சனி, 31 மார்ச், 2018

எனது உலகம் ...

உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர் திருவிழா -ஏப்ரல் 5..2018

அக்னி சட்டியில் ...!!!!!

தீ ஒன்று கண்டேன் ...!!!!!

சத்யத்தயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது. 

தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.

கோவில் திருவிழாக்களில்..அக்னி சட்டி எடுப்பதன் அர்த்தம் ..

இறைவா எதுவரை இந்த மண் சட்டி என்ற உடலில் வசிக்கின்றேனோ அதுவரை ஆன்ம தீபத்தை ஏற்றிக்கொண்டே இருப்பேன்..

எவ்வளவு நெருப்பு சுடும் அளவு இன்னல்கள் வந்தாலும் உன் வழியிலிருந்து மாறாமல் தாங்கிகொள்வேன்.. 

என் ஆன்ம தீபம் நிலையாய் எரிவதற்கு ஞானம் என்ற நெய்யை உன்னிடம் வந்தடையும் வரை ஊற்றிக்கொண்டே இருப்பேன்..

இதுவே அக்னி சட்டியின் ரகசியம்..!!!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...வாட்ஸாப்ப்  இல் தொடர ..9944066681..
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கலந்தாலோசனை கூட்டம் ..

இடம் :
குமரன் தட்டச்சு பயிலகம் ,
எண் 1,வக்கீல் நாகராசன் வீதி ,
தளி சாலை ..
உடுமலைப்பேட்டை ..

 நாள் :01-04-2018...நேரம் : மாலை 4 மணி அளவில் ..நடைபெற உள்ளது ...

முன்னவர் ,முனைவர் க .இந்திரசித் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வரலாற்று ஆய்வு நடுவப்  பணிகளின்  தொடர்ச்சியில் தளி எதுலப்ப   மன்னர் ,ஈகச்  செயலை நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது .அந்த வகையில்

எதிர்வரும் 22/04/2018 அன்று உடுமலை குட்டை திடலில் ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து புகழ் பாடும் மாபெரும் தேவராட்ட பெருவிழா

 வரலாற்று ஆய்வாளர்கள் ,வரலாற்று பேராளர் கள் ,பேராசிரியர்கள் ,நண்பர்கள் ,ஆகியோரின் ஒத்துழைப்போடு ,வழிகாட்டுதலோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரும் வருகை தந்து வரலாற்று பணிகளை தொடர அன்புடன் அழைக்கின்றோம் ..

அழைப்பு எண் ....98420 91244...9171801212





வெள்ளி, 30 மார்ச், 2018

எனது உலகம் ....

உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா .ஏப்ரல் 2018.....
உடுமலைப்பேட்டை ..
தீர்த்தம் .....
மாரியம்மன் தேர் திருவிழா என்றாலே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ..கொண்டாட்டம் ...தேர் விழா பள்ளி தேர்வுகள் வரும்பொழுது வருவதால் ..குழந்தைகளுக்கு அதிக கவனம் ..கொஞ்சம் கொண்டாட்டம் ..கல்லூரி இளையசொந்தங்களுக்கு கேட்கவேண்டாம் ..எப்பொழுதும் கொண்டாட்டம் தான் ..இன்று பங்குனி உத்திரம் பொன் நாள் ...அதிகாலை அம்மாவுடன் மாரியம்மன் கோவிலில் இருக்கும் கம்பத்துக்கு வீட்டிலிருந்து வேப்பம் தழைகள் குடத்துடன் மாரியம்மன் அருளை எல்லா மக்களும் நலம்  வேண்டி பிராத்தனை செய்வது கோடி புண்ணியம் ..30 வருடங்களுக்கு பின் அம்மாவுடன் சென்று வருவது ஆனந்தம் ..ஆனந்தம் .....அமைதியான தளிசாலையில் நடந்து வந்து முதலில் இரண்டு ஏசு புனித ஆலயம் ஜெபத்தை காதில் கேட்டுக்கொண்டும் ,இறை அல்லாவின் அதிகாலை பாங்கை காதில் இன்புற கேட்டுக்கொண்டு கடந்து வருவது மனதிற்கு புத்துணர்ச்சி  ....நூலகம் அருகில் இருக்கும் பிள்ளையாரை சுற்றி வரும்போது மனதிற்கு ஒரு இனம்புரியாத தெய்வ பக்தி மனதில் தொற்றி கொள்கிறது ..மகிழ்ச்சியுடன் உடுமலை காவல்நிலையம் நிலையத்தை கடந்து பெரியகடைவீதியில் இரண்டு பக்கம் முன்னிரவு சிறு கடை உழைப்பாளர்கள் உழைத்த களைப்பில் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் அழகு பார்க்கும் போது நம் மனதுக்கு கடின உழைப்பு வீண்போகாது என்பதை உணர்த்துகிறது.. கோவிலின் படியேறும்போதே அதிகாலை கூட்டம் அமைதியாக...மனதில் எத்தனையோ பிராத்தனைகளை வேண்டி ..போன்வருடம் பிராத்தனைகள் நிறைவேறி அம்மனுக்கு அங்கபிரதச்சனம் செய்து வழிபாடும் அழகு பிராத்தனைகள் வீண்போகவில்லை அவர்களுக்கு ..கோவிலின் முதல் அடி  எடுத்து வைக்கும் போது நம் முகத்துவாரம் முழுவதும் வேப்பம் தழைகள் ,அதன் சிறிய வெள்ளை வேப்பம் பூக்களின் வாசம் ..நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது ..நம் பெரியோர்கள் நமக்கு அளித்த இயற்கை வைத்தியம்...கோவிலின் தரையில் தடம் பதித்து நடக்கும் பொழுது அந்த வேப்பம் தழைகளுடன் இருக்கும் நீரின் ஈரம் உடல் மற்றும் ,காலின்  வெப்பத்தை  தணிக்கிறது ..அதுவும் அதிகாலை வேலையில் எழுந்து பெற்றோர்களுடன் வந்திருக்கும் குழந்தை செல்வங்கள் ஆரவாரமாக ..ஈரத்துடன் நனைந்து அருள் வேண்டி கொண்டிக்கொண்டிருக்கும் அழகோ அழகு ....அம்மா கொண்டு வந்த தீர்த்தநீரை கம்பத்துக்கு ஊற்றும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் நம் உடம்பில் ..முகத்தில் படும்பொழுது முகத்தில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுவது அப்படி ஒரு ஆனந்தம் ..பொது தரிசன வரிசையில்.கொஞ்ச நேரம் மெதுவாக   அடி மேல் அடிவைத்து மாரியம்மனை பிராத்தனை செய்தது மிக்க மகிழ்ச்சி ...கோவிலின் பெரிய ஆலமர தெய்வங்களை சுற்றி வரும்பொழுது ஆலமர காற்றை அதிகாலைவேளையில் சுவாசிப்பது நமது நுரையீரலை சுத்திகரிக்கிறது .இவை அனைத்தும் நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த பாடங்கள் விடாமல் கற்றுக்கொள்ளவேண்டியது இன்றியமையாதது ..மெதுவாக ஈரம் கலந்த தரையில் சில மணித்துளிகள் அமர்ந்து எழுவது ஊடலுக்கு ஆரோக்கியம் .....அதிகாலை வழிபாடுகள் என்றும் மனதில் ஒரு உற்சாகத்தை நாள் முழுவதும் வைத்துக்கொள்ள உதவுகிறது ....உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா ...மாலை நேர கொண்டாட்டங்களுடன் சந்திப்போம் ...அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....வாட்ஸாப்ப் எண் ....கொண்டாட்டங்கள் தொடரும் ...





வியாழன், 29 மார்ச், 2018

நம்ம குஜ்ஜ பொம்மு தம்பி ...

நம்ம குஜ்ஜ பொம்மு தம்பிக்கு ..ஒரு சின்ன புள்ளிதான் வைத்துக்கொடுத்தேன் ..நானும் கடந்த சிலமாதங்கள் கடுமையான பணிசுழலில் மறந்துவிட்டேன் ...இன்னைக்கு பேச்சுவாக்கில் தம்பி என்ன பண்ணறாரு னு ..நம்ம மாப்பிளைகளிடம் விசாரித்தேன் ..தம்பி ...புள்ளிவைத்த இடத்தில கட்டபொம்மன் மாவட்டத்தில் ஆரம்பித்து ..100 அடி ஆக்கி ..அப்பறம் .NH  ரோடு ஆக்கி fourtrack ஆக்கி ...ஏராவ நாயக்கர் ஆண்ட ஆனைமலை முடிய ..அழகாக தங்கு தடையில்லாமல் வாழ்ககைக்கு வழி ஏற்படுத்தியுள்ளார் ..ஜவுளி எடுத்தாச்சு ..பத்திரிகை அடிச்சாச்சு ...நெல்லை பாளையக்காரர்கள் ,கடவூர் பாளையக்காரர்கள் ...எல்லாம் வருவார்கள் ..எதுலப்பர் ஆண்ட மண்ணில் சஞ்சீவராயன் மலைக்கோயில் இடத்தில் திருமணம் ....கேட்டதும் எனக்கு மிக்க மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..பெரிய black பெர்ரி கேக்கு வெட்டி ..வெகு சிறப்பாக கொண்டாடலாம் ...என் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்...


இது விளம்பரம் இல்லை தம்பி ...நம் உயிர்மூச்சு ..நம் ரத்தத்தில் கலந்த கலை ...விளம்பரம் என்று சொல்லவேண்டாம் ..

எனது உலகம் .....

எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?..என்று நம்ம மாப்பிளை தம்பி ஒருவர் கேட்டார் ..எப்படி இந்த அளவுக்கு எழுதி பழகினீர்கள் ...சொல்லுங்களேன் என்றார் ..

உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.
ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும் ..மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது...நான் அடிக்கடி சந்திக்கும் மாப்பிள்ளைகள் ..நண்பர்கள் என்னுடன் பயணிப்பவர்கள் ...உங்களுக்கே தெரியும் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்






புதன், 28 மார்ச், 2018

உடுமலைப்பேட்டை ....என்றலே தனி அழகு தான் ...

வரலாறு சொல்லும் பழங்கால கோவில்; அழகு மிளிரும் சிலைகளின் ஆச்சரியம் ! பரம்பை...பூக்கள்...அழகு .

உடுமலை அருகே, பழங்கால வரலாற்றையும், தொன்மை வழிபாட்டையும், தாங்கி நிற்கும், கோவிலை தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மரங்களை, சுற்றுச்சுவராக கொண்டு, வளாகத்தில், கிணற்றுடன் காணப்படும் இக்கோவில், பல்வேறு வரலாற்று தகவல்களை இன்றும் இளைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்தி வருகிறது.இதன் பழமையை வெளிப்படுத்த, கருவறை நேராக உள்ள நுழைவாயிலில், பெரிய கற்கள் நடப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் உள்ளே வருவது போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கூறலாம்.சிலிர்க்க வைக்கும் சிலைகள்கோவிலில் உள்ள செல்லாண்டியம்மன் சிலை தொன்மை வாய்ந்ததாகும். அஷ்ட துர்க்கை எனப்படும் வடிவமைப்பில், கருவறையில் அம்மன் சிலை உள்ளது. முன்கோபுரத்தின் மேற்பகுதி முழுவதும் பெரிய கற்களை அடுக்கி, சுண்ணாம்பு காரையால், பூசப்பட்டுள்ளது. கோபுரமும், இத்தகைய கட்டுமான பொருட்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்குள் எப்போதும், ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே நிலவும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.அம்மனுக்கு எதிரில், நந்தியும், அதிக உயரம் கொண்ட, வேலும் காணப்படுகிறது. அம்மன் சிலை வடிவமைப்பை வைத்தே, அது, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல், அம்மன் சன்னதிக்கு இருபுறமும், அப்போதைய ஆட்சியாளர்களின் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளின் வடிவமைப்பு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ஆபரணங்களும் அழகும் !அங்குள்ள ஆட்சியாளர்கள் சிலை குறித்து விசாரித்த போது, உடுமலை அருகே, பல்வேறு சிறப்புகளுடன், ஆட்சி புரிந்த தளி பாளையக்காரர்கள் குறித்த தகவல்கள் வெளிப்பட்டன. இதில், கிழக்கு நோக்கி, அமைந்துள்ள பாளையக்காரர் எத்தலப்பரின் சிலையில், வாளும், அதை உடலோடு, சேர்த்து பிடிக்கும், கச்சையும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதே போல், அப்போது ஆண்கள் அணியும், ஆபரணங்களும், தற்போது பார்த்தாலும், பொலிவு மாறாமல், காட்சியளிக்கிறது. கிழக்கு பகுதியிலும், பாளையக்காரர்கள், குடுவை மற்றும் ஆயுதம் தாங்கிய உதவியாளர்களுடன் இருக்கும் சிலை உள்ளது.இந்த கோவில் பராமரிப்புக்கு, சுற்றுப்பகுதியிலுள்ள பல கிராமங்களில், நிலங்களை மானியமாக பாளையக்காரர்கள் வழங்கியுள்ளனர். மானியத்துக்கு நிலங்கள் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டே, இந்த கோவிலின் வரலாறு வெளிப்படுகிறது.செழித்து நிற்கும் மரங்கள்குறிஞ்சேரியிலுள்ள குறிஞ்சேரியம்மன் கோவில், எலையமுத்துார் ஏழூராம்மன் கோவில் உட்பட உடுமலை பகுதியிலுள்ள சில கோவில்கள், தனித்து தெரியும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள் வளர்ப்பும், அதற்கான கிணறும் இக்கோவில்களை தனித்து காட்டுகின்றன. இலுப்பை மரமும், பரம்பை மரமும் இக்கோவில்களில், தவறாமல் இடம் பெற்றிருக்கும். இதில், பரம்பை எனப்படும் மரத்தில், பூக்கும் பூக்களை, அப்போதிருந்த ஆட்சியாளர்கள் விரும்பி சூடுவார்கள் என்ற தகவலும் ஆச்சரியமளிக்கிறது. கற்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுற்றுசுவர் மட்டும் இருந்தாலும், செழித்து வளர்ந்துள்ள மரங்களே கோவிலுக்கான அழகை மெருகூட்டுகின்றன.புதுப்பிக்க வேண்டும் பழமை வாய்ந்த கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலை, தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன் புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள, கற்களை கீழே இறக்கி, மீண்டும், அவற்றை அடுக்கி, பழமையான முறையில், பூச்சு செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையும், பரம்பரை பூசாரிகளின் பராமரிப்பும் கோவிலை பாதுகாத்து வருகிறது. இக்கோவிலை தற்போதுள்ள கட்டமைப்பு மாறாமல் புதுப்பித்தால், அழியும் வரலாற்று தகவல்களை பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கலாம்.

பரம்பை...பூக்கள்....

;உடுமலை அருகே பழமையான கோவிலில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, பூத்துள்ள அரிய வகை மலரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில், சில அரிய வகை மரங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதில், பரம்பை எனப்படும் மரத்தில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது பூக்கள் மலர்ந்துள்ளன. நாகலிங்க பூ போன்ற வடிவில், காணப்படும் இந்தப்பூ, கடந்த, 15 ஆண்டுகளுக்கும் முன்பு வேறோரு நிறத்திலும், தற்போது, நிறம் மாறி, பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில், பூத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவில் பரம்பரை பூசாரியினர் கூறியதாவது: கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவில், தளி பாளையக்காரர்களால் கட்டப்பட்டு, சிறப்பாக வழிபடப்பட்டு வந்துள்ளது. கோவிலில் உள்ள, பரம்பை மரத்தில், பூக்கும் மலர்களை பாளையக்காரர்கள் தங்கள், கிரீடத்தில், சூடிக்கொண்டிருந்ததாக, செவிவழி தகவல்கள் உள்ளன.

இதை உறுதி செய்யும் வகையில், கோவில் வளாகத்தில், பாளையக்காரர்கள் சிலையும், பிற பகுதிகளில் அவர்கள் கட்டிய கோவில்களில், இவ்வகை மரங்கள் நடப்பட்டு, தற்போதும் பராமரிப்பில் உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.இந்த மரத்தைக் கட்டிப் பிடித்தாலோ, இதன் நிழலில் அமர்ந்தாலோ, மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள், அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் மற்றும் மூலிகை சாஸ்திரங்கள்.
வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துள்ளனர். இதில் 'பரம்பை’ என்றும் சிறப்பிக்கப்படும் வெள்வேல மரம், பல ஆலயங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கோவில் வளாகத்தில், பூத்துள்ள அரிய வகை பூக்களை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச்செல்கின்றனர்.

பதிவு செய்த நாள்..27 March..2018 நன்றி :தினமலர் ...💐🌷🌷🌷🙏🙏🙏🙏

என்றும் அன்புடன் சிவகுமார் ....9944066681...வாட்ஸாப்ப் எண்




திங்கள், 26 மார்ச், 2018


இந்த படத்துல இருக்கிறான் பாருங்க ..இந்த சிவக்குமார் ...இவனுக்கு வேற வேலையே இல்லையாங்க ...எப்ப பார்த்தாலும் ...எதுலப்பன் வரலாறு ..கதை பாடல் ..ஆவணப்படுத்துனம் சொல்லிட்டு வேல வெட்டி இல்லாம ...எங்கயோ பொழைக்க தெரியாதுங்க ஆளுங்க ...வேலையை மட்டும் பார்த்துட்டு ..நாலு காசு சம்பாரிச்சி ..சுயநலமா முன்னேறாம ...ஏதோ சமுதாயத்தை தூக்கி நிறுத்துறானாமா ...இவங்க இதையெல்லாம் பண்ணினாதான் சமுதாயம் வளருமா ..வளர்த்தி என்னத்தை சாதிக்க போராங்களோ ...இவங்களுக்கு வேற வேலையே இல்லங்க....

தளி எத்தலப்பன் -ஆவணப்படம்..

ஒரு மன்னரின் வரலாறு

சான்றாதாரங்கள்
முதன்மைசான்றதாரம்
துணைமைச்சான்றதாரம்
புளியமரத்தோட்டம்
சஞ்சீவராயன் மலை
ஜக்கம்மாகோவில்
புலி வீரன் கோவில்
நல்லவநாய்க்கன் சமாதி
கோட்டைக்காடு
கதை பாடல்கள் ...
1.ஒப்பனை
2.பாடல் பரிசீலனை
3.கதைப்பாடல் பண்  இசை
4.பாடல் மறுபதிவு
5.கதைப்பாடல் வகை .

பாடுபவர் பெயர்
வயது
அப்பா பெயர்
அம்மா பெயர்
சொந்த ஊரு
வந்த ஊரு
இந்த பாடல்  எப்படி தெரிந்தது
எங்கிருந்து தெரிந்தது
எதுலப்பன் கதை பாடல் கேட்டதுண்டா ?
எதுலப்பன் கர்ண பரம்பரைக்கதைகள்

படுசாமகருப்பன் என்று ஏதற்கு சொல்லுவார்கள்

வேலாண்டி எதுலப்பன் மனைவி ..உடன்பிறந்தவர்கள் பெயர்

எதுலப்பன் கட்டபொம்மன் உறவு
எதுலப்பன் மந்திரவாதி
எதுலப்பன் நீர்மேலாண்மை
எதுலப்பன் ஆட்சி
எதுலப்பன் அரசியல்
எதுலப்பன் சமூகம்
எதுலப்பன் மூத்தவர் உறவு
எதுலப்பன் வேளாண்மை
எதுலப்பன் ஆன்மிகம் வழிபாடு கோவில்கள்

எதுலப்பன் ஏராம நாய்க்கன்
எதுலப்பன் ஆங்கிலேயர்
எதுலப்பன் ஆன்ரோகேத்சு
எதுலப்பன் கால்நடை
வேலாண்டிகுடும்பன்  -வெண்கலமடையாள்
ஜல்லிபட்டி பாளையம் ...
தளிபாளையம்

எதுலப்பன் கட்டிய கோயில்கள் -கரட்டு பெருமாள்கோவில்
சல்லிமுத்துவீராயன் கோவில் ,திருமால் வழிபாட்டு கோவில்கள்
ஜக்கம்மா கோவில்கள்

எதுலப்பன் -விஜயநகர பேரரசு-வரி கட்டுதல்
எதுலப்பன் -வெண்கலக்குதிரையில் டெல்லி சென்றுவருதல்
எதுலப்பன் -திருமூர்த்தி மலை
திருமூர்த்தி மலையில் ஆயிரங்கால் மண்டபம்
திருமூர்த்தி மலை கற்மண்டபம்
திருமூர்த்தி மலையில் முன்புற நந்தி மண்டபம்
எதுலப்பன் -திருமூர்த்தி அணை
எதுலப்பன் -ஏழு குளப்பாசனங்கள்
எதுலப்பன் -ஊர்கள்
சர்க்கார் புதூர் -குதிரை மற்றும் ஆயுதங்களுடன் தங்கியிருத்தல்
தளி ஜமின் ..துங்காவி ஜமின் ..கழுதை பொதி கட்டி பொன் வைரங்களை படுசாம கருப்பன் ,மெய்காப்பாளனும் உடுமலை பகுதிக்கும் .கணியூர் பகுதிக்கும் அனுப்புதல்
உடுக்கம்பாளையம் ...எதுலப்பன் தங்கையை உடுக்க நாயக்கருக்கு திருமணம் செய்து தருதல் ..

லிங்கம்மாவூர் -எதுலப்பன் -எரமநாயக்கன் தங்கை நினைவாக லிங்கம்மா நினைவாக லிங்கம்மாவூர்

வெங்கிட்டாபுரம் -எதுலப்பன் மனைவி வெங்கிட்டம்மாள் நினைவாக வெங்கிட்டாபுரம்

எதுலப்பன் -கோட்டை மாரியம்மன் கோவில்
எதுலப்பன் -கோட்டைக்கரடு

இந்த தகவல்கள் எல்லாம் குறும்படத்தில் ஆவணமாக ஒளி ஒலி பதிவு செய்யப்படுகிறது ...

இத்தனை வேலை இருக்கு ......ஒரு ஆவணப்படம் எடுக்கிறதுக்கு ...

நீங்களே சொல்லுங்க இவங்க பண்ற வேலைபாரங்க ...இது எல்லாம் நல்லவா இருக்கு ..இவங்க பண்ணறது சரியா ...? தவறா ?

ஞாயிறு, 25 மார்ச், 2018


Devaraj Appanasamy .....
5 hrs
#DEVARATTAM
நிலவும் ஒளி எடுக்க தவறவில்லை மின்னொளியில் ஆடும் தேவராட்டக்கலைஞர்களின் ஆடைகளிலிருந்து...
#indian #kodangipatti #urumi #tradition #folk #sketchbook...

அருமை ..அருமை ..தேவராஜ் அப்பணசாமி அவர்களுக்கு ...நன்றி  நம் தேவராட்ட கலை ஓவியத்தை உலகமெல்லாம் பரவச்செய்யும் ...தளி எதுலப்ப மன்னரின் ....மண்ணிலிருந்து கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்..... 

இன்று அருமையான மாலை நேர தங்க சூரிய ஒளியில் மின்னும் பொன்நாள் ...
உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு கருத்தரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் மற்றும்     டி என் .பி. எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பேராசிரியர்.பொ. தங்கராசன் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட நிர்வாகி கே.விஜயகுமார் வரவேற்று பேசினார்.
லெமூரியன் கார்த்தி, தினேஷ் ராகவன்,கண்டிமுத்து,சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாலிங்கம் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன் அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பேசினார். சிறார்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற உடுமலை மாணவர் சி.என்.நித்தின் ஆதித்யா மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் II  தேர்வில் வெற்றி பெற்ற உடுமலை மாணவர் மு.கௌதம் ஆகியோருக்கு பாராட்டு சான்று, கேடயம் நூலக வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்பட்டது .
பின்னர்,மறைந்த பிரபஞ்சவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.      
 "சக்கர நாற்காலியின் பிரபஞ்ச நாயகன் " எனும் தலைப்பில் நூலக வாசகர் வட்ட தலைவர் க.லெனின்பாரதி நினைவேந்தல் உரை ஆற்றினார்.
முடிவில் நூலகர் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.
இன்றைய ஞாயிறு அருமை...மிக்க மகிழ்ச்சி ...


Sivakumar Kumar  — celebrating a birthday with Priya Sajeev and Ramesh Sukumar in Coimbatore, Tamil Nadu.

என்  இனிய நண்பர் வழக்கறிஞர் திருமதி .பிரியா சஜீவ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Sivakumar Kumar added 6 new photos — celebrating a birthday with Bvb Nandhagopal Rajakambala Rock and 13 others in Coimbatore, Tamil Nadu.
March 26, 2018· 
எந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வி உயர்வாக இருக்கிறதோ அந்த சமுதாயம் கண்டிப்பாக வளரும் .நம் சமுதாயத்தில் பெண்கள் கல்வி வெகு குறைவான காலகட்டத்தில் விழுப்புணர்ச்சி இல்லாத காலத்தில் பெண்களை படிக்கவைத்து ,அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் பார்க்கும்போது அவர்க்ளின் பெற்றோர்கள் படும் சந்தோசம் கணக்கிலடங்காது..அதுவும் பெண்களை வழக்கறிஞர் தொழிலுக்கு படிக்கவைப்பது ஒரு மனோதிடம் வேண்டும் ...அதுவும் நம் சமுதாயத்தில் வழக்கறிஞர்க்கு படிக்கவைத்த உங்களின் பெற்றோருக்கு கோடான கோடி நன்றிகள்,வழிகாட்டிய உங்களின் நண்பர்களுக்கும் ...உங்களை சுற்றி இருக்கும் வளரும் நம் தலைமுறையினர்க்கு ஒரு வழிகாட்டியாக உங்களின் ஆர்வம் ,நம் கம்பள சமுதாய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி ,
நம் முப்பாட்டன்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,தளி எதுலப்ப மன்னன் ஆகியோர் ..அனைத்து சமுதாய மக்களுக்கும் நீதியில் சமஉரிமை அளித்து ஆட்சி செய்து வழிகாட்டிய வழியில் உங்களின் வழக்கறிஞர் தொழிலும் வெற்றி பெறவாழ்த்துக்கள் 

நம் அறக்கட்டளையின் பணிகளுக்கு உங்களின் சேவை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வழக்கறிஞர் சிவரஞ்சனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

தம்பி ..எதுலப்ப மன்னரின் நூல் வெளியிட்டு விழா ..ஏப்ரல் 22....நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் ...விழாவிற்கான கடிதம் வழங்கப்பட்டது ....முடிய அளவான தூக்கம் போதும்  


தம்பி ..நெட் ல ஆன் ல இருந்தாலும் ...கிரீன் லைட் எரியும் ...அவர் ..அவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது ....நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒரு நாள் விரிவாக கட்டுரை வரைகிறேன் ....வேலை சூழ்நிலை ..பகல் ..இரவு என்று பாராது ...நிறுவனங்களின் தணிக்கை ..வருட கடைசி ...பணிச்சுமை ...மிகுந்த காலம் ...

சனி, 24 மார்ச், 2018

அருமையான நீண்ட 30 வருடதிற்கு பிறகு ஒரு சந்திப்பு ...

திரு .பார்த்தசாரதி  அருமையான பள்ளிக்கால நட்பு ...கடந்த வாரம் பல்லடம் தெற்கு பாளையம் தமிழ் தைப்பள்ளி ஆண்டுவிழா வில் கலந்துகொள்வதற்கு செல்லும் பொழுது உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர் திரு அருள்செல்வம் அவர்களின் மூலம் 30 வருட கால பள்ளியில் இருந்த நட்பு துளிர் விட செய்துள்ளார் ..அவருக்கு நன்றி ..பார்த்தசாரதி பள்ளிகால நட்பை பற்றி பிறகு பகிர்கிறேன் ..கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் பள்ளி Great Human Play School ..ஆண்டு விழா நடக்கிறது கண்டிப்பாக வாருங்கள் அன்பு கட்டளையிற்றார் ...அழகான மழலை பள்ளி ஒன்றை ஆரம்பித்து ...மழலை சிறார்களின் அப்துல்கலாம் ,பாரதியார் ,கண்ட கணுவுகளை மெய்ப்பித்துக்கொண்டு கொண்டுள்ளார் ..நேற்று நடந்த அவரின் பள்ளி விழாவை காண சென்று வந்தேன் ..அருமையான பள்ளி ..காந்திநகரில் ..விநாயகர் கோவில் எதிர்புறம் காற்றோட்டம் உள்ள ...நகரின் மத்தியில் இயற்கை சூழந்த அதுவும் மழலை குழந்தைகள் ஏற்ற சூழநிலை கொண்ட பள்ளியை பார்த்தவுடன் தெரிந்தது ...மண் ...அழகாக வாழ்வில் எதை மறந்தோமோ அதில் குழந்தைகள் சிறிய கிண்ணத்தில் மண்ணை அள்ளிக்கொண்டு கூட்டான்சோறு செய்து இரண்டு மூன்று குழந்தை செல்வங்கள் அழகாக ..அதில் வண்ணம் கலந்த சிறு கொடி வைத்து விளையாடி கொண்டு இருந்தது மகிழ்ச்சி ..பாரதி சொன்ன வார்த்தைகள் ..ஓடி விளையாடு பாப்பா ..நீ ஓயுந்து திருக்க லாகாது பாப்பா என்ற வார்த்தைகளை அங்கிருக்கும் சறுக்கு விளையாட்டு ..கருவி ..இன்னும் புதுவிதமான சாதனங்கள் கொண்டு குழந்தைகள் ஆரவாரம் மிக்க விளையாடி கொண்டு இருந்தது மனதிற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது ..அதை பார்த்துவிட்டு விழா நடக்கும் அரங்குக்கு சென்றேன் உள்ளே அரங்கின் மேடையில் உடுமலையின் கல்வியாளர் ..மற்றும் விவேகானந்த பள்ளியின் தாளாளர் .திரு மூர்த்தி அவர்கள் ..அற்புதமாக இன்றைய குழந்தை செல்வங்களுக்கும் ..பள்ளிக்குழந்தைகள் பெற்றோர்களுக்கும் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அழகாக அற்புதமாக பேசிகொண்டுருந்தார் மகிழ்ச்சியாக இருந்தது ..இவரின் தந்தையார் மறைந்த செந்தில் ஆறுமுகம் -வள்ளிநாயகி அவர்களின் புதல்வன் ஏற்கனவே நான் அறிந்துள்ளேன் ..இவரின் தந்தையார் மூலம் தான் எம்பெருமான் முருகக்கடவு லின் ஆசிபெற்ற திரு.கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகளை உடுமலை அரசு பள்ளி வேம்பு சதுக்கம் வாழ்வில் எந்த உயரிய இடத்திற்கு சென்றாலும் மறக்க இயலாது... நன்றி ...பள்ளி குழந்தை செல்வங்களின் பெற்றோர்களுக்குகாக ...இலவசமாக ..தற்போது இருக்கும் மருந்துகள் இல்ல உலகம் எப்படி இருக்கும் என்று ..ஹீலர் ..திருப்பூர் திரு .மோகன் ராசு அவர்களின் இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை ..அந்தளவுக்கு நாம் எதிர்கொள்ளும் உடல் சம்பந்தமான நோய்கள் ..அதை செலவே இல்லாமல் குணமானதை மிக எளிதாக பேசியது வெகு அருமை ...இன்னும் இவரின் சேவையை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ஆர்வம் மனதில் தொற்றி கொண்டது ..பள்ளி குழந்தைகள் திறனிற்கு ஏற்ற விளையாட்டு போட்டிகள் நிறைவுற்று ...சிறப்பு விருந்தினர்கள்  ...குழந்தை செல்வங்களுக்கு தன் தலைவணங்கி பரிசு வழங்கியது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது ..ஏனென்றால் எதிர் கால இந்தியாவை வழிநடத்த செல்லும் குழந்தைகளுக்கு இப்படி தலைவணங்குவது மாண்பு தானே ...குழந்தைகள் பரிசு வாங்கும் போது மற்ற குழந்தைகள் மிக பெரியஆரவாரம் செய்து குழந்தைகளை உற்சாக படித்திக்கொண்டே இருந்தார்கள் .அந்த குழந்தைகள் வாங்கிய மெடல்கள் ..சான்றிதல்கள் வாங்கி தன் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் கண்ட கனவு ...தங்களின் பிள்ளைகள் மூலம் பெற்றது ..புகைப்படம் பாருங்கள் ..அதுவே பதில் சொல்லும் .ஏன் நாம் சகா நண்பர்களை ..திறமையாளர்களை இப்படி உற்சாகபடுத்துவது இல்லை ..கொஞ்சம் வருத்தம் தான் ...அதையெல்லாம் குழந்தைகளிடம் கொண்டுள்ளோம் ...நன்றியுரை தோழர் கொழுமம் ஆதி ...உடுமலையின்  தமிழ் வேந்தர் தினம் தோறும் பகிரலியில் தமிழை அழகாக தினம் ஒரு சொல் தினம் படித்து வாழ்வில் நம் செந்தமிழை நமக்கு ஊட்டிக்கொண்டுள்ளார் ..அவரின் நன்றியுரை பேச்சு இன்னமும் மனதில் மறவா நிகழ்வாக உள்ளது ..30 வருடகால..பார்த்தசாரதி  நண்பரின் பள்ளிவிழா  ..நட்புகளை புதுப்பித்துள்ளது ...நன்றி என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்












வெள்ளி, 23 மார்ச், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -

நாளை நடைபெறும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை ஞாயிறு காலை  10 மணி அளவில் ..தளி பாதையில் அமைந்துள்ள குமரன் தட்டச்சு பயிலகம் ..அலுவலகத்தில் நாளை நடை பெரும் ..செயல் குழு உறுப்பினர்கள் ..மற்றும் செயல் குழு உறுப்பினர்கள் ..இந்த வருடம் தணிக்கை அறிக்கை சமர்பிப்பதற்காக ..சந்த தொகை புத்தகம் தவறாமல் எடுத்து வரவும் ...முக்கியமாக ..அடுத்த மாதம் நடை பெற இருக்கிற இந்திய விடுதலைக்கு வித்திட்ட வரலாற்று நாயகன் தளி எதுலப்ப மன்னரின் விழாவை பற்றி ஆலோசனை விழாவை எப்படி நம் இனப்பற்றுடன் நம் பங்கை எப்படி பகிரலாம் என்ற தங்களின் மேலான மதிப்புமிக்க செயல் திட்டங்களையும் தெரிவிக்கலாம் ...நன்றி
திரு .தமிழரசன்
பொருளாளர்
கம்பள விருட்சம் அறக்கட்டளை .

Sivakumar Kumar is celebrating a birthday in Coimbatore, Tamil Nadu.
Just now
எனது உலகம் ...
ஷியாம் ...G D நாயுடு
நான் சேலத்தில் பணியில் இருக்கும்போது ..எப்போதுதான் இரண்டாவது சனிக்கிழமை ..மூன்றாவது சனிக்கிழமை வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் ..ஷ்யாமுடன் செல்ல வேண்டிய இடங்கள் புத்தக கடை ..புரூக் பீல்டு ...டவுன் ஹால் கீதா கபே (மதியம் சைவ உணவு ஷ்யாமுக்கு பிடிக்கும் )..புது இடங்கள் ..மீசுயூம் ..அதுவும் கோவையின் அறிவியல் அறிஞர் ..G D நாயுடு அரங்கம் ..அவரை அழைத்து சென்று அவர் கேட்கும் கேள்விகள் ..அதற்ககான விடைகள் ..சொல்லும்பொழுது உற்சாகத்திற்கு அளவே இருக்காது ...அவரின் பிறந்த நாள் இன்று பகிர்வது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ..
ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(23.03.1893)
தோற்றம்: 23-03-1893
மறைவு:04-011974
இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் எனவும், அகிலம் போற்றும் அதிசய மனிதர் எனவும் புகழப்படுகிற ஜி.டி.நாயுடு மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, பிஸினஸ் உலகில் தன் முத்திரையை ஆழமாகவே பதித்தவர். நாயுடு சமூகம் தந்த இந்த பிஸினஸ்மேனை பற்றி இன்று நாம் பார்ப்போம்.
G.D.Naidu பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.
கோபால்சாமி துரைசாமி நாயுடு (சுருக்கமாக ஜி.டி.நாயுடு) 1893-ல் பிறந்தார். கோவைக்குப் பக்கத்தில் சூலூருக்கு அருகில் இருக்கிற ஒரு குக்கிராமம்தான் கலங்கல். இந்த கிராமத்தில் ஜி.டி.நாயுடுவின் தந்தை ஓரளவுக்குப் பெரிய விவசாயி. நாற்பது ஏக்கரில் விவசாயம் செய்த கொண்டிருந்தார்.ஜி.டி.நாயுடுவுக்கு சிறுவயது முதலே பள்ளிப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. பள்ளிக்கூடத்தில், இல்லாத சேஷ்டைகளை எல்லாம் செய்தார். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார்.
ஆனால், பிற்பாடுதான் கல்வி என்பது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய தேவை என்பதை உணர்ந்தார். அதனால், தனது பிற்காலத்தில் கோவையில் சில முக்கிய கல்வி நிலையங்களைத் திறந்தார்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜி.டி.நாயுடுவிற்கு, தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள் கிளர்ச்சி தருவதாக இருந்தது. அந்த சமயத்தில் கலங்கல் கிராமத்திற்கு நில சர்வே செய்வதற்காக லாங்கார்ஷயர் என்கிற வெள்ளைக்காரர் ஒரு மோட்டார் பைக்கில் வந்தார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம்.
கிராமத்திற்கு வந்த இந்த மோட்டார் பைக் திடீரென ரிப்பேரானது. அதை சரிசெய்ய ஜி.டி.நாயுடுவிடம் கொஞ்சம் பெட்ரோலையும் கந்தல் துணியையும் கேட்டார் அந்த வெள்ளைக்காரர். அந்த ரிப்பேரை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜி.டி.நாயுடு. பிறகு, அந்த பைக்கை விலைக்குத் தரமுடியுமா? என அந்த வெள்ளைக்காரரிடம் கேட்க, ''தம்பி, இதை வாங்குற அளவுக்கு உன்னிடம் பணம் இருக்கா?'' என்று கேட்டார் வெள்ளைக்காரர்.
பணம் சம்பாதிக்க வேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் அவர் உணர்ந்தார். உடனடியாக கோவைக்குச் சென்று ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் கடுமையாக உழைத்ததில் கிட்டத்தட்ட 400 ரூபாய் சேர்த்தார். அப்படி சேமித்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த வெள்ளைக்காரரைச் சந்தித்து, அவர் வைத்திருந்த பைக்கை விலைக்கு வாங்கினார்.
பைக்கை வாங்கியவுடன் அதை எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வந்தார். அந்த பைக்கை தனித்தனியாக பிரித்துப் போட்டார். மீண்டும் சேர்த்தார். மீண்டும் பிரித்தார். இப்படி பலமுறை செய்ததில், மோட்டார் பைக் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய அத்தனை விஷயங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.
இப்படி சுற்றிக் கொண்டிருந்த ஜி.டி.நாயுடுவை பருத்தி விவசாயம் பக்கம் திருப்பிவிட்டார் அவரது அப்பா. காரணம், அந்த சமயத்தில் இந்தியாவிலேயே பருத்தி வர்த்தகத்தில் முக்கியமான நகரமாக மாறியிருந்தது கோவை. முதலில் பருத்தி விவசாயம் செய்த ஜி.டி.நாயுடு, பிற்பாடு பருத்தி வர்த்தகத்தில் இறங்கினார்.
தரமான பருத்தியை சட்டென கண்டுபிடித்த அவரது திறமை, பருத்தி வர்த்தகத்தில் அவரை பெரும் செல்வந்தராக மாற்றியது. பருத்தி வர்த்தகத்தை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று நினைத்து மும்பை சென்றார். ஆனால், மும்பையில் பருத்தி வர்த்தகம் என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டமாகவே மாறியிருந்தது. சூதுவாது தெரியாமல் இந்த ஆட்டத்தில் சிக்கியதன் விளைவு, மிகப் பெரிய நஷ்டமடைந்தார் ஜி.டி.நாயுடு.
அதுவரை சம்பாதித்த பணம் அத்தனையையும் இழந்து, ராபர்ட் ஸ்டேன்ஸ் என்கிற வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனியில் மெக்கானிக்-ஆக வேலை செய்யத் தயாராக இருந்தார் ஜி.டி.நாயுடு. அந்த சமயத்தில் இந்தியாவில் பஸ்களை விற்றுக் கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ். ஒரு பஸ்ஸின் விலை நான்காயிரம் ரூபாய்.
பஸ்களின் வருகை மூலம் மக்கள் இன்னும் அதிக அளவில் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்வார்கள் என்பதைச் சரியாகவே கணித்தார் ஜி.டி.நாயுடு. தவிர, அந்த சமயத்தில் கோவையில் ஒரு பஸ்கூட இல்லை. எனவே, ஒரு பஸ்ஸை வாங்கி பொள்ளாச்சி - பழநிக்கு இடையே ஓட்ட முடிவு செய்தார். காரணம், அந்த சமயத்தில் பொள்ளாச்சியிலிருந்து பல ஆயிரம் பேர் மாட்டு வண்டி மூலமாக நாள் கணக்கில் பயணம் செய்து பழநிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
சரி, பஸ் வாங்க பணத்திற்கு எங்கே போவது? நல்ல வேளையாக பஸ் கம்பெனி அதிபர் ராபர்ட் ஸ்டேன்ஸே இரண்டாயிரம் ரூபாய் பணம் தந்தார். தனக்குத் தெரிந்த மற்ற நண்பர்களிடமும் பணத்தை புரட்டி எடுத்து, ஒரு பஸ்ஸை வாங்கி, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு அவரே ஓட்டிச் சென்று வந்தார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்கிற பெயரில் அவர் நடத்திய இந்த போக்குவரத்துக் கம்பெனி நல்ல லாபத்தைத் தந்தது.
1920-ல் அவரிடம் இருந்தது ஒரே ஒரு பஸ்தான். 1924-ல் 24 பஸ்ஸாக உயர்ந்தது. 1933-ல் அவரிடம் இருந்த பஸ்களின் எண்ணிக்கை 280. ஒரு கட்டத்தில் 600 பஸ்களுக்கும் மேலே வைத்திருந்தார் ஜி.டி.நாயுடு.
இந்த கம்பெனி நன்கு வளர்ந்த சமயத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக வடிவம் தர ஆரம்பித்தார். முக சவரம் செய்து கொள்ளும் மின் சாதனமான எலெக்ட்ரானிக் ரேஸரைக் கண்டுபிடித்தார். பஸ்ஸில் தானாகவே டிக்கெட் தரும் மெஷினை கண்டுபிடித்தார். கணக்கு போடும் கால்குலேட்டரை உருவாக்கினார்.
ஜி.டி.நாயுடு ஒரு கேமிரா பிரியர். படம் எடுக்கும் கேமிராவில் உள்ள தூரத்தை சரி செய்யும் லென்ஸை கண்டுபிடித்தார். 1930 வாக்கில் அவர் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது பல்வேறு காட்சிகளை படமெடுத்தார். ஜெர்மனிக்குப் போனபோது ஹிட்லருடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்.
ஜி.டி.நாயுடு எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை எனினும், 1936-ல் நடந்த கோவை புரவின்ஷியல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதன் விளைவாக, மோசடி செய்ய முடியாத மின் வாக்குப்பதிவு இயந்திரத்தை அப்போதே தயாரித்தார்.
1941-ல் அவர் ஒரு ரேடியோவை உருவாக்கி, எல்லோரும் வாங்கும் வகையில் 70 ரூபாயில் கொடுக்க முடிவு செய்தார். இப்போது வந்திருக்கும் நானோ கார் போல 1940-லேயே வெறும் 2,000 ரூபாயில் இரண்டு சீட்கள் கொண்ட காரை உருவாக்கினார். ஆனால், இந்த புதுமையான முயற்சிக்கு அப்போதைய அரசாங்கம் அனுமதி அளிக்காததால், குறைந்த விலை கார் முயற்சி அப்படியே நின்று போனது.
தவிர, போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வு பண்ணை ஒன்றையும் அமைத்தார். இதில் அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி விதைகள் உள்பட பல்வேறு விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், மைசூர் அணையைக் கட்டிய விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
1944-ல் ஐம்பது வயதுகூட நிரம்பாத நிலையிலேயே தொழில் துறையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் ஜி.டி.நாயுடு. 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்திற்குத் தானமாக தந்தார்.
1974-ல் ஜி.டி.நாயுடு இறந்தாலும், அவரது வாரிசுகள் இன்றளவும் தொடர்ந்து பிஸினஸ் உலகில் சாதனை படைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
அவரின் பொன்மொழி:
21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலை செய்,
பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்துத் தொழில் செய்.
குறைந்தது அடுத்து இருபது ஆண்டுகளுக்கு தொழில் செய்து பொருள் ஈட்டு.
பிறகு உன்னுடைய படிப்பு ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய்.
ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர்.விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.
கண்டுபிடுப்புகள்:
* ஒரே வாழைத் தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர்.
* தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநருக்கு ஒரு பேருந்தையே பரிசாகக் கொடுத்தவர். உலகம் சுற்றியவர். ஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர்.
*முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!
* மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
* எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.
* புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
* இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
* விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!
அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்: “இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர். அவர்கள் 15ஆம் வயது முதல் 25ஆம் வயது வரை உள்ள பத்தாண்டு காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறுகிறேன்.
செலவு செய்த முறை ---------------- வருடம்-------மாதம்------நாள்
உறக்கம் ------------------------------- 3 ------- 4 ------- 5
உணவு -------------------------------- 0 -----------7 --------- 18
கண்ணாடிக்கு முன் அழகு பார்த்தல் ------- 0 ---------7 ----------18
வீண் பொழுது போக்குகள் -----------------4 --------- 3 --------- 4
படிப்பு ---------------------------------- 1 ---------- 1 -------- 15”
இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். “நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை.
இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்”
“நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்”
ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.
தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: “நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்”
வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் “இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்” என்றார்.
இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!
இதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வேங்கை மகன் கேட்ப்பாரு பாருங்க ஒரு கேள்வி ...அதுதான் தாங்க எனது உலகம் தொடர் ...
என்றும் அன்புடன் சிவக்குமார் வாட்ஸாப்ப் எண் ..9944066681...




வியாழன், 22 மார்ச், 2018


எனது உலகம் ...

கோவையில் ..எனது வாடிக்கையாளர்களில் அதிகம் ..வழக்கறிஞர் நண்பர்கள் இருக்கிறார்கள் ..எனது பணிகாரணமாக சந்திப்பது வழக்கம் ..அவர்களுடன் சேர்ந்து  நானும் நீதிமன்றங்களில் சுற்றி பார்க்கும் பழக்கம் உண்டு...அதுவும் திருமதி ஷர்மிளா  அவர்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் ..அவரிடம் கலந்துரையாடுவது உண்டு ...சில வழக்குகளை மனிதாபிமானத்தோடு ..செலவு இல்லாமல் செய்து இருக்கிறார் ..அதன் பகிர்வு ..

செல்வி...சாயந்திரம் ஆபீஸ் முடிஞ்சு போறப்ப இங்க வந்துட்டுப் போறியா....??? என் வழக்கறிஞர் தோழி..போன் செய்தாள்.

என்ன விஷயம்...சொல்லு...

ஒரு டிவோர்ஸ் கேஸ்.. இன்னும் பதிவு பண்ணல. நீ ஒரு தரம் பார்ட்டியப் பார்த்துப் பேசிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். வரியா...??

சரி என்று சொல்லிவிட்டு என் வேலையைக் கவனித்தேன்., சாயந்திரம் அவள் ஆபீஸ்க்கு போனேன்.

ஒரு இளம் தம்பதி காத்துக்கொண்டிருந்தனர். ரெண்டு பேரும் பார்க்க லட்சணமா, பொருத்தமா இருந்தாங்க..தோழி எங்களை விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். நான் அவர்களை ஏறிட்டு, சொல்லுங்க....என்றதும் ரெண்டுபேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டார்கள்...

மேடம் ....எங்களுக்கு போனவருஷம் கல்யாணமாச்சு.. இவங்க வீட்டுல 20 பவுன் போட்டு கல்யாணம் பண்ணிவைச்சாங்க.. நான் ஒரு தனியார் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன்.. பிஎச்டி படிச்சிட்டிருக்கேன். என் தீஸிஸ் முடிச்சு டாக்டரேட் வாங்கற வரைக்கும் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணி, என் மனைவியும் ஒத்துக்கிட்டாங்க... ஆனா இது எங்க ரெண்டு
பக்கத்து பெரியவங்களுக்கும் தெரியாது.. ஆறுமாசம் அமைதியா இருந்தாங்க எங்க அம்மா. அப்புறம் என் மனைவிக்கு ரொம்ப குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு கட்டத்துல, எங்கப்பாவும் அம்மாவோட சேர்ந்துக்கிட்டார்.

ஒருநாள் , எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இவங்க வீட்டுக்குப் போய், உங்க பொண்ணுக்கு என்னமோ உடம்புல பிரச்னை இருக்கு...அதான் குழந்தை உண்டாகல...அதை மொதல்ல சரி செஞ்சு, அப்பறமா எங்க வீட்டில் கொண்டு வந்து விடுங்கன்னு சொல்லவும் என் மாமனார் மாமியாருக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு... எனக்கும் இது ரொம்ப அதிகமா படவே, என் அப்பா அம்மாகிட்ட உண்மைய சொன்னேன்... ஆனா, அவங்க இதை நம்பவே இல்ல...நான் என் மனைவிய காப்பாத்த பொய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.. என் படிப்பு சம்பந்தமா..எல்லா ரெகார்ட்ஸையும் காண்பிச்சேன்.. அப்பவும் நம்பல.. இப்போ எங்கம்மா, வம்படியா...என் மனைவிய டிவோர்ஸ் பண்ணியே தீரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்க..

என்ன பண்ணறதுன்னு தெரியல.. நான் ஒரே பையன்..வயசான அப்பா அம்மாவை தனியே விட்டுவிட்டு,
தனிக்குடித்தனம் போகவும் மனசில்ல...பெரியவங்களை சமாதானம் பண்ணவும் தெரியல.. இப்போ என் மனைவி அவங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்க. நான் ரெண்டு பேரும் சேர்ந்து இங்க வந்தது எங்க வீட்டுக்குத் தெரியாது... ப்ளீஸ் உதவி செய்யுங்க....மேடம்னு...ஒரே மூச்சில் சொல்லி முடிச்சார் அந்தக் கணவர்...

இந்தப் பேச்சு முடியும் வரைக்கும், அந்தப் பெண் கண்ணில் வழியும் நீருடன் தன் கணவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

நான்கு வாரங்கள் கழித்து, என் தோழி மீண்டும் எனக்கு போன் செய்தாள்.... செல்வீ...அந்த டிவோர்ஸ் பார்ட்டி...இன்னிக்கு என் ஆபீஸ் வந்தாங்க...பை நிறைய பூ, பழம் ஸ்வீட்டு எல்லாம் வாங்கி வந்தாங்க. டிவோர்ஸ் பெட்டிசன் போடலயாம்....
ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்...!!!
முகம் முழுக்க சிரிப்பு .....!!!

அப்படி என்ன மாய மந்திரம் பண்ணே...?????

நீங்க சொல்லுங்க பிரண்ட்ஸ்.... நான் என்ன செஞ்சிருப்பேன்னு...???

புரிதல் உண்டு...பிரிதல் இல்லை....

கணவரின் பிஎச்டி படிப்பு முடிந்து பட்டம் வாங்கும் பொருட்டு குழந்தைப்பேறை ஒத்திப்போட்டனர் இளம் கணவன் மனைவி. இதில், சம்பந்தப்பட்ட பெரியவர்கள்..தன் மருமகளிடம் ஏதோ குறை இருப்பதாகவும் அதை மறைக்கவே தன் மகனும் மருமகளும் படிப்பு , பட்டம் என்று நாடகமாடுவதாகவும் தவறாகப் புரிந்துகொண்டு, மருமகளை விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்று விதண்டாவாதம் செய்யகின்றனர்..அம்மா அப்பாவை சமாதானம் செய்யத் தெரியாத, மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாத, அந்த இளம் கணவருக்கு நான் எப்படி தீர்வு சொன்னேன்....???

உங்க அம்மாவைப் பத்தி சொல்லுங்க....???அந்தப் பையனிடம் கேட்டேன்....

எங்க அம்மா...ரொம்ப நல்லவங்க மேடம்...ஆனா முரட்டுப் பிடிவாதம் . அதனாலேயே அவங்களுக்கு யாரும் பிரண்ட்ஸ் கிடையாது..

அப்டியா...?? சரி...அவங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் ..?? என்ன ஐட்டம் விரும்பி சாப்பிடுவாங்க...?? எந்த சாமி பிடிக்கும்...??

ப்ளூ கலர் ரொம்பப் பிடிக்கும் மேடம்...கடலைப்பருப்பு ஒப்பட்டு அவங்களுக்கு பிடித்தமான இனிப்பு..வாரா வாரம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவை தண்டுமாரியம்மன்  கோவிலுக்கு போகலன்னா எதோ பறிபோன மாதிரி இருப்பாங்க..அவ்ளோ பக்தி அந்த அம்மன் மேல...

அடடடா....மாட்டிக்கிட்டாங்களே மாமியார்....என் மனக்குயில் கூவியது....

ஓக்கே... நீங்க போய்ட்டு வாங்க... இந்த வாரம் மட்டும் உங்க அம்மா கூட நீங்க கோயிலுக்கு வாங்க...உங்க போன் நம்பர் உங்க அட்வகேட் கிட்ட குடுத்துட்டுப் போங்க....

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை...சரியாக ஆறு மணிக்கெல்லாம் கோவை ...ஸ்ரீதேவி சில்க்ஸ் ......ப்ளூ கலர்ல அழகா ஒரு சில்க் காட்டன் புடவை...எடுத்துக்கிட்டு, கோயிலுக்குப் போனேன்.. அந்தப் பையனும் அம்மாவும் ஆறேகால் மணிக்கு வந்தாங்க.. என்னைப் பார்த்துட்டு அந்தப்பையனுக்கு ஆச்சர்யம்...ஆனா கண்டுக்காதன்னு சாடை காட்டிவிட்டேன்...

பொறுமையா அம்மன் தரிசனம் ஆனது.. பிரகாரம் சுற்றி வந்து, அம்மாவும் பையனும் உட்கார்ந்தார்கள்... நானும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன்.. அஞ்சு நிமிஷம் கழிச்சு, அந்த அம்மா கிட்ட போய்,
அம்மா, இன்னிக்கு என் மாமியார் நினைவு நாள்.. வருஷா வருஷம் அவங்க ஸ்தானத்துல யாராவது ஒரு தாய்க்கு புடவை வச்சுத் தருவோம்.. இதை வாங்கிக்கொண்டு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..என்று புடவை, பூ, இனிப்பு போளி எல்லாம் வச்சு...கொடுத்தேன்...

ஒரு நிமிஷம் தயங்கினாங்க..அப்புறம் ஆச்சர்யம் சந்தோஷம் எல்லாம் கலந்து,..புடவைய வாங்கிக்கிட்டாங்க... பிரிச்சுப் பாருங்கம்மான்னு சொன்னேன்... புடவைய பிரிச்சு கலரைப் பார்த்ததும் அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம்... அந்தப் பையன் நான் என்னமோ பண்றேன்னு...புன்னகையோட கவனிச்சுட்டு இருந்தான்....

அடுத்த வாரம், அந்த அம்மா மட்டும் கோயிலுக்கு வந்தாங்க... என்னை பார்த்ததும் ஒரு நொடி யோசிச்சு, அப்புறம்அடையாளம் கண்டுகொண்டு புன்னகைச்சாங்க... அம்மன் தரிசனம், பிரகாரம் சுற்றி வருதல் எல்லாம் முடிச்சு உட்கார்ந்தோம்.. மெதுவா...என் பேரு,,,நான் என்ன பண்றேன்னு ஆரம்பிச்சாங்க.. நானும் சொன்னேன்...( வக்கீல்னு சொல்லலை..) அப்பறம் மடைதிறந்த மாதிரி வெள்ளமா கொட்டித் தீர்த்துட்டாங்க அவங்க குடும்ப விஷயங்களை...

அடுத்தடுத்த வாரங்களில், அவங்க குடும்பத்தில் இருக்கற பிரச்னை...ஒரு விஷயமே இல்லை...என்றுஅவங்க நினைக்கற அளவுக்கு நான் ஊர் உலகத்தில் எப்படி இருக்கு என்று புரிய வைத்தேன்... அப்புறம், அவங்க மருமக இருக்கற ஊர் பேரைச் சொல்லி, எங்க பக்கம் தெரிஞ்சவங்க வீட்டுல கூட இப்டிதாங்க...மாமியா அவங்க மருமக உடம்புலதான் என்னமோ குறை இருக்குன்னு...நினைச்சு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... ஆனா அந்தப் பொண்ணு, பாவம் மாமியாரை தெய்வமா நினைச்சுட்டிருக்கு....அவங்க நல்லா இருக்கணும்னு கோயில் கோயிலா சுத்திட்டிருக்கு...

பாருங்கம்மா..இந்தக்காலத்துல கூட இப்படிலாம் பொண்ணுங்க இருக்கு.... உங்களுக்கும் வாய்ச்சிருக்காளே ஒரு ராட்சசி....ன்னு சொல்லவும் அந்தம்மாமுகமே மாறிடுச்சி....

அப்டியா....??, அந்த ஊரா....?? அந்தப் பொண்ணு பேரு என்ன...???

நான் சொன்னேன்.... சட்டுனு அந்தம்மா கண்ணுல தண்ணி வந்துருச்சி....செல்வி....என்னை என்ன பண்ணாலும் தகும்... அந்தப்பொண்ணுதான் என் மருமகள்... இந்த கோவை தண்டுமாரியம்மன்  இன்னிக்கு என் கண்ணைத் திறந்துட்டா.... நாளைக்கே என் பையனை போய் மருமகளை...கூட்டிட்டு வரச் சொல்றேன்..நீ நல்லா இருப்பே ..... ஒரு நாள் உன் வீட்டுக்காரரை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு கட்டாயம் வரணும் செல்வி....

அதுக்கென்னம்மா கட்டாயம் வரோம்...ன்னு சொல்லிட்டு, கோவை தண்டுமாரியம்மன் கோவில்  இன்னொரு கும்பிடு போட்டுட்டு....கிளம்பினேன்....சிலசமயம் சினிமா, சீரியல்களில் நடப்பதை விட....நிஜ வாழ்க்கையில் சுவாரசிய சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன...

என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ....தொடரும் ..


எனது உலகம் ...ஷியாம்

(உலக தண்ணீர் தின சிறப்புக்கதை - மார்ச் 22)

இந்திரன் கோபமாக இருந்தான். இந்த நாட்டை விட்டுமட்டுமல்ல இந்த பூமியைவிட்டே எங்கேனும் போய்விட முடிவெடுத்தான். சென்னை அருகில் இருந்த ராக்கெட் ஸ்டேஷனுக்கு சென்றான். பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. எப்படியும் இரண்டு வருடம் ஓட்டிவிடலாம். ராக்கெட் ஸ்டேஷனில் ஒரே இரைச்சலாக இருந்தது. “மார்ஸ்..” “மெர்க்குரி” “வீனஸ்.” “ஜூப்பிட்டர்..” “விரைவு ராக்கெட்” என கத்திக்கொண்டிருந்தார்கள். “சூரியனுக்கு போற ராக்கெட் இல்லையா? “ என்று கேட்டான் இந்திரன். “வண்டி பழுதடைந்து உள்ளது” என்று பதில் வந்தது. சிகப்பு நிறத்தில் அழகான ஓவியத்துடன் இருந்த ஜூப்பிட்டர் செல்லும் ராக்கெட் அருகே சென்றான் இந்திரன்.

ஐந்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தான். திரும்பி வரவும் டிக்கெட் எடுக்க சொல்லி பைலட் கெஞ்சினார். ஜூப்பிட்டருக்கு யாரும் வரவதில்லை, ராக்கெட் ஓட்ட கூட காசுகிடைப்பதில்லை என வருத்தப்பட்டார். அந்த ராக்கெட்டிற்கு அவர் தான் பைலட் (ஓட்டுனர்), நடத்துனர் எல்லாம்.  கால்மணி நேரம் காத்திருந்தனர். வேறு பயணிகள் யாருமே வரவில்லை. வேறு வழியில்லாமல் வண்டி கிளம்பியது. ராக்கெட் ஓட்டுனர் அருகிலேயே அமர்ந்துகொண்டு பேசி வந்தான் இந்திரன். ஜூப்பிட்டருக்கு போக எவ்வளவு தூரம், அங்கே என்னவெல்லாம் பார்க்கலாம் என கேட்டுக்கொண்டே வந்தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க மட்டும் ஓட்டுனர் கூறினார்.

ஜூப்பிட்டருக்கு பூமியில் இருந்து சுமார் நான்கு மணி நேரத்தில் போய்விடலாம். ராக்கெட் அதிவேகத்தில் செல்லும். அங்கே இந்திரனுக்கு பிடித்த விஷயமே அங்கே இருக்கும் நிலாக்கள் தான். நம்ம பூமிக்கு ஒரே ஒரு நிலா, ஆனால் ஜூப்பிட்டர் கோளுக்கு மொத்தம் 67 நிலாக்கள். இன்னும் கூட அதிகமாக இருக்கலாம் என நினைக்கின்றார்கள். தன் பையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து ”சாப்பிடுகின்றீர்களா?” எனக்கேட்டான். ”இல்லை நான் சாப்பிட்டு இரெண்டு வாரம் தான் ஆகின்றது அடுத்த வாரம் தான் அடுத்து சாப்பிடுவேன்” என்றார். ”நான் பழங்களை சாப்பிடுவதில்லை, வெறும் சாப்பாட்டு மாத்திரைகள் தான்” என்றும் சொல்லிவிட்டார்.

நான்கு மணி நேரத்தில் ஜூப்பிட்டர் வந்துவிட்டது. “இந்திரன் சார், ஜூப்பிட்டர் வந்துவிட்டது. அங்க பாருங்க எவ்வளவு நிலாக்கள்” என இறக்கிவிட்டார். ராக்கெட்டின் பின்புறம் ஏதோ சத்தம் அதிகமா வருகின்றது. வரும்போது ஒரு நிலாவில் உரசிவிட்டது.  அதனால் இன்று இரவு ராக்கெட் இங்கே தான் நிற்கும் என கவலைப்பட்டார் பைலட். தன் பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பைலட்டுக்கு கையசத்துவிட்டு நகரினை நோக்கி நடந்தார். நகரின் பெயர் கிண்டர்கா. இறங்கி நடக்க ஆரம்பித்ததும் அவன் பின்னாடி சிலர் தொடர்வதை கவனித்தான். ஆரம்பத்தில் நான்கு பேர் இருந்தார்கள். பின்னர் அது பத்தாக உயர்ந்தது. பத்து இருபதானது. இருபது ஐம்பதனாது. இப்படியாக சுமார் முன்னோறு நபர்கள் இந்திரனை பின் தொடர்ந்தார்கள். வேகமாக நடந்தான். அவர்களும் வேகமாக நடந்தார்கள். ஓடினான். அவர்களும் ஓடினார்கள். வேகமாக ஓடினான் அவர்களும் வேகமாக ஓடினார்கள்.

குன்று போல இருந்த இடத்தில் நின்றான். “உங்களுக்கு என்ன வேண்டும்? பார்த்தால் நன்றாக உடை உடுத்தி இருக்கின்றீர்களே. இந்தாங்க என்னிடம் இருக்கு அதி நவீன மொபைல் ஃபோன்.” வேண்டம் என சொல்லிவிட்டார்கள். தன் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்துக் கொடுத்தான். வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். இப்படியாக ஒவ்வொரு பொருளாக கொடுத்தான் அனைத்தையும் மறுத்துவிட்டார்கள். ஐயோ என்னதாங்க வேண்டும் என்றான். எல்லோர் விரலும் ஒரு இடத்தை காட்டியது. அது அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டில். “இதுவா??” என தூக்கி வீசினான்.

அவ்வளவு தான் தாமதம். பரபரவென எல்லோரும் நீண்ட வரிசையில் நின்றார்கள். தலைவன் ஒருவன் வரிசைப் படுத்தினான். மொத்தம் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்று நவீன கருவி மூலம் கணக்கிட்டார்கள். தண்ணீர் அளவினை கணக்கிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் 2மில்லி.லிட்டர் தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்தார்கள். சிலர் நேராக நாக்கில் விடச்சொன்னார்கள். சில குட்டி பாட்டில்களில் அந்த 1 சொட்டு நீரை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

இதையெல்லாம் பார்த்த இந்திரனுக்கு பகீர் என்று இருந்தது. ராக்கெட் இருந்த திசைக்கு ஓடினான். நல்லவேளை ராக்கெட் அங்கேயே தான் இருந்தது. பைலட் சிரித்தபடி காத்திருந்தார்.

“ஏன் சார்?”

“இங்கயும் தண்ணி நிறைய இருந்துச்சு, யாரும் ஒழுங்கா பயன்படுத்தல. அது தான் நிலைமை இப்படி இருக்கு”

சீக்கிரம் இந்தியாவுக்கு ராக்கெட் விடுங்க என்றான் இந்திரன்.

புதன், 21 மார்ச், 2018


Sivakumar Kumar photos — feeling happy in Papanasam.

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!..அன்புடன் சிவக்குமார் ..9944066681...வாட்ஸாப்ப் எண்


எனது உலகம் .....🌷🌷🌷🌷

இன்று முதல் ...எனது உலகம் ..என்ற தலைப்பில் ..எனது வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சி ...வீழ்ச்சி ...இரண்டு பிரிவுகளாக பிரித்து உள்ளேன் ..அதாவது கிறிஸ்து பிறப்பு முன் ..கிறிஸ்து பிறப்புக்கு பின் என்ற வகையில் ...எனது திருமணத்துக்கு முன் ...திருமணத்திற்கு பின் ..என்ற வகையில் பிரித்து உள்ளேன் ...இதை கடந்த 5 வருடங்களாக எழுதி ...அதை எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் .உரிய நண்பர்கள் மூலம் ...திரைப்பட இயக்குனர் ...தொலைக்காட்சி இயக்குனர் ...எனது நூலை வெளியிட இருக்கும் ..நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் ...திரைப்படம் ..நாடகம் .நூல் ...எப்பொழுது வரும் என்று நேரம் வரும்பொழுது சொல்லுகிறேன் ...நூலை எழுதுவதற்கு ..நான் பட்ட கஷ்டங்கள் ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..என் நண்பர்கள் ..நன்றி கடன் பட்டிருக்கிறேன் ..எனது உலகம் முழுவதும் ..என்னுடைய ஷ்யாமின் எதிர் கால நலனுக்கு ..அவரின் கல்விக்கு ..அவனுடைய வாழ்வாதாரத்தக்கு ...ஒரு டிரஸ்ட் மூலம் ..என் வாழ்க்கையில் கூட இருந்த வழக்கறிஞர்கள் ..என் நண்பர்கள் ..சில நமது சொந்தங்களிடம் தெரிவித்து உள்ளேன் ..அதை சட்ட பாதுகாப்பு மூலம் நான் உலகில் இல்லாதபொழுது ..ஷ்யாமிடம் விவரம் தெரியும்பொழுது அவர்க்கு தெரிவித்து ..வாழ்க்கையில் கஷ்டப்படாமல் ..வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த சிரமம் இல்லாமல் முன்னேறவேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாடை செய்து உள்ளேன் ..

இதில் கல்வி ..நமது பண்பாடு ..கலாச்சாரம் ..வகையில் பிரித்து உள்ளேன் ..நமது நண்பர்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் ..நம் புது சொந்தம் என்று பழைய சொந்தம் என்றோ ..நம்முடன் பழகும் போது கண்ணை மூடிக்கொண்டு நம்பி வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது ...தற்காலத்தில் நம்மில் நெருங்கிய வாழ்வோடு ..நம் குழந்தை செல்வங்கொலோடு ..வாழ்வின் முன்னேற உதவிய சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம் ...அதைவிட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம் ...வாழ்வின் கடைசியில் போகும்போது
கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம் ..எந்த அளவிற்கு அவர்களுக்கு ஊதவியிருக்கிறோம் என்று..சேர்த்த வைத்த பாட்டன் ..அப்பா சொத்துக்கள்  அழித்து விடலாம் ...நட்புடன் உதவிய சொந்தங்கள் .நண்பர்கள் நீங்கள் காணலாம் ..ஏன் திடீர் என்று ..எனது உலகம் ..தொடரை எழுதவற்கு என்ன காரணம் என்று கேக்கலாம் ...நேற்று சிறு பொறி ஒன்று ஷ்யாமை பற்றி பதிவு வந்தவுடன் ...தூங்கிருந்த இருந்த சிங்கத்தை கர்ஜினையுடன் எழவேண்டி சூழலை ஏற்படுத்தி விட்டது ..அந்த நபருக்கு ஆயிரம் நன்றிகள் ..என் வேலை ..என் பெற்றோர் ..எனது மாப்பிள்ளைகள் ..எனது அண்ணன்கள்,எனது நண்பர்கள் ,சமுதாய சிந்தனைகள் ..அமைதியாக ஆழ்கடலின் அலையில்லாமல் இருந்தது ..சுனாமியாக ..எரிமலையாக ..தொடராக எழுத வேண்டிய சூழ்நிலை ..இந்த தொடரை ..விழிப்புணர்வு செய்தியாக படித்து பயன் பெறவேண்டியது...என்று இதை எழுத ஆரம்பிக்கிறேன் ....என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்  👍🌷🌷🌷🌷



திங்கள், 19 மார்ச், 2018



நாளை (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.
என் ஷியாம் செல்ல குட்டி ..தூங்குவதற்கு முன் ...ஷ்யாமுடன் பிறந்த 2 வருடங்களிருந்து கவனிக்கும்கேட்க்கும் திறன் எல்லா குழந்தைகளுக்கு வருவதுபோல் ...கூரிய திறன் மூலம் நான் கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் ...அவனுக்கு பிடித்த ராஜா ராணி ,அம்புலிமாமா கதைகள் ..பாட்டி வடை சுட்ட கதைகள் இரவு தூங்காவதற்கு முன் சொல்லிக்கொண்டு பழக்கப்படுத்தி இருந்தேன் ...பள்ளியில் சேர்ந்த வுடன் ..இன்று வகுப்பில் நடந்த நிகழ்வுகள் ..ஆசிரியர் சொல்லி கொடுத்தா கதைகள் ...சகா நண்பர்கள் சொன்ன செய்திகள் ...அவருடைய பாணியில் பேசி தூங்கவைப்பேன் ..அதுவும் அவருக்கு வளர்ந்த 6 வயது முடிய கதைகள் கேட்டு என் தோளில் கட்டிபிடித்தி தூங்கியவன் என் செல்ல ஷியாம் குட்டி ...
கனவு.........(ஷ்யாம் அப்பா ....)
கண்ணு தூங்கிட்டியாப்பா.....
இன்னும் இல்லப்பா... தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.
கதை கேட்டு தூங்கிய காலமெல்லாம் ...வாழ்வின் வழியை ..கனவை ..எதிர்காலத்தில் கதைகள் சொல்லி தூங்கவைப்போமா .என்று தெரியவில்லை ...ஷியாம் பிறந்த உடுமலை லட்சுமி மருத்துவமனை ..அவன் வளர்ந்த கோவை வடவள்ளி ....என் ஷ்யாமின் நினைவுகள் என்றும் மறைவது இல்லை ...என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண்