கேள்வி : இந்திய மக்கள் தற்போது அனுபவிக்கும் இந்த இக்கட்டான சூழல் எப்போது மாறும்?
என் பதில் :
எனது 5 பாயிண்ட் போர்முலா
முழுமையாக முக கவசம் அணிவது, கையை அடிக்கடி கழுவுவது - சமூக இடைவெளி மேற்கொள்வது அவசியம். நமக்கும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நாட்டுக்கும் நாம் செய்ய வேண்டிய மிக பெரிய கடமை இது
நம் தேர்தல், கூட்டங்கள், மாநில அரசு மத்திய அரசு இவற்றை சொல்லி ஒன்னும் பண்ண முடியாது. உயிர் உடம்பு மனதுக்கு அவர்கள் மட்டும் பொறுப்பு அல்ல. கூட்டங்கள் தேர்தல் ஆரவாரம் - தேவை இல்லாத சண்டை தாக்குதல்கள் ஏதாவது கொரோனா காலத்தில் கூட நிற்கிறதா? ஆகையால் தேவை இல்லாமல் இவர்கள் போடும் மீடியா சர்ச்சகளை குறைத்து விட்டு நாமே நம் மனதுக்கு இளைப்பாறுதலை தர வேண்டும். இல்லை என்றால் மன நோய் வருவதற்கான மிக பெரிய சூழல் தான் கடந்த 14 மாதத்துக்கு மேல
வேலை இல்லா திண்டாட்டங்கள், வேலை பிரச்சனை, பண புழக்க பிரச்சனை, திடீர் மாற்றங்கள் - இன்னும் குறைந்த பட்சம் ஒரு வருடமாவது சந்திக்க நேரிடும். நீங்க drone வைத்து சாப்பாடு ஆர்டர் செய்யும் தேசத்தில் இருந்தாலும் இன்னும் வருமானம் கம்மி உள்ள தேசத்தில் இருந்தாலும் இந்த எகனாமிக் depression சந்தித்து ஆக வேண்டிய சூழல். ஆகையால் இயன்ற வரை இனைய வழியில் ஏதாவது புது தொழில் முறை அல்லது சம்பாதிக்கும் முறையை பயில ஏற்ற நேரம்
அடிப்படை வசதிகள் நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல சூரிய ஒளி நல்ல மண் வளம் சுகாதாரம் பற்றி தெரிந்து கொள்ள அதனால் திருப்தி கொள்ள - மனதில் தெளிவு ஏற்பட பேராசைகள் விலக இயற்கை கற்று கொடுத்த இந்த மாதங்களை எண்ணி இவை எல்லாவற்றுக்கும் நாம் எல்லோரும் நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க ஒருங்கே பாடுபடுவோம் என்னும் குறிக்கோளை ஒருங்கேற செயலாற்றுவோம்
அனைத்துக்கும் மேல இந்த உயிர் சேதங்கள் பொருள் சேதங்கள் உள்ள உலக இக்கட்டான சூழலில் நியூஸ் சேனல் போல நாமும் சண்டை இட்டுக்கொள்ளாமல் முகநூல் ,வாட்ஸாப்ப் ,இன்ஸ்டாகிராம் , (இந்த மீடியா ) மட்டும் அல்ல பிறர் வம்பு இழுத்தாலும் திட்டினாலும் வசவு சொன்னாலும் சண்டை இல்லமல் - சமாதானமாக சென்று விடுவோம். இது நம் மன இதய உணர்வு நல்வாழ்வுக்கு மிக மிக அத்தியாவசியம்
மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றினாலே கண்டிப்பாக மாறும் - சில மாதங்களில்
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக