கேள்வி : நீங்கள் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா? என்ன?
என் பதில் : இப்போ இதுதானே டாபிக் .......
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் இறந்துவிட அங்கு உள்ள பெண்கள் எல்லாம் வரதட்சணை குடுக்க முடியாதுன்னு போர் கொடி தூக்குறாங்க.
இதை தொடர்ந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு.
ஆண்கள் வரதட்சணை கேட்ப்பது தவறுன்னு பெண்கள் சொல்ல. பெண்கள் மட்டும் வெல் செட்டில்டு மாப்பிள்ளை கேட்ப்பது தப்பில்லையான்னு ஆண்கள் கேட்க்க. நீீயா நானா மாதிரி சூடுப்பறக்குற விவாதங்கள் போயிட்டிருந்தது.
உண்மையா சொல்லணும்னா வரதட்சணை தரதுலையே நிறைய பிரச்சனைகள் இருக்கு.
சில பேர் வரதட்சணை தரதையே கௌரவமாக நினைக்குறாங்க.
சில பேர் மாப்பிள்ளை வரதட்சணை வேண்டாம்னு சொன்னால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையிருக்குன்னு பேசுறாங்க.
சில வீீீீட்டுல ஆறு டிஜிட்ல சம்பளம் கேக்குறாங்க.
சில வீீீீட்டுல காரு, பைக்கு மண்டப செலவெல்லாம் செய்ங்கங்குறாங்க.
சில பேர் ஹை சொஸைட்டி பொண்ணுங்க வைச்ச டிமேன்ட்ஸை பாத்துட்டு எல்லா பொண்ணுங்களும் அப்படி தானு நினைக்குறாங்க.
சில பேர் குணத்தை பாக்காமல் சொத்தை மட்டும் பார்த்து திருமணம் பண்ணி வைக்குறாங்க.
இங்க ரெண்டு பேரு மேலயுமே தப்பு இருக்கு. அதிகமான எதிர்ப்பார்ப்புகளையும், டிமேன்ட்ஸையும் குறைச்சிட்டு பாருங்க. நல்ல பொண்ணுங்களும், பசங்களும் கண்ணுக்கு தெரியுவாங்க.
நன்றி ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக