புதன், 25 மார்ச், 2020

அன்புள்ள அனிஷ் ...புத்தகம் -ஆசிரியர் நசிமுன்னிஷா

கரைபுரளும் அன்பை மட்டுமே பாரம்பரிய பெருமையாக கருதும் ஒரு பெண்மணி ,அதனை தனது வருங்கால தலைமுறைக்கு கடத்தவேண்டும் என்ற பேரவவில் தன்னுடைய பேரன் அனிஷுக்கு மடல்கள் வரைகிறார் .அஞ்சல் செய்யப்படாத கடிதங்கள் தாம் கிழிபடாதவை ,அஞ்சல் செய்யப்பட்ட கடிதங்கள் கிழித்து தான் படிக்கப்படும் ,படித்து முடித்தபிறகு பலவும் கிழிக்கப்பட்டுவிடும் .இப்படிக்கு காலச் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகாது ,புடம்போட்டு பாதுகாத்து உணர்வகளை வாழையடி வாழையாக வரும் தலைமுறைக்ளுக்கும் கிளறிவிடும் பாசப்பசை ஒட்டிய கடிதங்களை தனது அன்புப்பேரன் அனிஷுக்கு படைத்து காட்டியிருக்கிறார்
எழுத்தாளர் -நசிமுன்னிஷா ..அனிஷ் என்றால் சிநேகிதன் என்று குறிப்பிட்டு சொல்லும் ஆசிரியர் ,அதனை காரணப்பெயராக கருதி அனாவசிய அறிவுரைகள் ஏதுமின்றி தோழமையோடு அளவளாகிறார் ..

இந்த நூல் ..நான்கு தலைமுறை உறவுகளை எங்கும் அறுபடாமல் சின்ன சின்ன இழைகளாக பின்னிக்காட்டும் பாங்கு அருமை ..ஆசிரியர் ...படிக்கச் படிக்கச் ...உறவுமுறைகளை வேகமான வாழக்கை சூழலில்எப்படி  இழந்து கொண்டு இருக்கிறோம் ...என்பதை நினைவூட்டுகிறது ...மறுபடியும் ..வருங்கால தலைமுறைக்கு கொண்டசெல்வது நமது கடமையாகும் ...நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக