சர்வதேச பெண்கள் தினம்:
“மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்”.!
இழிவு செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்”.!
...என்று பாடி பெண்மையைக் கொண்டாடினான் யகபுருடன் பாரதி.!
சங்க காலம் முதல் இன்று வரை, பெண்களின் அண்மை இல்லாமல் ஆண்கள் இல்லை.
அன்னையாக ஒரு மழலையை வளர்ப்பதில் தொடங்கி, ஒரு மழலையை பெற்றுத் தந்து, அவனை சான்றோனாக்கும் வரை எல்லாவற்றுக்கும் பெண் துணையின்றி இயலாது.
பெண் என்ற எண் இல்லையென்றால் ஆண் பூஜ்யம் தான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கடவுளே ஒப்புக் கொண்டதாக திருவிளையாடல் புராணம் சொல்கிறது.
அன்பு,நிதானம், சகிப்புத் தன்மை, மன உறுதி, சம்யோஜித புத்தி ஆகிய 5 முக்கிய குணங்களைக் கொண்டிருக்கும் பெண்ணிடமும், ஆண்மை தேவையான சம்யங்களில் வெளிப்படும்.
நல்ல பெண், கெட்ட பெண் என்ற டி.வி. சீரியல் பிரச்சினை எல்லாம் ஒரு புறம் இருக்க, பெண்மை உயர்வானது, பெண்களும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது தான் இந்தப் பகிர்வின் நோக்கம்.
கோபன்ஹேகனில், 1910ம் ஆண்டு நடந்த, சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி பேசப்பட்டு, பின்னர் 1911ல் மீண்டும் விவாதிக்கப்பட்டு, ஆரம்பத்தில், மார்ச் 19ம் தேதி, முதன் முறையாகவும், அதன் அய்ரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, 1913ம் ஆண்டு முதல், அய்க்கிய நாடுகள் சபை ஒப்புதலுடன், மார்ச் 8ம் தேதியை, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.
மேரி க்யூரி,அன்னை தெரசாவில் துவங்கி எத்தனை எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதித்து பெண் இனத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். என்றாலும் எனக்கு பெண்கள் தினம் என்றாலே...
"எட்டும் அறிவினில்
ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண்
என்று கும்மியடி''...
ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காண்
என்று கும்மியடி''...
என்ற மகாகவியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. மிகச் சரியாக கணித்தால்,
இந்த வருடம் 108 ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் என்றும் சொல்லலாம்.
அனைத்து மதிப்பிற்குறிய
தோழிகளுக்கும் ,
சகோதரிகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.
தோழிகளுக்கும் ,
சகோதரிகளுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக