வியாழன், 24 ஆகஸ்ட், 2017

என்னங்க இது? காலங்காத்தால அருவாளோட எங்க கெளம்பிட்டீங்க?
சிவகுமாரின்னு ஒருத்தன் இருக்கானே ஃபேஸ்புக்ல. வாட்ஸாப்ப்லே ..அவனத்தான்யா தேடிப் போயிட்டிருக்கேன்.

எதுக்கு அவர் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம்?

பின்னே என்னய்யா? எப்ப பார்த்தாலும் ,நம் சமுதாய சொந்தங்களுக்கு ..வளர்ச்சிக்கு கொண்டுபோறேன் ..சொல்லிட்டு ..வேலைவாய்ப்பு ,தொழில் தொடங்குவதற்கு ,வரலாறு தகவல்கள் ,நம்ம சமுதாயத்தை மேல கொண்டு வரப்பார்க்கிறான் ,கம்பள விருட்சம் அறக்கட்டளையை ஆரம்பித்து இளம் படித்த சொந்தங்களோடு சேர்ந்து மேல கொண்டுவரப்பார்க்கிறான் ..நம் மேற்கு ,கிழக்கு இருக்கிற சொந்தங்களையெல்லாம் சேர்க்க பார்க்கிறான் ...அப்படி விடக்கூடாது இல்ல ...அப்பறம் ஆன்மீகம், காலை வணக்கம், பிறந்த நாள் பதிவு எல்லாம் போடறான். ஆனா, ஜோக்கெல்லாம் நிறையப் போட்டு வெறுப்பேத்தறானே! அதான்யா அவன் மேல எனக்குக் கோவம். இண்ணிக்கு அவன நான் வெட்டாம விடமாட்டேன்.

அவன வெட்டிட்டா எல்லாம் சரியாயிடுமா?

அவன மட்டும் இல்லேய்யா. அவன இந்த மாதிரி ஆக்கின 'மார்க்'னு ஒருத்தன் இருக்கானே! அவன மொதல்ல வெட்டணும்யா......


இப்படி தான் மாப்பிள ....நம்மளேயே சொல்லிக்கிட்டு ...மனசை தேத்திக்கணும் ..வேற வழி (வலி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக