புதன், 27 ஜூன், 2018

வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு,

எந்த விமர்சனத்தையும் தூக்கி ஏறியும் தைரியம் வர வேண்டும் !!!

எனது உலகம் .....

எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?..என்று நம்ம மாப்பிளை தம்பி ஒருவர் கேட்டார் ..எப்படி இந்த அளவுக்கு எழுதி பழகினீர்கள் ...சொல்லுங்களேன் என்றார் ..

உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.
ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும் ..மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது...நான் அடிக்கடி சந்திக்கும் மாப்பிள்ளைகள் ..நண்பர்கள் என்னுடன் பயணிப்பவர்கள் ...உங்களுக்கே தெரியும் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக