கேள்வி : நகைக் கடன் வாங்கி, வீட்டுமனை வாங்குவது நல்ல முதலீடு திட்டமாக இருக்குமா?
என் பதில் :
உங்களுக்கு சில கேள்விகள்.
1. உடனே வீடு கட்டுவதற்காக மனை வாங்குகிறீர்களா ?
நீங்கள் வீட்டுமனையினை நீங்கள் வீடு கட்டுவதற்காக வாங்கும் பட்சத்தில், வீட்டுக் கடன் வங்கியில் கிடைக்கும். அத்தகைய கடனில் சில அம்சங்கள் உள்ளன.
வட்டி விகிதம் குறைவு.
அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு.
வீடு அடிப்படைத் தேவை. வாடகையின் மூலமாக பணம் வீணாவதைத் தடுக்கும்.
வீட்டுக் கடன் வாங்குங்கள்.
2. மனை வாங்கி எதிர்காலத்தில் வீடு கட்டப் போகிறீர்களா ?
அல்லது, நீங்கள் சிறிது காலம் கழித்து வீடு கட்டப் போகிறேன். அதுவரை, மனையாக வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கும் மனைக் கடன் வங்கிகளில் கிடைக்கிறது. அதற்கு சில அம்சங்கள் உண்டு.
அது வீட்டு மனையாக இருக்க வேண்டும். விவசாய நிலமாக இருக்க கூடாது.
ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.
மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.
அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.
வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது.
எதிர்காலத்தில், வீடு கட்டும் போது, இந்தக் கடனை வீட்டுக் கடனாக மாற்றிக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட இரண்டு கடனும் அத்தியாவசிய தேவைக்கான கடன். தங்க கடன் இன்றி மற்ற கடன்கள் வழியாக சமாளிக்கலாம். தங்கத்தை அடமானம் வைக்கத் தேவையில்லை.
3. மனையினை முதலீட்டிற்காக, தங்க நகை கடன் வாங்குகிறீர்களா?
இப்போது, நீங்கள் மனையினை முதலீட்டிற்காக, நகைக் கடன் எடுத்து வாங்குகிறீர்கள் என்றால், பல விதங்களில் உங்களது பணம் இழப்பு.
நகைக் கடனில், மாதா மாதம் வட்டி செலுத்த வேண்டும்.
நகைக் கடனானது, நகையின் மதிப்பில் 80% - 90% வரை மட்டுமே வாங்க முடியும். நகையின் மொத்த மதிப்பினை பயன்படுத்த முடியாது.
நகைக் கடன் வாங்கும் போது, பல்வேறு கட்டணங்கள் வாயிலாக பண விரயம்.
மனையில் உங்களுக்கு எந்த ஒரு லாபமும் வராது. அது சும்மா இருந்துக் கொண்டு இருக்கும். பணம் ஈட்டித் தராத படியால், முதலீட்டுப் பணம், வீட்டினில் கிடைக்கும் வாடகை போல், கடனை அடைக்க உதவாது.
அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமென்றால், மனை விலை ஏறாமல் போனால், அதனை விற்க வேண்டுமென்று நினைத்தால், உடனே விற்பது எளிதல்ல. அதற்கு நீர்ப்புத் தன்மை குறைவு. நஷ்டத்தில் விற்றால் பண இழப்பு நேரலாம்.
ஏதோ காரணத்தினால், தங்க கடனிற்கு தவணை செலுத்த முடியாமல் போனால், மொத்த தங்கத்தினையும் இழக்க நேரிடலாம்.
எனவே, சொந்தப்பணத்தில் வாங்குவது நல்லது.
என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு முதலீடும் சொந்த பணத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏதேனும் காரணங்களால், முதலீடானது பொய்த்துவிட்டால் , உங்களது சொந்தப் பணம் என்றால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். கடன் பணம் என்றால், கடன் காரருக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.
மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வதென்பது, பண இழப்போடு ஆரம்பிக்கும் முதலீடு. முதலீடானது, கடன் வட்டித் தொகையினை விடவும், அதிகமான லாபத்தினைக் கொடுத்தால் மட்டுமே, அந்த முதலீடு நிஜமாகவே நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும். இல்லையேல், நஷ்டம் தான் மிஞ்சும்.
சொந்த பணத்தைக் கொண்டு, எந்த ஒரு முதலீடும் செய்வோம்.
நன்றி ..
சிவக்குமார் VK
நிதி ஆலோசகர் ,
siva19732001@gmail.com
CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக