முழு நேர வேலை செய்து கொண்டு போட்டி தேர்வுக்கு படிப்பது எவ்வாறு?
முழு நேர வேலை செய்து கொண்டு படிப்பது…இந்த கேள்வியை போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒருவர் (யாரு கேட்ப ..நம்ம மாப்பிள தான் இந்த மாதிரி கேள்வி கேட்பாரு )என்னிடம் கேட்டதே.
இதற்கு முன் இந்திய விமான படை பற்றி ஒரு சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்.
விமான படையில் fighter squadron ல் பணி தொடங்கும் நேரம் காலை நான்கு மணி இது மதியம் 1மணி வரை தொடரும். பின் மாலையில் night flying 6.30 க்கு தொடங்கி இரவு 1மணி வரை தொடரும்.
அடுத்த நாள் மதியம் 1மணிக்கு திரும்பவும் பணி.இடைப்பட்ட நேரத்தில் படித்து ICWA,AIME,BANK PO,CIVIL SERVICE போன்ற கடினமான படிப்பு மற்றும் தேர்வு எழுதி தேர்வான நண்பர்கள் பலர் உள்ளனர். அதேபோல் வருவாய் துறையில் இருந்து கொண்டே I.A.S தேர்வானவர்களும் உண்டு.இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்
When going gets tough ,the tough gets going என்பார்கள்.
இவர்களிடம் கண்ட சில விடயங்களை கீழே தொகுத்து கூறுகிறேன்.
முதலில் நாம் எழுதப்போகும் தேர்வு பற்றி முழு விபரம், அதற்கு தேவையான சரியான புத்தகங்கள் மற்றும் நோட்ஸ் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுதல்.
இரண்டாவது ஒவ்வொருவருக்கும் சில நிறைகளும்,குறைகளும் உண்டு. நம்மிடமுள்ள குறையை குறைக்க என்ன வழி என யோசித்தல்.
எந்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படிக்கும் நேரத்தில் ஊன்றி படித்தல்.Smart study என கூறுவார்கள். இது நபருக்கு நபர் வேறுபடும்.நமக்கு நாமே ஒரு செயல் திட்டம் வைத்துக்கொள்ளுதல்.
தற்போது செய்யும் வேலை 8 மணி நேரம் என்றால் இதில் காலையில் 5 முதல் 8 வரை பின் பயணம் செய்யும் போது செய்தித்தாள் கட்டிங் போன்ற வற்றை படிக்கலாம்.மதிய வேலையில் ஒரு மணிநேரம், பின் இரவில் 2 மணி நேரம் என வேலை நாட்களில் படிக்கலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வரை படிக்க இயலும்.
வருவாய் துறையில் VAO போன்ற பணியில் உங்களுக்கு தனி அலுவலம் இருக்கும் எனவே வாரத்தில் 7 நாட்களும் படிக்கலாம். எனவே அரசுத்துறையில் வேலை அதிகம் இல்லாத பணி இடங்களில் கேட்டு செல்லுதல்.
உங்கள் குடும்பத்தில் பணப்பிரச்சனை அதிகம் இல்லையெனில் விடுப்பு எடுத்து படிப்பது.
எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்கள் தங்களின் Bank PO வேலையை விட்டு விட்டு (Resigned) படித்து ஐ.ஏ.எஸ் ஆனார்கள்.
கடைசியாக கூறுவது கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு,focus உடன் |"அடைந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி "என இருந்தால் வெற்றி நிச்சயம்.
வாழ்த்துக்களுடன் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
முழு நேர வேலை செய்து கொண்டு படிப்பது…இந்த கேள்வியை போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒருவர் (யாரு கேட்ப ..நம்ம மாப்பிள தான் இந்த மாதிரி கேள்வி கேட்பாரு )என்னிடம் கேட்டதே.
இதற்கு முன் இந்திய விமான படை பற்றி ஒரு சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்.
விமான படையில் fighter squadron ல் பணி தொடங்கும் நேரம் காலை நான்கு மணி இது மதியம் 1மணி வரை தொடரும். பின் மாலையில் night flying 6.30 க்கு தொடங்கி இரவு 1மணி வரை தொடரும்.
அடுத்த நாள் மதியம் 1மணிக்கு திரும்பவும் பணி.இடைப்பட்ட நேரத்தில் படித்து ICWA,AIME,BANK PO,CIVIL SERVICE போன்ற கடினமான படிப்பு மற்றும் தேர்வு எழுதி தேர்வான நண்பர்கள் பலர் உள்ளனர். அதேபோல் வருவாய் துறையில் இருந்து கொண்டே I.A.S தேர்வானவர்களும் உண்டு.இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்
When going gets tough ,the tough gets going என்பார்கள்.
இவர்களிடம் கண்ட சில விடயங்களை கீழே தொகுத்து கூறுகிறேன்.
முதலில் நாம் எழுதப்போகும் தேர்வு பற்றி முழு விபரம், அதற்கு தேவையான சரியான புத்தகங்கள் மற்றும் நோட்ஸ் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுதல்.
இரண்டாவது ஒவ்வொருவருக்கும் சில நிறைகளும்,குறைகளும் உண்டு. நம்மிடமுள்ள குறையை குறைக்க என்ன வழி என யோசித்தல்.
எந்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படிக்கும் நேரத்தில் ஊன்றி படித்தல்.Smart study என கூறுவார்கள். இது நபருக்கு நபர் வேறுபடும்.நமக்கு நாமே ஒரு செயல் திட்டம் வைத்துக்கொள்ளுதல்.
தற்போது செய்யும் வேலை 8 மணி நேரம் என்றால் இதில் காலையில் 5 முதல் 8 வரை பின் பயணம் செய்யும் போது செய்தித்தாள் கட்டிங் போன்ற வற்றை படிக்கலாம்.மதிய வேலையில் ஒரு மணிநேரம், பின் இரவில் 2 மணி நேரம் என வேலை நாட்களில் படிக்கலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வரை படிக்க இயலும்.
வருவாய் துறையில் VAO போன்ற பணியில் உங்களுக்கு தனி அலுவலம் இருக்கும் எனவே வாரத்தில் 7 நாட்களும் படிக்கலாம். எனவே அரசுத்துறையில் வேலை அதிகம் இல்லாத பணி இடங்களில் கேட்டு செல்லுதல்.
உங்கள் குடும்பத்தில் பணப்பிரச்சனை அதிகம் இல்லையெனில் விடுப்பு எடுத்து படிப்பது.
எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்கள் தங்களின் Bank PO வேலையை விட்டு விட்டு (Resigned) படித்து ஐ.ஏ.எஸ் ஆனார்கள்.
கடைசியாக கூறுவது கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டு,focus உடன் |"அடைந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி "என இருந்தால் வெற்றி நிச்சயம்.
வாழ்த்துக்களுடன் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக