சேவையாட்டம்
சேவையாட்டம் - கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது.
பெருமாள் கோவில்
தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .
வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது . தெலுங்கு மொழியில் , தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார் , உறுமி மேளம் இசைக்கும் , ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றி சுற்றி வந்து ஆடுவார் . ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா , திருமணம் போன்ற நிகழ்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் நடைபெறும் . வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடபடுகிறது
திண்டுக்கல் பகுதியில் கம்பளத்து நாயக்கர்களின் பழமை மாறாத நாட்டுப்புற கலையாக "சேவையாட்டம்' உள்ளது. மண்ணின் மரபையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்துவது நாட்டுப்புற கலைகள். இவை பொழுதுபோக்கு, சடங்கியல் நிகழ்வாக ஆடப்படுகின்றன. இவற்றை சிலர் தொழில்முறை ஆட்டமாக ஆடி வருகின்றனர். இந்த வகை ஆட்டங்களுக்கு குறிப்பிட்ட களமோ, அரங்கமோ தேவையில்லை. எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுதந்திரமாக ஆட முடியும். இதில் கம்பளத்து நாயக்கர்கள் தங்களது இனத்திற்கே உரிய "சேவையாட்டம்' ஆடுகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கோலார்பட்டி, விருதலைப்பட்டி, கொம்பேரிபட்டி, கெஜ்ஜிலியம்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, பாபிநாயக்கன்பட்டி பகுதிகளில் வசிக்கின்றனர். சேவையாட்டத்தை கோயில் திருவிழாக்களில் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்திற்காக அவர்கள் விரதமிருக்கின்றனர். கோமாளி போல் வேடமணிந்த ஒருவரும், அவருடன் 7 பேரும் சேர்ந்து ஆடுவர். ஏழு பேரும் இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேல்பகுதியில் சட்டையும் அணிவர். தலையில் ஜரிகைபோட்ட "உருமா' கட்டுகின்றனர். புல்லாங்குழல், சேவைத்தப்பு, ஜெயகண்டி ஆகிய இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்த இசைக்கருவிகள் இசைத்து கொண்டே கலைஞர்கள் வட்டமாகவும், சுழன்றும் ஆடுகின்றனர். துவக்கத்தில் சிறிது நேரம் உருமி "தேவதுந்துமி' இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுகின்றனர். இசைக்கருவிகளின் இசைப்பும், அதற்கேற்ற ஆட்டங்களும் காண்போரை தன்வயப்படுத்துகிறது. இந்த சேவையாட்டம் பழமைமாறாத நாட்டுப்புற கலையாக இன்றும் திகழ்கிறது.வேடசந்தூர் பாபிநாயக்கன்பட்டி பொம்மணசாமி கூறியதாவது: சேவையாட்டம் ஆடும்போது முதலில் நேர் கோட்டில் நிற்போம். சிறிது நேரத்தில் வட்ட வடிவத்திற்கு மாறி ஆடுவோம். கோமாளி வேடமிட்டு ஆடுபவரை கிருஷ்ணராக மதித்து மக்கள் வழிபடுவர். அவரே பாடல்களை பாடி ஒவ்வொரு ஆட்டத்தையும் துவங்கி வைப்பார். ஏனைய ஆட்டக்காரர்கள் அதனையே பின்பாட்டாக பாடுவர். ராமாயண பாடல்களை அதிகளவில் பாடுவோம். வழிபாட்டின்போது இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வோம், என்றார்.
சேவையாட்டம் - கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது.
பெருமாள் கோவில்
தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .
வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது . தெலுங்கு மொழியில் , தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார் , உறுமி மேளம் இசைக்கும் , ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றி சுற்றி வந்து ஆடுவார் . ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா , திருமணம் போன்ற நிகழ்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் நடைபெறும் . வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடபடுகிறது
திண்டுக்கல் பகுதியில் கம்பளத்து நாயக்கர்களின் பழமை மாறாத நாட்டுப்புற கலையாக "சேவையாட்டம்' உள்ளது. மண்ணின் மரபையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்துவது நாட்டுப்புற கலைகள். இவை பொழுதுபோக்கு, சடங்கியல் நிகழ்வாக ஆடப்படுகின்றன. இவற்றை சிலர் தொழில்முறை ஆட்டமாக ஆடி வருகின்றனர். இந்த வகை ஆட்டங்களுக்கு குறிப்பிட்ட களமோ, அரங்கமோ தேவையில்லை. எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுதந்திரமாக ஆட முடியும். இதில் கம்பளத்து நாயக்கர்கள் தங்களது இனத்திற்கே உரிய "சேவையாட்டம்' ஆடுகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கோலார்பட்டி, விருதலைப்பட்டி, கொம்பேரிபட்டி, கெஜ்ஜிலியம்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, பாபிநாயக்கன்பட்டி பகுதிகளில் வசிக்கின்றனர். சேவையாட்டத்தை கோயில் திருவிழாக்களில் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்திற்காக அவர்கள் விரதமிருக்கின்றனர். கோமாளி போல் வேடமணிந்த ஒருவரும், அவருடன் 7 பேரும் சேர்ந்து ஆடுவர். ஏழு பேரும் இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேல்பகுதியில் சட்டையும் அணிவர். தலையில் ஜரிகைபோட்ட "உருமா' கட்டுகின்றனர். புல்லாங்குழல், சேவைத்தப்பு, ஜெயகண்டி ஆகிய இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்த இசைக்கருவிகள் இசைத்து கொண்டே கலைஞர்கள் வட்டமாகவும், சுழன்றும் ஆடுகின்றனர். துவக்கத்தில் சிறிது நேரம் உருமி "தேவதுந்துமி' இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுகின்றனர். இசைக்கருவிகளின் இசைப்பும், அதற்கேற்ற ஆட்டங்களும் காண்போரை தன்வயப்படுத்துகிறது. இந்த சேவையாட்டம் பழமைமாறாத நாட்டுப்புற கலையாக இன்றும் திகழ்கிறது.வேடசந்தூர் பாபிநாயக்கன்பட்டி பொம்மணசாமி கூறியதாவது: சேவையாட்டம் ஆடும்போது முதலில் நேர் கோட்டில் நிற்போம். சிறிது நேரத்தில் வட்ட வடிவத்திற்கு மாறி ஆடுவோம். கோமாளி வேடமிட்டு ஆடுபவரை கிருஷ்ணராக மதித்து மக்கள் வழிபடுவர். அவரே பாடல்களை பாடி ஒவ்வொரு ஆட்டத்தையும் துவங்கி வைப்பார். ஏனைய ஆட்டக்காரர்கள் அதனையே பின்பாட்டாக பாடுவர். ராமாயண பாடல்களை அதிகளவில் பாடுவோம். வழிபாட்டின்போது இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வோம், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக