திங்கள், 23 டிசம்பர், 2019

மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே,
அன்பு வணக்கம்.
ஊராட்சி மன்றத்தலைலவர் தேர்தலில் போட்டியிடும் நீங்கள் எனக்கு வாக்களித்தால் என்னால் இதைச்செய்ய முடியும், அதைச்செய்ய முடியும் என்று விளம்பரமில்லாமல் ஊராட்சி சட்ட வரைமுறைக்குட்பட்டு கீழ்க்காணும் பணிகளை கண்டிப்பாகச் செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
1. கணக்கம்பாளையம் ஊராட்சி இதுவரையில் காணாத ஒரு புதிய வெளிப்படையான ஊராட்சி நிர்வாக அணுகுமுறை, குப்பைகளில்லாத சுத்தமான ஊராட்சியாகக்கொண்டு வருவேன்.
2. ஊராட்சிக்கு வரக்கூடிய அரசு மானியங்களை வெளிப்படையாகத்தெரிவித்து இந்திந்த செலவினத்திற்குஇவ்வளவு என்று ஒவ்வொரு மாதமும் கணக்கு வரவு செலவுகள் தெரிவிக்கப்படும்.
3. கணக்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள குளறுபடியான குடிநீர் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி உடனடியாக ஊராட்சி பொதுமக்கள் அலுவலர்கள் கொண்ட ஒரு விசாரணைக்குழு.
4. ஒவ்வொரு வார்டுக்கும் முறையான பராமரிப்பு வசதி. குடிதண்ணீர் இணைப்புக்கு பணம் கொடுத்து இணைப்பு பெறாத வீடுகளுக்கு உடனடியாகக் குடிநீர் வசதி
5. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தனியாக ஒரு வாட்சாப் குழு உருவாக்கப்பட்டு குறைகளை அதில் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்காத அலுவலர் அதிகாரிகளை ஊராட்சி அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
6. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் தார்சாலை, கான்கீரிட் சாலை என பழுதடைந்த பராமரிப்பில்லாத சாலைகள் உடனடியாக கவனிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7. 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக ஒழுங்குபடுத்தி சீராக்குதல். ஏதிர்வரும் டிசம்பர் 30 ஆம்நாள் நடைபெறும் உள்ளாட்சி மன்றத்தேர்தலில் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பn.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை துரைசாமி ...
Whatsapp எண் ..94876 60523...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக