கேள்வி : Internet of Things இன்னும் 10 ஆண்டுகளில் மனித வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என எண்ணுகிறீர்கள்?
என் பதில் : எனது நண்பர் தொழில்நுட்பத்துறையில் உள்ளதால் அவரிடம் (கூகிள்-USA ) பேசியபோது அவர் அளித்த பதில் வரப்போகும் தொழிநுட்பத்தில் மாறும் உலகம் பற்றி தெரிந்துகொண்டேன் ..உங்களுக்காக ..
Internet of Things - சுருக்கமாக இணைய வழியாக பேசிக்கொள்ளும் சாதனங்களை கட்டமைக்கும் பொறிமுறை. உங்கள் அமேசான் எக்கோ (யக்கோவ் இல்லிங்க, Echo) ஒரு IOT சாதனமே.
ரொம்ப technical ஆக எழுதினால் யாரும் படிப்பதில்லை, எனவே general audience க்காக இந்த பதில், techies கோபம் கொள்ளாதீர்!
‘Alexa, Play me Yuvan’ என்றால் என்ன நடக்கிறது தோராயமா?
உங்கள் அலெக்ஸாவில் உள்ள sensor/actuator இணையத்தை தொடர்பு கொள்ளும்.
இணைய வழி, அமேசான் data aggregator எனப்படும் கட்டமைப்பு, அந்த சொற்றொடர் சம்பந்தப்பட்ட தரவுகளை ‘யுவன்’ ‘தமிழ் இசை’ ‘சென்னை அசோக்நகர் பயனர்’ என அனுப்பும், அடுத்த நிலைக்கு.
அடுத்து இருக்கும் யுவன் பாடல் அனைத்தும் உங்கள் ரசனையோடு மேட்ச் செய்யப்படும் (Data analytics), நீங்கள் அடிக்கடி கேட்பது ‘ரவுடி பேபி’ என்றால் மேக கணிணியம் அந்த ஆடியோ பிட்டுகளை அனுப்பும், திரும்ப இணைய வழி playback ஆக. உங்கள் request அவர்களின் தரவுதளத்தில் சேமிக்கப்படும். (Cloud based archival)
இதே மின் விளக்கு போட சொன்னால், Alexa , smart bulb க்கு சிக்னல் அனுப்பும்.
இதன் architecture வரைபடம்-
சரி IOT அடுத்த 10 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யும்?
Smart cities- எது இந்த பாண்டிபஜார்ல கலர் பெஞ்சு போட்டு பண்ண காமெடியா? இல்லங்க, நிஜமான smart city களில், smart grid வழியாக மின்சாரம் நெறிபடுத்தப்படும், peaks and valleys, முன்னரே அனுமானிக்கப்பட்டு, பயனர்கள் உஷார் படுத்தப்படுவர், ‘5 மணிக்கு washing machine போட்டா peak, 10 மணிக்கு மேல போட்டா rebate, எப்படி வசதி’ என்று text போகும். இது எங்க ஊர்ல இப்பவே இருக்கு, ohm app, apple store இல் பாருங்க. Water leakage, traffic jam எல்லாமே அல்காரிதம் மூலம் கணிக்கப்பட்டு சீரமைத்து விடுவார்கள். கூடிய விரைவில் நம் ஊரிலும் மின் வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் hi tech ஆகும், IOT சாதனங்கள் வாங்கியதில் ஊழல் என எதிர்கட்சி, ஆளுங்கட்சியைப் பார்த்து கூச்சலிடும்.
பாதுகாப்பு சாதனங்கள்
ஆபிஸில் இருந்தபடி வீட்டை பூட்டலாம், லைட்டை அணைக்கலாம், பெற்றோர் பத்திரமா என புலம்பெயர் மக்கள் கண்காணிக்கலாம், வாட்ச் மேன்கள், கூர்க்காக்கள் பிழைப்பில் மண்ணள்ளிப் போடப் போகிறது IOT.
மருத்துவத் துறை
Telemedicine- மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு இது வரப்பிரசாதம். Tel a doc என்ற ஆப் நான் இங்க பயன்படுத்தியது உண்டு. டாக்டரை online இல் பார்த்து, மருந்து வீட்டுக்கே பார்சல் வரும், பாதி விலை வேறு.
Closed Loop System for diabetics (artificial pancreas)- இன்றே glucameter கருவி எங்கும் கிடைக்கிறது. இது அடுத்த லெவல், உங்கள் ரத்த சர்க்கரையை இந்த சாதனமே கணக்கு எடுத்து, insulin/glucagon சப்ளை செய்யும், இடுப்பை சுற்றி பெல்ட் போல கட்டிக்கொண்டு வேலைக்கு போகலாம், இன்சுலின் ஊசி தேவையில்லை. இது diabetes capital ஆன இந்தியாவிற்கு மிகவும் தேவையான ஒன்று
3D printing மூலம் custom made implants, அதாவது உங்கள் உடலுக்கு தக்க மாற்று உறுப்பு, கை, கால் ஊனமானவர்கள் அசவுகரியமாக நடக்க தேவையில்லை.
இவை தவிர auto driving cars, விழுங்கக்கூடி ய sensors, என பல ஆய்வுகள். போலீஸ், மிலிட்டரிக்கும் IOT வரம்.
உங்கள் பிள்ளை switch board என்ற ஒன்றே அறியாது போக வாய்ப்பு அதிகம், இன்னும் 10 வருடத்தில்.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக