கேள்வி : வீட்டை மேம்படுத்த நீங்கள் செய்த மிக முக்கியமான விஷயம் என்ன?
என் பதில் : எனது பணி வீட்டுக்கடன் வழங்குவதுமட்டுமே ..அப்படி ஒரு வீட்டிற்கு எனது வாடிக்கையாளர் கோவையில் ஒரு கொஞ்சம் விலை குறைவு என வாங்கினார் ...அதன் பின் நடந்தை அவரே என்னிடம் பகிர்ந்ததை உங்களிடம் பகிர்கிறேன் அவர் அனுமதியுடன் ....
ஆறு அடுக்கக குடியிருப்பில் ஒன்று எங்களது. வீட்டுக்கடனில் வாங்கியது. அறுத பழதான அதுதான் என் சக்திக்கு எட்டியது. விற்பனை செய்தவர் ஒரு விதவை. அவரது வாரிசுகளும் கையெழுத்திட்டு விற்பனை செய்தனர்.
ஓரிரு வருடங்கள் கழித்து ஒருநாள் அந்த அடுக்ககத்தை நன்கு அறிந்த ஒருவர், என்ன, வீடு நல்லா செட் ஆயிருச்சா என்று விசாரித்தார். அவர் கேட்ட தொணி வித்தியாசமாக தெரிந்தது. ஓ, நல்லா செட் ஆயிருச்சே, என்றேன் நான். அப்படீன்னா சரி, என்றாவாறு விசாரித்தவர் சென்று விட்டார்.
பின்னர் பல நாட்கள் அந்த சிந்தனை என்னை ஆக்கிரமித்திருந்தது. உண்மையில் வீட்டிலும் சிறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கியிருந்தது. ஆனால் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. பலவாறு அந்த யோசனை ஆக்கிரமித்ததில் சில நாட்கள் கழித்து ஒரு தெளிவு வந்தது.
ஆறு குடியிருப்புகளில், ஒன்று வியாபார ஸ்தலம். நான்கு குடியிருப்புகளில் குடும்ப தலைவர் இல்லை, நான்கின் உரிமையாளர்களும் விதவையர். அவர்களில் ஒருவரிடமிருந்துதான் நான் என் குடியிருப்பை வாங்கியிருந்தேன். ஆறாமவர் வீட்டில், மகன் வெளிநாடு சென்றவர் திரும்பியே பார்க்கவில்லை, அதற்காக அவரது குடியிருப்பு கடன் தவனை கட்ட இயலாமல் மூழ்குகிறது.
இதனை ஆராய்ந்தறிந்ததும் எனக்குள் ஒருவகையான பீதி கிளம்பியது. ஆத்ம நன்பர் ஒருவர். அவர் சோதிட சாஸ்திரத்தில் வல்லுனர். ஆனால் தொழில்முறை ஜோதிடர் அல்லர். எனக்கு அப்போது சோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. மனம் போல் மாங்கல்யம், முயற்சிக்கேற்ற உயர்வு என்ற சிந்தனையுடையவன் நான். இருப்பினும், மன கலக்கம் காரனமாக அவரிடம் மொத்த விஷயத்தையும் கலந்தாலோசித்தேன். ஒருநாள் நேரில் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சொல்கிறேன் என்றார்.
அது போல் ஒருநாள் வந்தார். வீட்டை பார்த்து விட்டு சில விஷயங்களை சொன்னார்.
நுழைவாயில் கதவு அக்கினி மூலையில் இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் கொதி நிலையில் இருப்பார்கள். அந்த கதவை ஈசானி மூலைக்கு மாற்றினால் நல்லது என்றார்.
அடுத்தது, கன்னி மூலை ஜன்னல் வைக்கப்பட்டு திறவியாக உள்ளது. அந்த ஜன்னலை அந்த அறையின் வாயு மூலையை ஒட்டி நகட்டி வைத்து, கன்னி மூலையில் காற்று புகாத அளவுக்கு சுவர் வைத்து விடுங்கள் என்றார். ஏன் அப்படி என்ற போது வேறு பேச்சு பேசி மழுப்பினார். அழுத்தமாக கேட்ட போது, கன்னி மூலை திறந்திருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு ஆகாது என்றார். அவர் சொன்னது உரைத்தது எனக்கு. முன் சொன்னபடி, அங்கு நான்கு வீடுகளுக்கு உரிமையாளர்கள் இல்லை. வாரிசுதாரர்கள்தான் இருந்தார்கள்.
நன்பருக்கு நன்றி சொல்லிவிட்டு, உருட்டி பிரட்டி, கடனை உடனை வாங்கி இந்த மாறுதல்களை செய்தோம். அதன்பின் எல்லாம் சுபம் எங்கள் வாழ்வில். அது அதனால்தானோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் அதனால்தான் என்று இன்று வரை ஆணித்தரமாக நம்புகிறேன்.
இந்த மிக முக்கியமான விஷயத்தை எடுத்து சொன்ன நன்பர் இப்போது இறைவனடி சேர்ந்து விட்டார். ஆனால் அவரது நினைவை இந்த மாற்றங்கள் நீங்காமல் மனதில் வைத்திருக்கிறது.
இது மேம்பாடு அல்ல. சிறு மாற்றம்தான். ஆனால் அதன்பின் நான் நல்ல நிறைவான மேம்பாடு அடைந்தேன்...
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக