திங்கள், 21 ஜூன், 2021

 கேள்வி : பப்ஜி மதன் சிறுவர்களிடம் எப்படி பணம் பறித்ததாக சொல்கிறார்கள், அது பற்றி விளக்கினால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போம் அல்லவா?


என் பதில் :..நம்ம சொன்ன யாருங்க கேக்கறாங்க.....


இன்றைய நிலையில்.. ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தவறாக பயன்படுத்துவதால் தான் சிறுவர் சிறுமிகள் பப்ஜி மதன் போன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து பணத்தை இழந்து விடுவது அதிகமாகி உள்ளது..


பப்ஜி மட்டும் அல்ல.. ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளிலும்.. இப்படி பணத்தை இழப்பது அதிகமாக உள்ளது..


பதின்ம வயதினர் மட்டும் அல்ல..


ஓய்வுபெற்ற வயதில் உள்ளவர்கள் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் நிறைய பணத்தை இழந்து விடுகிறார்கள்..


என் பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற மூத்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.. அவர்கள் மகன் வெளிநாட்டில் இருக்கிறார்..


அந்த பெரியவர்.. சூதாட்ட பேர்வழி.. அடிக்கடி பழைய நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருந்தவர்..


இந்த லாக்டவுன் நேரத்தில்.. ஆன்லைன் ரம்மி விளையாடி.. லட்ச ரூபாய் க்கு மேல் தொலைத்து விட்டார்.. மனைவி என்ன சொன்னாலும் கேட்பது இல்லை..


பேங்க் பேலன்ஸ்.. ஏகத்திற்கும் குறைந்து இருப்பதை பார்த்த மகன்.. வெளிநாட்டில் இருந்து தந்தையை குறுக்கு விசாரணை செய்து உண்மையை அறிந்து இருக்கிறார்


அவர் மனைவிக்கு.. இது போன்ற விளையாட்டுகளில் பணம் இழப்பதைப் பற்றிய புரிதல் இல்லை.. இருவரும் எழுபது வயதை தாண்டியவர்கள்.


அந்த பெரியவர்.. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வேறு.. சிலர் இந்த பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்து கொள்ளும் அவலமும் நடக்கிறது..


பெரியவர்களே இப்படி இருக்கும் போது பதின்ம வயது பிள்ளைகளை நாம் அதிகம் கண்காணிப்பு செய்ய வேண்டும்..


GOOGLE PAY. . BHIM.. PAYTM.. PHONE PE மற்றும் net banking போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை கணக்குகளை தினமும் கவனியுங்கள்.


உங்களது.. டெபிட் கார்டை பிள்ளைகள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வும்..


ஒரு பதினைந்து வயது சிறுவன்.. தனது தந்தையின் டெபிட் கார்டு மற்றும் PIN NUMBER ஐ அறிந்து கொண்டு… இந்த மதன் போன்ற ஏதோவொரு குற்றவாளியிடம் பணத்தை இழந்ததை அவன் பெற்றோர் சொல்லி தெரிந்து கொண்டேன்..


இது எல்லாவற்றையும் விட பெரிய அளவில் நடக்கும் குற்றம்.. ஆபாச படங்கள் மற்றும் மெசேஜ் களை வைத்து… சிறுவர் சிறுமிகளை பயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் இந்த மதன் போன்ற சைபர் கிரிமினல் கள்..


பலகாலமாக.. இணையத்தில் போலி ஐடிக்கள் மூலமாக இருபாலரும் ஒருவரை ஒருவர் முகம் தெரியாத காதல் என்ற பெயரில் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.


முதலில்.. கல்லூரி மாணவ மாணவிகளை காதல் என்று முகநூலில் வலைவீசி கொண்டு இருந்தவர்களுக்கு பல்வேறு வகையான வழிகள் கிடைத்துவிட்டது..


ஒரு வடக்கன் செல்ஃபி என்ற மலையாள சினிமாவில்.. இதை காண்பித்திருப்பர்.


பிள்ளைகளிடம்.. மனம் விட்டு பேசுவது ஒன்றே.. இது போன்ற குற்றச்செயல்களை தடுக்கும் நல்ல முயற்சி யாக இருக்கும் ..

நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக