பெண் சுதந்திரம் பற்றி தங்௧ௗ் கருத்து என்ன?
விவரிப்பதற்கு முன் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பதிவிட விரும்புகிறேன்.
Independent ஆக வாழ்வது என்பது உண்மையில் முதிர்ச்சி இல்லை. நிறைய பெண்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ரொம்ப independent ஆன பொண்ணு, எனக்கு பிடித்ததை செய்வேன். எங்க வேணா போவேன். யாருக்கும் அடங்க மாட்டேன்.
யார் சொல்லியும் நான் கேட்க வேண்டியது இல்லை. நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் நீங்க யாரு என்னை கேட்பதற்கு?
போயேன் பெருசு, என்று மரியாதை குறைச்சலாக அவர்களின் வயதிற்கு கூட மரியாதை செலுத்தாமல் பேசுவது, இது தான் independent life என்று தவறான எண்ணம் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Interdependent என்பது தான் உண்மையில் முதிர்ச்சி என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்கிறோம். ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணின் அன்பையும், அவளின் அரவணைப்பையும் சார்ந்து வாழ்கிறானோ அதே போன்று ஒரு பெண்ணும் ஒரு ஆணின் வலிமையையும், அவனிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பையும் சார்ந்து தான் வாழ முடியும்.
இல்லை ஆண்கள் தேவை இல்லை என்று பெண்களோ, பெண்கள் தேவை இல்லை என்று ஆண்களோ கூற முடியாது.
பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் என்று பேசி பெண்களின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன்.
என் நண்பன் ஒருவனை ஒரு பெண் காதலித்தாள். அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்துவிட்டாள், அது அவனுக்கு தெரிய வந்ததும் அவன் விலக ஆரம்பித்தான். ஒரு நாள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி வரவைத்து அவன் மீது acid ஊற்றி விட்டாள்.
இவன் புகார் செய்தால் என்ன நடக்கும்? என் ரூம்க்கு வந்தான், ரேப் பண்ண பார்த்தான் நான் என் தற்காப்பிற்காக ஊற்றிவிட்டேன் என்பாள்.
இதுவே ஒரு பெண்ணிற்கு நடந்திருக்க வேண்டும். ஒட்டு மொத்த மீடியாவும் அந்த பையன் குடும்பத்தை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.
பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை ஆண்களுக்கு எதிராக பயன்படுத்துவது உண்மையில் பெண் சுதந்திரம் இல்லை.
ஒரு ஆண் செய்யும் அத்தனையையும் என்னால் செய்து காட்ட முடியும் என்று போட்டி போடுவது இல்லை பெண் சுதந்திரம். உங்கள் தனித்துவத்தை உணர்வதே பெண்ணியம்.
ஒரு குடும்பத்தை போஷிப்பதும், குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் ஒரு ஆணின் கடமை என்றால், குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பதும் கணவனுக்கு சரியான ஆலோசனையை வழங்குவதும் பெண்ணின் கடமை.
நம்ம என்ன தெரியுமா நினைச்சிட்டோம். நான் மட்டும் அடிப்படியில் வேலை செய்ய வேண்டும் அவன் மட்டும் வெளியே சுற்றலாமா என்று நினைத்து விட்டோம்.
உண்மையில் சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்கும் பெரிய பொறுப்பு பெண்களின் கையில் குடும்பத்தை பேணுதல் என்னும் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. நாம் அது எனக்கு வேண்டாம் என்று நினைத்ததன் விளைவே இன்றைய பெருவாரியான பிரச்சனைகளுக்குக் காரணம் என்பேன்.
அப்படியானால் பெண்கள் வேலைக்கு செல்வது தவறு, மீண்டும் அடுப்படிக்கு செல்லுங்கள் என்று கூற வருகிறீர்களா என்று கேட்காதீர்கள்.
கண்டிப்பா இல்லை. நாம் நம்முடைய ஸ்தானத்தில் நிற்க வேண்டும் என்பேன். இன்றைக்கு இப்படி பெண்கள் கொதித்தெழுந்ததற்கு காரணமே ஆண்கள் தான் என்பேன்.
நீங்க எங்க தெரியுமா தப்பு பண்ணுனீங்க?
ஆதி காலத்தில் ஆண் வெளியே சென்று வேலை செய்து குடும்பத்தினரின் தேவைகளை சந்திப்பான். பெண்களும் குழந்தைகளை கவனிப்பார்கள். வீட்டை நிர்வகிப்பார்கள். ஆண் பெண் பேதமின்றி வாழ்க்கை அழகாக சென்றது.
அடுத்து வந்த தலைமுறை என்ன பண்ணிட்டாங்க, ஆண்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அங்க தான் ப்ராப்ளம் ஆரம்பித்தது. அலுவலகத்தில் சக ஆண்கள் முன்னிலையில் தன் ஆண்மையை நிரூபிக்கின்றேன் என்ற பெயரில், என் பொண்டாட்டியை எல்லாம் என் கைக்குள்ள வச்சிருக்கேன் என்ற ஒரு தவறான வழிமுறையை கையில் எடுத்து, பெண்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இதை அனுபவித்த பெண்கள், தங்களை அடக்குவதை பொறுக்கக் கூடாமல் படிக்க ஆரம்பித்தார்கள் வெளி உலகிற்கு வந்தார்கள். இன்னைக்கு அடிச்சி தூக்கி peak-ல போய் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களே!
நாம் உயரத்திற்கு வந்து விட்டோம் என்பதால், ஆண்களை குறைவாக மதிப்பீடு செயவதோ, அல்லது அவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செய்யாமல் விடுவதோ, அவர்களுக்கு தேவைப்படும் அன்பு மற்றும் அரவணைப்பை கொடுக்க மறுப்பதோ உண்மையில் பெண்ணியம் இல்லை.
இன்னைக்கு இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆண்கள் ஒரு காலத்தில் நம்மை குறைத்து மதிப்பீடு செய்தார்கள் என்பதற்காக நாம் ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. அதே தவறை நாம் செய்யவே கூடாது.
நிறைய படித்து விட்டோம், பட்டங்கள் வாங்கி விட்டோம் இனி நீ யாரு? நான் ஏன் உனக்கு கீழ்படிய வேண்டும்? உன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று பேசுவது பெண்ணியமே இல்லை.
20 வயசுல இருந்து குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்ச அவனை உட்கார வைத்து எவ்வளவு நாள் இப்படி ஓடிகிட்டே இருப்ப?. ஒரு 6 மாதம் ரெஸ்ட் எடு, உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க அப்புறம் வேலைக்கு போ என்று சொன்னால் அதை இன்றைய நிலையில் சரியான பெண்ணியன் என்பேன்.
நமக்கு மகப்பேறு விடுமுறையாவது கிடைக்கிறது. ஆண்கள் 20ல் ஆரம்பிக்கும் ஓட்டம் 80 வரையில் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இடையில் யாரும் ஒரு 6 மாதம் உட்கார வச்சி சோறு போட மாட்டாங்க. ஒரு மனைவியாக நீங்கள் அதை செய்தால் அது சரியான பெண்ணியம் தான்.
அந்த ஒரு பிரேக் அவனுக்கு தேவை என்பதை அறிந்து ஒரு ஆணின் தேவையை சந்திப்பதில் உடன் நின்று பங்களிப்பது பெண்ணியம்.
நான் சம்பாதிக்கிறேன் உன்கிட்ட ஏன் சொல்லனும்? என் இஷ்டத்துக்கு செலவு செய்வேன் என்பது பெண்ணியம் இல்லை.
மாறாக, ஒரு காஃபி போட்டு கொடுத்து இரண்டு பேரும் உட்கார்ந்து வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு? மிச்சம் எவ்வளவு இருக்கு? சரி அப்ப இதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவது பெண்ணியம்.
உரிமைகள் இருக்கிறது என்பதற்காக உடல் உறுப்புகளை காண்பிப்பது இல்லை பெண்ணியம், நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தான் சரியான பெண்ணியம்.
பெண்ணியம். ஆயிரம் வலிகளை சுமந்தாலும், முகத்தில் புன்னகையை வைத்திருப்பது பெண்ணியம்.
சட்டம் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக ஆண்கள் acid ஊற்றுவதோ, அபாண்டமான குற்ற சாட்டுகளை சுமத்துவதோ இல்லை பெண்ணியம். தன் மகனை சான்றோனாக வளர்ப்பது பெண்ணியம்.
நான் குழந்தை குட்டிகளை பெற்று வளர்த்து, இவர்களுக்கு சோறாக்கி போடுவதற்காகவா படைக்கப்பட்டிருக்கிறேன் என்று தவறாக நினைத்து நாம் நம் ஸ்தானத்தை, குடும்பத்தை நிர்வாகி என்ற பெரிய ஒரு ஸ்தானத்தை ஒரு அழகான அந்தஸ்தை டியூசன் எடுப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், வீட்டில் வேலை செய்பவர்களுக்கும், இஸ்திரி செய்யும் அண்ணாகிற்கும், அதில் அதிக பங்கை டெலிவரி பாய்ஸ்க்கும் அட அது தாங்க நம்ம ஸ்விகி அண்ணாங்களுக்கும் பங்கு வைத்து பிரித்து கொடுத்துவிட்டோம். குடும்பமும் பிரிந்து விட்டது.
அம்மாவுக்கு மார்னிங் ஷிப்ட், அப்பாவிற்கு நைட் ஷிப்ட், ஒரே ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கும் உடன் பிறப்பாக ஒரு மொபைல் போனையும் கொடுத்துவிட்டு, எதையோ நோக்கி ஒடுகிறோம்.
ஓடிக் கொண்டே இருக்கிறோம்.....
இனியும் ஓடுவோம்.
சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் பெருகிக் கொண்டே செல்லும்....
வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை அடமானம் வைத்து விட்டு, மாதர் சங்கம் அமைத்து தெருவில் போராடும் நேரத்தில் நம் வீட்டில் குழந்தை வீடியோவில் பார்க்க கூடாத ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு அரக்கனை வளர விட்டுக் கொண்டிருக்கிறோம்.
மறுபடியும் சமூகம் ஒரு சீரான நிலைக்கு வர வேண்டும் என்றால், இருபாலரும் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்தி, ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து, ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, ஒருவரையொருவர் மகிழ்வித்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டுமே தவிர, தனித்து நின்று எங்களுக்கு எங்களை பார்த்துக் கொள்ள தெரியும் நீ உன் வேலையை பாரு என்று வீண் வம்புக்கும் வீராப்புக்கும் தீனி போடும் வகையில் எதிரணியில் நின்று செயல்படுவது பெண்ணியமும் இல்லை அது சரியான முதிர்ச்சியும் இல்லை.
உங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வியை கொண்டு அறியாமை இருளில் இருப்பவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதும், பணியில் கிடைத்த அதிகாரத்தை அறவழியில் பயன்படுத்துவதும், உங்கள் பணத்தை உங்கள் பெற்றோர் அல்லது துணையுடன் இணைந்து சரியான ஒன்றில் முதலீடு செய்வதும், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை உங்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் செலவழிப்பதும், சமுகத்தில் அனைவரிடமும் முக்கியமாக ஆண்களிடம் அன்பும் மரியாதையும் காட்டுவதும், கடமைகளை சரிவர செய்து உங்கள் ஸ்தானத்தில் நிமிர்ந்து நிற்பதுமே பெண்ணியம் என்பேன்.
விவரிப்பதற்கு முன் சுதந்திரம் என்றால் என்ன என்பதை பதிவிட விரும்புகிறேன்.
Independent ஆக வாழ்வது என்பது உண்மையில் முதிர்ச்சி இல்லை. நிறைய பெண்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ரொம்ப independent ஆன பொண்ணு, எனக்கு பிடித்ததை செய்வேன். எங்க வேணா போவேன். யாருக்கும் அடங்க மாட்டேன்.
யார் சொல்லியும் நான் கேட்க வேண்டியது இல்லை. நான் என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் நீங்க யாரு என்னை கேட்பதற்கு?
போயேன் பெருசு, என்று மரியாதை குறைச்சலாக அவர்களின் வயதிற்கு கூட மரியாதை செலுத்தாமல் பேசுவது, இது தான் independent life என்று தவறான எண்ணம் இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Interdependent என்பது தான் உண்மையில் முதிர்ச்சி என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்கிறோம். ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணின் அன்பையும், அவளின் அரவணைப்பையும் சார்ந்து வாழ்கிறானோ அதே போன்று ஒரு பெண்ணும் ஒரு ஆணின் வலிமையையும், அவனிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பையும் சார்ந்து தான் வாழ முடியும்.
இல்லை ஆண்கள் தேவை இல்லை என்று பெண்களோ, பெண்கள் தேவை இல்லை என்று ஆண்களோ கூற முடியாது.
பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் என்று பேசி பெண்களின் அடாவடித்தனம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன்.
என் நண்பன் ஒருவனை ஒரு பெண் காதலித்தாள். அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்துவிட்டாள், அது அவனுக்கு தெரிய வந்ததும் அவன் விலக ஆரம்பித்தான். ஒரு நாள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி வரவைத்து அவன் மீது acid ஊற்றி விட்டாள்.
இவன் புகார் செய்தால் என்ன நடக்கும்? என் ரூம்க்கு வந்தான், ரேப் பண்ண பார்த்தான் நான் என் தற்காப்பிற்காக ஊற்றிவிட்டேன் என்பாள்.
இதுவே ஒரு பெண்ணிற்கு நடந்திருக்க வேண்டும். ஒட்டு மொத்த மீடியாவும் அந்த பையன் குடும்பத்தை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.
பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை ஆண்களுக்கு எதிராக பயன்படுத்துவது உண்மையில் பெண் சுதந்திரம் இல்லை.
ஒரு ஆண் செய்யும் அத்தனையையும் என்னால் செய்து காட்ட முடியும் என்று போட்டி போடுவது இல்லை பெண் சுதந்திரம். உங்கள் தனித்துவத்தை உணர்வதே பெண்ணியம்.
ஒரு குடும்பத்தை போஷிப்பதும், குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் ஒரு ஆணின் கடமை என்றால், குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதும் அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பதும் கணவனுக்கு சரியான ஆலோசனையை வழங்குவதும் பெண்ணின் கடமை.
நம்ம என்ன தெரியுமா நினைச்சிட்டோம். நான் மட்டும் அடிப்படியில் வேலை செய்ய வேண்டும் அவன் மட்டும் வெளியே சுற்றலாமா என்று நினைத்து விட்டோம்.
உண்மையில் சமுதாயத்தை நல்ல முறையில் கட்டமைக்கும் பெரிய பொறுப்பு பெண்களின் கையில் குடும்பத்தை பேணுதல் என்னும் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. நாம் அது எனக்கு வேண்டாம் என்று நினைத்ததன் விளைவே இன்றைய பெருவாரியான பிரச்சனைகளுக்குக் காரணம் என்பேன்.
அப்படியானால் பெண்கள் வேலைக்கு செல்வது தவறு, மீண்டும் அடுப்படிக்கு செல்லுங்கள் என்று கூற வருகிறீர்களா என்று கேட்காதீர்கள்.
கண்டிப்பா இல்லை. நாம் நம்முடைய ஸ்தானத்தில் நிற்க வேண்டும் என்பேன். இன்றைக்கு இப்படி பெண்கள் கொதித்தெழுந்ததற்கு காரணமே ஆண்கள் தான் என்பேன்.
நீங்க எங்க தெரியுமா தப்பு பண்ணுனீங்க?
ஆதி காலத்தில் ஆண் வெளியே சென்று வேலை செய்து குடும்பத்தினரின் தேவைகளை சந்திப்பான். பெண்களும் குழந்தைகளை கவனிப்பார்கள். வீட்டை நிர்வகிப்பார்கள். ஆண் பெண் பேதமின்றி வாழ்க்கை அழகாக சென்றது.
அடுத்து வந்த தலைமுறை என்ன பண்ணிட்டாங்க, ஆண்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அங்க தான் ப்ராப்ளம் ஆரம்பித்தது. அலுவலகத்தில் சக ஆண்கள் முன்னிலையில் தன் ஆண்மையை நிரூபிக்கின்றேன் என்ற பெயரில், என் பொண்டாட்டியை எல்லாம் என் கைக்குள்ள வச்சிருக்கேன் என்ற ஒரு தவறான வழிமுறையை கையில் எடுத்து, பெண்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இதை அனுபவித்த பெண்கள், தங்களை அடக்குவதை பொறுக்கக் கூடாமல் படிக்க ஆரம்பித்தார்கள் வெளி உலகிற்கு வந்தார்கள். இன்னைக்கு அடிச்சி தூக்கி peak-ல போய் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களே!
நாம் உயரத்திற்கு வந்து விட்டோம் என்பதால், ஆண்களை குறைவாக மதிப்பீடு செயவதோ, அல்லது அவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செய்யாமல் விடுவதோ, அவர்களுக்கு தேவைப்படும் அன்பு மற்றும் அரவணைப்பை கொடுக்க மறுப்பதோ உண்மையில் பெண்ணியம் இல்லை.
இன்னைக்கு இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆண்கள் ஒரு காலத்தில் நம்மை குறைத்து மதிப்பீடு செய்தார்கள் என்பதற்காக நாம் ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. அதே தவறை நாம் செய்யவே கூடாது.
நிறைய படித்து விட்டோம், பட்டங்கள் வாங்கி விட்டோம் இனி நீ யாரு? நான் ஏன் உனக்கு கீழ்படிய வேண்டும்? உன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று பேசுவது பெண்ணியமே இல்லை.
20 வயசுல இருந்து குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்ச அவனை உட்கார வைத்து எவ்வளவு நாள் இப்படி ஓடிகிட்டே இருப்ப?. ஒரு 6 மாதம் ரெஸ்ட் எடு, உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க அப்புறம் வேலைக்கு போ என்று சொன்னால் அதை இன்றைய நிலையில் சரியான பெண்ணியன் என்பேன்.
நமக்கு மகப்பேறு விடுமுறையாவது கிடைக்கிறது. ஆண்கள் 20ல் ஆரம்பிக்கும் ஓட்டம் 80 வரையில் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இடையில் யாரும் ஒரு 6 மாதம் உட்கார வச்சி சோறு போட மாட்டாங்க. ஒரு மனைவியாக நீங்கள் அதை செய்தால் அது சரியான பெண்ணியம் தான்.
அந்த ஒரு பிரேக் அவனுக்கு தேவை என்பதை அறிந்து ஒரு ஆணின் தேவையை சந்திப்பதில் உடன் நின்று பங்களிப்பது பெண்ணியம்.
நான் சம்பாதிக்கிறேன் உன்கிட்ட ஏன் சொல்லனும்? என் இஷ்டத்துக்கு செலவு செய்வேன் என்பது பெண்ணியம் இல்லை.
மாறாக, ஒரு காஃபி போட்டு கொடுத்து இரண்டு பேரும் உட்கார்ந்து வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு? மிச்சம் எவ்வளவு இருக்கு? சரி அப்ப இதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவது பெண்ணியம்.
உரிமைகள் இருக்கிறது என்பதற்காக உடல் உறுப்புகளை காண்பிப்பது இல்லை பெண்ணியம், நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தான் சரியான பெண்ணியம்.
பெண்ணியம். ஆயிரம் வலிகளை சுமந்தாலும், முகத்தில் புன்னகையை வைத்திருப்பது பெண்ணியம்.
சட்டம் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக ஆண்கள் acid ஊற்றுவதோ, அபாண்டமான குற்ற சாட்டுகளை சுமத்துவதோ இல்லை பெண்ணியம். தன் மகனை சான்றோனாக வளர்ப்பது பெண்ணியம்.
நான் குழந்தை குட்டிகளை பெற்று வளர்த்து, இவர்களுக்கு சோறாக்கி போடுவதற்காகவா படைக்கப்பட்டிருக்கிறேன் என்று தவறாக நினைத்து நாம் நம் ஸ்தானத்தை, குடும்பத்தை நிர்வாகி என்ற பெரிய ஒரு ஸ்தானத்தை ஒரு அழகான அந்தஸ்தை டியூசன் எடுப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், வீட்டில் வேலை செய்பவர்களுக்கும், இஸ்திரி செய்யும் அண்ணாகிற்கும், அதில் அதிக பங்கை டெலிவரி பாய்ஸ்க்கும் அட அது தாங்க நம்ம ஸ்விகி அண்ணாங்களுக்கும் பங்கு வைத்து பிரித்து கொடுத்துவிட்டோம். குடும்பமும் பிரிந்து விட்டது.
அம்மாவுக்கு மார்னிங் ஷிப்ட், அப்பாவிற்கு நைட் ஷிப்ட், ஒரே ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கும் உடன் பிறப்பாக ஒரு மொபைல் போனையும் கொடுத்துவிட்டு, எதையோ நோக்கி ஒடுகிறோம்.
ஓடிக் கொண்டே இருக்கிறோம்.....
இனியும் ஓடுவோம்.
சமுதாயத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் பெருகிக் கொண்டே செல்லும்....
வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பை அடமானம் வைத்து விட்டு, மாதர் சங்கம் அமைத்து தெருவில் போராடும் நேரத்தில் நம் வீட்டில் குழந்தை வீடியோவில் பார்க்க கூடாத ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு அரக்கனை வளர விட்டுக் கொண்டிருக்கிறோம்.
மறுபடியும் சமூகம் ஒரு சீரான நிலைக்கு வர வேண்டும் என்றால், இருபாலரும் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்தி, ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து, ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, ஒருவரையொருவர் மகிழ்வித்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டுமே தவிர, தனித்து நின்று எங்களுக்கு எங்களை பார்த்துக் கொள்ள தெரியும் நீ உன் வேலையை பாரு என்று வீண் வம்புக்கும் வீராப்புக்கும் தீனி போடும் வகையில் எதிரணியில் நின்று செயல்படுவது பெண்ணியமும் இல்லை அது சரியான முதிர்ச்சியும் இல்லை.
உங்களுக்கு கிடைத்திருக்கும் கல்வியை கொண்டு அறியாமை இருளில் இருப்பவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதும், பணியில் கிடைத்த அதிகாரத்தை அறவழியில் பயன்படுத்துவதும், உங்கள் பணத்தை உங்கள் பெற்றோர் அல்லது துணையுடன் இணைந்து சரியான ஒன்றில் முதலீடு செய்வதும், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை உங்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் செலவழிப்பதும், சமுகத்தில் அனைவரிடமும் முக்கியமாக ஆண்களிடம் அன்பும் மரியாதையும் காட்டுவதும், கடமைகளை சரிவர செய்து உங்கள் ஸ்தானத்தில் நிமிர்ந்து நிற்பதுமே பெண்ணியம் என்பேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக