திங்கள், 21 ஜூன், 2021

கேள்வியும்,நானே  ......பதிலும்,நானே !     


ஆண்களுக்கு நாற்பதாவது வயதில் நாய்க் குணம் வரும் என்பது சரியா    ?.......தப்போ தப்பு   !


 ஒரு ஆண் தன் 25 வது வயதிலிருந்து 30 வயதுக்குள் திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு கணவனாகி வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.35 வயதுக்குள் இரண்டுகுழந்தைகளுக்கு அப்பாவாகிறான்.அவன் தன்னுடைய  நாற்பதாவது வயதைத் தொடும்போது குழந்தைகளுக்கு பத்து வயது நிரம்பியிருக்கும்.முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு அடிமனதில் ஒரு பயம் தோன்றும்.


பெண் இன்னும் இரண்டு வருடத்தில் வயதுக்கு வந்துவிடுவாள்.அடுத்த சில வருடங்களுக்குள் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் காரணமாக அவனுக்குள் ஒரு பொறுப்பும்,நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும் முதல்குழந்தை ஆணாக இருந்தால் நன்றாக படிக்க வைக்கவேண்டுமே என்கிற கவலையும் எழும்..எது நல்லது  எது கெட்டது என்று எண்ணிப் பார்க்கின்ற நியாமான குணங்கள் தோன்றுவது என்பது ஒருஆணின் நாற்பதாவது வயதில்தான்.இந்த நியாய குணம் என்பது நமது பாமர மக்களின் உபயத்தால் நாய் குணமாக மாறிவிட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக