செவ்வாய், 15 ஜூன், 2021


 கே .கே .சண்முகம்..(85)பழனி ..

(அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்-ஓய்வு பணியாளர்  ) 


இன்று இறப்பு நிகழ்வு ..வயது மூப்பின் காரணமாக ..பழனி வரை சென்று இறுதி அஞ்சலி செலுத்தியது...எனது அக்காவின் கணவர் வழக்கறிஞர் முருகராஜ் அவர்களின்  அப்பா என்பதாலும் .எங்கள் முதல் சம்பந்தி என்பதாலும் ..அவருக்கு செய்யவேண்டிய ..சடங்குகள் செய்து வழியனுப்பியது மரியாதையாகவும் அஞ்சலியாகவும் அமைந்தது .என் அப்பாவுடன் ..விசேஷ நிகழ்ச்சிகள் ..எங்கள் சொந்தங்களிலும் அவர்களின் சொந்தங்களிலும் கண்டிப்பாக கலந்துகொண்டு .இனிய நிகழ்ச்சிகளை பேசி மகிழ்வுடன் செல்வர் ..என் தந்தையின் இறப்பு நிகழ்வில் உங்கள் அப்பா அருமையான நண்பராக ,அருமையான தந்தையாக பொறுமை ,சகிப்புத்தன்மை ..எப்பொழுதும் நான் வரும்பொழுது சிரித்த முகத்துடன் வரவேற்பார்.என்னிடம் சொன்னது பசுமையான நினைவுகளாக இருக்கிறது ..எனது தந்தைக்கு தன் இறுதி ஆத்மார்த்தமாக அஞ்சலியை செலுத்தி சென்றார் . 


நான் சிறு வயதில் விவரம் தெரிந்து மாதம் தவறாமல் கார்த்திகை தினத்தன்று பழனி சென்று முருகனை நீண்ட நேரம் நின்று வரிசையில் தரிசனம் செய்வது என்னுடைய வழக்கமாக இருந்தது ..எனது திருமணம்  2004 வருடம் நடந்தது .அன்று முருகனை தரிசிப்பதற்கு என் மனைவியுடன் சென்றபோது முருகனை அருகில் நின்று தரிசிப்பதற்கு எனக்கு மிகவும் உதவினார் ..இந்த நிகழ்வு வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு நின்றபோது என் மனதில் முருகனின் தரிசனம் தான் வந்துபோனது ...நமது சொந்தங்கள் யார் வந்தாலும் அவர் பணியில் இருந்தால் ,சிறப்பு தரிசனம் செய்ய அழைத்துச்செல்வார் ,


அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அவரின் பேரப்பிள்ளைகள் பூக்கூடை எடுத்து ,தீபம் ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவர் வாழந்த வாழ்வுக்கு அர்த்தம் உள்ளதாக இருந்தது ..


அவரின் இறுதி அஞ்சலிக்கு கோவையில் இருந்து சொந்தங்களும் ,பொள்ளாச்சி யில் இருந்து வேதா அக்ரி பார்ம்ஸ் வேதா மேடம் ,தம்பி அரவிந்த் அவர்களும் வந்து இறுதிஅஞ்சலி செலுத்தினர் ..பெரியகோட்டை முன்னாள் கவுன்சிலர் சுசிலா அவர்கள் தன் சித்தப்பாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் . 


இறுதி அஞ்சலி நிகழ்வுநடக்கும்பொழுது ..தந்தை இழந்து  சோகத்தில் இருக்கும் போது ,அடுத்தடுத்து நிகழ்வுகளை  அண்ணன் செந்தில்குமார்-ம் ,எனது அம்மாவும் ,என்னென்ன சடங்குகள் செய்யவேண்டும் என்பதை இறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மிக்க உறுதுணையாகம் ,அவருக்கு செய்யவேண்டிய இறுதி மரியாதையாக அமைந்தது ..உடுமலைஅவருக்கு செலுத்தவேண்டிய இறுதி மரியாதையை செலுத்திவிட்டு மலைமேல் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியை நோக்கி தரிசனம் செய்து உடுமலைநோக்கி வரும்பொழுது  சாரல் மழை பெய்துகொண்டே இயற்கை தன் அஞ்சலியை செலுத்தியது.


குறிப்பு : தன் பேரக்குழந்தைகளைக்கு   சரியான கல்வி கொடுத்து இன்று மருத்துவராகவும் ,பொறியாளர்களாகவும் ,வழக்கறிஞர்களாகவும்,தொழில்முனைவோர்களுக்கு  ,பேரக்குழந்தைகளுக்கு அருமையான சொந்தங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து தன் உயிர்மூச்சை தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டார்  இந்த உலகில் ......


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681..    


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக