபர்களுக்கு இக்குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.



ஜப்பானில் ஆய்வு


ஜப்பானில் மேற்கண்ட ஒரு ஆய்வில் உறவினரல்லாமல் திருமணம் செய்த நபர்களில், மேற்கண்ட குறைபாடுகளால் 1000 பேருக்கு 55 பேர் இறந்துள்ளனர். ஆனால் உறவுத் திருமணத்தால் 116 பேர் இறந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ரத்த உறவுகளில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவ அறிவியல் அறிவுறுத்துகிறது.



ரத்த அழிவு சோகை


தெரிந்தே நாம் செய்யும் தவறுகளால் நம் சந்ததிகளை பாதிக்கக் கூடிய வியாதி தான் ‘இரத்த அழிவு சோகை'. பெரும்பாலூம் இரத்த சோகையைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் ரத்த அழிவுச் சோகையைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம்.



தலசீமியா


‘ரத்த அழிவுச் சோகை' என்பது மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய நோய், இந்நோய்க்கு ‘தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரிசுகளையே இது அதிகம் தாக்குகிறது.


ஆப்பிரிக்க - ஆசிய வம்சாவழியில் வரக்கூடிய குழந்தைகள்தான் ‘தலசீமியா' பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிவப்பு ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்று சொல்லப்படுகிற ஒரு புரதம். இது தான் ஆக்சிஜனை உடலுக்குள் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லும்.


ஹீமோகுளோபின் அமைப்பு


ஒட்டு மொத்த ஹீமோகுளோபின் அமைப்புகளில் கோளாறு ஏற்படுகிற போது ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படும். அதன் விளைவாக ஒவ்வொரு செல்லுக்கும் போக வேண்டிய ஆக்சிஜன் தடைபடும். வயிற்றில் உள்ள கரு, பிறந்த குழந்தை, வளர்ந்த பிள்ளைகள் என்று எந்த வயதிலும் இந்த நோய் பாதிக்கலாம்.


வளர்ச்சிக்குறைபாடு


நோய்க்குக் காரணமான குறைபாடுள்ள மரபணு அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது இரண்டு பேரிடமிருந்தும் போகலாம். பிறந்த குழந்தையாக இருந்தால் வயிறு ஊதிப்போவது, கல்லீரலும் எலும்பு மஜ்ஜையும் வீங்குவது, தலை வீங்குவது, இதயம், சிறுநீரகத்தோட செயல் குறைவது, களைப்பு ஏற்படுவது போன்ற பலவித அறிகுறிகள் இருக்கும். அம்மாவோட வயிற்றில் இருக்கும்போதே இந்தப் பிரச்சனை தீவிரமாகி குழந்தையைப் பாதிக்கும் பட்சத்தில், குழந்தை இறந்தே பிறக்கலாம் அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளோடு பிறக்கலாம்.


ரத்தம் ஏற்றுதல்


பிறக்கும் போதே மஞ்சள் காமாலை அதிகமாக இருக்கும். வேகமான மூச்சிறைப்பையும் பார்க்கலாம். இதற்கான ஒரே தீர்வு மாதம் தவறாமல் அக்குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டும். அப்படி ரத்தம் ஏற்றும்போது இரும்பு சத்து அதிகமாகி அதன் விளைவாக வேற பிரச்சனைகள் வராமல் இருக்க மாத்திரைகள் கொடுக்க வேண்டியிருக்கும்.


கருவை கலைக்கலாம்


முதல் குழந்தைக்கு இந்த நோய் இருக்கும் பட்சத்தில் பெற்றோர் மரபணு கவுன்சலிங்கும் பரிசோதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தக் குழந்தைக்கும் நோய் தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.


நோய் தாக்கக்கூடிய ஆபத்து இருந்தால் அடுத்த கர்ப்பத்தைக் கலைப்பதுதான் ஒரே வழி. ஒரு வேளை இரண்டாவது குழந்தைக்கு நோய் ஆபத்து இல்லை என்று தெரிந்தால் அந்த குழந்தையோட ரத்தத்தை முதல் குழந்தைக்கு ஏற்றலாம்.


நெருங்கிய சொந்தம் வேண்டாமே


இரண்டாவது குழந்தையின் எலும்பு மஜ்ஜையை முதல் குழந்தைக்கு செலுத்தியும் குணமாக்கலாம். ஆனால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் அதிக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள். நெருங்கிய உறவுக்குள் மணம் முடிப்பதைத் தவிர்க்கச் சொல்லி அழுத்தமாக அறிவுறுத்துகிறார்கள்.


சந்ததிகளுக்கு சமாதி


நெருங்கிய உறவுகளுக்குள் மணம் முடிப்பதால் குழந்தைகள் பிறப்பதில் இத்தனை பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அறிந்த பின்பும் உறவுகளுக்குள் திருமணம் முடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


எனவே அக்காள் மகளை கட்டுகிறேன்... தாய்மாமனை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சந்ததியினருக்கு பெற்றோர்களே சமாதி கட்டாதீர்கள்...இது ஒரு விழிப்புணர்வு பதிவு  மட்டுமே ..திருமணம் உங்களின் விருப்பம் ..நன்றி ..


வெள்ளி, 14 மே, 2021

கேள்வி : Hoovering கோட்பாடு என்றால் என்ன ..?

பதில்:....நியண்டர்செல்வன் ....

சைக்காலஜியில் Hoovering என ஒரு கோட்பாடு உண்டு
ஒருவரை நன்றாக ஏமாற்றி, அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு தெருவில் விடவேண்டும்.
அதன்பின் அவர் நம்மை கண்டபடி திட்டிவிட்டு எங்கோ போய் நல்லபடி வாழ்க்கையை ஆரம்பிப்பார்.
ஆனால் அவர் இளிச்சவாய் என நமக்கு நல்லா தெரியும்.
இந்த சூழலில் சைக்கோக்கள் அந்த இளிச்சவாயை மீண்டும் வலையில் விழ வைத்து ஏமாற்றுவார்கள்.
இதன் பெயர்தான் hoovering
முன்னாள் கணவர்/மனைவி, காதலன்/காதலி, நண்பர், பிசினஸ் பார்ட்னர், வாடிக்கையாளர்..இப்படி
ஏமாந்தவரும் "சரி ஏதோ போனமுறை நம்மை ஏமாற்றினாலும், இப்போது திருந்திவிட்டான்...மீண்டும் ஏமாற்றமாட்டான்" என நினைத்து மீண்டும் ஏமாறுவார்கள்.
ஹூவரிங் செய்ய பல உத்திகள் உண்டு
-> திருந்துவது போல் நடிப்பது
-> முதுகில் குத்திவிட்டு அதன்பின் எதுவுமே நடக்காதது போல இருப்பது, பழகுவது
-> கூடுதல் பாசம் காட்டுவது
-> பழைய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை சுட்டிகாட்டுவது
நிறைய பேர் இதில் இரண்டாம் முறையும் ஏமாந்துவிடுகிறார்கள்.

வியாழன், 13 மே, 2021

 

கேள்வி : பணத்தை சேமிக்க உதவும் சிறந்த தந்திரங்கள் எவை?


என் பதில் : 


உங்களுக்கு பணத்தின் மீது அதிக விருப்பம் என்றால்…


பணத்தை சேமிக்க சிறந்த வழி..எந்த ஒரு பொருளை வாக்கும்போதும்…பணத்தை ஒரு கையில் வைத்துக்கொள்ளுங்கள்…இன்னொரு கையில் பொருளை வைத்துக்கொள்ளுங்கள்.


சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு குறைந்ததாக இருக்கும்.


சில பொருட்கள் பணத்தை விட மதிப்பு மிக்கதாக இருக்கும்.


எது வேணும் என்று யோசியுங்கள்…


பணத்தை சம்பாதிக்கும் பல பேர் அதை செலவு செய்கிறார்களே தவிர, பணத்தை வைத்து பணத்தை உருவாக்க முயல்வதில்லை. சேமிக்கத்தான் முயல்கிறார்கள்.


இன்று வங்கிக்கு செல்கிறீர்கள், நீங்கள் 2015 ல் ஒரு வங்கிக்கணக்கில் 50,000 பணத்தை போடுகிறீர்கள்.


ஐந்து வருடங்கள் கழித்து அந்த பணத்தை நீங்கள் மீண்டும் எடுத்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வட்டியோடு தருவார்கள். ஆனால் பணத்தின் மதிப்போ அதே 50,000 இல்லை..நிச்சயம் அதை விட குறைவு தான்.


அதாவது, பணத்தின் மதிப்பு எப்படி குறைவு என்றால், நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு வாங்கிய ஒரு பொருளின் விலை, ஐந்து வருடத்திற்கு பிறகு உயர்ந்து இருக்குமே தவிர, குறைந்து இருக்காது. ஆனால், உங்கள் பணத்தின் மதிப்பு நிச்சயம் குறைந்து இருக்கும்.


இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், 2015 ல் ஒரு புத்தகத்தை 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறீர்கள் என்றால், 2020 ல் அந்த புத்தகம் விலை 60 ஆக இருக்குமானால். நீங்கள் 2015 ல் வாங்கிய அதே புத்தகத்தை 2020 ல் அதே ஐம்பது ரூபாய்க்கு வாங்க இயலாது.


ஏன் வாங்க இயலவில்லை, நீங்கள் 2015 வரும், 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள்..2020 வரும் அதே 50 ரூபாய் தான் வைத்திருக்கிறீர்கள். ஆனால் பொருளின் விலையோ மாறியுள்ளது. இதைதான் விலைவாசி உயர்வு(Inflation ) என்பார்கள்.


விலைவாசி உயர்வால் தான், உங்கள் பணத்தின் மதிப்பு குறைகிறது. அதே பொருளை 10 ரூபாய் அதிக விலைகொடுத்து வாங்க நேரிடுகிறது. இதை தான் Purchasing Power குறைவது என்று சொல்வார்கள்.


வருடம் ஆக, ஆக நம் சேமிப்பு பணத்தின் மதிப்பு வட்டியோடு சிறிதளவு உயர்ந்தாலும்( அந்த பணத்தின் உண்மை மதிப்பு, ஒரு பொருளை வாங்கும் போது குறைந்துகொண்டே தான் போகிறது)


மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 2015 ல் ஒரு லிட்டர் பெட்ரோலில் விலை 50 ரூபாய், 2020 ல் அதே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 100 ரூபாய். இப்பொழுது சொல்லுங்கள்…நமக்கு நஷ்டமா? லாபமா? நிச்சயம் நஷ்டம் தான். இதே போல தான் வங்கியில் பணத்தை சேமிப்பதிலும் நமக்கு நஷ்டம் தான்.


பெட்ரோல் விலை எவ்வளவு உயர்ந்தால் என்ன? நான் எப்போதும் ஐம்பது ரூபாய்க்கு தானே பா.. பெட்ரோல் போட போறேன் என்று புத்திசாலி தனமாக போசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.😂


அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அவசர தேவைக்கு சேமிப்பு வைத்துக்கொள்கிறார்களே தவிர, பொது சேமிப்பு கணக்குகள் குறைவு தான். அவர்கள் பணத்தை சேமித்து பணத்தின் மதிப்பை இழப்பதில்லை.


அதே பணத்தை உதவிகரமாக, எதிலாவது பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு அவர்களுக்கு பணத்தை வண்டியை விட அதிகமாக ஈட்டி தருகிறது


நம் நாட்டில் தான், பணத்தை எல்லாம், Jan Dhan account ல் சேமியுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு செலவு நான் செய்கிறேன் என்று அரசாங்கம் சேமிப்பு கணக்குகளை தொடங்க ஊக்குவிக்கிறது.


நம்நாட்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லையப்பா என்றால், நீங்கள் உங்கள் சேமிப்பு கணக்கில் போடும் பணத்தை எதே ஒரு பணக்காரன் வங்கியில் இருந்து உங்கள் பணத்தை கடனாக வாங்கி, அதை முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை தான், வங்கிக்கு வட்டியாக கட்டுகிறான். அதில் வங்கியானது பணக்காரனுக்கு கொடுத்த கடனுக்கு வரும் வட்டிப் பணத்தில் ஒரு சிறு பகுதியை தான், வங்கி..நம் சேமிப்பு கணக்கிற்கு நமக்கு வட்டி தருகிறது.


பணக்காரத்தந்தை மற்றும் ஏழைத்தந்தை என்ற புத்தகத்தில், ராபர்ட் கியோசகி அழகாக ஒரு வாக்கியத்தை சொல்லியிருப்பார்.


ஏழை பணத்திற்காக வேலை செய்கிறான்…


பணம் பணக்காரர்களுக்காக வேலை செய்கிறது…


ஆக, பணத்தை சேமிக்க மிகச்சிறந்த தந்திரம்…பணத்தை சேமிப்பது அல்ல…பணத்தை முதலீடு செய்வதும்...பணத்தை வைத்து பணத்தை பெருக்குவதேயாகும். அதாவது (money multiply) செய்வதேயாகும்.


நன்றி.


சிவக்குமார் . V ,K 

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

புதன், 12 மே, 2021

 இன்று ஒரு துக்க நிகழ்வு ...


நம் சமுதாய கீர்த்திவீரர் எத்தலப்பர் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் எனும் வெளியிட்டு வருடங்கள் 3 ஆகிறது .. அதில் ஒரு சமுதாயம் சார்ந்த நபர்கள் .நாங்கள் தெலுங்கு மொழி பேசுவதில்லை  என்று .வழக்கறிஞர்கள் மூலம் காவல் துறையில் புகார் செய்து  ..செய்தியை நீக்கவேண்டும் ..போராடினார்கள் ....அப்போது இருந்த காவல் துறை அதிகாரி நம் சமுதாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் ..நம் சொந்தங்களுடன் படித்தவர் .அதில் இருக்கும் செய்தி உண்மையாக உள்ளது ..அதுவும் கெஜிட்டில் ..சரியாகவும் ..ஆவணக்காப்பகங்களில் உள்ள செய்தியும் சரியாக உள்ளது ..புகாராக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் உறுதியக தெரிவித்துவிட்டார் ...வேறுபக்கங்களில் எல்லாம் முயன்றார்கள் ..போனபக்கம் எல்லாம் தோல்வி .

புகார் தெரிவித்த ஒருவர் ..கடந்தவருடம் ..பிளெக்ஸில் கண்ணீர் அஞ்சலி ..இந்த வருடம் ...இந்நாளில் .புகார் அளித்த இன்னொருவர் .பிளெக்ஸில்..கண்ணீர் அஞ்சலி ...புகைப்படம் ..


கீர்த்திவீரர் தளி எத்தலப்பர் ....மண்ணு ...திருமூர்த்தி மண்ணு ...நின்று பேசும் ..தவறாக பேசினால் ..நின்று கொல்லும் . ...


திங்கள், 10 மே, 2021

 கேள்வி : இக்காலத்தில் படித்தவர்களிலும் முட்டாள்தனமாக சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்களா?



என் பதில் : 



நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அந்நிறுவனமானது குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களுடையது, அங்கே வேலை செய்பவர்களும் பெரும்பாலும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில் நான் கூறப்போகும் விடயங்கள் அவ் இனத்தின் கருத்துக்களா அல்லது அந்த நபர்களின் கருத்துக்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.


நாங்கள் எங்கள் இனப் பெண்களை வேலைக்கு அனுப்புவதை விரும்பவில்லை. காரணம் அவ்வாறு வேலைக்கு செல்லும் போது அங்கு யாரையாவது காதலித்து சுற்றி திரிகிறார்கள். காதலித்தவன் விட்டுச்சென்றால் பிறகு மாப்பிள்ளை தேடுவது கடினம். ஒரு பெண்ணை வீட்டில் வந்து 100 வரன் பார்த்து சென்றாலும் பரவாயில்லை. வேலைக்கு அனுப்பக்கூடாது.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டால் என்றால் அந்த பெண் திருமணம் மற்றும் குழந்தை பிரசவிக்க தயாராகிவிட்டாள் என்று அர்த்தம். அந்த சிறுமிக்கு 12, 13, 14, 15 எந்த வயதாக இருந்தாலும் சரி. 9 வயதாக இருந்தாலும் சரியே. அந்த காலத்தில் பெண்களுக்கு 12, 13 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. அதனால்தான் கற்பழிப்பு அதிகரிக்கிறது. அத்துடன் அந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால் அவள் கணவனே உலகம் என இருப்பாள். தவறான வழியில் செல்லமாட்டாள்.

அவள் திருமணம் முடித்து சுழற்சி முறையில் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அப்பெண் ஆரோக்கியமாக இருப்பாள்.

எல்லா பெண்களும் ஆண்களும் உணர்ச்சிக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பெண்களை எப்போதும் தங்களுக்கு கீழேயே வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தலைக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.

பெண்கள் இருப்பது அவர்களின் தேவைக்கு மட்டும்தான்.

பெண் பலவீனமானவள்.

ஆண்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது. ஆண்கள் எத்தனை பெண்களோடு வேண்டுமென்றாலும் செல்வோம். ஆனால் பெண் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

எல்லா பெண்களையும் போகப் பொருளாகவே பார்ப்பது.

இவற்றையெல்லாம் கேட்டு நொந்து போய் இருக்கின்றேன். 




சனி, 8 மே, 2021

மாண்புமிகு  மாவட்ட அமைச்சர் பெருமக்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் 


தமிழக அமைச்சரவையில்    திருப்பூர் மாவட்ட  மக்களின் மனமறிந்து  பணியாற்ற  இரண்டு அமைச்சர்களை ஒதுக்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்போம்.


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறையாக இருந்த   துறையினை  மக்களுக்கான  செய்தித் துறையாக மாற்றி   அதனை நமது  மாவட்டத்தின்  காங்கேயம் தொகுதியில்  வெற்றி பெற்ற  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய  மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் திருப்பூர் முதல் உடுமலை தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. அது போன்று  மிகச் சிறப்பான  மக்கள் பணிகள் செய்ய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்வோம்.


அதே போல்   ஆதிதிராவிடர ;நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும்  திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் இப்போதுதான் முதன் முறையாகச் சட்டமன்றம் செல்கிறார். 


அவருக்கும் இந்த நல் வாய்ப்பினை வழங்கிய  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துகளையும் பதிவு செய்வோம்.

திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களின்  பணி சிறக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குவோம்.


திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 


இங்ஙனம் 

கீர்த்திவீரர் வீரர் எத்தலப்பர் வாட்ஸாப்ப் குழு 

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

உடுமலைப்பேட்டை .


வெள்ளி, 7 மே, 2021

 கேள்வி : கோழிப்பண்ணை தொடங்க விருப்பமா? 


என் பதில் : 


கடன் வழங்கும் வங்கிகள்! 


குறைந்த முதலீட்டில் ஒரு தொழிலை தொடங்கி அதன் எதிர்கால திட்டமிடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த தொழில் வெற்றியடையும். ஆம், இதில் கோழி வளர்ப்பு தொழில் மிகச் சிறந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. கோழி இறைச்சி தேவையும், அதன் முட்டை தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணைத் தொழில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது.


எந்தவொரு தொழிலுக்கும் முதலீடு என்பது அவசியமான ஒன்று. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசு என்றும் கைவிட்டதில்லை. நல்ல பல திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வருகிறது. குறைந்த முதலீட்டில் நீங்களும் கோழிப் பண்ணை அமைக்க விரும்பினால் நபார்டு வங்கி (NABARD BANK) 25% மானியம் வழங்குகிறது. அதுவே வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கும், எஸ்சி-எஸ்டி பிரிவினர்களுக்கு 33.33% வரை மானியம் வழங்கப்படுகிறது.


தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்

கோழி வளர்ப்பு அல்லது கோழிப் பண்ணை அமைக்க, முதலில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இடம் கோழிகளை பாதிக்கும் வகையில் இருக்கக்க கூடாது. காற்று மாசுபாடு இல்லாத இடமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


இது தவிர, தண்ணீர், சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்திலிருந்து போக்குவரது வசதிகளும் இருக்க வேண்டும். இதற்கு பின்னர், நீங்கள் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB), எச்டிஎப்சி வங்கி (HDFC BANK), ஐடிபிஐ வங்கி (IDBI BANK) உள்ளிட்ட பல பொது மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்க காத்திருக்கின்றன.


எஸ்.பி.ஐ (SBI) வங்கியில் கடன் பெறுவது எளிது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, பிராய்லர் திட்டத்தின் கீழ் கோழிப் பண்ணை அமைக்க கடன் வழங்குகிறது. இதில், கோழிக்குஞ்சுகளை பராமரித்தல், தீவனம் வாங்குதல், கொட்டகை அமைத்தல் என அனைத்திற்கும் கடன் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் கோழிப் பண்ணை அமைக்கக்கூடிய நிலத்தை அடகு வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன்களை வழங்க முடியும். இந்த நிலத்தின் மதிப்பு குறைந்தது 50 சதவீத கடனுக்கு ஈடாக இருக்க வேண்டும்.

 

கடனை திருப்பிச் செலுவத்துவது எப்படி?

கோழிப் பண்ணைக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த எஸ்.பி.ஐ வங்கி ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் முழு கடனையும் நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். அதில் மீதமுள்ள தொகை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும்.


வங்கிக் கடன் பெற தேவையான ஆவணங்கள்

எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்து கோழி கடன் பெற மூன்று முக்கிய ஆவணங்கள் தேவை.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் .


அடையாளச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம்


முகவரிச் சான்றுக்காக : வாக்காளர் அடையாள அட்டை / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும்


75% வரை கடன் பெறலாம்

கோழிப்பண்ணையை பொறுத்தவரை, பயிற்சி அல்லது போதுமான அனுபவம் உள்ளவர்களுக்கு அல்லது கோழிப் பண்ணைக்கான கொட்டகை கட்ட போதுமான நிலம் உள்ளவர்களுக்கு வங்கி கடன் வழங்குகிறது. எஸ்.பி.ஐ தற்போது ஆண்டுக்கு 10.60 சதவீத விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. உங்களுடைய மொத்த முதலீட்டிலிருந்து 75 சதவீதம் வரை வங்கிகள் கடன் வழங்கும்.

நன்றி ..


குறிப்பு:..வங்கிகளில் தற்பொழுது நிலவரம் கடன் வாங்குவது கொஞ்சம் தாமதமாகலாம் ..உங்களின் பொறுமையை பொறுத்தது ...

 

கேள்வி : எலக்ட்ரிக்கல் கடை துவங்க எவ்வளவு முதலீடு வேண்டும்? எங்கே எப்படி கொள்முதல் செய்வது?



என் பதில் : 


எலெக்ட்ரிக்கல் கடை துவங்கி மாதம் 55,000 சம்பாதிக்கலம்...


லாந்தர் விளக்குகளையும், விறகு அடுப்பு களையும் இன்றைய தலைமுறையினரில் பலர் பார்த்திருக்ககூட வாய்ப்பு இல்லை. காரணம், பகல் வேளைகளில் கூட பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சார விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். மேலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டோம். எனவே, மின்சாதனங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தநிலையில், எலெக்ட்ரிக்கல் கடை என்பது லாபம் தரும் தொழில்தான்.


’’எலெக்ட்ரிக்கல் கடை வைப்பதில் மூன்று வகை உள்ளது. ஏதாவது ஒரு மின்சார சாதனத்தை மட்டுமே விற்கும் கடைகள். உதாரணம், ஃபேன்களை விற்கும் நிறுவனங்கள். இரண்டாவது வகை, ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக்கல் பொருட்களை மட்டும் விற்கும் டீலர்கள். இவைகூட கொஞ்சம் பெரிய அளவிலேயே செய்வார்கள். மூன்றாவது, எல்லாவிதமான மின்பொருட்களையும் விற்கும் சிறிய கடைகள்’’


ஒரு மெடிக்கல் ஷாப் தொடங்க பி.பார்ம் (B.Pharm) என்னும் கல்வித்தகுதி வேண்டும். அரசு மருத்துவத் துறையிலிருந்து லைசன்ஸ் வாங்க வேண்டும். எலெக்ட்ரிக்கல் ஷாப்பிற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. நேரடியாகவே ஒருவர் தொடங்கலாம். மார்க்கெட் பகுதியில் கடை போட்டிருப்பவர்கள் பதிவு செய்வதுபோல் ஒரு டிரேடராகப் பதிவு செய்துகொண்டால் போதும்.


எஸ்.டி. இல்லாவிட்டாலும் ஒரு வியாபாரியாகப் பதிவு செய்துகொள்வது அவசியம்.கடை தொடங்க நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். கடைக்கு அட்வான்ஸ் சுமார் 1 லட்சம் வரை ஆகும். இது கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடலாம். அடுத்தது ஸ்டாக். பொருட்களை ஸ்டாக் வைத்துக்கொள்ள குறைந்தது ரூ.1 லட்சம், இரண்டு லட்சம் இருந்தால் நல்லது. மின் பொருட்கள் கொஞ்சம் விலை அதிகம். அதனால் இவ்வளவு தேவைப்படுகிறது. மிக முக்கியமானது ஸ்டாக்கை வைக்கும் அலமாரிகள்.


பெரும்பாலும் கண்ணாடிப் பொருட்கள். ஒரு ஹார்டுவேர் ஷாப்பில் இரும்புச் சாமான்களைக் கொட்டி வைப்பதுபோல் இவற்றை வைக்க முடியாது. அந்தந்தப் பொருட்களை எளிதாக வைக்கவும் எடுக்கவும் வசதியான அலமாரிகளில் வகைப்படுத்தி வைக்க வேண்டும். முன்கடையில் இருக்கும் அலமாரி பிறகு உள்ளே மீதியுள்ள ஸ்டாக்கை வைக்க அலமாரி. இந்த உட் ஒர்க் மற்றும் கணினி சேர்ந்து ரூ.1 லட்சம். ஆக மொத்தம் ரூ.4 லட்சம்.


செலவுகள்: செலவுகள் என்று பார்த்தால், பெரும்பாலும் மற்ற கடைகளைப்போல் வாடகை, மின்சாரம் போன்றவைதான். தொடர்ந்து விளம்பரம் செய்வதற்குக் கூடுதல் செலவுகள் உண்டு. புதியதாக உருவாகும் நகர்ப்பகுதிகளில் ஒரு கடை இருந்தாலும் இன்னொன்றைத் தாங்கும். ஆனால் அருகருகே இரண்டு கடைகளைத் தவிர்க்கலாம்.


நன்றி ...



 கேள்வி : நீங்கள் கற்றுக்கொண்ட சமீபத்திய வாழ்க்கை பாடம் எது?



என் பதில் : 


ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் ..


ஆம் இதுவே நான் கற்ற வாழ்க்கை பாடம் ..காரணத்தை கூறுகிறேன் கேழுங்கள் ..


நேற்று  முன்தினம்  எனது அண்ணியின் தாயார்  இறந்து போனார் ..அவருக்கு ஒரு 76 வயதுதான் இருக்கும் ..திடீரென யாரும் எதிர்பார்மல்வயது முதிர்வு காரணமாக  இறந்து விட்டார் ,நாங்களெல்லாம் அதிரிச்சி யாகி விட்டோம் ..சரிஎன்று அவரர்களது வீட்டிற்கு சென்றோம் ..அன்று பொது முடக்கம் ஆதலால் நெருங்கிய உறவின்முறைகள் மட்டுமே வந்துஇருந்தனர் ..எமது அண்ணியார் தாய் வழி சொந்தமும் ,தந்தை வழி சொந்தமும் மிகப்பெரியது ,கூடவே எங்களது சொந்தபந்தமும் ..அவர் வயது முதிர்வு காரணமாக  மரணித்ததால் உடலை கொரன  காலம் என்பதால்  நீண்ட நேரம் வைத்து இருக்க முடியவில்லை ....கடைசியில் ஆம்புலன்ஸ் வந்தவுடன்  ...4 மணிநேரம் வீட்டில் வைத்திருந்து ,உடனே ஆம்புலன்சில்   மயானத்திற்கு கொண்டு சென்றோம் ..


...எங்கள் ஊர்களில் ஒருவர் மரணித்தால் செய்யப்படும் சடங்குகல் அதிகம் ..மேலும் அனைத்து உறவினர்களும் வந்தபின்தான் இறுதி யாத்திரை தொடங்கும் ...அனால் அங்கு அது எதுவுமே நடைபெற முடியாமல் போய்விட்டது....அங்கிருந்தபோது எனக்கு இதுதான் தோன்றியது.." இத்தனை உறவுகள் இருந்து என்ன புண்ணியம் .. " என்று . என்ன செய்ய விதி....இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இப்படித்தானோ என தோன்றியது ...

ஆம் ஆயிரம் சொந்தமிருந்தாலும் மரணத்தை நாம் தனிமையியேயே எதிர்கொள்ள வேண்டும் ....


இதுவே நான் கற்ற சமீபத்திய வாழ்க்கை பாடம் ..

வியாழன், 6 மே, 2021

 கேள்வி : திடீரென நிறைய TMT கம்பி தயாரிப்பு நிறுவனங்கள் உருவாகிறதே, இதன் பின்னணி என்ன? தொலை காட்சிகளில் ப்ரைம் டைம் விளம்பரங்களில் ஐந்தில் ஒன்று முறுக்கு கம்பி விளம்பரம் ஒளி பரப்பாகிறது. இது அவ்வளவு லாபம் தரும் தொழிலா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?


என் பதில் : 


கண்டிப்பாக லாபம் கொழிக்கும் தொழில் தான் இருப்பினும் அதிகமான கஷ்டங்களும் துன்பங்களும் சவால்களும் நிறைந்த தொழில் இருந்தாலும் உற்பத்தியாளர்களுக்கு இடையே அதிகமான போட்டி உள்ளது


மக்களிடம் தேவையும் அதிகமாக உள்ளது இருப்பினும் மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு உள்ளதால் அவரவர்கள் பொருள்களை விளம்பரப் படுத்துவது என்பது அவசியமாகிறது


விளம்பரத்தின் மூலமே நிறுவனங்கள் விற்பனையை உயர்த்த முடிகிறது


உற்பத்தி பொருள் தேங்கினால் அவர்களுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் உற்பத்தி பொருள் வெளியேறும் பட்சத்தில் விற்பனையும் அடையவேண்டும்


அந்த சுழற்சி கரெக்டாக நடந்தால் மட்டுமே லாபம் கொடுக்கும் தொழிலாகவும் தவறினால் கரணம் தப்பினால் கஷ்டம் தான் ..,ரிஸ்க் கொஞ்சம் அதிகம் தான் ..


 நாளை மே 07 ந் தேதி காலை 9.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திமுக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு மேதகு தமிழக கவர்னர் அவர்கள் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து  வைக்கிறார்  அவருடன் 33 அமைச்சர் பெருமக்களும் பல்வேறு துறைகள்  சார்ந்த அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும்,கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக சார்பாகவும் எனது சார்பாகவும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்


என்றும் அன்புடன் சிவக்குமார் 

9944066681


செவ்வாய், 4 மே, 2021

 கேள்வி : புதுமணத் தம்பதியருக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த நிதி ஆலோசனை என்ன?


என் பதில் : 


'ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழையலாம். ஆனால் ஒரு பணக்காரனால் இறைமையை உணர முயாது' ,


'எல்லாக் கெட்டதுகளின் பின்புலமும், மோசமானப் பணம்தான்',


'பணக்காரர்களால் நல்லவராக இருக்கவே முடியாது',


'Behind every great fortune. there is a crime'. -இப்படி பணத்தைப் பற்றி நாம் தப்பும், தவறுமாகப் புரிந்துக் கொண்டு, பணம் பற்றிப் பேசுவதில் தயக்கம் கொண்டிருந்த காலங்கள் உண்டு!


அன்று, நானும் அந்த 'சம்பிரதாயக் கருத்து' கும்பலில் ஒருத்தனே !


சில 'நல்லவர்கள்', மற்றும் புத்தகங்கள் மூலமே விவேகத்தைப் பெற்றேன். என் வாழ்க்கையைக் கூறு போட்டுப் பார்த்து, என் எண்ணங்களைச் சீரமைத்துக் கொண்டேன்.


ஒருவரின் சுயமதிப்பு, வெற்றி, வளமை, சமூக நிலை, மன நிம்மதி, செல்வாக்கு, மகிழ்ச்சி இவற்றின் மீது பணம் ஒரு வசீகர ஆளுமையைக் கொண்டுள்ளது என இன்று நான் உணர்கிறேன்.


பணம் இல்லாத நிலை ஒரு இழுபறி வாழ்க்கையையும், கவலை, குற்றவுணர்வு, பயம், மன இறுக்கம், விரக்தியையும் தரும். உடல் நலனும் கெடும். பணம் நமக்கு 7 வது அறிவு போலாகிவிட்டது!


இனி,


நான் பெற்றதிலிருந்து, சில அறிவுரைகள் அல்ல பரிந்துரைகள்!


நீங்கள் சம்பாதிப்பது இருவர் என்றாலும், ஒருவரே என்றாலும் சரி, உங்கள் வருமானத்தின் முதல் செலவு, 15% சேமிப்பாக இருக்கட்டும். 10% பொழுது போக்குச் செலவுகள். 5% எளியோர்க்கு உதவ, (நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?) அடுத்தவரை மகிழ்ச்சியாக்க என எடுத்து வையுங்கள்.


உங்கள் ஊதியம், முதலீடுகள், கடன் , காப்பீடு, பங்கு பத்திரங்கள், மாதத்தவணைகள் குறித்து உங்கள் இருவருக்குள் வெளிப்படைத் தன்மை (transparency) இன்றியமையாதது. பேசுங்கள், இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்.


100 ரூபாய் வருவாயாக வீட்டிற்குள் வந்தாலும் சரி, செலவாகப் போனாலும் சரி அது உங்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.


பெற்றோருக்குப் பண உதவி செய்வது, கடன் அடைப்பது சார்பாக நிறையப் பிரச்சனைகள் உங்கள் இருவரிடையே வரலாம். திருமணத்திற்கு முன்பே அதைத் தீர்மானித்துவிடுங்கள்.


உங்கள் தேவைகளை அனுசரித்து (budget) வரவு செலவு பட்டியலிடுங்கள். அது பற்றாக்குறைப் பட்டியலாக (deficit budget) இராமலிருக்கட்டும்.


தினமும் இரவு வரவு, செலவு கணக்கு எழுதுங்கள். அது தேவையற்றச் செலவுகளைக் குறைக்க உதவும்.


உடையது விளம்பேல் - உங்கள் நிதி நிலைமையைப் பற்றி வெளியாட்களிடம் தேவை இன்றிப் பேச வேண்டாம்.


என்னை போன்று ,நிதி ஆலோசகர்களை நாடுங்கள். பணம், எப்படி பணம் பண்ணும் என்றுச் சொல்லித்தருவார்கள்.


சமூகத்தில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டியது உங்கள் பொறுப்பும், கடமையும் அல்லவா? அது போன்றே பணக்காரர் ஆவதற்கான உரிமையும், தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என நினைத்துச் செயல்படுங்கள்.


அதற்காக, பணத்தையே பூஜித்துக்கொண்டு இருக்காதீர்கள். அதனிலும் மேன்மையான, விலைக் கொடுத்தும் வாங்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு!


பணத்துக்காக அற்ப விஷயங்களில் சமரசம் கூடாது.


பணம் பெருக்கும் முயற்சியில் 'வாழ' மறந்துவிடாதீர்கள்.


பணத்தைத் தேடும் முயற்சியில் நீங்கள் 'காணாமல்' போய்விடாதீர்கள். குடும்பமும், உறவுகளும் அவசியம்!


என்றும் நம் நினைவில் இருக்க வேண்டியவை :


பணம், நமது விருப்பங்களுக்காக வேலை செய்யும் பணியாள், அவ்வளவே!


MONEY IS NOT EVERYTHING! IT'S ONLY A MEANS TO ACHIEVE OUR ENDS / GOALS!


நன்றி!

 கேள்வி : எதுபோன்ற நபர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது?


என் பதில் : 


முத‌லில் சில‌ ந‌டைமுறை உதார‌ண‌ங்க‌ளை பார்த்துவிட்டு தொட‌ர‌லாம்.


1. திரு. ராகுல்காந்தி அவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌து சுமார் 45 வ‌ருட‌ங்க‌ள் இருக்க‌க்கூடும். த‌மிழ‌க‌ தேர்த‌ல் சுற்றுப் ப‌ய‌ண‌த்தின்போது ஒரே கையில் த‌ண்டால், க‌ட‌ல் நீச்ச‌ல் . . . அந்த‌ள‌வு உட‌ல் த‌குதி, ஆரோக்கிய‌ம் உள்ள‌வ‌ர். அந்த‌ஸ்துக்கோ, செல்வ‌ செழிப்பிற்கோ, அறிவிற்கோ, க‌வ‌ர்ச்சிக்கோ, பெண்க‌ள் விரும்பும் நிற‌த்திற்கோ ஒரு குறைவும் இல்லை. ஆனால் அவ‌ர் சிங்கிளாக‌த்தான் இருக்கின்றார். அவ‌ர‌து தாயார் ஐரோப்பிய‌ நாட்டில் வ‌ள‌ர்ந்த‌வ‌ராத‌லால் ம‌க‌னின் சொந்த‌ விச‌ய‌ங்க‌ளில் மூக்கை நுழைக்காம‌ல் நாக‌ரிக‌ம் பேணுகிறார். (இந்திய‌ தாய்மார்க‌ள், ச‌கோத‌ரிக‌ள் சும்மா எரிச்ச‌லூட்டாம‌ல் சோனியா, பிரிய‌ங்கா போன்று அமைதி காக்க‌வும்).


2. ச‌ல்மான்கான் தோற்ற‌தில் அழ‌கான‌ வ‌டிவ‌மைப்புட‌ன் க‌ட்டும‌ஸ்தான‌ ஆண‌ழ‌க‌ன். ஒரு ப‌ட‌த்துக்கு 100 கோடிக்கும் மேல் வாங்குகின்றார். சிங்கிளாக‌த்தான் உள்ளார். அது அவ‌ர‌து விருப்ப‌ம்.


என‌வே


வ‌ட்ட‌ம் போட்டு வாழ்வ‌த‌ற்கு வாழ்க்கை என்ன‌ க‌ணித‌மா?


க‌ணித‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அத‌ற்கான‌ விலையை கொடுத்துவிட்டு வாழ‌ப் பழ‌க‌வும்.


இல்லையென்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர‌வ‌ர் வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌வும்.


நிற்க‌!


உட‌ல் ஆரோக்கிய‌ம் அற்ற‌ ஆண்க‌ள் திரும‌ண‌ம் செய்யாதிருப்ப‌து க‌ட்டாய‌ம். க‌ருப்பை இன்றியே சில‌ பெண்க‌ள் பிற‌ப்ப‌தாக‌வும், அதை மறைத்து திரும‌ண‌ம் செய்வ‌தாக‌வும், வெகு நாளாகியும் குழ‌ந்தை பிற‌க்காம‌ல் போகும் போதுதான் தெரிய‌ வ‌ந்த‌தாக‌வும் ஒரு ப‌த்திரிகைச் செய்தி ப‌டித்த‌துண்டு. இவ‌ர்க‌ள் செய்வ‌தும் ந‌ல்ல‌த‌ல்ல‌.


க‌ட‌ந்த‌ வருடம்  நீல‌கிரி தோட‌ர் ப‌ழ‌ங்குடி வ‌குப்பின‌ருள் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌த்தின்போது தாலி க‌ட்டும் நேர‌த்தில் என் காத‌ல‌ர் வ‌ந்து கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு ம‌ணி நேர‌த்தில் வ‌ந்துவிடுவார் என்று ம‌ண‌மேடையில் இருந்து எழுந்த‌ ம‌ண‌ம‌க‌ளைப் போல‌ அக்க‌ப்போர், அப‌த்த‌ம் ந‌ட‌க்காதிருப்ப‌து ந‌ல‌ம்.


நிர‌ந்த‌ர‌ வேலையில் இல்லாத‌வ‌ர்க‌ள் சிங்கிளாக‌ இருக்கும்போதே ஜான் ஏறினால் முழ‌ம் ச‌றுக்கும் வாழ்க்கைக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ள், சொற்ப வ‌ருமான‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் அக‌ல‌க் கால் வைக்க வேண்டாம். எங்கோயோ போகிற‌ 'பிர‌ச்ச‌னை' யில் வ‌லிய‌ சென்று 2 மீட்ட‌ர் துணி வாங்கி ச‌ட்டை தைத்து போட்டுக்கொள்ள‌ வேண்டாம். வாழ்க்கை ந‌ர‌க‌மாகிவிடும்.


பூனாவில் கொரானாவினால் சுமார் 4000 நிறுவ‌ன‌ங்க‌ள் P.F. ப‌ங்குத் தொகை செலுத்த‌ முடிய‌வில்லை. வேலையே இல்லை. ஊழிய‌ர்க‌ளும் இல்லை என்று ஏதேதோ சொல்வ‌தாக‌ ப‌த்திரிகை செய்தி சொல்கின்ற‌து. இந்தியா முழுதும் டீ க‌டை கார‌ன் அப்ப‌டித்தான் வைத்துள்ளார். 8 ஆயிர‌ம் கோடியில் நாடாளும‌ன்ற‌ க‌ட்ட‌ட‌ம் எப்ப‌டித்தான் க‌ட்டுவானோ! மாநில‌ அர‌சுக‌ளிட‌மிருந்து ச‌க‌ல‌ வ‌ருமான‌த்தையும் பிடுங்கிக் கொண்டு . . .


த‌மிழ‌க‌த்தில் ஆட்சி மாறி இருக்கின்ற‌து. காட்சியும் மாறும், ஒர‌ள‌வாவ‌து அனைவ‌ருக்கும் விடியும் என்று உள‌மாற‌ ந‌ம்புவோம்.



இப்போது இல்ல‌த்த‌ர‌சிக‌ள் குறைவு. அனைவ‌ரும் வேலைக்குச் செல்கின்றார்க‌ள். ஆண்க‌ள் ச‌மைக்க‌ தெரியாவிடில் பாத்திர‌மாவ‌து க‌ழுவி வைக்க‌ வேண்டும். ச‌மைப்ப‌து, வீட்டை பெறுக்குவ‌து, துவைப்ப‌து . . . பெண்க‌ள் வேலை என்று அவ‌ர்க‌ளை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த‌ காம‌டி பீசுங்க‌ளும் அதையே ந‌ம்பிக்கொண்டு முக‌ஞ்சுழிக்காம‌ல் இது ந‌ம்முடைய‌ வேலைதான், பாட்டி செய்தார்க‌ள், அம்மா செய்தார்க‌ள், நாமும் செய்ய‌வேண்டும் என்று . . . ப‌ட‌ம் ரொம்ப‌ நாளைக்கு ஓடாது.


குடிப்ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் என்றாவ‌து ஒருநாள் நிச்ச‌ய‌ம் குடிநோயாளியாக‌ மாறுவார்க‌ள். ப‌ண்டிகை நாட்க‌ளில், வார‌ இறுதி நாட்க‌ளில் டாஸ்மாக் வியாபார‌ம் அப்ப‌டித்தான் சொல்கின்ற‌து. இல்லையென்றாலும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌ருத்துவ‌ச் செல‌வு வெகுசீக்கிர‌ம் வைக்கும்.


அவ‌ர்க‌ள் சிங்கிளாக‌வே இருத்த‌லே ந‌ல‌ம்.


இந்த‌ Pre Flight செக் லிஸ்ட் டிக்க‌டித்துவிட்டால் தாராள‌மாக‌ குடும்ப‌ஸ்த‌ராக‌ . . .


நெஞ்சார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்!!!

ஞாயிறு, 2 மே, 2021

 மருத்துவக்காப்பீட்டின் அவசியம் ...

📚📚✍️✍️✍️
நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு (health Insurance) எடுக்கலாம் என்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட காப்பீடு எடுப்பது நல்லது? எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்வது நல்லது? மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு நாள் மருத்துவம் செய்ய முடியுமா?
மருத்துவகாப்பீடு அவசியம்.
குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர்களின் வயதுக்கு ஏற்றபடி சரியான திட்டங்களை தேர்வு செய்யலாம்.
உதாரணமாக ஒருவர் தனக்கும் தனது மனைவிக்கும் மற்றும் இரு குழந்தைகள், பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கும் சேர்த்து floater policy எடுப்பது நல்லது. இதில் பிரீமியம் குறைவு.
ஒரே காப்பீட்டுதொகைக்கு அனைவருக்கும் சேர்த்து பாலிசி தரப்படும்.
ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பாலிசி எடுக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனிதனியாக 5 லட்சம் வரை தனிநபர் பாலிசி எடுக்கலாம் . குடும்பமாக செய்து கொண்டால் அதற்கான தள்ளுபடி உண்டு. மற்றபடி இதில் பிரிமியம் கொஞ்சம் அதிகம்.
உங்களுடைய வயது மற்றும் செலவழிக்கக் கூடிய தொகையைப் பொறுத்து நீங்களே உங்களுக்கான பாலிசியைத் தேர்வு செய்யலாம்.
வரிச் சலுகைகள் உண்டு. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனது மற்ற பதில்களில் ஏற்கனவே கூறியுள்ளபடி IRDA அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திலும் காப்புறுதி செய்து கொள்ளலாம்.
ஒருநாள் மருத்துவம் என்பதைப் பொறுத்தவரை சில குறிப்பிட்ட மருத்துவத்திற்கு மட்டும் அனுமதி உண்டு.
பொதுவாக 24 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து , மருத்துவம் செய்து கொண்டால் மட்டுமே அதற்கான இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.
அதைவிடக் குறைந்த நேரத்தில் பெறப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் காப்பீட்டு பத்திரம் அனுமதிக்கும். உதாரணமாக, கண் அறுவை சிகிச்சை, பல் சம்பந்தமான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியான கருச்சிதைவு (உயிரை காப்பாற்ற செய்யக்கூடியது)எதிர்பாராத விபத்துக்கள் ,கருச்சிதைவு போன்றவற்றிற்கு ஒரு நாளை விடக் குறைவான நேரமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டியிருக்கும். அவற்றிற்குக் காப்பீடு உண்டு.
Day care treatment இதில் அடங்கும்.
இதன் விவரங்களை நீங்கள் காப்பீட்டுப் படிவத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com
முக்கிய குறிப்பு.:🥰
முதன்முறையாக் காப்பீடு செய்வதற்கு முன்பு ,ஏற்கனவே ஏதாவது உடல்நலக் கோளாறு இருப்பின் ,முதல் இரண்டு வருடங்களுக்கும்,சில கோளாறுகளுக்கு முதல் நான்கு வருடங்களுக்கும் செலவை தாங்களே ஏற்க வேண்டியிருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னரே காப்பீட்டு நிறுவனம் உங்கள் செலவை ஏற்றுக்கொள்ளும். இவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் காப்பீடு செய்துகொள்வது நல்லது.📚📚✍️✍️✍️✍️💑