திங்கள், 18 ஜூன், 2018

அறக்கட்டளையின் நோக்கங்கள்:-
1. தமிழ்நாடு முழுதும் வாழும் இந்து - தொட்டியநாயக்கர் ராஜகம்பள இன மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான கல்விக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், மருத்துவ மனைகள், விவசாயம் சார்ந்த
தொழில்கள், பண்ணைகள், தொழிற்கூடங்கள், நிதி நிறுவனம் போன்றவை அமைத்து பராமரித்து வர பாடுபடுதல்
2.நமது சமுதாய மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் திருமண தகவல் மையம் அமைத்து நமது இன ஆண் பெண் நபர்களுக்கு நல்லதொரு மணமகள் , மணமகன் அமையவும் அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் உதவுதல்
3.நமது இன மக்களுக்கு படித்த மற்றும் படிக்காத நபர்களுக்கு அவரவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை அமைத்துக்கொடுத்தல் அதற்காக தனி பிரிவு அமைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்ச்சி வகுப்புகள் நடத்துதல்
4.நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் ஜமீன்கள் அமைத்த பழம்பெரும் கோவில்களை புணரமைத்து பாதுகாத்தல் மற்றும் அதற்கான வரலாற்று புத்தகங்கள் வெளியிட்டு இனமக்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
5. அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நன்கொடைகள் பெறுதல், சந்தா வசூலித்தல் ,மற்றும் இதர வழிகளில் பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்களிடமிருந்து நிதிகளை பெறுதல்.
6. அறக்கட்டளைக்கு தேவையான அசையும் அசையா சொத்துக்களை வாங்கவும், விற்கவும், குத்தகைக்கு மற்றும் வாடைகைக்கு விடுதல் அடமானம் வைத்து கடன் பெறுதல் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான இதர காரியங்களை செய்தல்
7. கல்வி ஸ்தாபனங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள கல்வி ஸ்தாபனங்களை ஏற்று நடத்துவது அவற்றை அபிவிருத்தி செய்வது போன்ற கல்விப்பணியை செய்வது
8.சிறந்த மாணவ மாணவியற்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் அவர்களின் மேற்படிப்பிற்கு வட்டியில்லா கடன் வழங்குதல் போன்ற கல்விப்பணியை செய்வது
9.ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையோ அல்லது அதற்கான பண வசதிகளையோ செய்து கொடுப்பது

10.மேற்கண்ட நோக்கங்களுக்காக நிர்வாக குழு கூட்டம் கூட்டி அதற்கான ஆயத்த முடிவுகளை எடுப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக