செவ்வாய், 24 டிசம்பர், 2019

உங்களதுதேவையே, எங்களது சேவை ....
மாற்றத்தை விரும்பும் கணக்கம்பாளையம் ஊராட்சி வாக்காளர்களே
மாற்றம் என்பது சொல், இது மக்களுக்கான செயல்.
நமது கணக்கம்பாளையம் ஊராடசி மிகப்பெரிய ஊராட்சி அந்த அளவிற்கு மிகுந்த வருமானமும் உள்ளஊராட்சி. ஆனால் இந்த ஊராட்சியின் வருமானத்த்திற்குத்தகுந்தாற்போல் வளர்ச்சி இல்லை.
ஊராட்சியில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம், சுகாதாராக்குறைபாடு , வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை இது போன்ற ஏராளமான பொதுமக்களுக்கான பிரச்சினைகள் இருக்கின்றது. இதை அறிந்து பொதுமக்களின் தேவைகளைத் தெரிந்துஉங்களுக்காக உங்களில் ஒருவனாக ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்.
ஊராட்சித் தேர்தல் வரும் போகும், ஆனால் ஊராட்சிப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை யார் உணர்ந்து தெரிந்து பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆகவேதான். நூன் இந்த அடிப்படை சிக்கல்களை முழுமையாக உறுதி செய்து முடிப்பேன். இது போன்ற ஏராளமான சிக்கல்கள் நமது ஊராட்சியில் உள்ளது.

கண்டிப்பாக என்று சொல்லாவிட்டாலும் என்னால் முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு உங்களை மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறேன்.

வெற்றி பெற்றால் தலைவராகப் பணியாற்றுவேன். இல்லையென்றால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பெ.துரைசாமி ஆகிய எனக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியாளன் உடுமலை பெ .துரைசாமி .....
தொடர்பு எண் ..94876 60523..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக