இன்றைய தலைப்பு ...நல்லுறவு மேலாண்மை ....எனது பணியிலிருந்து தொடர்கிறேன் ....
முதலில் கட்டுநர்களுக்கும் பிற தொழிலதிபர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கட்டுநர்களுக்கு ஏன் தனித்தன்மையான மேலாண்மை அம்சங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
எல்லாத் தொழில்களிலுமே பொருள் உற்பத்தி செய்யப் படுகிறது நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. ஆனால், நுகர்வோரும் பொருள் உற்பத்தி செய்வோரும் நேருக்கு நேர் பார்த்து அறியாதவர்களாகவே இருப்பர். விவசாயம், ஆடை உற்பத்தி, உணவுப்பொருள் தயாரிப்பு, சூப்பர் அங்காடி, திரைப்படம் உருவாக்கம் என எதை எடுத்தாலும் உருவாக்கு வோருக்கும், நுகர்வோருக்கும் இடையே விற்பனை என்கிற களம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர்கள் உருவாக்கும் பொருட்களின் தரத்தின் பற்றி விற்பவர்கள் தான் கவலைப்படவேண்டும். ஏனெனில், அவர்கள் தான் நேருக்கு நேர் நுகர்வோரை சந்திப்பவர்கள்.
அதாவது, தயாரித்தலும், மார்கெட்டிங்கும் தனித்தனி பிரிவுகளாக மேற்கண்ட தொழில்களில் இயங்கும். ஆனால், கட்டிடத்தொழிலில் விற்பனை என்கிற தனிக்களம் கிடையாது.
இங்கு பொருள் என்பது வீடு, அல்லது கட்டுமானம். எங்கு தயாரிக்கப்படுகிறதோ அல்லது உருவாக்கப்படுகிறதோ அங்கு தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதுதான் விற்பனைக்களம்.வீடுகளை உருவாக்குபவர்களே அதை விற்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும், மேம்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக கட்டுமானத்தொழில் என்பது மற்ற சாதாரண தொழில்களைப் போல சீசன் டைம் தொழில் அல்ல.மற்ற பொருட்களை ஆண்டுக்காண்டு, மாதந்தோறும், நாள்தோறும் நுகர்வோர்கள் வாங்குகிறார்கள் என்றால் ,
நமது பொருள் (வீடு) ஒரு தலைமுறைக்கும் ஒன்று விற்பனையானாலே அதிசயம்.வீடு என்பது வாழ்விடம் என்பதால் அதை கட்டித்தரும் கட்டுநர்களும், புனிதமிக்கவர்களாக, நல்லவர் களாக இருக்க வேண்டும் என இச்சமூகம் விரும்புகிறது.
நல்ல கட்டுநர் என்பதற்கு இச்சமூகம் பல்வேறு காரணிகளை வைத்திருக்கிறது.
குறைவான விலை, தரமான வீடு, சொன்ன நேரத்தில் வீடுகளை ஒப்படைத்தல், ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதமின்மை, மறைமுக கட்டணங்கள் வசூலிக்காமல் இருத்தல், சொன்னபடி குறிப் பிட்ட பிராண்டட் கட்டிடப் பொருட்களையே உபயோகித்து கட்டுதல், வேண்டிய சிறு சிறு மாற்றங்களை உடனுக்குடன் செய்துதருதல், விதிகளை மீறாமல் வீடு கட்டுதல், வீடுகளை கட்டி முடித்த பின்பும் சிறு சிறு மரமாத்து வேலைகளை செய்து தருதல், விற்பனைக்கு பிந்தைய சேவையை 24x7 செய்தல், லொகேஷன் காரணமாக வீட்டின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருத்தல், கட்டுநர்கள் - வாடிக்கையாளர்கள் உறவு தாண்டி குடும்பத்துடன் நல்லுறவு பேணுதல் என சகல விஷயங்களும் ஒரு கட்டுநருக்கு ஒன்றிணைந்து இருந்தால் தான் அவரிடம் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறார்கள் நுகர்வோர்கள். அவர்கள் வீடு வாங்குவதற்கு செலவழிக்கிற 30, 40 லட்ச ரூபாய் என்பது அவர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் தான் இத்தனை எதிர்பார்ப்புகள், இத்தனை விசாரணைகள்.
இதை எல்லாம் கனக்கச்சிதமாக நிறைவேற்றித் தர வேண்டுமென்றால் ஒரு கட்டுநருக்கு அஸ்திவாரமாக விளங்க வேண்டியது அவரது அலுவலகம். தனது தனிப்பட்ட உதவியாளர் முதல் நிர்வாக மேலாளர், துணை மேலா ளர், விற்பனை அதிகாரி, சேவை அதிகாரி, கணக்காளர், காசாளர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர் வரை உங்களுக்காவும், உங்கள் நிறுவனத்துக்காகவும் உங்களது விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்காகவும் சிரத்தையுடன் பணியாற்றக் கூடிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் கொண்ட ஒரு அலுவலகம் உங்களுக்கு இருந்தால் தான் சாத்தியம்.
விற்பனை முடிந்த பிறகு ஒரு வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வதில் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்றால், போட்டி.
பொதுவாக வீடு விற்பனை என்பது ஒரு தொடர் சங்கலியைப் போன்றது. 100 சதவீதம் மனதிருப்தியடைந்த உங்கள் வாடிக்கையாளர் கிட்டத்தட்ட உங்களது மார்கெட்டிங் மேலாளருக்கு இணையானவர். உங்களுக்காக அவரது உறவினர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோரிடம் பரிந்து பேசுவார். சொல்லப்போனால், உங்களது மார்கெட்டிங் அதிகாரியை விட இவர் சிறப்பாக பேசுவார். சம்பளத்துக்காக பேசும் பேச்சில் ஒரு வேலை பொய் கலந்து இருக்கலாம். ஆனால், உங்கள் சேவையில் திருப்தியுற்ற ஒரு வாடிக்கையாளர் பேசுகையில் சத்தியமே மேலோங்கி நிற்கும்.
அதனால் தான் எல்லா கட்டுநர்களும் தங்கள் இணையதளங்களிலும், புரவுrர்களிலும் டெஸ்டிமோனியல் என்கிற வாடிக்கையாளர் கருத்துகளை கல்வெட்டுகளாக கருதுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து 4,000 திருப்தியுற்ற வாடிக்கை யாளர்களை வைத்திருக்கும் கட்டுநர்கள் தங்கள் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளின் விற்பனைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.
அப்படியயனில் இத்தனை சிறப்பு பெற்ற வாடிக்கையாளரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஆகவே, ஒரு புராஜெக்ட்டை திட்டமிட்டு, மேற்கொண்டு, நிறைவேற்றுவது என்கிற மூன்று பெரிய பணிகளுக்கு மட்டுமல்ல, புராஜெக்ட்டை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்து தக்க வைத்துக் கொள்ளமட்டுமல்ல, சமூகத்திலும், துறையிலும் போட்டியாளருக்கு மத்தியில் நற்பெயர் பெற்று விளங்குவதற்கும் ஒரு அலுவலகம் சிறந்த பங்காற்றுகிறது என்பது இதன் மூலம் உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். எனவே, இனி வரும் அத்தியாயங்களில் ஒரு அலுவலகத்தின் கட்டமைப்பு, செயல்பாடு போன்ற பல்வேறு நிர்வாக காரணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது பற்றி அறிந்து காெள்ள வேண்டும்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...Home Loans...9944066681
முதலில் கட்டுநர்களுக்கும் பிற தொழிலதிபர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் கட்டுநர்களுக்கு ஏன் தனித்தன்மையான மேலாண்மை அம்சங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
எல்லாத் தொழில்களிலுமே பொருள் உற்பத்தி செய்யப் படுகிறது நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. ஆனால், நுகர்வோரும் பொருள் உற்பத்தி செய்வோரும் நேருக்கு நேர் பார்த்து அறியாதவர்களாகவே இருப்பர். விவசாயம், ஆடை உற்பத்தி, உணவுப்பொருள் தயாரிப்பு, சூப்பர் அங்காடி, திரைப்படம் உருவாக்கம் என எதை எடுத்தாலும் உருவாக்கு வோருக்கும், நுகர்வோருக்கும் இடையே விற்பனை என்கிற களம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர்கள் உருவாக்கும் பொருட்களின் தரத்தின் பற்றி விற்பவர்கள் தான் கவலைப்படவேண்டும். ஏனெனில், அவர்கள் தான் நேருக்கு நேர் நுகர்வோரை சந்திப்பவர்கள்.
அதாவது, தயாரித்தலும், மார்கெட்டிங்கும் தனித்தனி பிரிவுகளாக மேற்கண்ட தொழில்களில் இயங்கும். ஆனால், கட்டிடத்தொழிலில் விற்பனை என்கிற தனிக்களம் கிடையாது.
இங்கு பொருள் என்பது வீடு, அல்லது கட்டுமானம். எங்கு தயாரிக்கப்படுகிறதோ அல்லது உருவாக்கப்படுகிறதோ அங்கு தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதுதான் விற்பனைக்களம்.வீடுகளை உருவாக்குபவர்களே அதை விற்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும், மேம்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக கட்டுமானத்தொழில் என்பது மற்ற சாதாரண தொழில்களைப் போல சீசன் டைம் தொழில் அல்ல.மற்ற பொருட்களை ஆண்டுக்காண்டு, மாதந்தோறும், நாள்தோறும் நுகர்வோர்கள் வாங்குகிறார்கள் என்றால் ,
நமது பொருள் (வீடு) ஒரு தலைமுறைக்கும் ஒன்று விற்பனையானாலே அதிசயம்.வீடு என்பது வாழ்விடம் என்பதால் அதை கட்டித்தரும் கட்டுநர்களும், புனிதமிக்கவர்களாக, நல்லவர் களாக இருக்க வேண்டும் என இச்சமூகம் விரும்புகிறது.
நல்ல கட்டுநர் என்பதற்கு இச்சமூகம் பல்வேறு காரணிகளை வைத்திருக்கிறது.
குறைவான விலை, தரமான வீடு, சொன்ன நேரத்தில் வீடுகளை ஒப்படைத்தல், ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதமின்மை, மறைமுக கட்டணங்கள் வசூலிக்காமல் இருத்தல், சொன்னபடி குறிப் பிட்ட பிராண்டட் கட்டிடப் பொருட்களையே உபயோகித்து கட்டுதல், வேண்டிய சிறு சிறு மாற்றங்களை உடனுக்குடன் செய்துதருதல், விதிகளை மீறாமல் வீடு கட்டுதல், வீடுகளை கட்டி முடித்த பின்பும் சிறு சிறு மரமாத்து வேலைகளை செய்து தருதல், விற்பனைக்கு பிந்தைய சேவையை 24x7 செய்தல், லொகேஷன் காரணமாக வீட்டின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருத்தல், கட்டுநர்கள் - வாடிக்கையாளர்கள் உறவு தாண்டி குடும்பத்துடன் நல்லுறவு பேணுதல் என சகல விஷயங்களும் ஒரு கட்டுநருக்கு ஒன்றிணைந்து இருந்தால் தான் அவரிடம் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறார்கள் நுகர்வோர்கள். அவர்கள் வீடு வாங்குவதற்கு செலவழிக்கிற 30, 40 லட்ச ரூபாய் என்பது அவர்களின் வாழ்நாள் சேமிப்பு என்பதால் தான் இத்தனை எதிர்பார்ப்புகள், இத்தனை விசாரணைகள்.
இதை எல்லாம் கனக்கச்சிதமாக நிறைவேற்றித் தர வேண்டுமென்றால் ஒரு கட்டுநருக்கு அஸ்திவாரமாக விளங்க வேண்டியது அவரது அலுவலகம். தனது தனிப்பட்ட உதவியாளர் முதல் நிர்வாக மேலாளர், துணை மேலா ளர், விற்பனை அதிகாரி, சேவை அதிகாரி, கணக்காளர், காசாளர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர் வரை உங்களுக்காவும், உங்கள் நிறுவனத்துக்காகவும் உங்களது விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்காகவும் சிரத்தையுடன் பணியாற்றக் கூடிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் கொண்ட ஒரு அலுவலகம் உங்களுக்கு இருந்தால் தான் சாத்தியம்.
விற்பனை முடிந்த பிறகு ஒரு வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வதில் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்றால், போட்டி.
பொதுவாக வீடு விற்பனை என்பது ஒரு தொடர் சங்கலியைப் போன்றது. 100 சதவீதம் மனதிருப்தியடைந்த உங்கள் வாடிக்கையாளர் கிட்டத்தட்ட உங்களது மார்கெட்டிங் மேலாளருக்கு இணையானவர். உங்களுக்காக அவரது உறவினர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றோரிடம் பரிந்து பேசுவார். சொல்லப்போனால், உங்களது மார்கெட்டிங் அதிகாரியை விட இவர் சிறப்பாக பேசுவார். சம்பளத்துக்காக பேசும் பேச்சில் ஒரு வேலை பொய் கலந்து இருக்கலாம். ஆனால், உங்கள் சேவையில் திருப்தியுற்ற ஒரு வாடிக்கையாளர் பேசுகையில் சத்தியமே மேலோங்கி நிற்கும்.
அதனால் தான் எல்லா கட்டுநர்களும் தங்கள் இணையதளங்களிலும், புரவுrர்களிலும் டெஸ்டிமோனியல் என்கிற வாடிக்கையாளர் கருத்துகளை கல்வெட்டுகளாக கருதுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து 4,000 திருப்தியுற்ற வாடிக்கை யாளர்களை வைத்திருக்கும் கட்டுநர்கள் தங்கள் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளின் விற்பனைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.
அப்படியயனில் இத்தனை சிறப்பு பெற்ற வாடிக்கையாளரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியம் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஆகவே, ஒரு புராஜெக்ட்டை திட்டமிட்டு, மேற்கொண்டு, நிறைவேற்றுவது என்கிற மூன்று பெரிய பணிகளுக்கு மட்டுமல்ல, புராஜெக்ட்டை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்து தக்க வைத்துக் கொள்ளமட்டுமல்ல, சமூகத்திலும், துறையிலும் போட்டியாளருக்கு மத்தியில் நற்பெயர் பெற்று விளங்குவதற்கும் ஒரு அலுவலகம் சிறந்த பங்காற்றுகிறது என்பது இதன் மூலம் உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். எனவே, இனி வரும் அத்தியாயங்களில் ஒரு அலுவலகத்தின் கட்டமைப்பு, செயல்பாடு போன்ற பல்வேறு நிர்வாக காரணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது பற்றி அறிந்து காெள்ள வேண்டும்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...Home Loans...9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக