வெள்ளி, 27 டிசம்பர், 2019

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
உயரமான பெண்களுக்கான புடவை: பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும். மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினே ஷன்(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம். அகலமான கரை வைத்த புடவைகள், முப் போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டவை. ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆ டைகளே வேண்டாம்.
புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
உயரமான பெண்களுக்கான புடவை: பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும். மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினே ஷன்(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம். அகலமான கரை வைத்த புடவைகள், முப் போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டவை. ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆ டைகளே வேண்டாம்.
ஒரு பையனும் பெண்ணும் பேசக்கூடிய மிகவும் சுவாரசியமான உரையாடல் என்ன?

அவன் : எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

அவள் : : உன் இஷ்டம்

அவன் : அன்னபூர்ணா ...ஆர்யாஸ் ..அஞ்சப்பர் ..?

அவள் : : போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?

அவன் : அப்போ செட்டிநாடு...?

அவள் : : எனக்கு புடிக்கல..காரமா இருக்கும்

அவன் : ம்ம் கேஎஃப்சி....?

அவள் : : நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

அவன் : அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : படத்துக்கு போலாமா....?

அவள் : : இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...

அவன் : அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

அவள் : : வேணாம்...

அவன் : காஃபி ஷாப்....?

அவள் : : நான் டயட்ல இருக்கேன்...

அவன் : அப்போ வேற என்னதான் செய்யறது....?

அவள் : : நீயே சொல்லு...

அவன் : சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....

அவள் : : என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

அவன் : ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்

அவள் : : நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

அவன் : அப்போ ஆட்டோ..?

அவள் : : வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

அவன் : அப்போ நடந்து போகலாம்..

அவள் : : என்னால முடியாது, எனக்கு பசிக்குது....

அவன் : அப்போ சாப்பிட்டே போவோம்?

அவள் : : உன் இஷ்டம்...

அவன் : ......(மனதிற்குள் நினைப்பது👇👇)

சரியான லூசு கிட்ட மாட்டிக்கிட்டோமே.

🌳மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே, 🌳

அன்பு வணக்கம்.🙏🙏🙏🌳🌳


ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில்  போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.


1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.


2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த  செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும்  கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.


3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.


4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி


5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை  ஊராட்சி அலுவலர்கள் மீது  மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.


6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல்.



உங்களதுதேவையே, 👍எங்களது சேவை ....🙏





மாற்றம் என்பது சொல்,🌱 இது மக்களுக்கான செயல்.🌳


8. நமது கணக்கம்பாளையம் ஊராடசி மிகப்பெரிய ஊராட்சி அந்த அளவிற்கு மிகுந்த வருமானமும் உள்ளஊராட்சி. ஆனால் இந்த ஊராட்சியின் வருமானத்த்திற்குத்தகுந்தாற்போல் வளர்ச்சி இல்லை.


9. ஊராட்சியில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம், சுகாதாராக்குறைபாடு , வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை இது போன்ற ஏராளமான பொதுமக்களுக்கான பிரச்சினைகள் இருக்கின்றது. இதை அறிந்து  பொதுமக்களின் தேவைகளைத் தெரிந்துஉங்களுக்காக உங்களில் ஒருவனாக ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். 


10. ஊராட்சித் தேர்தல் வரும் போகும், ஆனால் ஊராட்சிப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை யார் உணர்ந்து தெரிந்து பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆகவேதான். நூன் இந்த அடிப்படை சிக்கல்களை முழுமையாக உறுதி செய்து முடிப்பேன். இது போன்ற ஏராளமான சிக்கல்கள் நமது ஊராட்சியில்  உள்ளது.



கண்டிப்பாக என்று சொல்லாவிட்டாலும் என்னால் முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு உங்களை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறேன்.



வெற்றி பெற்றால் தலைவராகப் பணியாற்றுவேன். இல்லையென்றால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.



ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பெ.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் மக்கள் பணியாளன் உடுமலை பெ .துரைசாமி .....




Whatsapp  எண் ..94876 60523...👍🌳🌳....உடுமலைப்பேட்டை 

வியாழன், 26 டிசம்பர், 2019

அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளைவிட இந்தியாவின் சம்பளம் சற்று குறைவாக இருக்கக் காரணம் என்ன?

அமெரிக்காவில் பண மதிப்பு ரொம்ப அதிகம். நீங்கள் ஒரு கடைக்கு நூறு டாலர் கொண்டு சென்றால், நிறைய பொருட்கள் வாங்கி விடலாம். ஆனால் நாம் நாட்டில் அப்படி இல்ல பணத்தின் மதிப்பு மிகக் குறைவு.

அதனால் நமக்கு நூறு ரூபாய் என்பது குறைந்த மதிப்பாகத் தெரிகிறது. அதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் பத்தாயிரம் டாலர் வாங்குவது பெரிய தொகையாகவும், நம் நாட்டில் பத்தாயிரம் வாங்குவது குறைவாகவும் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பிறகு நாம் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருப்பதும் தான்.

Sivakumar.V.K----9944066681
(Home Loans,Home Loans To NRIs) 
(வீட்டுக் கடன்கள், என்.ஆர்.ஐ.க்களுக்கான வீட்டுக் கடன்கள்)
வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் ..

எனது மகனின் பிறந்து நாளுக்கு (19-09-2019) எங்கிருந்தோ வாழ்த்து தெரிவித்த எண்ணற்ற நெஞ்சங்களை விட என்னருகில் என் மனதோடு நெருங்கி வந்து உரசிச் சொன்ன வார்த்தைகள் ஓராயிரம் அந்த வார்த்தைகளின் வாடை இன்னும் காயவில்லை வாழ்வாங்கு வாழ வாழ்த்திய கவிஞர் தனுஷ் வாழ்த்தும் முன் குழந்தையின் பெயரையும் குழந்தையின் தன்மையையும் கேட்டறிந்து பேசும் பேச்சாளன் அணிந்துரையா, வாழ்த்துரையா, தோரண வாயிலா, இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் கவிதை புரிய வேண்டும் புரியாத கவிதை தெரியாது. . கவிதை அதனால்தான் உரைநடையில் கவிதை எழுதினாயோ . . . வார்த்தைகளைக் கூட புரியுமளவுக்கு கவிதை எழுதிய கவிஞனே எங்களின் வரலாற்றுப் பயணத்தில் மட்டும் பாதியில் விட்டுச் செல்ல எப்படி மனம் வந்தது. கண்ணீரால் நனைகின்றேன்.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

செவ்வாய், 24 டிசம்பர், 2019

உங்களதுதேவையே, எங்களது சேவை ....
மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே
மாற்றம் என்பது சொல், இது மக்களுக்கான செயல்.
நமது கணக்கம்பாளையம் ஊராடசி மிகப்பெரிய ஊராட்சி அந்த அளவிற்கு மிகுந்த வருமானமும் உள்ளஊராட்சி. ஆனால் இந்த ஊராட்சியின் வருமானத்த்திற்குத்தகுந்தாற்போல் வளர்ச்சி இல்லை.
ஊராட்சியில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம், சுகாதாராக்குறைபாடு , வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை இது போன்ற ஏராளமான பொதுமக்களுக்கான பிரச்சினைகள் இருக்கின்றது. இதை அறிந்து பொதுமக்களின் தேவைகளைத் தெரிந்துஉங்களுக்காக உங்களில் ஒருவனாக ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
ஊராட்சித் தேர்தல் வரும் போகும், ஆனால் ஊராட்சிப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை யார் உணர்ந்து தெரிந்து பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆகவேதான். நூன் இந்த அடிப்படை சிக்கல்களை முழுமையாக உறுதி செய்து முடிப்பேன். இது போன்ற ஏராளமான சிக்கல்கள் நமது ஊராட்சியில் உள்ளது.

கண்டிப்பாக என்று சொல்லாவிட்டாலும் என்னால் முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு உங்களை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறேன்.

வெற்றி பெற்றால் தலைவராகப் பணியாற்றுவேன். இல்லையென்றால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பெ.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை பெ .துரைசாமி .....
தொடர்பு எண் ..94876 60523..
குழந்தைகள் அம்மா அப்பாவை அன்பினால் பெயர் சொல்லி அழைக்கலாமா?

என் அம்மாவை நான் ஒருபோதும் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.

அம்மா என்று அழைப்பது பெரும்பாலும் இல்லை.

நானும் அவ்வாறு முயற்சித்து பார்த்துள்ளேன், என்னால் அப்படி அழைக்க இயலவில்லை.

அதை பார்த்து, என்னுடைய மகனும் என்னை பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டேன். ஆனாலும் என்னை சிவா என்றே அழைப்பான் ..மாமனார் ,மாமியார், அப்படியெல்லாம் சொல்லி தராதே, பெரியவர்களை மரியாதையாய் தான் பேச வேண்டும் என்றார்கள். ஆனால்  என்னை சிவா என்று  என அழைப்பதைக் கேட்டு பெயர் சொல்லி கூப்பிட பழகி விட்டான். ஏன் என்றால்  என் மனைவி ,என்னை சிறு வயதில் இருந்தே சிவா என்று அழைத்து பழகியாதலால் ..



நான் ஷியாம்  செல்லம் என்றால், சிவா  செல்லம் என்று என்னை  கொஞ்சுவான்.

ஷியாம் ..என் மனைவியை  அம்மா, மம்மி, மம்மா(ஜெர்மன்),மாம் என்று அழைப்பான். அப்போதெல்லாம் விட பெயர் சொல்லி அழைக்கும் போது மழலை மொழியின் கொஞ்சல் சற்றும் அதிகமாக ரசிக்கும் படியாக இருக்கும்.

எனவே அம்மா, அப்பா, உறவுகளை பெயரிட்டு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்தவரை அப்படி அழைக்காமல் நாம் தான் பழக்க வேண்டும். ஒருவேளை வேற்றாருக்குபெயரிட்டு அழைப்பது அவருக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019

மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே,
அன்பு வணக்கம்.
ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில் போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.
2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும் கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.
3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.
4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி
5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை ஊராட்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல். ஏதிர்வரும் டிசம்பர் 30 ஆம்நாள் நடைபெறும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பn.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை துரைசாமி ...
Whatsapp எண் ..94876 60523...

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அப்பாவின் மலரும் நினைவுகள் ...சினிமா பாட்டு புஸ்தகம் .......

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள்.  முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்க” என்று முடித்து இருப்பார்கள். இது  மறக்க முடியாத வாசகம்.

பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள்.✍🏼🌹

வியாழன், 19 டிசம்பர், 2019

சந்தேகமில்லாமல் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான நபராக இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்ல முடியுமா?

சந்தேகமில்லாமல் நிச்சயமாக நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் காரணங்கள் பல

நான் என்னுடைய வருமானத்தை மீறி செலவு செய்தது இல்லை

கலைஞர் அவர்கள் கூறியது போல் என்னுடைய உயரம் எனக்கு தெரியும்

நண்பர்கள் ஆகட்டும் உறவினர்கள் ஆகட்டும் ஒரு எல்லை தாண்டி யாருடனும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது இல்லை

நான் நானாகத்தான் இருக்கிறேன்

வருடத்திற்கு இரண்டு லிருந்து ஐந்து முறை நண்பர்களுடன்  பல்வேறு  நகரங்களுக்கு சென்று வருகிறேன்.

என்னுடைய வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்ததில்லை.


நான் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. பொய் கூறியதில்லை. பத்து வருடம் கழித்து நடக்கப்போகும் நிகழ்ச்சிக்காக இன்றே நான் தயாராக விரும்பவில்லை. இதன் பொருள் எதிர்காலத்திற்காக நான் நிகழ்காலத்தை இழக்க விரும்பவில்லை.

அதற்காக நான் சேமிக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். என்னுடைய வருமானத்தில் 10% சேமிப்பிற்காக சென்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நான் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே,சொந்தங்களே . வாழ்க்கை மிகவும் சுலபம் எளிது. எனக்கு என்னவோ நாம்தான் அதனை கஷ்டப்படுத்தி கொள்கிறோமோ என்று தோன்றுகிறது

புதன், 18 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

ஒரு மாறுதலுக்கு நல்ல விஷயங்களை சொல்கிறேன்.

(1) வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவரை கண்டுகொள்ளாமல் நம் வேலையை நாம் சிறப்பாக செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

(2) செய்த வேலையையே பல நாட்கள் செய்து கொண்டு இருக்காமல் புதிதாக கற்றுக்கொண்டால் பிரகாசமான எதிர் காலம் உண்டு

(3) உங்கள் அரிசியில் உங்கள் பெயர் உள்ளது என்பது போல உங்கள் ரேட்டிங்கில் உங்கள் பெயர் உள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது

(4) நீங்கள் செய்யும் வேலையில் உங்கள் கஸ்டமர் எவ்வாறு பயன் அடைகிறார், இதை நம் வாழ்க்கைக்கு எவ்வாறு நாம் அப்ளை செய்து பார்க்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தால் 'வேற லெவலில்' இருக்கலாம்.

(5) ஆண் - பெண், முதியவர் - இளையவர், புதியவர் - பழையவர் என்ற பேதம் இல்லாமல் அனைவரையும் மரியாதையுடன் பெயர் சொல்லி அழைக்கலாம்.

(6) அருமையான வாடிக்கையாளர்களை சந்திக்க  நிறைய அதிர்ஷ்டமும் ஒரு அளவுக்கு பேசும் திறமையும் இருந்தால் போதும்.

(7) தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள செல்ஃப் எவலுவேஷன் என்ற அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இதை வெறும் பேருக்கு செய்யாமல் சீரியஸ் ஆக செய்து பார்த்தல் நல்ல பலனைக் கொடுக்கும்

(8) எப்போதுமே ஒரு தாகத்தோடு எதையாவது படித்துக்கொண்டே இருக்க இந்த புதிய டெக்னாலஜி டிமாண்ட் உதவுகிறது. இல்லையேல் காலம் முழுக்க ஒரே மாதிரி வேலை செய்து அலுத்து விடும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு கூறும் மிக சிறந்த அறிவுரைகள் என்ன?

மூவெட்டில் மணம் காணத் தயாராவது நல்லது, என நாலெட்டில் திருமணமானவன் சொல்கிறேன்.

இருமனம் இணைய நிறைய விட்டு கொடுக்க வேண்டும் …

உனக்கு மட்டும் தான் நிறையத் தெரியுமென அகம்பவமாய் இருக்கக் கூடாது.

உன் பலமும் துணையின் பலவீனமும் சேர்ந்துதான் உங்கள் குடும்ப பலம். அதே போலத்தான் உன் பலவீனத்தை உன் துணையின் பலம் கொண்டு நிரப்ப முடியும் என ஆணித்தரமாய் நம்புக..

சண்டையிடத் தெரியுமுன் சமாதனமாய் போகப் பழக தெரியனும்…

மற்றவர் முன் துணையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கேலி செய்வது கூடாது…

அவரவர் பலத்தையும், பலவீனத்தையும் சுட்டிக் காட்டாமல், அப்பிடியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

குறிப்பாக ego வை மியூட் பண்ண பழகுங்கள்; அதிலிருந்து சுத்தமா வெளியே வந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

அவரவர் space ஐ மதிக்க பழகுங்கள்; துணைவர்களின் உறவினர், நட்பு வட்டாரங்களில் இணைந்திருக்க. பழகுங்கள்.

துணைவர்களின் carrierல் முன்னேற்றம், இலட்சியங்களை அடைய ஊக்கப் படுத்த வேண்டும்; உறுதுணையாக இருக்க வேண்டும்.

தோல்விகளால் துவளாது இருக்க உடனிருந்து ஆறுதல் படுத்த வேண்டும்.

நிறைய செவி மடுக்க வேண்டும்.

நல்ல விஷயங்களைப் பாரட்டத் தெரிய வேண்டும்.

அடிக்கடி குடும்பத்துடன் கூடி மகிழ வேண்டும்…

இதெற்கெல்லாம் தயாராயிருந்தால் போதும்…வாழ்ந்து பாருங்கள்…வாழ்த்துக்கள் ..

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பெயர் ..சிவக்குமார் -9944066681
பட்டய படிப்பு ...வியாபார மேலாண்மை (BBM )
வயது :46
குழந்தை :மகன் (ஒன்னு மட்டும் )
தொழில் : டிவிஎஸ் குழமத்தில் ..மேலாளர் (உடுமலை .பொள்ளாச்சி ..கோவை )
வசிப்பிடம் :உடுமலைப்பேட்டை
வகிக்கும் பொறுப்புகள் :கம்பள விருட்சம் அறக்கட்டளை -தலைவர் (மூன்று வருடங்கள் ),உடுமலை நூலக வாசகர்வட்ட துணை தலைவர் .
ஆர்வம் :பொது தளத்தில் சமூக செயல்பாடு ..கம்பள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ..

.படித்த சமுதாய தம்பிக்கும் ,மாப்பிளைகளுக்கும் ..நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ..தொழில் தொடங்கவதற்கு பயனுள்ள வியாபார செய்திகளை கடந்து 10 வருடங்களாக பகிர்ந்து கொண்டு உள்ளேன்

ஐந்து வருடங்கள் களப்பணி செய்து ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற வரலாற்று நூலை ..தளி எத்தலப்பர் (தளி பாளையப்பட்டு நூலை வெளியிட்டு இருக்கிறோம் )


வியாழன், 12 டிசம்பர், 2019

2020இல் நீங்கள் ஏற்கவிருக்கும் தீர்மானங்கள் (Resolutions) என்னென்ன?

செய்யும் செயலை தொடர்ச்சியாக செய்வது. (consistency)

என் செயல் தொடர்பான பிறர் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைப்பது.


எனது அலுவுலக விற்பனை திறனை நிகழ்கால ..எதிர்கால ..திறன்களை மேம்படுத்துவது .. நிலைப்படுத்துவது.

சொந்தங்களுடன் பேச கூச்ச சுபாவத்தை குறைப்பது.

கம்பள விருட்சம் அறக்கட்டளையை  எதிர்கால சிறு ..சிறு திட்டங்கள்  கல்வி .பொருளாதார மூலம் மேம்படுத்துவது ..தனியார் துறை ,அரசு துறைகள் மூலம் நல திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவது .

ஆளுமை மிக்க நண்பர்கள் ,மூலமாக சொந்தங்களுடன் ..வருங்கால தலைமுறையினருக்கு பயனுள்ள செய்திகளை பகிர்வது ..

இவை அனைத்தும் எனக்குள் இருக்கும் தீர்மானங்கள் ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681....

புதன், 11 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

என் வாழ்க்கை அதிகமாக கார்ப்பரேட் உலகில் சஞ்சரித்து , பின்பு மறு வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கற்ற பாடங்கள் பற்பல. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து , சுயமாக சிந்தித்து , தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். இதை பள்ளிக்கூடத்தில் நீங்கள் படிக்க முடியாது.


நீங்கள் நன்றாக உழைத்தாலும், உயர்வு என்பது ஏணி மாதிரி. எற நினைப்பார்கள். பாதி தூரம் சென்றவுடன், கீழிருந்து யாராவது இழத்து விடுவார்கள்.இது தான் நண்டு வித்தை (Crab Technique). இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்: நீங்கள் ஒரு பாத்திரத்தில் எத்தனை நண்டுகளை போட்டு, மூடாமல் தைரியமாக வைக்கலாம் . எந்த நண்டும் வெளியே போகாது. எந்த நண்டு மேலே ஏறினாலும், கீழே உள்ள நண்டு அதை பிடித்து இழுக்கும். இதை தான் நாம் கார்பரேட் உலகில் காண்பது.
நம் சுயமரியாதையை விற்று, மேலே உயரலாம். நீங்கள் சுயமரியாதை உள்ளவர்கள் என்றால் மிகவும் கடினம் தான்.

நேரம் காலம் பார்த்தால், நமக்கு, பாஸ் பார்வையில் கருணை கிடைக்காது. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

நிறைய காலங்கள் ஒரே கம்பெனியில் கழிக்கக் கூடாது. அப்படி உழைக்க , வேலை பார்க்க வேண்டும் என்றால் , மேலே சொன்ன பாய்ன்ட் எண் 2ஐ பார்க்கவும்.

நாம் நன்றாக உழைக்கும் போது, நிறைய சிங்கம், புலி, ஓநாய்களை சந்திக்க வேண்டும். இதில் மேலே சொன்ன பாய்ன்ட் எண் 1ஐ பார்க்கவும்.

நல்ல பாஸ் கிடைத்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நான் அப்படி ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேலைபார்க்கும் கம்பெனியில் நல்ல பாஸ் கிடைக்கா விட்டால், வேறொரு கம்பெனியை தேடுங்கள்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம்.

உங்கள் திறன்களை நன்றாக வளர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வின் எல்லை வரை மிகவும் உதவும்.

அலுவலகத்தில் (gossip) என்கின்ற கிசுகிசுவை விட்டும் நீங்கள் விலகி இருங்கள். உங்களுடைய பாஸ் (boss) நிறைய ஒற்றர்களை நியமித்து இருப்பார். சில பேர் உங்களிடம் வந்து, பேச்சு கொடுத்து உங்களை உள் வாங்குவார். நீங்கள் யாரிடமும் உங்கள் சொந்த மற்றும் அலுவலக விஷயங்களில் நீங்கள் அனுபவிக்கின்ற எதிர்மறை (negative) மற்றும் பச்சாதாபங்களை என்றுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது. கவனம் தேவை.



இது உங்களுக்கு நன்றாக உதவும் என்று நம்புகிறேன். 👍😍🌱✒📚📚📚

செவ்வாய், 10 டிசம்பர், 2019

எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?


வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத ம மகன்  இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

அப்படி எனக்கு இருப்பதால் எழுத முடிகின்றது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவப் பாடமாக எதனைச் சொல்வீர்கள்?

வாழ்க்கையே ஒரு பாடம் தானேங்க .அதுலே படிக்க ஆயிரம் விஷயம் இருக்கு .நான் கற்று கொண்டவை ஏராளம் ,இன்னும் கற்றுகொண்டேயிருக்கிறேன் .ரெண்டு விஷயம் நான் முக்கியமா கற்று கொண்டவை .

மற்றவர் பற்றி அவரில்லாத நேரத்தில் தவறாகவோ ,ஏன் அவர் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை இன்னொருவரிடம் மறந்தேனும் பகிரக்கூடாது .நான் கொஞ்சம்உளறு வாயி .24 வருடங்களுக்கு முன் க ல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த போது விளையாட்டாக நண்பர்களிடம் எனக்கு மற்றொருவர் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொண்டேன் .ஆனால் அது கடைசியில் முழுப்பழியும் என்மேல் சாட்ட பட்டபோதே உணர்ந்தேன் ,வெளுப்பதெல்லாம் பாலல்ல என்று .அன்றிலிருந்து எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்வதை தவிர்த்தேன் .இன்னொருவர் பற்றி அவரிலில்லாத சமயத்தில் பேசுவது துரோகம் என்பதை கற்று கொண்டேன் .அதே நேரம் வேற யாரும் நம்ம பின்னாடி பேசுறாங்கன்னு தெரிஞ்சுச்சுனா ,நம்மள பத்தி பேசுறதால அவங்களுக்கு சந்தோசம் னா நமக்கு பெருமை தானேனு பல்ல காட்டிகிட்டே அந்த இடத்தை கடக்குறது தான் வாழ்க்கையின் அடிப்படை அனுபவம் .


எனக்கு எந்த ஒரு விஷயத்தையும் /நிகழ்வையும் எதிர்மறையாகவே எதிர்நோக்கும் கெட்ட பழக்கம் .எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்மறையாக சிந்திக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கே பாதிப்பு .சின்ன சின்ன விஷயங்களை நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்து ,இப்பொழுது பெரிய விஷயங்களையும் நேர்மறையாக எதிர்நோக்கும் ஆற்றல் வந்துவிட்டது என்று நம்புகின்றேன் (இப்போ யாராவது கமெண்ட் பக்கத்திலே போய் செம்மையா கழுவி ஊத்துறப்பவும் அத சிரிச்சிட்டு அதுக்கும் ஒரு ஆதரவு வாக்கை அள்ளி போட்டுடீங்கனு வையுங்க அம்புட்டு தான் ,நீங்க ஒரு பெஸ்ட்  பெர்சன் னு மார்தட்டிக்கலாம் ).
கணவன் மனைவி பிரிவினைக்கு (எல்லா வயதிலும்) அடிப்படையில் எது காரணம்?

பல காரணங்கள். எதையுமே சகிக்க முடியாத நிலையில் பிரிவினை தான் வழி. கூடவே இருந்து தினமும் சண்டை போடுவதை விட, தனித்து இருத்தல் மேலானது. மன அமைதியை கொடுக்க கூடியது.

ஒரு விசயத்தில் கூட விட்டு கொடுக்காமல் இருப்பது. உ.ம். கணவரின்/மனைவியின் குடும்பம் பற்றிய கேவல சொற்தொடர்கள். இது வளர்ந்து, இரண்டு குடும்பங்கள் இடையில் பெரிய சண்டையில் முடிவது. இதில் ஒருவர் மிக பணம் வாய்ந்தவராக இருந்தால் உடனடி பிரிவினை தான்.

தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி மன அழுத்தம் ஏற்படுத்துவது. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது. காட்டு கத்து கத்துவது. குடும்ப வன்முறை. அடிக்க ஆரம்பித்து விட்டால் அது நிற்காது. கண்டிப்பாக தொடரும்.

வேறு பெண்ணுடன்/ ஆணுடன் தொடர்பு. இது தான் மிக முக்கியமான காரணம். இது வெளியூர்களில்  நடந்தால் கொடுமையிலும் கொடுமை.

மிக கடுமையான குடிப்பழக்கம். சிலர் காலையிலேயே குடிக்கிறார்கள். இவர்களுடன் வாழ்க்கை எப்படி நடத்துவது? நாம் ஊறுகாய் ஆகிவிடுவோம்.

சைக்கோ போன்ற மனநிலை. ஆண்டி" இந்தியனாக இருப்பது. போலீஸ் வேலை செய்வது.

கடுமையான சந்தேக புத்தி. ஏற்கனவே இருந்த காதலை போஸ்ட் மர்டம் செய்வது.

இருவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு விருப்பம் ஒன்றில் கூட இல்லாதது. நேரத்தை சேர்ந்து செலவிட மறுப்பது. மரியாதை குறைவாக நடத்துவது.

குடும்பத்தில் இருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேறு ஒருவர் உள்ளே புகுவது.

எதிர்பார்த்த அளவிற்கு காதல் இல்லாதது. தாம்பத்திய வாழ்வில் ஒருவருக்கு மட்டும் விருப்பம் இல்லாதது. Physical need rejection by anyone.

இதை எல்லாம் மீறி, குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழும் ஆண்/பெண் இருவரையும் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. Marriage is not for all.....
உங்கள் அன்னையிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?

நானும் என் அம்மாவும்☝️☝️….

என் அன்னையிடம் எனக்கு மிகவும் பிடித்தது,

1.கடன் இல்லா வாழ்க்கை:என் அம்மாவிற்கு யாரிடமும் கடன் வாங்குவது சுத்தமாக பிடிக்காது, வேறு வழியின்றி வாங்கி இருந்தால் அதனை திருப்பி கொடுக்கும் வரை அவர்கள் மனம் அமைதி பெறாது.


அவர்களின் எல்லையற்ற அன்பு: நான் கொஞ்சம் சுயநலம் பிடித்தவன்(தற்பொழுது பொதுநலம் மட்டுமே ), குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் வைத்து விடுவேன், இட்லி,தோசையை கண்டால் கோபம் வந்து தொட மாட்டேன், டேய் ஒரு நாள் பொறுத்துகொடா என்பார்கள், நானோ முடியவே முடியாது என்பேன், கல் நெஞ்சகாரன் இறங்கிவரானானு பாரு என்று சொல்லிக்கொண்டு பெற்ற மகன் சாப்பிடாமல் படுத்தால் அவர்கள் சும்மா விடுவார்களா, எனக்குன்னு பிடித்ததை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.

 அவர்கள் வளர்ப்பினில் நான் இது வரையிலும் அவர்களை போல நானும் மூன்று வருடங்கள் கடன் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் மேல் நம்பிக்கை அதிகம் வைத்ததால் என்னவோ தெரியவில்லை எனக்கு புகை பிடிக்கும் பழக்கம்,பாக்கு போன்றவற்றை பழகாமல் இருந்து விட்டேன் அதற்கு காரணம் நான் இல்லை என் அம்மா இப்போது வரை என் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே. எனக்கு அதனை உட்கொள்ளும் வாய்ப்பு நிறைய கிடைத்து இருந்தாலும் நான் அதில் சிக்கவில்லை.

என் அம்மா கொஞ்சம் இல்லை ரொம்ப சென்சிட்டிவ் டைப்…சின்ன விஷயத்துக்கு கூட  உள்ளுக்குள் புலம்பி கொண்டும் இருப்பார்கள், இப்போது நான் என் அம்மாவை விட்டு தனியாக கோவையில்,சென்னையில் இருந்தபொழுது . என்னை கேட்க ஆளு இல்லை,என்னை கண்காணிக்கவும் ஆளு இல்லை ,தீய பழக்கம், தீய வழியில் செல்லும் வாய்ப்பு நிறைய உண்டு எனக்கு ஆனாலும் அவ்வாறு எண்ணம் வரும் போது எல்லாம் ஏன் அம்மாவின் முகம் வந்து போகும்.அவ்ளோதான் அப்படியே அந்த காரியத்தை நினைக்கும் எண்ணம் கூட வராத அளவுக்கு அவர்கள் நம்பிக்கை மற்றும் பாசம் என்னை கட்டி போட்டு காத்து கொண்டு இருக்கிறது. அவர்களை கஷ்டபட வைக்க கூடாது என்பதற்காக நானும் விட்டுக்கொடுத்து விடுவேன்.

சுயநலமிக்க இந்த உலகில், சுயநலம் பார்க்காமல் ,தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் தன் பிள்ளை,கணவன் என்று பிறருக்காக வாழும் தெய்வம் #அம்மா# மட்டுமே♥️♥️♥️.


என் பதில் வாசிக்கையில் என்னை பற்றி தற்பெருமை கூறுவது போல் இருக்கும், ஆனால் உண்மையில் நான் இப்படி இருக்க காரணம் என் அம்மா என் மீது வைத்த நம்பிக்கை என்று சொல்ல தான்.
 உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின்
குடும்பவிழா ...08-12-2019...ஞாயிறு ....


இன்று நடைபெற்ற உடுமலைப்பேட்டை -கணியூர்  K .P .செந்தில்குமார் -K ஜெயந்தி  அவர்களின் குழந்தைச்செல்வம் S .J .சஞ்சிதா -பூப்புநன்னீராட்டு விழா -பாலப்பம்பட்டி செல்வ விக்னேஷ் திருமணமண்டபத்தில் நடை பெற்றது ..நீண்ட நாட்கள் சந்திக்க வேண்டிய போடி ..சொந்தம் கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்தது, அதுவும் கரப்பாடி சொந்தங்களுடன் கார்த்திகேயன் மாப்பிள்ளையுடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..வாட்ஸ்ஆப் செய்திகள் அருமையாகவும் இருப்பதாக கல்யாணசுந்தரம் அவர்களுடன் மகிழ்ச்சியை என்னிடம் பரிமாறிக்கொண்டார் ..இவரின் அப்பா ..தாத்தா அவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி .ஆச்சிரியம் கலந்த செய்திகள் பரிமாறிக்கொண்டோம் ..நன்றி ..My   Relative  வாட்ஸாப்ப் குழுவில் இருக்கும் நம் சொந்தம் மதுரை ராதாகிருஷ்ணன் தம்பியை சந்தித்து அருமையான நிகழ்வு..இன்றைய நிகழ்வில் புது சொந்தங்களை  பார்த்து அறிமுக படித்துக்கொண்டதும் செய்திகளை பரிமாறிக்கொண்டது மிக்க மகிழ்ச்சி ..தொடரும் புது சொந்தங்கள் நட்புகள் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681 

சனி, 7 டிசம்பர், 2019

🌷உடுமலைப்பேட்டை  திருமண வரவேற்பு விழா 🌷

......07-12-2019 -சனிக்கிழமை


இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா அருமை தம்பி.🌱பொறியாளர் 🌳.   R .முரளிதரன் -BE -பொறியாளர்  T .உமாதேவி -B .Tech .,🌱🌳அருணா கல்யாணமண்டபம் -உடுமலைப்பேட்டை

 சொந்தங்கள் ,நண்பர்கள் வட்டம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறக்கொண்டதும் ,அருமையான விருதோம்பல் ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞரின் கைவண்ணத்தில் மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை ..வந்திருந்த புது நண்பர்கள் வட்டம் அருமையான தகவல் பரிமாற்றங்கள் அருமை ...மிக்க மகிழ்ச்சி ..


கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

❤📚✒என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681✒📚🌱
உடுமலைப்பேட்டை கம்பள பொறியாளர்களின் திருமண வரவேற்பு விழா
......07-12-2019 -சனிக்கிழமை


இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா அருமை தம்பி.🌱பொறியாளர் 🌳.குஜ்ஜபொம்முகுலச்செல்வன்    R .முரளிதரன் -BE -பொறியாளர் மங்கராஜ் குலச்செல்வி  T .உமாதேவி -B .Tech .,🌱🌳அருணா கல்யாணமண்டபம் -உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் ,நண்பர்கள் வட்டம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறக்கொண்டதும் ,அருமையான விருதோம்பல் ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞரின் கைவண்ணத்தில் மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை ..வந்திருந்த புது நண்பர்கள் வட்டம் அருமையான தகவல் பரிமாற்றங்கள் அருமை ...மிக்க மகிழ்ச்சி ..



கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வெள்ளி, 6 டிசம்பர், 2019

முழு நேர வேலை செய்து கொண்டு போட்டி தேர்வுக்கு படிப்பது எவ்வாறு?

முழு நேர வேலை செய்து கொண்டு படிப்பது…இந்த கேள்வியை போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒருவர் (யாரு கேட்ப ..நம்ம மாப்பிள தான் இந்த மாதிரி கேள்வி கேட்பாரு    )என்னிடம் கேட்டதே.

இதற்கு முன் இந்திய விமான படை பற்றி ஒரு சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்.

விமான படையில் fighter squadron ல் பணி தொடங்கும் நேரம் காலை நான்கு மணி இது மதியம் 1மணி வரை தொடரும். பின் மாலையில் night flying 6.30 க்கு தொடங்கி இரவு 1மணி வரை தொடரும்.

அடுத்த நாள் மதியம் 1மணிக்கு திரும்பவும் பணி.இடைப்பட்ட நேரத்தில் படித்து ICWA,AIME,BANK PO,CIVIL SERVICE போன்ற கடினமான படிப்பு மற்றும் தேர்வு எழுதி தேர்வான நண்பர்கள் பலர் உள்ளனர். அதேபோல் வருவாய் துறையில் இருந்து கொண்டே I.A.S தேர்வானவர்களும் உண்டு.இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்

When going gets tough ,the tough gets going என்பார்கள்.

இவர்களிடம் கண்ட சில விடயங்களை கீழே தொகுத்து கூறுகிறேன்.

முதலில் நாம் எழுதப்போகும் தேர்வு பற்றி முழு விபரம், அதற்கு தேவையான சரியான புத்தகங்கள் மற்றும் நோட்ஸ் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுதல்.

இரண்டாவது ஒவ்வொருவருக்கும் சில நிறைகளும்,குறைகளும் உண்டு. நம்மிடமுள்ள குறையை குறைக்க என்ன வழி என யோசித்தல்.

எந்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படிக்கும் நேரத்தில் ஊன்றி படித்தல்.Smart study என கூறுவார்கள். இது நபருக்கு நபர் வேறுபடும்.நமக்கு நாமே ஒரு செயல் திட்டம் வைத்துக்கொள்ளுதல்.

தற்போது செய்யும் வேலை 8 மணி நேரம் என்றால் இதில் காலையில் 5 முதல் 8 வரை பின் பயணம் செய்யும் போது செய்தித்தாள் கட்டிங் போன்ற வற்றை படிக்கலாம்.மதிய வேலையில் ஒரு மணிநேரம், பின் இரவில் 2 மணி நேரம் என வேலை நாட்களில் படிக்கலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வரை படிக்க இயலும்.

வருவாய் துறையில் VAO போன்ற பணியில் உங்களுக்கு தனி அலுவலம் இருக்கும் எனவே வாரத்தில் 7 நாட்களும் படிக்கலாம். எனவே அரசுத்துறையில் வேலை அதிகம் இல்லாத பணி இடங்களில் கேட்டு செல்லுதல்.

உங்கள் குடும்பத்தில் பணப்பிரச்சனை அதிகம் இல்லையெனில் விடுப்பு எடுத்து படிப்பது.

எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்கள் தங்களின் Bank PO வேலையை விட்டு விட்டு (Resigned) படித்து ஐ.ஏ.எஸ் ஆனார்கள்.

கடைசியாக கூறுவது கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு,focus உடன் |"அடைந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி "என இருந்தால் வெற்றி நிச்சயம்.


வாழ்த்துக்களுடன் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
திருமண வரவேற்பு ......07-12-2019 -சனிக்கிழமை

அருமை தம்பி..குஜ்ஜபொம்முகுலச்செல்வன்    R .முரளிதரன் -BE -மங்கராஜ் குலச்செல்வி  T .உமாதேவி -B .Tech .,திருமண வாழ்த்துக்கள்

இடம் :அருணா கல்யாணமண்டபம் -தளிரோடு -உடுமலைப்பேட்டை
நேரம் : மாலை  6.00 மணிமுதல் 9.00 மணிவரை ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை  சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வியாழன், 5 டிசம்பர், 2019

திருமதி .மலையம்மாள் கந்தசாமி ....


இன்று காலையில் எரிசினம்பட்டி  ..திருமதி .மலையம்மாள் அவர்களின் இறப்பு நிகழ்வுக்கு சென்றிந்தபொழுது ...எனது மனதில் நிழலாடிய நினைவுகள் (30 வருடங்கள் முன்)  ..என் சிறு வயதில் பள்ளி தேர்வு முடிந்து ..மே மாத விடுமுறையில் என் அப்பாவுடன் .தம்பியுடன் இரண்டு நாள் இவர்கள் வீட்டில் தங்கி ..கந்தசாமி அண்ணாவுடன் ..தம்பிகள் செந்தில் ,சிவா .இவர்களுடன் விடிய விடிய ..பள்ளி கதைகள் பேசி ..காலையில் எதிரில் இருக்கும்  அரசு மருத்துவ மனையில் உலாவந்து ,மலையம்மா அக்கா அளிக்கும் விருந்தோம்பல் இன்றும்  என் மனதில் நிழலாடுகிறது ..கடைசியாக அக்கா அவர்களை பார்த்தது மூன்று  வருடங்களுக்கு முன்  ..என் ஷ்யாமுடன் சென்று பேசிவிட்டு வந்தோம் ..சிறு வயதில் அவர்கள் வீட்டில் விளையாடியது இன்னும் மனதில் பசுமை நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது ..

செவ்வாய், 3 டிசம்பர், 2019

இளம் பெண்களின் பார்வை ஏன் காந்தத்தை போல ஈர்ப்பு சக்தியால் எல்லோரையும் மயக்குகின்றன?

என்ன பாத்து எப்டிண்னே இந்த கேள்விய கேட்டிங்க.. என்று கேட்க தோன்றினாலும்..

கேட்டமைக்கு மிக்க நன்றி பெண்ணின் பார்வை மட்டுமா.. ஒரு பெண்ணே, ஆணின் மொத்த ஈர்ப்பு விசை தானே.. மனித இனம் தழைத்திருக்க இந்த விசையே ஒரே காரணம்.. ஆகையால்..

ஈர்ப்பின் உளவியல் பற்றிய கவர்ச்சிகரமான உண்மைகளை இங்கு கூற விழைகிறேன்..

ஆண்கள், பெண்கள் பால் ஈர்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.. அது நம் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமான காரணிகளிலும் ஒன்று.. அவை.. முடி, முடியின் நிறம், கண் கண்ணின் நிறம், உயரம், வாசனை… ஆம் வாசனை கூட

இப்போது ஈர்ப்பில் சில வியக்கத்தக்க விடயங்களை இங்கு காண்போம்..

வயதான தந்தையர் கொண்ட பெண்கள் பெரும்பாலும் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்

பெரும்பான்மையான பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஒரு பொதுவான ஸ்டீரியோடைப் கருத்து, ஏனெனில் அவர்கள் என்றுமே “அப்பாக்களின் இளவரசிகள்” . இதில் புதிய விடயம் என்னவென்றால்.. வயதான தந்தையருக்குப் பிறந்த பெண்கள் வயதான ஆண்களை கவர்ச்சியாகக் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறிப்பாக, அவர்கள் அதிக முக மடிப்பு மற்றும் குறைவான முடி கொண்ட ஆண்களை கவர்ச்சிகரமானவர்களாகக் கருதுவார்கள். அப்போது 90ஸ் குழந்தைகளுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.. ஹ்ம்ம் பாப்போம்.. இதன் அடிப்படையிலேயே, இளைய தந்தையருக்குப் பிறந்த பெண்கள் இளைய ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

வெவ்வேறு நறுமணங்கள் வெவ்வேறு அளவிலான ஈர்ப்பைத் தூண்டும்

ஈர்ப்பின் உளவியலில் வாசனை ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்பதை நாம் அறிவோம், ஆனால் எந்த வாசனை அதிக ஈர்ப்பாக கருதப்படுகிறது, எது இல்லை என்பதை காண்போம்.. ஒரு சமீப கால ஆய்வில், புதிய அறிமுகமில்லாத ஆண்களின் (காதலன், கணவன் ) வியர்வையில் காணப்படும் இயற்கையான ரசாயனமான ஆண்ட்ரோஸ்டெனோலில் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ​​அதிக வியர்வை இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் ஆண்ட்ரோஸ்டெனோனின் வாசனை இயற்கையான இனச்சேர்க்கைக்கான ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இனி சென்ட் அடிப்பீங்க..

ஆண்கள், மறுபுறம், பெண்களின் ஒட்டுமொத்த வாசனைகளினால் ஈர்க்கப்படலாம்.. அதாவது.. வியர்வை, வாசனை திரவியம், பவுடர் ,சோப் மற்றும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உள்ளதாகவே கண்டறியப்பட்டுள்ளது.. ச்சா.. அவசரப்பட்டு நம்ம நக்கீரரை சிவபெருமான் எரித்திரிக்க தேவையில்லை.. ஆனால் கண்ணீரின் வாசனையால் ஆண்களின் இனச்சேர்க்கை உணர்வு பெருமளவு குறைக்கப்பட்டு , இல்லாமலே போய் விடுவதாக கூறப்படுகிறது. தயவு செய்து அழாதீர்கள் பெண்களே..

எதிர் துருவ ஈர்ப்பு

எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது ஒரு இயற்பியலின் இயல்பான தத்துவமே.. அதுவே உளவியலுக்கு வந்தால் இது தான் நிலைமை.. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே வேறுபட்ட மனித லுகோசைட் ஆன்டிஜென் (HLA complex) கொண்டவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, அடிப்படையில் தன் மரபணு வரைபடத்தை விட , வேறு மரபணு வரைபடம் கொண்ட ஒரு நபரை.. புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால்.. தங்கள் சொந்தத்தை விட, வேறு நபரை.. வேறு மதம், இனம், மொழி இப்படி.. ஒரு நபரின் எச்.எல்.ஏ வளாகம்(HLA complex) நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது என்பதால், இந்த இயல்பே நாம் ஆரோக்கியமான மரபணு விதைகளை உலகம் முழுவதும் விதைக்க வைத்த ஒரு அரும்பெரும் செயல்.. இன்றும் விலங்குகளிடம் இது காணப்படுகிறது.. சொந்ததுல கல்யாணம் பண்ணாதிங்கன்னா எவன் கேக்குரான்.. சரிப்பா.. இன்று நாம் மொழி இனம் மதம் என்று பிரிந்து அல்லது பிரித்து வாழ்கிறோம், முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மக்கள் தம்முடைய தோழர்களை விட வேறுபட்ட மரபணு தோழர்கள் மரபணு வரைபடங்களைக் கொண்டுள்ளனர் என்பதை எவ்வாறு அறிந்தனர் என்று கேட்டால்.. ஆய்வின் படி, நம் உடம்பின் நறுமணத்தின் அடிப்படையில் மட்டுமே நம் மூளை செயல்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஈர்க்கும் குரல்

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு பெண்ணின் குரல் , அவள் இணையுடன் இருக்கும்போது இயல்பாகவே வசீகரிக்கும் தன்மை பெறுகிறது என்று கூறப்படுகிறது.. ஒரு பெண்ணின் குரல் வெவ்வேறு நேரங்களில் மாறுபடும் என்பதும் இணையை கண்டு பேசும்போது இன்னும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆய்வில் ஆண்கள் இந்த உயர்ந்த குரல்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், மிக உயர்ந்த சுருதியை உடைய பெண்ணையே மிகவும் கவர்ச்சிகரமான பெண்ணாக மதிப்பிட்டனர். ( ஆண்ட்ரியா போன்ற bass குரல் பெண்களுக்கு சமர்ப்பணம்)

“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பது இடது காதில் கிசுகிசுக்கும்போது மூளைக்கு அதிக உணர்ச்சி விளைவிக்கும்

உங்களின் காதலை சொல்லி ஒரு நபரை நீங்கள் ஈர்க்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவரது இடது காதில் பேச மறக்காதீர்கள். ஒரு ஆய்வில், உணர்ச்சி தூண்டுதல்கள் இடது காதில் நுழைந்தபோது, ​​நினைவுகூருவதற்கான துல்லியம் அதே தூண்டுதல்கள் வலது காதில் நுழைந்ததை விட 6% அதிகமாகும் என்று கண்டறியப்பட்டது. நல்லா கேட்டுக்கங்க .. இடது காது..

சிவப்பு மிகவும் கவர்ச்சிகரமான நிறம்

சிவப்பு நிறத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சிவப்பு நிற உடை அணியும்போது மிகவும் கவர்ச்சிகரமாகவும், மேலும் பாலியல் ரீதியாகவும் உணரப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. முதல் date க்கு சிவப்பு நிற உடை.. ஓகே..

ஒரு நபரின் இதயத்திற்கு விரைவான வழி அவர்களின்… கண்கள் வழியாகும்

ஒரு ஆய்வில், நீண்டகால கண் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள், பாரம்பரியமான கைகுலுக்கலுடன் அறிமுகப்படுத்தப்படுபவர்களுக்கு மாறாக, அவர்களின் இணைக்கு உறுதியான வலுவான இணைப்புகளை உருவாக்குகிறார்கள், மேலும் பாசத்தை அதிகரிக்கிறார்கள்.. கண்ண மட்டும் தான் பாக்கணும்..

தாடி கவர்ச்சிகரமானவை, ஆனால் எல்லா தாடிகளும் இல்லை

பரிணாம உயிரியலின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள் இயற்கையாகவே தாடி கொண்ட ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகை தாடியும் அல்ல. பெண்கள் நெருக்கமான, அல்லது சிறிய அளவிலான தாடியை கொண்ட ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள் என்று ஆய்வு முடிவு செய்தது. பெண்கள் , இப்படிப்பட்ட ஆண்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல பெற்றோராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதுகின்றனர். குறைந்த கவர்ச்சியாகக் கருதப்படும் ஆண்கள் சுத்தமான வழிக்கப்பட்ட மற்றும் பெரிய, புதர் தாடியுடன் இருந்தவர்களே. புரியுதா.. வாரம் ஒரு வாட்டி ட்ரிம் பண்ணா போதும்..

போதுமா.. புது மாப்பிள ..இப்போ ...த்ருப்தியா..என்ஜாய் ...வாழ்த்துக்கள் ..

தாய்மாமன் மகளை திருமணம் செய்யலாமா?

அத்தை மகள்(ன்),மாமன் மகள்(ன்) திருமணம் தென்னிந்தியாவில் இன்றும் நடைமுறையில் உள்ளது.வட இந்தியர்களும்,மேலை நாட்டினரும் இதைத் தவறாக எண்ணுகிறார்கள்.தந்தையுடன் பிறந்த ஆணின் பிள்ளைகளை சகோதர,சகோதரிகளாகவும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் பிள்ளைகளை முறைப்பையன்(பெண்) ஆகவும் நாம் நினைப்பது அவற்களுக்கு தவறாகத் தெரிகிறது.(தாய் மாமன் பிள்ளைகள் விசயத்திலும் அப்படித்தான்). இவ்வாறு நடக்கும் திருமணங்களை incest திருமணங்கள் என அழைக்கிறார்கள்.


அறிவியல் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.அறிவியல்படி இத்தகைய திருமணங்கள் consanguineous marriages என அழைக்கப்படுகின்றன. இத்தகைய திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளில் சில birth defect களுடன் (உடல் உறுப்புகளிலோ, இதயத்திலோ குறைபாடுகளுடன்) பிறக்கின்றன.சில குழந்தைகள் stillbirth ஆக இறந்தே பிறக்கின்றன.தாங்கள் உண்மையில் விரும்பி திருமணம் செய்ய எண்ணும் படசத்தில் செய்து கொள்ளுங்கள்.

தற்போது scan வசதிகள் முன்னேறி விட்டன.ஏதாவது குறை இருந்தால் கர்ப்பப்பையில் இருக்கும்போதே கண்டுபிடித்து அதற்கான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

ஒரு பெற்றோராக எமது திடீர் உயிரிழப்புகளுக்குப் பின் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் என்ன?

சேமியுங்கள்; சேமியுங்கள். கையில் பணம்/ சம்பளம் வந்ததும் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

உங்கள் எல்லா வங்கிக் கணக்குகள், வைப்பு நிதிகள், கம்பெனி டெபாசிட்டுகள், ஆயுள் காப்பீட்டு கணக்குகள் போன்ற எல்லா சேமிப்புக் கணக்குகளிலும், லாக்கர் கணக்கிலும் உங்கள் வாரிசு யார் என்பதை எழுதிக் கொடுத்து விடுங்கள்.

ஆயுள் காப்பீடு செய்து ஒழுங்காகப் பிரீமியம் கட்டுங்கள்.

சொத்து பத்து உள்ளவராய் இருந்தால் ஒரு உயில் எழுதி, கவரில் போட்டு ஒட்டி, உங்கள் மக்கள் உங்கள் காலத்துக்குப் பிறகு வந்து எடுக்கக் கூடிய உங்கள் உடமைகளோடு கண்ணில் படும்படி வையுங்கள்.


முடிந்தவரை கடன் கிடன் வாங்காமல் காலத்தை ஓட்டுங்கள். பிள்ளைகளுக்கு வைக்க சொத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடனை வைத்துவிட்டுப் போகவேண்டாம்.
பெண் சுதந்திரம் பற்றி தங்௧ௗ் கருத்து என்ன?


விவரிப்பதற்கு முன் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பதிவிட விரும்புகிறேன்.

Independent ஆக வாழ்வது என்பது உண்மையில் முதிர்ச்சி இல்லை. நிறைய பெண்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ரொம்ப independent ஆன பொண்ணு, எனக்கு பிடித்ததை செய்வேன். எங்க வேணா போவேன். யாருக்கும் அடங்க மாட்டேன்.

யார் சொல்லியும் நான் கேட்க வேண்டியது இல்லை. நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் நீங்க யாரு என்னை கேட்பதற்கு?

போயேன் பெருசு, என்று மரியாதை குறைச்சலாக அவர்களின் வயதிற்கு கூட மரியாதை செலுத்தாமல் பேசுவது, இது தான் independent life என்று தவறான எண்ணம் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Interdependent என்பது தான் உண்மையில் முதிர்ச்சி என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த உலகத்தில் ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்கிறோம். ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணின் அன்பையும், அவளின் அரவணைப்பையும் சார்ந்து வாழ்கிறானோ அதே போன்று ஒரு பெண்ணும் ஒரு ஆணின் வலிமையையும், அவனிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பையும் சார்ந்து தான் வாழ முடியும்.

இல்லை ஆண்கள் தேவை இல்லை என்று பெண்களோ, பெண்கள் தேவை இல்லை என்று ஆண்களோ கூற முடியாது.

பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் என்று பேசி பெண்களின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன்.

என் நண்பன் ஒருவனை ஒரு பெண் காதலித்தாள். அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்துவிட்டாள், அது அவனுக்கு தெரிய வந்ததும் அவன் விலக ஆரம்பித்தான். ஒரு நாள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி வரவைத்து அவன் மீது acid ஊற்றி விட்டாள்.

இவன் புகார் செய்தால் என்ன நடக்கும்? என் ரூம்க்கு வந்தான், ரேப் பண்ண பார்த்தான் நான் என் தற்காப்பிற்காக ஊற்றிவிட்டேன் என்பாள்.

இதுவே ஒரு பெண்ணிற்கு நடந்திருக்க வேண்டும். ஒட்டு மொத்த மீடியாவும் அந்த பையன் குடும்பத்தை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.


பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை ஆண்களுக்கு எதிராக பயன்படுத்துவது உண்மையில் பெண் சுதந்திரம் இல்லை.

ஒரு ஆண் செய்யும் அத்தனையையும் என்னால் செய்து காட்ட முடியும் என்று போட்டி போடுவது இல்லை பெண் சுதந்திரம். உங்கள் தனித்துவத்தை உணர்வதே பெண்ணியம்.

ஒரு குடும்பத்தை போஷிப்பதும், குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் ஒரு ஆணின் கடமை என்றால், குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பதும் கணவனுக்கு சரியான ஆலோசனையை வழங்குவதும் பெண்ணின் கடமை.

நம்ம என்ன தெரியுமா நினைச்சிட்டோம். நான் மட்டும் அடிப்படியில் வேலை செய்ய வேண்டும் அவன் மட்டும் வெளியே சுற்றலாமா என்று நினைத்து விட்டோம்.

உண்மையில் சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்கும் பெரிய பொறுப்பு பெண்களின் கையில் குடும்பத்தை பேணுதல் என்னும் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. நாம் அது எனக்கு வேண்டாம் என்று நினைத்ததன் விளைவே இன்றைய பெருவாரியான பிரச்சனைகளுக்குக் காரணம் என்பேன்.

அப்படியானால் பெண்கள் வேலைக்கு செல்வது தவறு, மீண்டும் அடுப்படிக்கு செல்லுங்கள் என்று கூற வருகிறீர்களா என்று கேட்காதீர்கள்.

கண்டிப்பா இல்லை. நாம் நம்முடைய ஸ்தானத்தில் நிற்க வேண்டும் என்பேன். இன்றைக்கு இப்படி பெண்கள் கொதித்தெழுந்ததற்கு காரணமே ஆண்கள் தான் என்பேன்.

நீங்க எங்க தெரியுமா தப்பு பண்ணுனீங்க?

ஆதி காலத்தில் ஆண் வெளியே சென்று வேலை செய்து குடும்பத்தினரின் தேவைகளை சந்திப்பான். பெண்களும் குழந்தைகளை கவனிப்பார்கள். வீட்டை நிர்வகிப்பார்கள். ஆண் பெண் பேதமின்றி வாழ்க்கை அழகாக சென்றது.

அடுத்து வந்த தலைமுறை என்ன பண்ணிட்டாங்க, ஆண்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அங்க தான் ப்ராப்ளம் ஆரம்பித்தது. அலுவலகத்தில் சக ஆண்கள் முன்னிலையில் தன் ஆண்மையை நிரூபிக்கின்றேன் என்ற பெயரில், என் பொண்டாட்டியை எல்லாம் என் கைக்குள்ள வச்சிருக்கேன் என்ற ஒரு தவறான வழிமுறையை கையில் எடுத்து, பெண்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இதை அனுபவித்த பெண்கள், தங்களை அடக்குவதை பொறுக்கக் கூடாமல் படிக்க ஆரம்பித்தார்கள் வெளி உலகிற்கு வந்தார்கள். இன்னைக்கு அடிச்சி தூக்கி peak-ல போய் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களே!

நாம் உயரத்திற்கு வந்து விட்டோம் என்பதால், ஆண்களை குறைவாக மதிப்பீடு செயவதோ, அல்லது அவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செய்யாமல் விடுவதோ, அவர்களுக்கு தேவைப்படும் அன்பு மற்றும் அரவணைப்பை கொடுக்க மறுப்பதோ உண்மையில் பெண்ணியம் இல்லை.

இன்னைக்கு இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆண்கள் ஒரு காலத்தில் நம்மை குறைத்து மதிப்பீடு செய்தார்கள் என்பதற்காக நாம் ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. அதே தவறை நாம் செய்யவே கூடாது.

நிறைய படித்து விட்டோம், பட்டங்கள் வாங்கி விட்டோம் இனி நீ யாரு? நான் ஏன் உனக்கு கீழ்படிய வேண்டும்? உன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று பேசுவது பெண்ணியமே இல்லை.

20 வயசுல இருந்து குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்ச அவனை உட்கார வைத்து எவ்வளவு நாள் இப்படி ஓடிகிட்டே இருப்ப?. ஒரு 6 மாதம் ரெஸ்ட் எடு, உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க அப்புறம் வேலைக்கு போ என்று சொன்னால் அதை இன்றைய நிலையில் சரியான பெண்ணியன் என்பேன்.

நமக்கு மகப்பேறு விடுமுறையாவது கிடைக்கிறது. ஆண்கள் 20ல் ஆரம்பிக்கும் ஓட்டம் 80 வரையில் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இடையில் யாரும் ஒரு 6 மாதம் உட்கார வச்சி சோறு போட மாட்டாங்க. ஒரு மனைவியாக நீங்கள் அதை செய்தால் அது சரியான பெண்ணியம் தான்.

அந்த ஒரு பிரேக் அவனுக்கு தேவை என்பதை அறிந்து ஒரு ஆணின் தேவையை சந்திப்பதில் உடன் நின்று பங்களிப்பது பெண்ணியம்.

நான் சம்பாதிக்கிறேன் உன்கிட்ட ஏன் சொல்லனும்? என் இஷ்டத்துக்கு செலவு செய்வேன் என்பது பெண்ணியம் இல்லை.

மாறாக, ஒரு காஃபி போட்டு கொடுத்து இரண்டு பேரும் உட்கார்ந்து வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு? மிச்சம் எவ்வளவு இருக்கு? சரி அப்ப இதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவது பெண்ணியம்.

உரிமைகள் இருக்கிறது என்பதற்காக உடல் உறுப்புகளை காண்பிப்பது இல்லை பெண்ணியம், நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தான் சரியான பெண்ணியம்.

பெண்ணியம். ஆயிரம் வலிகளை சுமந்தாலும், முகத்தில் புன்னகையை வைத்திருப்பது பெண்ணியம்.

சட்டம் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக ஆண்கள் acid ஊற்றுவதோ, அபாண்டமான குற்ற சாட்டுகளை சுமத்துவதோ இல்லை பெண்ணியம். தன் மகனை சான்றோனாக வளர்ப்பது பெண்ணியம்.

நான் குழந்தை குட்டிகளை பெற்று வளர்த்து, இவர்களுக்கு சோறாக்கி போடுவதற்காகவா படைக்கப்பட்டிருக்கிறேன் என்று தவறாக நினைத்து நாம் நம் ஸ்தானத்தை, குடும்பத்தை நிர்வாகி என்ற பெரிய ஒரு ஸ்தானத்தை ஒரு அழகான அந்தஸ்தை டியூசன் எடுப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், வீட்டில் வேலை செய்பவர்களுக்கும், இஸ்திரி செய்யும் அண்ணாகிற்கும், அதில் அதிக பங்கை டெலிவரி பாய்ஸ்க்கும் அட அது தாங்க நம்ம ஸ்விகி அண்ணாங்களுக்கும் பங்கு வைத்து பிரித்து கொடுத்துவிட்டோம். குடும்பமும் பிரிந்து விட்டது.

அம்மாவுக்கு மார்னிங் ஷிப்ட், அப்பாவிற்கு நைட் ஷிப்ட், ஒரே ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கும் உடன் பிறப்பாக ஒரு மொபைல் போனையும் கொடுத்துவிட்டு, எதையோ நோக்கி ஒடுகிறோம்.

ஓடிக் கொண்டே இருக்கிறோம்.....

இனியும் ஓடுவோம்.

சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் பெருகிக் கொண்டே செல்லும்....

வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை அடமானம் வைத்து விட்டு, மாதர் சங்கம் அமைத்து தெருவில் போராடும் நேரத்தில் நம் வீட்டில் குழந்தை வீடியோவில் பார்க்க கூடாத ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு அரக்கனை வளர விட்டுக் கொண்டிருக்கிறோம்.

மறுபடியும் சமூகம் ஒரு சீரான நிலைக்கு வர வேண்டும் என்றால், இருபாலரும் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்தி, ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து, ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, ஒருவரையொருவர் மகிழ்வித்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டுமே தவிர, தனித்து நின்று எங்களுக்கு எங்களை பார்த்துக் கொள்ள தெரியும் நீ உன் வேலையை பாரு என்று வீண் வம்புக்கும் வீராப்புக்கும் தீனி போடும் வகையில் எதிரணியில் நின்று செயல்படுவது பெண்ணியமும் இல்லை அது சரியான முதிர்ச்சியும் இல்லை.

உங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வியை கொண்டு அறியாமை இருளில் இருப்பவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதும், பணியில் கிடைத்த அதிகாரத்தை அறவழியில் பயன்படுத்துவதும், உங்கள் பணத்தை உங்கள் பெற்றோர் அல்லது துணையுடன் இணைந்து சரியான ஒன்றில் முதலீடு செய்வதும், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை உங்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் செலவழிப்பதும், சமுகத்தில் அனைவரிடமும் முக்கியமாக ஆண்களிடம் அன்பும் மரியாதையும் காட்டுவதும், கடமைகளை சரிவர செய்து உங்கள் ஸ்தானத்தில் நிமிர்ந்து நிற்பதுமே பெண்ணியம் என்பேன்.
வாழ்க்கையில் முக்கியமானது என்ன?

1.நாம் நல்லா இருக்கோமா என்று முகம் பார்த்து கண்டுபிடிக்க ஒர் நபர்

2.தட்டில் வைக்கப்டும் சாப்பாடு

3.அப்பாவின் செல்ல அதட்டல் அல்லது பெருமையாக பார்க்கும் ஒரு பார்வை

4.அம்மாவின் வெகுளி மனம் மற்றும் எல்லாவற்றையும் யோசித்து செய்யும் அழகு.

5.என்ன பிரச்சினை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்றாலும் குரல் கேட்டதும் ‌‌‌‌‌‌‌‌‌புரிந்துக் கொள்ளும்‌ ஒரு நட்பு.

6.ஐந்து வயத்திற்கும் கீழ் ஓர் நட்பு மற்றும் அறுபது வயது தாட்டியும் உள்ள ஓர் நட்பு

7.படுத்ததும் வரும் உறக்கம்

8.திருவிழா அல்லது பண்டிகையில் கூடுகின்றன சொந்தங்கள்.

9.பயணம் தனிமையிலும், நண்பகளின் பட்டாளம் உடனும்.

10.எல்லா சூழ்நிலைகளிலும் நிழல் போல் தொடர மனம் முழுதும் நம்பிக்கை.

வாழ்க்கையில் முக்கியம் இப்படி மேலும் பல. முக்கியமாக வாழ்தல் தான் வாழ்க்கை..
திருமண செலவை பெண்ணின் பெற்றோரும் மகனின் பெற்றோரும் சமமாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தங்கள் கருத்து என்ன?


எனது நண்பர்  (சுப்பிரமணி ) "நார்த்தன் அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் என்ற ஊரில் குடி பெயர்ந்து உள்ளார்.

அவர் ஒருமுறை அவர் நண்பர் திருமணத்திற்கு சென்று இருந்தார் அப்போது வெள்ளைக்கார மானிடன் ஒருவர் அவரிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்.

டாஸ் ப்பூஸ்னு இங்கிலீஷ் பா அது . தீப்பா சொல்றது கஷ்டம்.

வெகுநேரமாக இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

எனது நண்பர்  அந்த இங்கிலீஷ் மானிடம் இடம் கூட்டம் ரொம்ப கம்மியா இருக்கே என்று கேட்டுள்ளார

(அங்கு மொத்த எண்ணிக்கை 30 பேர்)

அதற்கு அந்த வெள்ளை மானிடன் "this is very huge crowd" என்று கூறியுள்ளார். எனது நண்பர்  நிர்கோ அது புதுவித அனுபவம் அவர் சொன்னதை கேட்டு  மறுபேச்சுப் பேசவில்லை..

சிறிது நேரம் கழித்து அந்த இங்கிலீஷ் மானிடன் எனது மச்சானிடம் உங்கள் திருமணத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று வினாவினான்.

அதற்கு எனது மச்சான் ஒரு 1300 வந்திருப்பார்கள் என்று கூறினார் அதற்கு அந்த வெள்ளைக்காரன் எனது நண்பரை  வியப்பாக பார்த்தான்.

மேலும் "நீங்கள் மன்னர் பரம்பரையை சார்ந்தவர்களை"? என்று கேட்டுள்ளார்..

எனது நண்பர்  ஆம் என்று கூறி காலரை உயர்த்தி உள்ளார்.

எந்த ஊர்லயும், மத்த எந்த வளர்ந்த நாடுகள் எதுலயும் காணாத ஒரு காலக்கொடுமை , அது எங்க ஊர்ல நடக்கிற அந்த ஒரு நாள் கூத்துக்கு செலவு பண்ற அந்த கல்யாணம் தான்.

எதுக்கு அவ்வளவு செலவு பண்ணிட்டு வாழ்நாள் புல்லா கஷ்டப்படணும்.

கம்மிங் டு த பாயிண்ட்.

மிகுந்த வரவேற்கத்தக்கது அதை விட சிறப்பானது கோவில் அல்லது ஒரு சமூக நலக்கூடத்தில் எளிதாக ஒரு சமோசா, ஒரு டீ அல்லது ஒரு மசால் வடை (பெருசுகள்க்க்கு மெதுவடை) வைத்து எளிமையாக திருமணம் செய்வது மிகவும் மிகவும் மிகவும் நாட்டிற்கும், வீட்டிற்கும் வாழப்போகும் தம்பதியருக்கும் வரவேற்கத்தக்கது மற்றும் நல்லது.

பேசுபவர்கள் இரண்டு நாளுக்கு பேசுவாங்க, அதுக்கப்புறம் அவங்க வேலைய பார்ப்பாங்க,

ஆனால் கல்யாணத்துக்காக லோன் வாங்கி அதை கட்டுவதற்கு நம்ம வருஷக்கணக்கா அல்லோல படனும்.

பெண் வீட்டாரிடம் நகைகள் கம்மியா கேளுங்க அது இன்னமும் வாழ்விற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நாட்டிற்கும் சேர்த்து.

குறிப்பு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, பிகாஸ் ஐ அம் 90' ஸ் கிட்..,

வெள்ளி, 29 நவம்பர், 2019

வீட்டை வாங்கும் போது, ஔவை பாட்டி ஆத்திச்சூடியில் சொன்னதை நினைவில் வைத்திருங்கள்
இடம்பட வீடு எடேல் - ஆத்திச்சூடி
தேவைக்கு உபயோகப்படாதபடி அதிகமான இடத்தினைக் கொண்ட வீடு எடுக்க வேண்டாம். உங்களுக்கு தேவைக்கேற்ப வீட்டினை தேர்ந்தெடுங்கள்.
சாதாரணமாக, வீட்டின் பணத் திட்டமிடலுக்கு காரணங்கள்  கூறுவார்கள்.

1. உங்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல், 3 மடங்குக்கு மேல் வீடு வாங்க வேண்டாம்.
உதாரணமாக, உங்களது ஆண்டு வருமானம் ரூபாய். 12 லட்சம் எனில், 36 லட்சத்திற்கு மேலாக வீடு வாங்க வேண்டாம்.

2. உங்களுடைய மாத வருமானத்தின் 25% மேல் கடன் தவணை செலுத்த வேண்டாம்.
உதாரணமாக, உங்களது மாத வருமானம் 1 லட்சம் எனில் 25 ஆயிரத்திற்கு அதிகமாக, கடன் தவணை செலுத்த வேண்டாம்.
குறிப்பு;
  • எந்த ஒரு பொருளையும் கடன் வாங்காமல் வாங்குவது நல்லது. ஆனால், வீடு போன்ற பெரிய விஷயங்களில், கடன் வாங்கத்தான் நேரிடுகிறது. ஆனாலும், எவ்வளவு தூரம் பணம் சேமித்து வாங்க முடியுமோ, அவ்வளவு தூரம் பணம் சேமித்துவிட்டு வாங்குங்கள். கடன் சுமையை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ, குறைக்கப் பாருங்கள்.

உதாரணமாக, உங்களுடைய 36 லட்சம் வீட்டிற்கு, நீங்கள் ஏற்கனவே நீங்கள் 20 லட்சம் சேமித்து வைத்திருந்தால், உங்களுடைய கடன் சுமை 16 லட்சம் மட்டுமே. எவ்வளவு குறைவாக கடன் வாங்கியிருந்தாலும், அதனை சீக்கிரம் அடைப்பதன் மூலம், பணத்தை வட்டியின் மூலம் அதிகமாக இழப்பதை தவிர்க்கலாம்.


  • குறைந்த வருட கடன் அடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். அது உங்களை அதிகமாக பணம் சேர்த்து, கடனை சீக்கிரமாக அடைக்க முயல வைக்கும். அதிக வருடங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், கடன் தவணையைப் போல், பல மடங்குகளை , மாதாமாதம் கட்டி வருவதன் மூலம், சீக்கிரமாக கடனை அடைக்கலாம்.


  • உங்களுடைய தேவை இரண்டு படுக்கையறை வீடு என்றால், மூன்று படுக்கையறை வீட்டினை வாங்க வேண்டாம். தேவைக்கேற்ப வீடு வாங்குங்கள். பெரிய வீடு, அதிக கடன் சுமை. சிறிய வீட்டினால், உங்களுடைய திட்டமிட்ட பணத்தில் இன்னும் நல்ல ஒரு தோதான இடத்தில், போக்குவரத்து வசதிகள், அடிப்படை தேவைகள் நிறைந்த இடத்தில், வீட்டினை வாங்க முடியும். பெரிய வீட்டினால், போக்குவரத்துப் பகுதிகளிலிருந்து, வெகு தூரம் தள்ளித்தான் உங்களுடைய திட்டமிட்ட பணத்தில் வாங்க முடியும்.

  • கடன் வட்டி விகதம் , மாறாத தாக இருக்கும் பட்சத்தில் நலம். மாறும் பட்சத்தில், அதிக அளவில் மாறாத திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..(கனவு இல்லம் )
சம்பாதிக்கும் அனைத்து பணமும் செலவழிந்துவிட்டால் நம்முடைய கடைசி காலத்தை எவ்வாறு சமாளிப்பது? உங்கள் யோசனைகளைக் கூறவும்....

அமெரிக்காவில், 18.8% அல்லது 90 லட்சம், 65 வயதைத் தாண்டிய மக்கள் இன்னும் முழு நேரமாகவோ, அல்லது பகுதி நேரமாகவோ வேலைபார்த்து வருகின்றனர். இது 2015ம் ஆண்டில், 12.8% அல்லது 40 லட்சத்திலிருந்து, அதிகரித்துள்ளது.

More older Americans are working than in recent years

This may be why Americans are so bad at saving for retirement

சரியான ஓய்வு கால திட்டமிடல் இல்லாமை, அதிக செலவுகள் நிறைந்த பகுதிகளில் வாழ்வது, அதிகமாக செலவழித்து வாழ்வது, ஓய்வு கால நிதியினை நடுவிலேயே எடுத்துவிடுவது என்ற பல காரணங்களால், மக்கள் தங்களது தங்கமாக ஓய்வு காலத்தில் வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, கடைசி காலத்தினை யார் கையையும் ஏந்தாமல், நிம்மதியாக வாழ்வதற்கு ஓய்வுகால திட்டமிடல் என்பது மிகவும் அவசியமானது. வங்கி சேமிப்பு, பரஸ்பர நிதி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி என்று எவ்வளவுக் எவ்வளவு சேமிக்க முடியுமோ, சேமித்து முதலீடு செய்வது நல்லது.

ஆனால், எல்லாப் பணமும் தீர்ந்துவிட்டால், கடைசி காலத்தினை எவ்வாறு கழிப்பது என்பதற்கு பின்வரும் ஆலோசனைகள் எனக்குத் தோன்றுகின்றன.

நீங்கள் ஏதேனும் ஒரு தொழிலில் திறமையானவராக இருப்பீர்கள். அந்த தொழிலில் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ சில காலம் மறுபடி வேலையில் சேருங்கள். இப்போது, சேர்க்கும் பணத்தை கடன் பத்திரம் சார்ந்த நிலையான வருமானம் கொடுக்கும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யுங்கள். இப்போது, ஈவுத் தொகை அவ்வப்போது அளிக்கும் பங்குகளில் முதலீடு செய்தால், இது அடிக்கடி உங்களது சேமிப்பு கணக்கில் பணம் கொடுத்து, உங்களுக்கு உதவி செய்யும். மாதா மாதம் பணம் தரும், ஓய்வுகால வருடாந்திர திட்டங்களில் (Annuity Scheme) முதலீடு செய்யுங்கள்.

அதிகம் செலவு இல்லாத கிராமங்கள் அல்லது நகரங்களுக்கு குடியேறுங்கள். சென்னை நகரத்தின் செலவை விட, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் செலவு குறைவு. இன்னும் சிறிய ஊர்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கோவில்பட்டி,உடுமலைப்பேட்டை ,திண்டுக்கல் கிராமங்கள் ..தேனீ ..போடி  போன்ற ஊர்களில் இன்னும் செலவு குறைவு. கிராமங்களில் வாழ்ந்தாலோ, இன்னும் செலவு குறைவு.

உங்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால், அதை விற்று விட்டு, அதை முதலீடு செய்து, அதை நிரந்தரமான வருமானத்திற்கு உதவுமாறு மாற்றிக் கொள்ளுங்கள். உதாரணமாக, சொந்த வீடு இருந்தால் விற்றுவிட்டு, நகரத்திலிருந்து விலகி, சிறிய வீட்டிற்கு மாறி விடுங்கள். நகைகள் போன்றவற்றை விற்று, வைப்பு நிதிகளில் முதலீடு செய்யுங்கள்.

வீடு என்பது அத்தியாவசியமான ஒன்று. அது முதலீடு அல்ல. சிறிய வீட்டிற்கு குடிபுகுந்து, சேர்ந்த பணத்தினை முதலீடு செய்யுங்கள். இவ்வளவு நாட்கள் இருந்த வீடு என்று யோசிக்காதீர்கள். யாரையும் கையேந்தாமல் வாழ்வது தான் முக்கியம். மற்ற எதுவும் முக்கியமல்ல.

உங்களிடம் உள்ள அவசியமற்ற எல்லா பொருட்களையும் விற்று விட்டு, முதலீடு செய்து விடுங்கள். பொருட்கள் உங்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்காது. முதலீடுகள் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்.

உங்களது வாழ்க்கைத் துணையும் வேலை , முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ முடியுமா என்று பாருங்கள். இருவரும் சம்பாதிக்கும் போது, அதிகமாக முதலீடு செய்ய முடியும்.

எங்கெங்கெல்லாம், முதியோருக்கு சலுகைகள் உள்ளனவோ, அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, ரயில் பயணங்கள், வங்கிகளில் வைப்பு நிதி கணக்குகளில் அதிக வட்டி விகிதம், அதிக வரிச்சலுகை என்று எங்கெங்கெல்லாம் அதிக பணத்தை மிச்சம் பிடிக்க முடியுமோ, பாருங்கள்.
உங்களுடைய செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு குறைவாக செலவழிக்க முடியுமோ பாருங்கள். உங்களுடைய அனாவசிய செலவுகளை நிறுத்துங்கள். அதிக பணத்தை சேமிப்பதன் மூலம், நீங்கள் அதிகமாக முதலீடு செய்து, அதிகமாக பணத்தை பெருக்க முடியும்.

நல்ல ஒரு காலவரையுள்ள காப்பீட்டு திட்டத்தில்(Term insurance) அல்லது அரசு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்கள் (உதாரணமாக, வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா, varisha pension Bhima Yojana) போன்ற திட்டங்களில் பயன் பெறுங்கள்.
அரசு மருத்துவமனை மற்றும் அரசு சார்ந்த மருந்தகங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது மகனோ அல்லது மகளோ, உங்களுடன் இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வாழத் தொடங்குங்கள். உங்களுடைய செலவுகளை அது பெருமளவில் குறைக்க உதவும்.

பங்கு சந்தை சார்ந்த எந்த ஒரு முதலீட்டையும் தவிருங்கள். அவற்றின் ஏற்ற இறக்கங்கள், உங்களுடைய முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்கும். வங்கி வைப்பு கணக்கு போன்ற குறிப்பிட்ட வருமானம்சார்ந்த திட்டங்களில் (Fixed Income Schemes) முதலீடு செய்யுங்கள்.

உங்களுக்கான பொருட்களை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு நிரப்ப பாருங்கள். olx.in, Freecycle.org, quikr.com ,amzon.alibaba,போன்ற இணையதளங்களில் ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நீங்கள் செலவைக் குறைத்து, அதிகம் முதலீடு செய்ய முடியும்.

இவ்வாறு, சிக்கனமாக வாழ்க்கை அமைத்துக் கொண்டுவிட்டால், எதிர்காலத்தை நன்றாக நிர்வகிக்கும் அளவிற்கு உங்களுக்கு முதலீடு உதவத் தொடங்கியவுடன், நீங்கள் நிஜமாகவே ஓய்வு பெறத் தொடங்கலாம். உங்களது ஓய்வு காலத்தை, சமூகத்தின் சேவைக்காக, உங்களது உடலாலும், அறிவாலும் செலவழியுங்கள். ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லுங்கள்.
எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய சில இங்கிதங்கள் என்ன?

தும்மும் போதும்‌ இருமல் வரும் போதும் பிறரின் மேல் படாமல் கைக்குட்டயால் மறைத்து தும்முவதோ இரும்புவதோ செய்தல் வேண்டும்.

பிறரின்‌ அழைபேசியை பயன்படுத்தும் போது அவர் அனுமதியின்றி வேறு எதுவும்‌ உள்‌நுழைந்து பார்க்காமல் இருப்பது.

கதவை தட்டிய பிறகே பிறரின்‌ அறையில் நுழைவது.

கண்ட இடங்களில் எச்சில் துப்பவதை தவிர்ப்பது. குறைந்த அளவு பிறரின் மேல் படாதவாறு துப்புங்கள்.

திரையரங்கில் முன்‌சீட்டில் காலை தூக்கி வைக்காமல் இருப்பது. பேருந்து இரயில் பயணங்களின்‌ போதும்‌ தான்.


உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவரை மரியாதையுடன்‌ நடத்துத்துதல். அவர் ஒன்றும் உங்களுக்கு அடிமை இல்லை.

புதன், 27 நவம்பர், 2019

விவசாயிகள் ஏன் அதிகாலையிலேயே வேலை செய்யத் தொடங்குகிறார்கள்?

இதற்கான பதிலை எங்கள் ஊர் பேச்சு வழக்கில் கூற விரும்புகிறேன். பிழையாக இருந்தால் மன்னிக்கவும்.

அது ஒன்னுமில்லீங்க வெடியால நேரம 5 மணிக்கு போய் மாட்ட புடுச்சு வெளிய அவுத்து கட்டுலீனா மண்டு சாலை நாறிரும்ங்க. அப்புற கறவ நேரமே போடோனும்ங்க பால் வண்டி வர்ரதுக்குள்ள கறவை போடோனும்ங்க. அப்புறம் ஆளுக நேரம வந்துருவாங்க காய் பொரிச்சு டவுனுக்கு சந்தைக்கு கொண்டுபோகனும்ங்க.பழைய சோத்துக்குள்ள போய்ட்டு வந்துட்டா,வந்து கள வெட்ற ஆளுகள பாக்கோனும் அப்புறம் தண்ணி பாய்க்கிறது வேற பாக்கி இருக்கு 3 பேஸ் கரண்டு 12 மணிக்கு போறதுக்குள்ள பாய்க்கோனும். அப்புறம் மாட்ட சித்தே மேச்சு கட்டீட்டு தீவணம் அறுத்து வெக்கோனும்.மருந்து அடிக்குறதுக்கு வேற சாய்ந்தரம் ஆள் வரும்.அதுக்கு தண்ணி செமக்கோனும்.அப்புறம் சாய்ந்தரம் மறுபடியும் கறவை போடோனும்.ஊட்டுக்கு போய் காப்பி குடுச்சுட்டு நாளக்கு எத்தன ஆள் தேவையோ அதுக்கு ஆளுக்கு சொல்லோனும்.வெதப்பு கொஞ்சம் பாக்கி இருந்தா ஏருக்கோ டிராக்டருக்கோ சொல்லோனும்.

இராத்திரி மருபடியும் காட்டுக்கு போய் பண்ணிக்கு காவல் காக்கனும்.காலைல இப்போ கூடுதலா மயில் முடுக்கோனும்.அத சொல்ல மறந்துட்டன்.இதுகளுக்கு நடுவுல பேங்க்கு லோனுக்கு அலையனும்,மகனுக்கோ மகளுக்கோ பள்ளிகொடத்துக்கு பீஸ் கட்ட போகனும்.அந்த சான்றிதல் இந்த சான்றிதல்னு வாங்க அலையனும்.வாய்க்காத் தண்ணி வர்ர காலம்னா அது வேற லெவல்.இப்புடி அடுக்கீட்டே போலாம்.நான் சொன்னதெல்லாம் சொற்பம்.இப்படி நேரமே கிடைக்காத விவசாயி அதிகாலையில் எளுவதைத் தவிற வேறு வழி இல்லை.விவசாயிக்கு ஞாயிறு திங்கள் எல்லாம் ஒன்றுதான்.விடுமுறையே கிடையாது.


எங்கள் ஊர் பெரியவர்கள் "சாகும் வரை நமக்கு ஓய்வில்லை " எனக்கூறுவதுண்டு.இது உண்மையே. விரக்தியினால் கூறுகிறார்கள் என எளிமையாகக் கடந்துவிடமுடியாது.வாழ்ந்து பார்த்தால் தான் புரியும்.👍🐂🐐

செவ்வாய், 26 நவம்பர், 2019

மக்கள் எவ்வாறு செல்வந்தர்களாகிறார்கள்?

மக்கள் மூன்று படிகளில் ஏறி செல்வந்தர்கள் ஆகின்றனர். மூன்று படிகளுமே முக்கியம். ஒரு படியில் ஏறாமல் அடுத்தபடிக்கு செல்ல இயலாது.

முதல் படி; அதிகமாக சம்பாதிப்பது
இரண்டாவது படி; சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது
மூன்றாவது படி; சேமித்த பணத்தில், பரவலாக முதலீடு செய்வது

இவை ஒவ்வொன்றாக பார்ப்போம்.....

அதிகமாக சம்பாதிப்பது ; நல்ல ஒரு வேலையிலோ, நல்ல ஒரு தொழிலிலோ நல்ல ஒரு சம்பாத்தியத்தினைப் பெறுவது. குறைவாக சம்பாதிக்கும் பட்சத்தில், சம்பாதிக்கும் பணமானது, வாழ்க்கை கடத்தும் அளவிற்கே உதவும். இவ்வாறு, அதிகமாக சம்பாதிக்க என்ன செய்ய முடியும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
சம்பாதித்த பணம் போதவில்லை என்றால், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போவது
தொழில் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு, தன் திறனை வளர்த்து வேறு வேலையோ, அல்லது பதவி உயர்வோ அடைவது
சம்பாதிக்கும் நபர், பகுதி நேரமாக , மற்றொரு வேலையிலோ, தொழிலிலோ இறங்குவது
நமக்கு தெரிந்த, பிடித்த விஷயங்கள் சார்ந்த தொழிலில் இறங்குவது. உதாரணமாக, சங்கீத ஞானம் உள்ளவர்கள், சங்கீத வகுப்புகள் எடுக்கலாம்.
வீட்டின் மாடியை வாடகைக்கு விட்டு, வாடகை பணம் கிடைப்பது
2. சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது; சம்பாதித்த பணத்தை, இழக்காமல் , அதிக அளவில் சேமிக்கப் பார்க்க வேண்டும். சிலர் மாத சம்பளத்தில், 10% சேமிப்பர். 50 - 70% சேமிக்கும் மக்களும் உள்ளனர். இந்தப் படியானது, முதல் படியை விட எளிமையானது தான். சம்பாதித்த பணம் ஏற்கனவே உள்ளது. அதனை எவ்வாறு சேமிப்பது என்று யோசிக்க வேண்டும். இதற்கு சில விஷயங்கள் முக்கியம்.

சிக்கனமான வாழ்க்கை வாழுவது; எந்த ஒரு வீண் செலவும் செய்யாமல், பணத்தை திட்டமிட்டு(Budget) செலவழித்து வாழ வேண்டும். பணத்திட்டத்திற்குள்ளாக, வாழ்க்கை நடத்த வேண்டும்.
கடன்களை அறவே ஒதுக்க வேண்டும்; சம்பாதித்த பணமானது, கடன்களை கட்டுவதற்காக மாட்டிக் கொண்டு விட்டால், முதலீட்டிற்கு பணம் ஒதுக்க முடியாது. கடன்களை அறவே ஒதுக்க வேண்டும். கடன் உள்ள மனிதன், அடிமை மனிதன். எதிர்காலத்தினை அவன் கடனிடம் அடகு வைக்கிறான்.
அவசர கால நிதியினை வைத்திருக்க வேண்டும்; அவசர கால நிதியானது, வீட்டின் அவசர தேவைகளில், பிறரை கையேந்தாமல் சமாளிக்க உதவும். கடனைத் தவிர்க்கும்.
உடல்நல, காலவரை சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தினை கொள்ள வேண்டும்; காப்பீட்டுத் திட்டமானது, திடீரென்று வரும் அவசர மருத்துவ தேவைகளுக்கு, கடன் வாங்காமல் காக்கும். வாழ்க்கையின் மீது நம்பிக்கையைத் தரும்.
தேவை சார்ந்த வீடு, வாகனங்கள் வாங்க வேண்டும்; வீடும், வாகனமும் ஒருவரின் வாழ்வின் மிகப் பெரிய செலவுகள். அவை தேவைக் கேற்றபடி வாங்க வேண்டும். இல்லையேல், பெரிய கடன் சுமையில் சிக்க வைத்து விடும்.
சம்பாதித்த பணத்திற்குள்ளாக வாழ்க்கை நடத்துவது; செலவானது என்றும் வரவினைத் தாண்டாமல், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, பணத்தை சேமிப்பது.
ஒவ்வொரு செலவினையும் கவனமாக செய்வது; வெளியே சாப்பிடுவது, திரைப்படம் பார்ப்பது, சஞ்சிகைகள் வாங்குவது என்று ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து, பணத்தை சேமிப்பது அவசியம்
அலுவலகம் சார்ந்த, அங்காடி சார்ந்த எந்த ஒரு சலுகைகளையும் உபயோகப்படுத்திக் கொள்வது; எந்த ஒரு நியாயமான சலுகைகளின் மூலம் பணத்தினை சேமிப்பது
அதிக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை என்றுமே மாற்றாமலிருப்பது; இதனை ஆங்கிலத்தில், Lifestyle inflation என்று கூறுவர். அதாவது, அதிகமாக சம்பாதிக்கும் போது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது. இது மீண்டும் அதிக பணத்தை இழக்க வைக்கும். அதிகமாக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை முன்பு போலவே, சிக்கனமாக வாழ்ந்து, பணம் சேமிப்பது
குறிப்பு; எல்லாவற்றிற்கும் மேலாக, சேமித்த பணத்தில், ஈகைக்காக ஒதுக்குவது முக்கியம். தன்னை ஆளாக்கிய, வாழ வைக்கும், சமுதாயத்தில் தன் கடனை செலுத்துவது, மனிதனின் கடமை.

3. சேமித்த பணத்தினை பரவலாக முதலீடு செய்வது ; சேமித்த பணம், முதலீடு இன்றி, பணவீக்கத்தினை எதிர்கொள்ள முடியாது. இங்கு பரவலாக என்ற வார்த்தை முக்கியம். ஒரு முதலீடு தோற்றாலும், இன்னொன்று காப்பாற்றி விடும். இந்த முதலீடானது, சீக்கிரமாக தொடங்கப்பட்டு, நீண்ட நாட்களுக்கு, தொந்தரவு செய்யாமல், வளர வைக்கப்பட வேண்டும். முதல் இரண்டு படிகளைக் கடந்தால் மட்டுமே, இங்கு வர முடியும். அதிகம் சம்பாதித்தால் தான் , தேவை போக சேமிக்க முடியும். சேமித்தால் தான் முதலீடு செய்ய முடியும். இவற்றிற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பங்குகளின் ஈவுத் தொகையை மறு முதலீடு செய்வது ; ஈவுத் தொகையை செலவழிக்காமல் மறு முதலீடு செய்வது
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது; பரஸ்பர நிதிகள் பரவலாக முதலீடு செய்வதால் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
தொழிலினை பெருக்கி, விரிவு படுத்துவது; தொழிலில் அதிகமாக முதலீடு செய்வதன் மூலம், விரிவு படுத்தி, பணத்தினைப் பெருக்குவது
அரசாங்க வரி சலுகை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்வது ; பொது ஓய்வுகால வைப்பு நிதி, தேசிய சேமிப்புத் திட்டம் , கிஸான் விகாஸ் பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற வரிசலுகை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது. இங்கு வளரும் பணமானது, முழுமையாக கிடைக்கிறது. அரசின் தொழில் சார்ந்த திட்டங்களை உபயோகப்படுத்திக் கொள்வது.
முதலீடுகளை நீண்ட காலம் தொடர்வது; முதலீடுகள் பணம் தர, காலம் ஆகும். அது வரை, பொறுமையாக காத்திருந்து முதலீட்டினை வளர விடுவது. நடுவில் எடுப்பது என்பது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமம். அடிக்கடி விதையினை தொந்தரவு செய்தால், விதையானது மரமாக வளராது. நன்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் விதை, மரமாக மாறி, கனிகளைக் கொடுக்கும்.
பரவலாக முதலீடு செய்வது; ஒரே தொழிலில் என்று இல்லாமல், பல தொழில்களில் இறங்குவது. ஒரே முதலீடு என்று இல்லாமல், பங்கு சந்தை சார்ந்த பரஸ்பர நிதி, கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி, பங்குகள், தங்கம், நிலம் என்று முதலீட்டினை பரவலாக்குவது.
திடீரென்று கிடைக்கும் பெரும் பணத்தை உடனே முதலீடு செய்வது; ஏதேனும் தொழிலில், அல்லது அலுவலகத்தில் கிடைக்கும் உபரி பணத்தினை உடனே முதலீடு செய்வது. வீண் செலவு செய்யாமலிருப்பது.
தன் தொழிலில், தன் திறன்களில் முதலீடு செய்வது; இத்தகைய முதலீடானது, தன் அலுவலகத்தில் எதிர்காலத்தில் அதிக சம்பள உயர்வு பெற வழிவகுக்கும். தொழிலில் முதலீடு தொழிலினைப் பெருக்கும்.
தொடர்ந்து முதலீடு செய்வது; பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார மந்தம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், என் கடன் முதலீடு செய்வதே என்று தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டினை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
இவ்வாறு, முதலீடு செய்த பணமானது, கூட்டு வட்டித் த த்துவத்தின்படி, பல்கிப் பெருகி, பெரும் பணமாக மாறி பணக்கார மனிதனாக மாற வைக்கும். தொழில் முதலீடு செய்த பணமானது, தொழிலைப் பெருக்கி, பணத்தைப் பெருக்கி, பணக்கார மனிதனாக மாற்றும்.

மனிதர்கள் படிப்படியாக பணக்காரர் ஆகின்றனர். அதற்கு பொறுமை வேண்டும். மூன்று படிகளில் ஒன்றில் சறுக்கினாலும், பணக்காரர் ஆக முடியாது. எவருமே, ஒரே நாளில் பணக்காரர் ஆக முடியாது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் வசனம் போல்,

பணக்காரர் ஆவதற்கு இந்த மூன்று விஷயங்களிலும் விடா முயற்சி வேண்டும். அப்போது தான், விஸ்வரூப வெற்றியான பணக்காரர் ஆக முடியும்.
KVT BUSINESSTYCOONS
உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான சிறந்த இரண்டு வரி உரையாடல் எது?

நான் பல சந்தர்ப்பங்களில் கேட்ட என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான சில உரையாடல்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

(1)பணம் சம்மந்தப்பட்ட ஏதோ பிரச்சனை அப்பாவுக்கு எல்லா இடத்திலேயும் முயற்சி செய்து விட்டு சமாளிக்க முடியாமல் கடைசியாக அம்மாவிடம் சொல்லுவார்.

அப்பா:என்ன பண்றதுனே தெரியலமா ஒரே குழப்பமா இருக்கு.

அம்மா:இதுக்கு போய் ஏன் இப்படி சோகமா மூச்சிய வச்சுக்கிட்டு இருக்கீங்க.சமாளிச்சுக்கலாம்.நான் பாத்துக்கிறேன்.

(அப்பாவின் குழப்பம் குறைய ஆரம்பிக்கிறது )

(2)புடவை மற்றும் துணிகள் எடுக்க போகும் போது

அப்பா:(மழுப்பலாக)இதுக்கெல்லாம் நான் வரணுமா?நீ குழந்தைகளை கூட்டிட்டு போயிட்டு வாம்மா.

அம்மா:நீங்க அங்க வந்து என் கூட நின்னா போதும்.மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்.

(சிரித்துக்கொண்டே அப்பாவும் கிளம்புகிறார்)

(3)உறவினர்களுடன் சண்டை வந்த சமயத்தில்.

அப்பா:பாத்தியா விசேஷ வீட்டுல உன் ஆளுங்க வேணும்னே நம்மள அவமானப்படுத்திட்டாங்க.அந்த ஆளுகள என்ன பண்றேன் பாரு.

அம்மா:இதுக்கு போய் ஏன் இப்படி கோவப்படுறீங்க.நமக்கும் ஒரு நேரம் வரும்.அப்ப வைச்சுக்கலாம்.நான் பாத்துக்கிறேன்.டென்ஷன் ஆகாதீங்க.

(அப்பாவின் கோவம் குறைய ஆரம்பிக்கிறது)

(4)1 வருடங்களுக்கு முன்பு (அப்பா இறந்து 20 நாள் கழித்து)

உறவினர்:ஆலமரம் போல குடும்பத்த பாத்துகிட்டு இருந்த மனுஷனை ஆண்டவன் இப்படி கொண்டு போய்ட்டானே இனி என்ன பண்ண போறியோ?

அம்மா: அத நான் பாத்துக்கிறேன்.அவர் நினைச்ச மாதிரி பிள்ளைகல நான் கொண்டுவரேன்.

பல சந்தர்பங்கள் பல சூழ்நிலைகள் பல மாற்றங்கள் ஆனால் அம்மாவின் அல்டிமேட் தன்னம்பிக்கை வசனம் ஒன்று தான்.

"நான் பாத்துக்கிறேன்"

நன்றி.
சேமிப்பதற்கு பதிலாக ஏன் அதிக பணத்தை செலவழிக்க வேண்டும்?

பின்வரும் சில சந்தர்ப்ப, சூழ்நிலைகளை, தருணங்களை நீங்கள் வாழ்வில் சந்திக்க விரும்பினால், சேமிப்பதற்கு பதிலாக நீங்கள் அதிக பணத்தை செலவழிக்கலாம்.

ஓய்வுகாலத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதபடியால், ஓய்வுகாலம் என்பதே இன்றி, கடைசி வரை, வாழ்வின் பணத்தேவைகளுக்காக, வேலை செய்யும் தருணம். அமெரிக்காவில், சரியாக ஓய்வு காலத்திற்காக சேமிக்காத பலர், தங்களது 65, 70 வயதுகளிலும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
ஓய்வு காலத்திற்கு போதிய நிதி ஆதாரமின்றி, பிள்ளைகள்தான் உங்களை காப்பாற்ற வேண்டுமென்று, அவர்களிடம் கையேந்தும் தருணம்.
அவசர காலத் தேவைகளுக்கு, உங்களிடம் சேமிப்பு இல்லாத படியால், பிறரிடம் கையேந்த நேரும் தருணம். சுயமதிப்பினை இழந்து வாடும் தருணம்.
அவசரத் தேவைகளுக்கு, கடன் வாங்கி, கடனின் வட்டி, அசல் சேர்ந்துக் கொண்டு, கடன் என்னும் படு குழியில் சிக்கி, மாதாமாதம் சம்பாதிக்கும் பெரும் பகுதி கடனைச் செலுத்தி, பணம் விரயமாவதைக் கண்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கையாலாமல் நிற்கும் தருணம்.
அவசர காலத் தேவைகளுக்கு, பணம் போய்விட, மேலும் பணத்தேவையினால் , வீட்டின் அத்தியாவசிய பொருட்களை விற்று, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட, பணம் இன்றி தவிக்கும் தருணம்.
கடன் என்னும் கொடிய அரக்கனிடம், ஆற்று சுழியில் மாட்டிக் கொண்டு, மேலும் மேலும் தன்னை இழுத்து, தன் வாழ்வினை முடித்து விடுமோ, என்று அச்சப்படும் தருணம்.
அக்கம்பக்கத்து வீடுகளின் முன்பு, கடன்காரர்களின் வருகையினால், தன்மானம் இழந்து, சுயகௌரவத்தை இழந்து, தவிக்கும் தருணம்.
அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு வேலை இழந்து விட்டால், சேமிப்பு இன்றி எவ்வாறு வாழ்க்கையே நடத்தப் போகிறோம் என்று மனதில் ஒருவித படபடப்புடன் தினமும் அலுவலகம் செல்லும் தருணம்.
தன் உடல் நிலைக்கு ஏதேனும் குறை ஏற்பட்டால், ஒரு மாதம் அலுவலகம் செல்லாவிட்டால் கூட, குடும்பத்தை நடத்த முடியாதே என்று, உடல் நலக் குறைவுடனும் அலுவலகம் செல்லும் தருணம்.
பழுது பார்க்க போதிய சேமிப்பு இல்லாதபடியால், வாகனத்தில் ஏற்படும் சிறு பழுதுகளுடன் வாகனத்தை ஓட்டும் தருணம். மனதில் பயத்துடன் வாகனத்தை ஓட்டும் தருணம்.
பெட்ரோல் போடுவதற்கு மாதக் கடைசியில் பணம் இல்லாதபடியால், இருக்கின்ற கொஞ்ச பெட்ரோலுடன் நீண்ட தூரம் பயணிக்க அஞ்சும் தருணம்.
மனைவி, பிள்ளைகள் திடீரென்று கேட்கும் பள்ளிச் சுற்றுலா, பிடித்த நகை போன்ற ஆசைப்பட்ட பொருட்களை, பணச் சேமிப்பு இல்லாத படியால், வாங்கித் தர இயலாமல், கையை பிசையும் தருணம்.
பண சேமிப்பு இல்லாத படியால், கடைசி வரை, வாடகை வீட்டினில், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு மாற வேண்டிய தருணம்.
வாடகை வீட்டின் உரிமையாளரிடம், ஏதாவது காரணத்தினால், தன்னை வீடு காலி செய்ய விட்டு விடுவாரோ, வீட்டின் வாடகையை அதிகரித்து விடுவாரோ என்று, கூனிக் குறுகும் தருணம்.
பணவீக்கித்திற்கு ஏற்றவாறு உங்களது வருமானம் கூடாதபடியால், சேமிப்பு இன்றி, ஊரை விட்டு வெளியே, குறைந்த வாடகைக்கு குடிபெயரும் தருணம்.
உறவினர்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகளில் போதிய மொய் பணம் எழுத முடியாமல், உறவினர், நட்பு நலம் கெட்டு, தனித்து விடப்படும் தருணம்.
பிள்ளைகளின் எதிர்கால மேல்படிப்பிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாதபடியால், பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்காமல், ஏதோ ஒரு மேல்படிப்பில் அவர்களை சேர்த்து படிக்குமாறு நிர்பந்திக்கும் தருணம்.
பிள்ளைகளின் திருமணத்திற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாமல், கடன் வாங்கியோ அல்லது அடிப்படையான செலவுள்ள திருமணம் கூட நடத்த முடியாமல், பிள்ளைகளுக்கான கடமையை சரிவர செய்யாமல், பிள்ளைகள் முன்பு தலைகுனியும் தருணம்.
பேரப் பிள்ளைகள் ஆசைப்படும் விலையுயர்ந்தப் பொருளை வாங்க முடியாமல், தன்னை தானே நொந்துக் கொள்ளும் தருணம்.
வாரன் பபெட் சொன்னபடி,
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கத் துவங்கினால், கூடிய சீக்கரம் தேவையான பொருட்களை விற்க நேரிடும்.

மேலே பார்த்தவை சில உதாரணங்கள்தான். சேமிப்பு இல்லையேல், படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

தயவு செய்து, உங்களது முதல் மாத சம்பளத்திலிருந்தே, சேமிக்கத் தொடங்குங்கள். டேவ் ராம்சே கூறியபடி,
குறைந்தபட்சம் ரூபாய். 10000 அவசர கால நிதி ஒதுக்குங்கள்.
எல்லா கடன்களையும் அடைத்து விடுங்கள். வீட்டுக் கடன் மட்டும் விதிவிலக்கு.
3 முதல் 6 மாத த்திற்கான அவசர நிதி ஒதுக்குங்கள்
குறைந்தபட்சம், உங்களது வருமானத்தில் 15% சேமித்து, ஓய்வு காலத்திற்கு முதலீட்டினைத் தொடங்குங்கள். அதிகம் முதலீடு, அதிக பணப் பெருக்கம். அதிக ஓய்வுகால நிம்மதி.
வீட்டுக் கடனை அடைத்து விடுங்கள்.
குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத் தேவைக்கு பணம் முதலீடு செய்யுங்கள்.
தனி மனித நிதி சுதந்திரத்தை அடையுங்கள். பாரம்பரியத்தை விட்டுச் செல்லுங்கள்.
சேமிப்பு இல்லையேல், எதிர்காலம் கேள்விக்குறி.