கூட்டு குடும்பம் ...இன்று கம்பள விருட்சம் கார்த்தி மாப்பிள்ளை அழகான தலைப்பை கொடுத்து ..பதிவுகளும் பதிவு செய்தார் ..சில நல்ல உள்ளங்களும் அக்கறையும் உள்ள சொந்தங்களும் பதிவுகளை பதிவு செய்தனர் ...
என்னால் முடிந்த அளவு ...கூட்டு குடும்ப நிகழ்வுகளை பதிவு செய்கிறேன் ...
கூட்டு குடும்பம் ஒரு கை ஓசையல்ல இரண்டு கைகளும் இணைய வேண்டும் இல்லையென்றால் தினம் தினம் புது புது பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது அசட்டை செய்பவர்களாக இருக்க வேண்டும்..
பிரச்னை கொடுப்பவர்களை காணும் பொழுது அவர்கள் மேல் பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை....எம்புட்டு யோசிப்பார்கள்.,,யோசித்து யோசித்து அவங்க முகத்தில் கூட அருள் இல்லை..இருள் அடைந்து போய் உள்ளது..
அவர்கள் நம் குடும்பத்திற்குள் ஒற்றுமையை குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதனை நம்பாமல் ஒற்றுமையாக சந்தோசமாக இருப்பதை அவர்கள் பார்க்கும் பொழுது வயிறு எரிந்து அடுத்த முயற்சியை மேற்கொள்கின்றார்கள்...
ஏதோ ஒரு ரூபத்தில் வரப்போகும் பிரச்சனையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் மீண்டும் பயணம் திரில்லான வாழ்க்கையை நோக்கி..
கூட்டு குடும்பம் கலைந்தது ,பட்டாம்பூச்சிகள் பறந்தது ,கட்டிய வீடோ காலியானது, சிந்தையில் சில பல நிழலாடியது இதுதான் இன்றைய காலகட்டத்தில் நிதர்சனமான உண்மையானது
நம்முடைய பலமே கூட்டு குடும்பம் தான்!
இப்ப கூட்டு பிரிஞ்சு குடும்பமாக நிக்குது!
சாதி, மதம் இல்லை என்றால் இப்ப இருக்கிற குடும்ப அமைப்பு உடையும். குடும்பம் இல்லை என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் காணாமல் போகும்!
அப்புறம் என்ன எவர் எவருடன் வேண்டுமானாலும் கலவி பூண்டு குழந்தைகளை பெத்தெடுப்பர்! ( பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இது தான் நிலை )
பாவம் குழந்தைகள் தான் பெத்த அம்மா அப்பா யாருன்னு கூட தெரியாது ஸ்டெப் டேட் ஸ்டேப் மம் ன்னு பந்த பாசம் இல்லாமல் வாடி போகும்! ( ஏறக்குறைய விலங்கினங்களின் நிலை )
வளர்ந்த நாட்டில் பெரும்பாலான குடும்ப அமைப்பு பின்வரும்மாறு தான் இருக்கும்!
கணவன் : எனக்கும் X க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
மனைவி : எனக்கும் Y க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
கணவன் மனைவி: நமக்கு பிறந்தது ஒரு குழந்தை!
பாருங்கள் ஒரு வீட்டுக்குள்ளே எவ்வளவு பாகுபாடுகள் ஒரு குழந்தைக்கு அப்பா மட்டும் இருக்கு, இன்னொரு குழந்தைக்கு அம்மா மட்டும் இருக்கு, கடைசி குழந்தைக்கு அப்பா அம்மா இருவரும் இருக்கு. பாருங்கள் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு குழந்தைகள் மனதில் உருவாகும் என!!??
மேலுள்ள மாதிரி இங்கையும் இருக்கும் என்கிறீர்களா ஆமாம் இருக்கிறது அதாவது 1000 ல் 1. ( அனைவருக்கும் தெரிந்த எ .கா. நாட்டாமை )
ஆக குடும்ப அமைப்பை உடைக்க நினைப்பவர்களை அவங்கவங்க குழந்தைகளே மதிக்காது மன்னிக்காது!
கூட்டு குடும்பம் கூட தேவையில்லை
குறைந்தபட்சம் யார் என்ன உறவு
என்றாவது உங்கள் பிள்ளைகளுக்கு
சொல்லி கொடுங்கள் இந்த
காலத்து பிள்ளைகள் எல்லா
உறவுகளையும் ஆன்ட்டி அங்கிளுக்குள்
அடக்கி விடுகின்றன..!!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றோ “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று சொல்லுமளவிற்கு மாறி விட்டது. பழைய குடும்ப கூட்டமைப்பு முறைகள் ஒட்டு மொத்தமாக மாறி தற்போது தனிக்குடும்ப முறைகள்தான் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த பழைய கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை மாறியதன் விளைவாக, குடும்ப பாசம் என்பதே மறைந்து விட்டிருக்கின்றது என சொல்லலாம்.
அன்றெல்லாம் குடும்பம், கோத்திரம் என்ற கலாச்சார சூழ்நிலையில் நாமெல்லாம் ஒரு கூட்டு குடும்பமாக ஒருமித்து வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த உறவே அப்பா அல்லது தாத்தா என்ற ஒரு தலைமையில் கீழ் இயங்கி வந்தது. அவ்வாறு வாழ்ந்த குடும்பங்களில் பெரும்பாலும் பாசம் என்ற ஓர் உணர்வு மிகைத்தோடி காணப்பட்டது. குடும்பங்களில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அதைக்கொண்டு தீராத பகை ஏற்படாத நிலை இருந்தது. குடும்ப தலைவராலோ அல்லது தலைவியாலோ அவைகளெல்லாம் உடனுக்குடன் களையப்பட்டு விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடியவர்களாகவும், குறிப்பாக உதவக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.
குடும்பத்தில் யாருக்காவது ஏதாகிலும் நேர்ந்தால் அதற்காக மற்றவர்கள் ஓடியாடி அவர்களுக்கு உதவக் கூடியவர்களாகவும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் அவை தலை போகிற காரியமாயிருந்தாலும், அவைகளை கூடவே இருந்து தீர்த்து வைக்க கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இந்த நிலை அக்குடும்பங்களில் ஒரு சப்போர்ட்டாகவும், பாதுக்காப்பாகவும் இருந்து வந்தது.
பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழும் வீடுகளில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் பாசம் மிகுதியானவர்களாகவும், மரியாதை மற்றும் தன்னடக்கம் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர் என்பது ஆய்வறிக்கையில் கிடைத்த தகவலாகும். தினமும் பாட்டியின் மடியின் படுத்துக் கொண்டு கதைக்கேட்டு உறங்கிய காலங்களை சற்றே நினைவில் கொண்டு வாருங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் குறும்புகளினால் அம்மாவோ, அப்பாவோ பிள்ளைகளை கண்டிக்கும்போது, அவர்கள் பயந்துக் கொண்டு பாட்டியிடம் தான் ஓடிவருவார்கள். பாட்டிதான் அவர்களை அரவணைத்து ஆறுதலும், புத்திமதிகளும் சொல்லுவார். இவ்வாறு தாத்தாவின் கண்காணிப்பிலும், பாட்டியின் அன்பான அரவனைப்பிலும் வளர்ந்தவர்கள் நன்னெறி மிக்கவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
அப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது சிலர் தொலைவான தூரத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும், அவர்களின் அவசியத்தை கருதி தத்தம் மனைவி மக்களோடு தற்காலிக தனிக் குடும்பம் நடத்துவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் தலைமை குடும்பத்தினர்களுடன் இணைந்துக் கொள்வார்கள்.
வீட்டு நிகழ்ச்சிகளில் தங்களது ஒற்றுமையையும், பாச உணர்வுகளையும் கட்டக் கூடியவர்களாக இருந்து வந்தனர். அன்றைய காலத்தில் வீடுகளில் திருமணம் போன்ற காரியங்கள் நடந்தால் பல நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் வந்து தங்கியிருந்து வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இவைகளை விவரிப்பதென்றால் தனி கட்டுரையே உருவாக்கலாம்.
அப்போதைய திருமண வீடுகளின் கொண்டாட்டங்களையும் கோலாகலங்களையும் தற்காலத்தில் பார்க்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு அனைத்து சூழ்நிலைகளும் மாறிவிட்டது. குறிப்பாக கூட்டு குடும்பம் என்ற சூழலே மாறிவிட்டது. திருமணமாகி கொஞ்சம் மாதங்களிலேயே கணவன், மனைவி இருவரும் தனிக் குடித்தனம் நடத்த தொடங்கி விடுகின்றனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெற்றவர்களையே கவனிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில், தாத்தா, பாட்டிகளின் நிலையை சொல்லவே வேண்டியதில்லை. அவர்களை அனாதை விடுதிகளில் அனாசயமாக சேர்த்து விட்டு விடுகின்றனர். பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை நல்லவிதமாக வைத்து கவனிக்க வேண்டிய, அதற்கான கடமையுடைய பிள்ளைகள் தத்தம் மனைவிமார்களின் மந்திரங்களினால் மாறு செய்யும் சூழல்களை நிறையவே காண முடிகிறது. மகிழ்ச்சிகரமான கூட்டு குடும்ப வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போய், இன்று இயந்திர வாழ்க்கை முறையே நடந்து வருகின்றது. பழமையை மறந்ததன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம்.
நம் கம்பள சமுதாயத்தில் ...தற்பொழுது கூட்டு குடும்ப முறை உள்ளதா ..தெரிந்தவர்கள் கூறவும் ..செய்திகளை பகிரலாம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ....9944066681..
என்னால் முடிந்த அளவு ...கூட்டு குடும்ப நிகழ்வுகளை பதிவு செய்கிறேன் ...
கூட்டு குடும்பம் ஒரு கை ஓசையல்ல இரண்டு கைகளும் இணைய வேண்டும் இல்லையென்றால் தினம் தினம் புது புது பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் அல்லது அசட்டை செய்பவர்களாக இருக்க வேண்டும்..
பிரச்னை கொடுப்பவர்களை காணும் பொழுது அவர்கள் மேல் பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை....எம்புட்டு யோசிப்பார்கள்.,,யோசித்து யோசித்து அவங்க முகத்தில் கூட அருள் இல்லை..இருள் அடைந்து போய் உள்ளது..
அவர்கள் நம் குடும்பத்திற்குள் ஒற்றுமையை குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதனை நம்பாமல் ஒற்றுமையாக சந்தோசமாக இருப்பதை அவர்கள் பார்க்கும் பொழுது வயிறு எரிந்து அடுத்த முயற்சியை மேற்கொள்கின்றார்கள்...
ஏதோ ஒரு ரூபத்தில் வரப்போகும் பிரச்சனையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் மீண்டும் பயணம் திரில்லான வாழ்க்கையை நோக்கி..
கூட்டு குடும்பம் கலைந்தது ,பட்டாம்பூச்சிகள் பறந்தது ,கட்டிய வீடோ காலியானது, சிந்தையில் சில பல நிழலாடியது இதுதான் இன்றைய காலகட்டத்தில் நிதர்சனமான உண்மையானது
நம்முடைய பலமே கூட்டு குடும்பம் தான்!
இப்ப கூட்டு பிரிஞ்சு குடும்பமாக நிக்குது!
சாதி, மதம் இல்லை என்றால் இப்ப இருக்கிற குடும்ப அமைப்பு உடையும். குடும்பம் இல்லை என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் காணாமல் போகும்!
அப்புறம் என்ன எவர் எவருடன் வேண்டுமானாலும் கலவி பூண்டு குழந்தைகளை பெத்தெடுப்பர்! ( பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இது தான் நிலை )
பாவம் குழந்தைகள் தான் பெத்த அம்மா அப்பா யாருன்னு கூட தெரியாது ஸ்டெப் டேட் ஸ்டேப் மம் ன்னு பந்த பாசம் இல்லாமல் வாடி போகும்! ( ஏறக்குறைய விலங்கினங்களின் நிலை )
வளர்ந்த நாட்டில் பெரும்பாலான குடும்ப அமைப்பு பின்வரும்மாறு தான் இருக்கும்!
கணவன் : எனக்கும் X க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
மனைவி : எனக்கும் Y க்கும் பிறந்தது ஒரு குழந்தை!
கணவன் மனைவி: நமக்கு பிறந்தது ஒரு குழந்தை!
பாருங்கள் ஒரு வீட்டுக்குள்ளே எவ்வளவு பாகுபாடுகள் ஒரு குழந்தைக்கு அப்பா மட்டும் இருக்கு, இன்னொரு குழந்தைக்கு அம்மா மட்டும் இருக்கு, கடைசி குழந்தைக்கு அப்பா அம்மா இருவரும் இருக்கு. பாருங்கள் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு குழந்தைகள் மனதில் உருவாகும் என!!??
மேலுள்ள மாதிரி இங்கையும் இருக்கும் என்கிறீர்களா ஆமாம் இருக்கிறது அதாவது 1000 ல் 1. ( அனைவருக்கும் தெரிந்த எ .கா. நாட்டாமை )
ஆக குடும்ப அமைப்பை உடைக்க நினைப்பவர்களை அவங்கவங்க குழந்தைகளே மதிக்காது மன்னிக்காது!
கூட்டு குடும்பம் கூட தேவையில்லை
குறைந்தபட்சம் யார் என்ன உறவு
என்றாவது உங்கள் பிள்ளைகளுக்கு
சொல்லி கொடுங்கள் இந்த
காலத்து பிள்ளைகள் எல்லா
உறவுகளையும் ஆன்ட்டி அங்கிளுக்குள்
அடக்கி விடுகின்றன..!!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று சொல்லுவார்கள். ஆனால் இன்றோ “கூடி வாழ்ந்தால் கோடி இன்னல்” என்று சொல்லுமளவிற்கு மாறி விட்டது. பழைய குடும்ப கூட்டமைப்பு முறைகள் ஒட்டு மொத்தமாக மாறி தற்போது தனிக்குடும்ப முறைகள்தான் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த பழைய கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை மாறியதன் விளைவாக, குடும்ப பாசம் என்பதே மறைந்து விட்டிருக்கின்றது என சொல்லலாம்.
அன்றெல்லாம் குடும்பம், கோத்திரம் என்ற கலாச்சார சூழ்நிலையில் நாமெல்லாம் ஒரு கூட்டு குடும்பமாக ஒருமித்து வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி என ஒட்டுமொத்த உறவே அப்பா அல்லது தாத்தா என்ற ஒரு தலைமையில் கீழ் இயங்கி வந்தது. அவ்வாறு வாழ்ந்த குடும்பங்களில் பெரும்பாலும் பாசம் என்ற ஓர் உணர்வு மிகைத்தோடி காணப்பட்டது. குடும்பங்களில் அவ்வப்போது சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அதைக்கொண்டு தீராத பகை ஏற்படாத நிலை இருந்தது. குடும்ப தலைவராலோ அல்லது தலைவியாலோ அவைகளெல்லாம் உடனுக்குடன் களையப்பட்டு விடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடியவர்களாகவும், குறிப்பாக உதவக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.
குடும்பத்தில் யாருக்காவது ஏதாகிலும் நேர்ந்தால் அதற்காக மற்றவர்கள் ஓடியாடி அவர்களுக்கு உதவக் கூடியவர்களாகவும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் அவை தலை போகிற காரியமாயிருந்தாலும், அவைகளை கூடவே இருந்து தீர்த்து வைக்க கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இந்த நிலை அக்குடும்பங்களில் ஒரு சப்போர்ட்டாகவும், பாதுக்காப்பாகவும் இருந்து வந்தது.
பொதுவாக கூட்டுக் குடும்பமாக வாழும் வீடுகளில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் பாசம் மிகுதியானவர்களாகவும், மரியாதை மற்றும் தன்னடக்கம் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர் என்பது ஆய்வறிக்கையில் கிடைத்த தகவலாகும். தினமும் பாட்டியின் மடியின் படுத்துக் கொண்டு கதைக்கேட்டு உறங்கிய காலங்களை சற்றே நினைவில் கொண்டு வாருங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் குறும்புகளினால் அம்மாவோ, அப்பாவோ பிள்ளைகளை கண்டிக்கும்போது, அவர்கள் பயந்துக் கொண்டு பாட்டியிடம் தான் ஓடிவருவார்கள். பாட்டிதான் அவர்களை அரவணைத்து ஆறுதலும், புத்திமதிகளும் சொல்லுவார். இவ்வாறு தாத்தாவின் கண்காணிப்பிலும், பாட்டியின் அன்பான அரவனைப்பிலும் வளர்ந்தவர்கள் நன்னெறி மிக்கவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.
அப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களில் யாராவது சிலர் தொலைவான தூரத்தில் பணிபுரிந்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும், அவர்களின் அவசியத்தை கருதி தத்தம் மனைவி மக்களோடு தற்காலிக தனிக் குடும்பம் நடத்துவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் தலைமை குடும்பத்தினர்களுடன் இணைந்துக் கொள்வார்கள்.
வீட்டு நிகழ்ச்சிகளில் தங்களது ஒற்றுமையையும், பாச உணர்வுகளையும் கட்டக் கூடியவர்களாக இருந்து வந்தனர். அன்றைய காலத்தில் வீடுகளில் திருமணம் போன்ற காரியங்கள் நடந்தால் பல நாட்களுக்கு முன்பே உறவினர்கள் அனைவரும் வந்து தங்கியிருந்து வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ஊர் திரும்புவார்கள். இவைகளை விவரிப்பதென்றால் தனி கட்டுரையே உருவாக்கலாம்.
அப்போதைய திருமண வீடுகளின் கொண்டாட்டங்களையும் கோலாகலங்களையும் தற்காலத்தில் பார்க்கவே முடியாது என்று சொல்லுமளவிற்கு அனைத்து சூழ்நிலைகளும் மாறிவிட்டது. குறிப்பாக கூட்டு குடும்பம் என்ற சூழலே மாறிவிட்டது. திருமணமாகி கொஞ்சம் மாதங்களிலேயே கணவன், மனைவி இருவரும் தனிக் குடித்தனம் நடத்த தொடங்கி விடுகின்றனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெற்றவர்களையே கவனிக்க முடியாதவர்களாக இருக்கும் நிலையில், தாத்தா, பாட்டிகளின் நிலையை சொல்லவே வேண்டியதில்லை. அவர்களை அனாதை விடுதிகளில் அனாசயமாக சேர்த்து விட்டு விடுகின்றனர். பெற்றோர்களை அவர்களின் கடைசி காலம் வரை நல்லவிதமாக வைத்து கவனிக்க வேண்டிய, அதற்கான கடமையுடைய பிள்ளைகள் தத்தம் மனைவிமார்களின் மந்திரங்களினால் மாறு செய்யும் சூழல்களை நிறையவே காண முடிகிறது. மகிழ்ச்சிகரமான கூட்டு குடும்ப வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போய், இன்று இயந்திர வாழ்க்கை முறையே நடந்து வருகின்றது. பழமையை மறந்ததன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம்.
நம் கம்பள சமுதாயத்தில் ...தற்பொழுது கூட்டு குடும்ப முறை உள்ளதா ..தெரிந்தவர்கள் கூறவும் ..செய்திகளை பகிரலாம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ....9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக