செவ்வாய், 24 டிசம்பர், 2019

குழந்தைகள் அம்மா அப்பாவை அன்பினால் பெயர் சொல்லி அழைக்கலாமா?

என் அம்மாவை நான் ஒருபோதும் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது.

அம்மா என்று அழைப்பது பெரும்பாலும் இல்லை.

நானும் அவ்வாறு முயற்சித்து பார்த்துள்ளேன், என்னால் அப்படி அழைக்க இயலவில்லை.

அதை பார்த்து, என்னுடைய மகனும் என்னை பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டேன். ஆனாலும் என்னை சிவா என்றே அழைப்பான் ..மாமனார் ,மாமியார், அப்படியெல்லாம் சொல்லி தராதே, பெரியவர்களை மரியாதையாய் தான் பேச வேண்டும் என்றார்கள். ஆனால்  என்னை சிவா என்று  என அழைப்பதைக் கேட்டு பெயர் சொல்லி கூப்பிட பழகி விட்டான். ஏன் என்றால்  என் மனைவி ,என்னை சிறு வயதில் இருந்தே சிவா என்று அழைத்து பழகியாதலால் ..



நான் ஷியாம்  செல்லம் என்றால், சிவா  செல்லம் என்று என்னை  கொஞ்சுவான்.

ஷியாம் ..என் மனைவியை  அம்மா, மம்மி, மம்மா(ஜெர்மன்),மாம் என்று அழைப்பான். அப்போதெல்லாம் விட பெயர் சொல்லி அழைக்கும் போது மழலை மொழியின் கொஞ்சல் சற்றும் அதிகமாக ரசிக்கும் படியாக இருக்கும்.

எனவே அம்மா, அப்பா, உறவுகளை பெயரிட்டு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்தவரை அப்படி அழைக்காமல் நாம் தான் பழக்க வேண்டும். ஒருவேளை வேற்றாருக்குபெயரிட்டு அழைப்பது அவருக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக