வியாழன், 21 செப்டம்பர், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

பொதுகுழுக் கூட்டம்

வரும் ஞாயிறு 24.09.2017 மதுரையில் பொதுகுழுக் கூட்டம்

பொதுக்குழுவில் பூர்வாங்க பணிகள் குறித்து பேசப்படுகிறது

1.கட்டபொம்மன் பண்பாட்டு கழக இதழ் இரண்டின் வளர்ச்சி ..

2.இதழகான நிதி ஆதாரம் திரட்டுவது

3.மாநில அமைப்பு ,மாவட்ட அமைப்புகளுக்கு அடிப்படை நிதி ஆதாரம் இருக்க வேண்டிய அவசியம் ,அதற்கு கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து பேசுவது .

4.கல்வி வளர்ச்சிக்கு மாநில ,மாவட்ட ,ஒன்றிய கிளை அமைப்புகள்  என்ன நடவடிக்கை எடுத்தது ஆராயப்படுத்தல் .

5.நம் சமுதாய குழந்தைகளுக்கு அதிக மதிப்பெண் பெற்றதுக்கு பரிசளிப்பு விழா எந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது என கேட்டறியவேண்டும் .

6.நம் சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் என்ன என்று கேட்டறிதல் .

7.தற்போதுள்ள DNC சமுதாயங்கள் எல்லாம் DNT என மாற்றப்படவேண்டியது குறித்து பேசுதல் .

இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் வரும் ஞாயிறு  மதுரையில் நடைபெற உள்ள பொது குழு கூட்டத்திற்கு நமது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நமது சொந்தங்கள் மாநிலம் ,மாவட்டம் ,ஒன்றியம் ,கிளைகள் ,என எல்லா அமைப்புகளிலிருந்தும் திரண்டு வந்து பங்கு கொண்டு ஒரு முழுமையான அர்த்தமுள்ள பயனுள்ள நம்பிக்கையூட்டுகிற பொதுக்குழு கூட்டமாக நடந்தேற உதவும்படி இந்த அன்பான வேண்டுகோள் விடப்படுகிறது .

இவண் ..
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...
மாநில அமைப்பு ..

மாநில செய்தித்தொடர்பாளர்
டிஜிட்டல் ராஜேந்திரன்

சிவக்குமார் .....
 உடுமலைப்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக