திங்கள், 2 டிசம்பர், 2019

ஒரு பெற்றோராக எமது திடீர் உயிரிழப்புகளுக்குப் பின் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் என்ன?

சேமியுங்கள்; சேமியுங்கள். கையில் பணம்/ சம்பளம் வந்ததும் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

உங்கள் எல்லா வங்கிக் கணக்குகள், வைப்பு நிதிகள், கம்பெனி டெபாசிட்டுகள், ஆயுள் காப்பீட்டு கணக்குகள் போன்ற எல்லா சேமிப்புக் கணக்குகளிலும், லாக்கர் கணக்கிலும் உங்கள் வாரிசு யார் என்பதை எழுதிக் கொடுத்து விடுங்கள்.

ஆயுள் காப்பீடு செய்து ஒழுங்காகப் பிரீமியம் கட்டுங்கள்.

சொத்து பத்து உள்ளவராய் இருந்தால் ஒரு உயில் எழுதி, கவரில் போட்டு ஒட்டி, உங்கள் மக்கள் உங்கள் காலத்துக்குப் பிறகு வந்து எடுக்கக் கூடிய உங்கள் உடமைகளோடு கண்ணில் படும்படி வையுங்கள்.


முடிந்தவரை கடன் கிடன் வாங்காமல் காலத்தை ஓட்டுங்கள். பிள்ளைகளுக்கு வைக்க சொத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடனை வைத்துவிட்டுப் போகவேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக