இயற்கை குளுகுளு வசதி ....
என் நீண்டகால நண்பன் அவருடைய தம்பி கல்யாணம் விசாரிக்க சென்றிருந்தேன் .மணி மதியம் 12 . 50 இருக்கும் .புதிதாக கான்கிரீட் வீடு கட்டி இருந்தார்கள் . எதிரே ஓட்டு வீடு இருந்தது . முதலில் ஓட்டு வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தேன் . காற்றாடியை போட்டார்கள் . அனல் காற்று பயங்கரமாக வீசியது . சரி என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு , புதிதாக கட்டிய வீட்டிற்கு போக கூப்பிட... கான்கிரீட் வீடு என்பதால் அனல் காற்று அங்கு இன்னும் அதிகமாய் இருக்குமே என பயம் !
சரி என்று வீட்டிற்கு சென்றேன்... குளுகுளுவென இருந்தது ஆனால் A / C வசதி இல்லை . எனக்கு ஒரே ஆச்சரியம் . என்ன குளுகுளுவென இருக்கிறதே என்ன செய்தீர்கள்? என கேட்டேன்... அது ஒன்னும் இல்லை தென்னை மட்டை மாடியில் கிடக்கு அதனால் இப்படி இருக்கு என்றார்கள் . போய் மாடியில் பார்த்தேன் . வரிசையாக தென்னை மட்டை போட்டிருந்தார்கள் . தென்னை மட்டைக்கு இப்படி ஒரு அற்ப்புதம் இருப்பதை பார்த்து வியந்துவிட்டேன். மின்சாரம் இல்லாமல் இலவச குளுகுளுப்பு தன்மையை கொடுக்கும் சக்தி இயற்கைக்கும் இதுக்கும் மட்டுமே...
( மழை காலங்களில் எடுத்து விடுவார்களாம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக