வியாழன், 17 ஜூன், 2021

 கேள்வி :  ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?


என் பதில் : 


குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம் என்றாள் அதிலே நாம் ஒருவர் தான் சம்பாதிக்கிறோம் என்றால். சிக்கனமாக செலவு செய்தாலும் குறைந்தது மாதம் பத்தாயிரம் ரூபாய் வேண்டும். கொஞ்சம் நல்லபடியாக சாப்பிட வேண்டும் என்றால் 12000 ரூபாய் வேண்டும். (என்னைப் பொருத்தவரை எனக்கு எட்டாயிரம் ரூபாய் போதும்)


நிலைமை இப்படி இருக்க ஒரு சராசரி மனிதன் நமக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறதோ, அந்த அளவுக்கு உழைக்க வேண்டும். அல்லது பணம் வருகிற வழியை தேட வேண்டும். என்று நினைப்பது இல்லை. 


தனக்கு வருகிறவருமானம் போதிய செலவுக்கு பத்தாது என்பது தெரிந்தும்.. ஒரே வேலையிலேயே முப்பது வருடம் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு மாதமும் செலவுபற்றாக்குறைக்கு, கடன்களை வாங்கிக் கொண்டும். தன்னைச் சேர்ந்தவர்களிடம் கையேந்திக் கொண்டும். காலத்தை கழிப்பார்.


ஒரு குடும்பத்தலைவனுடைய இந்த நிலைமையை கண்டு.. தனது மனைவியும் பிள்ளைகளும் சமூகத்தின் மத்தியில் எந்த அளவு கூனிக்குறுகி நிற்கிறார்கள்? _அவர்களுக்கு உரிய கௌரவம் எப்படி தேடித்தர வேண்டும்? என்பதை துளியளவு கூடநினைத்துப் பார்ப்பது இல்லை.


தன்னுடைய சிந்தனையற்ற செயல்பாட்டினாள்.. தன் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை என்பது_ இவனுக்கும் கீழாக சரிந்து வருவதை உணர்வது இல்லை. உன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப சமம் உடைய நட்பும் சுற்றமும் தான் உன்னை சூழ்ந்து இருக்குமே தவிர.. உன்னைவிட திறமையிலோ, படிப்பிலோ, செல்வாக்கிலோ நிறைந்தவர்களை.. ஒருவித தயக்கம் காரணமாக, தாழ்வு மனப்பான்மை காரணமாக, நீயும் நெருங்க தயங்கி.. அவர்களும் உன்னிடம் நட்புக்கு அழைக்காமல்.. உலக நடைமுறை வாழ்க்கையின்.. எதார்த்தங்களோ, முன்னேறுவதற்கான இலகுவான வழிவகைகளோ.. எதுவுமே தெரியாமல்.. கூலித் தொழிலாளியாகவே கடைசி வரை வாழ்ந்து. உனக்கு அடுத்து இன்னொரு கூலி தொழிலாளியாக உலகத்துக்கு உன் பிள்ளைகளை விட்டுவிட்டு.. சளியும் இருமலுமாய்.. வீட்டிற்குள் ஒரு மூலையில் முடங்கிப் போகிறாய்…?


அல்லது இடையில் தப்பான யோசனைகளை யாராவது சொன்னால் அதைக்கேட்டு_தப்பான பாதையில் தடுமாறி.. சக மனிதர்களுக்கும் அந்நியப்பட்டவணை.. வேறு எங்கோ முடங்கிப் போகிறாய்? இதெல்லாம் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் தானே!


நன்றாக சம்பாதிப்பவர்களை கவனிக்கணும். அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். என்பதை தெரிஞ்சிக்கனும். நாலு நல்ல மனிதர்களோடு நல்லா பழகனும். இன்னும் நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கணும். அல்லது கத்துக்கணும். 


*நரம்பு வெடித்து வெளியில் தெறிக்கும் அளவு.. உடம்பில் ரத்தம் சூடேறி கொதிக்கும் அளவு.*. உழைக்கனும். 


அதுவும் கருத்தோடு, சாதுரியத்தோடு, திறமையாக உழைக்கணும்.நம்மை ஏமாற்றி இன்னொருவன் பிழைப்பதற்காக அல்ல.. நம்முடைய குடும்பம் உயர்வதற்காக என்ற எண்ணத்தோடு உழைக்கணும். (அதுவரை எனக்கு என்று எந்த ஆசாபாசமும் அறவே இருக்கக்கூடாது) என்று நினைக்கனும்.


இப்படி அல்லாமல்.. ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்.. வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். என்பதே அர்த்தம். 


நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக