வேலை தேடும்போது வாழ்க்கையினைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவை?
மலரும் நினைவுகள் ...1996.....கோவை ....
கற்றுக் கொண்ட விஷயமுனு சொல்ல முடியாது. அவமானம் பட்டதுனு சொல்லாம் நானும் என் நண்பனும் வேலை தேடி கோயம்புத்தூர் சென்றோம் ஒரு நான்கு ஐந்து கம்பெனிகள் சென்று வேலையில்லாம சோர்ந்து போய் மதிய உணவை பணம் குறைவா இருந்த காரணத்தால் ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு ஊர்க்கு செல்வோம் என்று காந்தி புரம் பஸ்டேண்டுக்கு சென்றோம் செல்லும் வழியில் சில பேர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள் அதை வாங்கி படித்த போது வேலைவாய்ப்பு என்று போடப்பட்டு இருந்தது அதில் இருந்த நம்பர் க்கு கால் செய்தோம் அதில் பேசிய நபர் எங்களை கிராஸ் கட் ரோடு 3 வது வீதிக்கு வர சொன்னார் நாங்கள் இருவரும் சென்றோம்
அந்த ஆபீஸ் ஒரு மாடியில் இருந்தது உள்ளே சென்ற போது ஏரளாமன பெண்கள் இருந்தனர் . அங்கே இருந்த பெண் ஒருவர் எங்க ளை அமர வைத்து பேச தொடங்கினார் . அப்போது தான் என்ன வேலை என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் டெலி காலிங் என்று சொன்னார் .இதில் எப்படி பேசுவது என்பதற்கு உங்களுக்கு பயிற்சி தருவோம் அதற்கு நீங்கள் கட்டணமாக 2000ரூ கட்ட வேண்டும் வேண்டும் என்று அந்த பெண் சொன்னார் உடனே நாங்கள் சுதாரித்து கொண்டோம் இது ஒரு பிராடு கம்பெனி என்று .
எங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லைனு சொன்னோம் அதற்கு அந்த பெண் பரவாயில்லை 500 ரூ இருந்தா கூட கட்டி முன்பதிவு செய்ங்க அந்த பெண் சொன்னார் . எங்க கிட்ட பஸ்க்கு மட்டுமே பணம் இருக்குனு சொன்னோம். கடைசிக்கு ஒரு 100ரூ குடுங்கன்னு சொன்னார்.எங்க கிட்ட பஸ் காச தவிர வேறு எதுவும் இல்லைனு சொன்னதும் நீங்களாம் எதுக்கு டா 100 ரூ கூட இல்லாம வெளிய வரிங்கனு அந்த பொண்ணு எல்லாரும் முன்னாடியும் மரியாதை இல்லாம பேச ஆரம்பிச்சிடுச்சு உங்க கிட்ட இவ்வளோ நேரம் பேசினதே வேஸ்ட் வெளிய போங்கடனு சொல்லி வெளிய அனுப்பிருச்சு. எங்களுக்கு ஒரே அசிங்கமா இருந்துச்சு வெளியே வந்துட்டோம்
அப்போதுதான் புரிஞ்சுது பணம் சம்பாதிக்கவும் பணம் தேவை னு....
2020.......இன்று ...கோவை ..திருப்பூர் ...மாவட்ட ..பல நண்பர்களுக்கே ....வேலை வாய்ப்பு வழங்கி வழிகாட்டியாக .. உள்ளோம் ...
மலரும் நினைவுகள் ...1996.....கோவை ....
கற்றுக் கொண்ட விஷயமுனு சொல்ல முடியாது. அவமானம் பட்டதுனு சொல்லாம் நானும் என் நண்பனும் வேலை தேடி கோயம்புத்தூர் சென்றோம் ஒரு நான்கு ஐந்து கம்பெனிகள் சென்று வேலையில்லாம சோர்ந்து போய் மதிய உணவை பணம் குறைவா இருந்த காரணத்தால் ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு விட்டு ஊர்க்கு செல்வோம் என்று காந்தி புரம் பஸ்டேண்டுக்கு சென்றோம் செல்லும் வழியில் சில பேர் நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள் அதை வாங்கி படித்த போது வேலைவாய்ப்பு என்று போடப்பட்டு இருந்தது அதில் இருந்த நம்பர் க்கு கால் செய்தோம் அதில் பேசிய நபர் எங்களை கிராஸ் கட் ரோடு 3 வது வீதிக்கு வர சொன்னார் நாங்கள் இருவரும் சென்றோம்
அந்த ஆபீஸ் ஒரு மாடியில் இருந்தது உள்ளே சென்ற போது ஏரளாமன பெண்கள் இருந்தனர் . அங்கே இருந்த பெண் ஒருவர் எங்க ளை அமர வைத்து பேச தொடங்கினார் . அப்போது தான் என்ன வேலை என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் டெலி காலிங் என்று சொன்னார் .இதில் எப்படி பேசுவது என்பதற்கு உங்களுக்கு பயிற்சி தருவோம் அதற்கு நீங்கள் கட்டணமாக 2000ரூ கட்ட வேண்டும் வேண்டும் என்று அந்த பெண் சொன்னார் உடனே நாங்கள் சுதாரித்து கொண்டோம் இது ஒரு பிராடு கம்பெனி என்று .
எங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லைனு சொன்னோம் அதற்கு அந்த பெண் பரவாயில்லை 500 ரூ இருந்தா கூட கட்டி முன்பதிவு செய்ங்க அந்த பெண் சொன்னார் . எங்க கிட்ட பஸ்க்கு மட்டுமே பணம் இருக்குனு சொன்னோம். கடைசிக்கு ஒரு 100ரூ குடுங்கன்னு சொன்னார்.எங்க கிட்ட பஸ் காச தவிர வேறு எதுவும் இல்லைனு சொன்னதும் நீங்களாம் எதுக்கு டா 100 ரூ கூட இல்லாம வெளிய வரிங்கனு அந்த பொண்ணு எல்லாரும் முன்னாடியும் மரியாதை இல்லாம பேச ஆரம்பிச்சிடுச்சு உங்க கிட்ட இவ்வளோ நேரம் பேசினதே வேஸ்ட் வெளிய போங்கடனு சொல்லி வெளிய அனுப்பிருச்சு. எங்களுக்கு ஒரே அசிங்கமா இருந்துச்சு வெளியே வந்துட்டோம்
அப்போதுதான் புரிஞ்சுது பணம் சம்பாதிக்கவும் பணம் தேவை னு....
2020.......இன்று ...கோவை ..திருப்பூர் ...மாவட்ட ..பல நண்பர்களுக்கே ....வேலை வாய்ப்பு வழங்கி வழிகாட்டியாக .. உள்ளோம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக