உடுமலை வரலாறு added 6 new photos — with Raja Elango and
சொல்லாமல் சொல்லும் செய்திகள்
பழசு பிடிக்காது, பழைமை பிடிக்கும்
பழசிற்கும் பழைமைக்கும் வேறுபாடு உண்டு.
நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். அதில் கண்ட காட்சிகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நம் மக்கள், நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ண நேரிடும்போது நம் பழைமைகளை நம் எண்ணங்களால் அசைபோட நேரிடுகிறது. அவ்வாறு அசைபோடும் போது இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் நம் மூதாதையர்களின் அருமை பெருமைகளை நம் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிச் செல்வது ஒரு வகை பதிவாகும்.
குறிப்பிட்ட நிலத்தின் தலைவன், தலைவி இருவரும் மனமொன்றி தன் வாழ்க்கைத் துணையை தாமே தேடிக்கொண்டு தம் வாழ்நாள் முழுமைக்கும் தலைவனோடு இயைந்து, பகிர்ந்து, முகிழ்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை நாம் கண்ணுற்றால் எப்படி இருக்கும்.
திருமணத்தின் தலைவன், தலைவி இருவரும் தம் இயல்பான நிலை சாதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த உடையில் இல்லாமல் தம் சுற்றத்தினருடனும் நண்பர்களுடனும் இருந்தால் எப்படி இருப்பார்களோ அந்த அளவில் அலங்கார உடைகள் இல்லாமல் அத்தியாவசிய உடையில் இருந்தனர். பார்த்தால் தெரியக்கூடிய அளவில் அலங்காரத்துடன் இருந்தனர். தலைவன் எனும் மணமகன் தலையில் ஒரு கீரிடமும் மணமகள் தலையில் அதே போல் நெத்திச்சுட்டி என்று அழைக்கக்கூடிய ஒரு அணிகலன் மட்டுமே இருந்தது. மணமகனின் மஞ்சள் வேட்டியுடனும், மணமகள் மஞ்சள் சேலை மேலாடையுடனும் இருந்தனர். மணமகன் மேற்சட்டை அணியாமல் மஞ்சள் நிறத்தில் துண்டும், அதையே கழுத்தில் மாட்டி பின்புறத்தில் முடிச்சிட்டு முன்புறம் மடித்துத் தொங்கவிட்டு ஒரு பொதியை அல்லது ஏதேனும் சுமையை சுமந்து செல்லக்கூடிய சென்றால் எப்படி நமக்கு சுமையில்லாமலும், அதை நெடுந்தூரம் சுமந்து செல்லக்கூடிய நிலையில் அந்த துணியை மடித்து பின்முதுகில் முடிச்சிட்டு அதையே முன்புறம் ஆடம்பர உடையாக போட்டிருந்தார்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அனைவரும் வந்து செல்லக்கூடிய வந்து பார்க்கக்கூடிய ஒரு இரண்டு அல்லது மூன்றடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து அந்த மேடையில் அந்த மணமகனும் மணமகளும் நின்று கொள்ள திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களும் உறவினர்களும் அங்கு சென்று வழக்கமான நிலையில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த அமைவிடம், அந்த மணமகன் , மணமகள் உடையில் இருக்கும் ஒரு பாரம்பரியம் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. அவர்களின் உடையில் இருக்கும் ஆடம்பரம் இல்லாத அலங்காரமும் ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதையும் அடுத்து மணமேடைக்கு முன்புறம் மேற்குப்புறம் ஒரு பாலைக்குச்சி மற்றும் புங்க இலைகள் சுற்றப்பட்ட ஒரு சிறிய குடில் தோகை போட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடை மணமகன் வீடு என்றும் இது மணமகனுக்காக உருவாக்கப்பட்ட வீடு இந்த வீட்டில் தான் மணமகன் தங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இது போலவே, மணமகளுக்கென்று ஒரு பெரிய அளவில் புங்க இலைகள் போர்த்தப்பட்டு சுமார் 5 அடி நீளமு5 அடி அகலமும் கொண்ட ஒரு குடில் போடப்பட்டிருந்தது. இது மணமகள் வீடு என்றும் மணமகள் திருமணத்திற்கு இங்குதான்வந்து தங்கவேண்டும் என்று கூறினார்கள்.
இந்த இரண்டு குடில்களையும் சற்றே பின்னோக்கிப்பார்த்தால் சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதையே இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு குடில்களும் தற்போதைய பெரும்பான்மையான திருமண முறைகளில் இல்லை. ஆனால் ஒரு பழங்குடியினர் , தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட திருமண முறைகளில் அதுவும் கிராமமப் பகுதிகளில் நடைபெறும் திருமண முறைகளில் மிகவும் அரிதாகக் காண முடிகிறதே தவிர முற்படுத்தப்பட்ட நகரத்தில் திருமண மண்டபங்களில் பெருந்தெய்வ கோவில் வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் , பார்ப்பனர்கள் வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி உணவுக்குப் பயன்படும் பொருள்களை யாகம் என்ற பெயரில் தீயில் போட்டு யாகம் வளர்க்கும் திருமண முறைகளையே நாம் பார்க்க முடிகிறது. உணவுக்குப் பயன்படும் நெல்லையும், அரிசி போன்ற மிகச் சாதாரணமான பொருட்களையே குடிலில் பயன்படுத்துவதும், நாம் இன்றைய திருமண முறையில் இல்லாத சடங்குகளாகும். அதுவும் பெண் குடிலில் மூன்று முக்காலிகளும், மூன்று செம்புப் பாத்திரங்களும், செம்புத் தட்டுகளும், மூன்று மண் சட்டிகளும் அந்த மூன்று மண் சட்டிகளிலும் உணவுக்குப் பயன்படுத்தும் நெல்மணிகளும், பதப்படுத்தப்படாத அரிசியுமே வைக்கப்பட்டிருந்தது. இது எதற்கு என்று கேட்ட பொழுதுதான் நமது மக்கள் திருமணம் முடிந்ததும் மணமக்கள் உணவுக்காக மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உழைப்பில் இருக்கும் உழைப்பாளி மக்கள் தன் உணவுக்காக கூட தனியாக இருப்பு என்று எதுவும் இல்லாமல் நாடோடிக் கூட்டங்களாக இருந்த நிலையில் ஒரு தலைவனுக்கும் ஒரு தலைவிக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அவர்களின் உணவுத் தேவையை அறிந்து அவர்களுக்காக ஒரு சிறு வீடு இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த கண்ணால் தெரியக்ககூடிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இப்பொழுதிருக்கும் கால ஓட்டத்தில் இவையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் என்றாவது ஒருநாள் நமக்கான வாழ்வை நமது முன்னோர்களின் வாழ்க்கை நிலையை , நமது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து அசை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம், அதற்குத் தகுந்தாற் போல் தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ளலாம். அதற்குத் தகுந்தாற் போல் மனித உடல்களைப் பற்றிக்கொள்ளலாம். எத்தனை உடைகளை மாற்றிக்கொண்டாலும் தமக்கான இயைந்த பண்பாடு இயற்கையோடு இயைந்த பண்பாட்டை நாம் தொடர்ந்து செல்லா விட்டாலும் நாம் பின்பற்றாவிட்டாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே ?
இப்பொழுதிருக்கும் காலச் சூழலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பார்ப்பனர்களையே வைத்து நாம் செய்யும் சடங்குகள் என்ற பெயரில் உணவுப்பொருள்களையும் விலை மதிப்பு மிக்க பொருள்களைத் தீயில் போடுவதையும், மக்கள் நன்றாக வாழ வேண்டும், நல்ல சமூகம் மலர வேண்டும் என்பதற்காக யாகம் வளர்ப்பது என்பது நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் யாருமே செய்யாத செயல் அது இப்போது பார்ப்பணர்களை வைத்து தேவையில்லாத பொருட்செலவையும் மன உளைச்சலையும் செய்வது எப்படி சரியாக வரும்?
மேற்காண் திருமணத்தில் திருமணத்திற்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது கூட நமது பழைய பதப்படுத்தப்படாத அரிசியே கொடுத்தனர் என்பதும் நாம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
சுமார் இருபத்து ஐந்து முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு வானொலியில் கேட்ட நினைவு வேண்டாம் இது தீட்டிய அரிசி, வேண்டும் அது தீட்டப்படாத அரிசி, ஆமாம் அரிசியில் கூட தீட்டும் வந்துவிட்டது. அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய அரிசி என்பதால் நமது முன்னோர்கள் பதப்படுத்தப்படாத அரிசியைப் பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் சுமார் 80 முதல் 100 வயது வரை நோயில்லாமல் உடலுழைப்பில் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர். இப்போது பதப்படுத்தப்பட்ட அரிசியால் தான் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். நமது முன்னோர்கள் கண்ணாடி அணியாமல், காலனி அணியாமல் நல்ல உடல் நலத்தோடு மிகச்சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிகழ்வுகள் காண்பது மிகவும் அரிதாக இருப்பதால் இந்தத் திருமண முறையை உடுமலை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது.
சொல்லாமல் சொல்லும் செய்திகள்
பழசு பிடிக்காது, பழைமை பிடிக்கும்
பழசிற்கும் பழைமைக்கும் வேறுபாடு உண்டு.
நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். அதில் கண்ட காட்சிகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நம் மக்கள், நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ண நேரிடும்போது நம் பழைமைகளை நம் எண்ணங்களால் அசைபோட நேரிடுகிறது. அவ்வாறு அசைபோடும் போது இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் நம் மூதாதையர்களின் அருமை பெருமைகளை நம் மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிச் செல்வது ஒரு வகை பதிவாகும்.
குறிப்பிட்ட நிலத்தின் தலைவன், தலைவி இருவரும் மனமொன்றி தன் வாழ்க்கைத் துணையை தாமே தேடிக்கொண்டு தம் வாழ்நாள் முழுமைக்கும் தலைவனோடு இயைந்து, பகிர்ந்து, முகிழ்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை நாம் கண்ணுற்றால் எப்படி இருக்கும்.
திருமணத்தின் தலைவன், தலைவி இருவரும் தம் இயல்பான நிலை சாதாரணமாக ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த உடையில் இல்லாமல் தம் சுற்றத்தினருடனும் நண்பர்களுடனும் இருந்தால் எப்படி இருப்பார்களோ அந்த அளவில் அலங்கார உடைகள் இல்லாமல் அத்தியாவசிய உடையில் இருந்தனர். பார்த்தால் தெரியக்கூடிய அளவில் அலங்காரத்துடன் இருந்தனர். தலைவன் எனும் மணமகன் தலையில் ஒரு கீரிடமும் மணமகள் தலையில் அதே போல் நெத்திச்சுட்டி என்று அழைக்கக்கூடிய ஒரு அணிகலன் மட்டுமே இருந்தது. மணமகனின் மஞ்சள் வேட்டியுடனும், மணமகள் மஞ்சள் சேலை மேலாடையுடனும் இருந்தனர். மணமகன் மேற்சட்டை அணியாமல் மஞ்சள் நிறத்தில் துண்டும், அதையே கழுத்தில் மாட்டி பின்புறத்தில் முடிச்சிட்டு முன்புறம் மடித்துத் தொங்கவிட்டு ஒரு பொதியை அல்லது ஏதேனும் சுமையை சுமந்து செல்லக்கூடிய சென்றால் எப்படி நமக்கு சுமையில்லாமலும், அதை நெடுந்தூரம் சுமந்து செல்லக்கூடிய நிலையில் அந்த துணியை மடித்து பின்முதுகில் முடிச்சிட்டு அதையே முன்புறம் ஆடம்பர உடையாக போட்டிருந்தார்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அனைவரும் வந்து செல்லக்கூடிய வந்து பார்க்கக்கூடிய ஒரு இரண்டு அல்லது மூன்றடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து அந்த மேடையில் அந்த மணமகனும் மணமகளும் நின்று கொள்ள திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களும் உறவினர்களும் அங்கு சென்று வழக்கமான நிலையில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த அமைவிடம், அந்த மணமகன் , மணமகள் உடையில் இருக்கும் ஒரு பாரம்பரியம் ஏதோ ஒன்றை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. அவர்களின் உடையில் இருக்கும் ஆடம்பரம் இல்லாத அலங்காரமும் ஏதோ ஒன்றைச் சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதையும் அடுத்து மணமேடைக்கு முன்புறம் மேற்குப்புறம் ஒரு பாலைக்குச்சி மற்றும் புங்க இலைகள் சுற்றப்பட்ட ஒரு சிறிய குடில் தோகை போட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடை மணமகன் வீடு என்றும் இது மணமகனுக்காக உருவாக்கப்பட்ட வீடு இந்த வீட்டில் தான் மணமகன் தங்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இது போலவே, மணமகளுக்கென்று ஒரு பெரிய அளவில் புங்க இலைகள் போர்த்தப்பட்டு சுமார் 5 அடி நீளமு5 அடி அகலமும் கொண்ட ஒரு குடில் போடப்பட்டிருந்தது. இது மணமகள் வீடு என்றும் மணமகள் திருமணத்திற்கு இங்குதான்வந்து தங்கவேண்டும் என்று கூறினார்கள்.
இந்த இரண்டு குடில்களையும் சற்றே பின்னோக்கிப்பார்த்தால் சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருந்தார்கள் என்பதையே இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த இரண்டு குடில்களும் தற்போதைய பெரும்பான்மையான திருமண முறைகளில் இல்லை. ஆனால் ஒரு பழங்குடியினர் , தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட திருமண முறைகளில் அதுவும் கிராமமப் பகுதிகளில் நடைபெறும் திருமண முறைகளில் மிகவும் அரிதாகக் காண முடிகிறதே தவிர முற்படுத்தப்பட்ட நகரத்தில் திருமண மண்டபங்களில் பெருந்தெய்வ கோவில் வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் , பார்ப்பனர்கள் வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி உணவுக்குப் பயன்படும் பொருள்களை யாகம் என்ற பெயரில் தீயில் போட்டு யாகம் வளர்க்கும் திருமண முறைகளையே நாம் பார்க்க முடிகிறது. உணவுக்குப் பயன்படும் நெல்லையும், அரிசி போன்ற மிகச் சாதாரணமான பொருட்களையே குடிலில் பயன்படுத்துவதும், நாம் இன்றைய திருமண முறையில் இல்லாத சடங்குகளாகும். அதுவும் பெண் குடிலில் மூன்று முக்காலிகளும், மூன்று செம்புப் பாத்திரங்களும், செம்புத் தட்டுகளும், மூன்று மண் சட்டிகளும் அந்த மூன்று மண் சட்டிகளிலும் உணவுக்குப் பயன்படுத்தும் நெல்மணிகளும், பதப்படுத்தப்படாத அரிசியுமே வைக்கப்பட்டிருந்தது. இது எதற்கு என்று கேட்ட பொழுதுதான் நமது மக்கள் திருமணம் முடிந்ததும் மணமக்கள் உணவுக்காக மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உழைப்பில் இருக்கும் உழைப்பாளி மக்கள் தன் உணவுக்காக கூட தனியாக இருப்பு என்று எதுவும் இல்லாமல் நாடோடிக் கூட்டங்களாக இருந்த நிலையில் ஒரு தலைவனுக்கும் ஒரு தலைவிக்கும் திருமணம் நடத்தி வைத்தால் அவர்களின் உணவுத் தேவையை அறிந்து அவர்களுக்காக ஒரு சிறு வீடு இருக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக இந்த கண்ணால் தெரியக்ககூடிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இப்பொழுதிருக்கும் கால ஓட்டத்தில் இவையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்றாலும் என்றாவது ஒருநாள் நமக்கான வாழ்வை நமது முன்னோர்களின் வாழ்க்கை நிலையை , நமது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து அசை போட வேண்டிய நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம், அதற்குத் தகுந்தாற் போல் தங்களது வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ளலாம். அதற்குத் தகுந்தாற் போல் மனித உடல்களைப் பற்றிக்கொள்ளலாம். எத்தனை உடைகளை மாற்றிக்கொண்டாலும் தமக்கான இயைந்த பண்பாடு இயற்கையோடு இயைந்த பண்பாட்டை நாம் தொடர்ந்து செல்லா விட்டாலும் நாம் பின்பற்றாவிட்டாலும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே ?
இப்பொழுதிருக்கும் காலச் சூழலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பார்ப்பனர்களையே வைத்து நாம் செய்யும் சடங்குகள் என்ற பெயரில் உணவுப்பொருள்களையும் விலை மதிப்பு மிக்க பொருள்களைத் தீயில் போடுவதையும், மக்கள் நன்றாக வாழ வேண்டும், நல்ல சமூகம் மலர வேண்டும் என்பதற்காக யாகம் வளர்ப்பது என்பது நமது முன்னோர்கள் நமது மூதாதையர்கள் யாருமே செய்யாத செயல் அது இப்போது பார்ப்பணர்களை வைத்து தேவையில்லாத பொருட்செலவையும் மன உளைச்சலையும் செய்வது எப்படி சரியாக வரும்?
மேற்காண் திருமணத்தில் திருமணத்திற்கு வந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது கூட நமது பழைய பதப்படுத்தப்படாத அரிசியே கொடுத்தனர் என்பதும் நாம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
சுமார் இருபத்து ஐந்து முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு வானொலியில் கேட்ட நினைவு வேண்டாம் இது தீட்டிய அரிசி, வேண்டும் அது தீட்டப்படாத அரிசி, ஆமாம் அரிசியில் கூட தீட்டும் வந்துவிட்டது. அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய அரிசி என்பதால் நமது முன்னோர்கள் பதப்படுத்தப்படாத அரிசியைப் பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் சுமார் 80 முதல் 100 வயது வரை நோயில்லாமல் உடலுழைப்பில் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர். இப்போது பதப்படுத்தப்பட்ட அரிசியால் தான் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். நமது முன்னோர்கள் கண்ணாடி அணியாமல், காலனி அணியாமல் நல்ல உடல் நலத்தோடு மிகச்சாதாரணமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிகழ்வுகள் காண்பது மிகவும் அரிதாக இருப்பதால் இந்தத் திருமண முறையை உடுமலை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் போலத் தோன்றுகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக