செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

எனக்கு நானே... கேட்டுக்கொண்ட  கேள்வி பதில்கள்......!!!!!!

மனைவியைத் தவிர வேறு யாரிடமாவது "ஐ லவ் யூ" என சொல்லி இருக்கிறீர்களா?
 
சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன். ‘திருமணத்திற்கு முன்’ என்று முன்னொட்டாகச் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்....மனைவி என்ற சொல் என்னை பொருத்தவரையில் காற்றில் கலந்த உயிர் மூச்சு ....

Any proposal after marriage?
 
ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள்.துணை யார் என்று இதுநாள் முடிய பார்க்கவில்லை...
நண்பர்களுக்கு பணம் தந்து திரும்பக்கிடைக்காமல் போனதுண்டா? அந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்/செய்தீர்கள்?
அதை ஏன் கேட்கிறீர்கள்? நிறைய முறை. பிரச்சினை என்னவென்றால் நண்பர்களிடம்  வாங்கித் தருவேன். திரும்பி வரவில்லையென்றால் வரவேற்பறையில் அமர்ந்து ‘அப்போ அவ்வளவு வாங்கிக் கொடுத்தான். இப்போ இவ்வளவு வாங்கிக் கொடுத்தான்’ என்று சொல்லிக் காட்டுவார்கள் . யாரிடமும் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டதில்லை. இப்பொழுதெல்லாம் யாராவது கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லிவிடுகிறேன். இதனால் என்னிடம் தொடர்பையே கத்தரித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 
It might be the question u have faced/answered n number of times. But I think there is no harm in asking it again, What is the 'trigger point ' for infinite number social activities that u r doing today?
 
அரசு மருத்துவமனைகளின் உள்நோயாளிகள் பிரிவுகளிலும், பெருமருத்துவமனைகளில் ஐசியூக்களுக்கு முன்பாகவும் நிற்கும் போது நம்மையும் மீறிய ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். எவ்வளவு தைரியமான மனிதராக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும் போது வருகிற பதற்றமும் நடுக்கமும் கொடூரமானது. மருத்துவமனைகளில் இருக்கும் போதெல்லாம் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி என்னவோ இருக்கிறது என்று தோன்றியிருக்கிறது. அதுதான் காரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். துல்லியமாக ‘இதுதான்’ என்று சொல்லத் தெரியவில்லை.
ஓரே பாடலை திரும்பத்திரும்ப கேட்பது, ஒரு புத்தகத்தை நெக்குருகி பலமுறை வாசிப்பது, சுயம் மறந்து பல மணி நேரங்கள் சதுரங்கம் ஆடுவது. இப்படி ஏதேனும் பித்த நிலை அனுபவம்,  ஆசை உண்டா?
வாழ்க்கையில் இயல்பாக இருந்தாலே அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. எதற்கு பித்த நிலை? அளவுதான் அழகு.விடுமுறை தினம் என்றால் பயணங்களை மேற்கொள்கிறேன் ..பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கிறேன் ....அடடா..டா ..இந்தமனிதர்களையெல்லாம் பார்க்கமுடியாமல் இருந்துஇருக்குறேமோ...ஆச்சரியப்பட்டுஇருக்கிறேன் ...பயணங்கள் தொடரும் ...
கஷ்டமான சூழ்நிலைகளில்தனிமையை எப்படி உணர்வீர்கள் ?

2013 பிறகு எதிர்கொண்ட சூழ்நிலைகளில் எனக்கு பிடித்த ஷ்யாமின் பிறந்த குழந்தையாக(19-09-2008 )இருந்தது முதல் நான் எடுத்துவைத்த புகைப்படங்கள் தான் ..மனநிறைவு. என் மனநிறைவுடன் ,அதிக மனவலிமையுடன் எதிர்கொண்டேன் ...போக ..போக ..எந்த சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ளப்பக்குவப்பட்டுவிட்டேன்...வாழ்க்கையை அழகாக புன்சிரிப்புடன் வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறேன் ..
கோவையில் இருந்து உடுமலை பேருந்தில் பயணத்தின் போது சகபயணி பேசுவீர்களா ?
.
இந்தவாரம் கோவையில்  இருந்து வரும் போது அருகில் ஒரு ஆந்திரா   பையன் அமர்ந்திருந்தான். தனது அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘நீ எந்த மாநிலம்’ என்றேன். ஆந்திரா ’ என்றான். புதிய மனிதர்களிடம் பேசும் போது நம் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு சில கணங்கள் எதையும் செய்யாமல் ஓர் இடைவெளியைக் கொடுத்தால் நம்முடைய அடுத்த கேள்விக்குத் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். உடனடியாக தாம் முன்பு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தால் நம்மிடம் பேச்சைத் தொடர விருப்பமில்லை என்று ஒரு கணக்கு. யாராக இருந்தாலும் தயங்காமல் முதல் கேள்வியைக் கேட்டுவிடுவேன். அவன் இடைவெளி கொடுத்தான். ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்வதிலிருந்து தனது காதலியைப் பார்க்க அவன் சென்னை சென்றுவிட்டுத் திரும்புவது வரை நிறையப் பேசினோம்.
உங்கள் பழைய கட்டுரைகளில் பிறரை பற்றி குறை கூறுவதாக நிறைய இருக்கும், கிட்டத்தட்ட டைரியில் குமுறுவது போல, இப்பொழுது அந்த மாதிரி கட்டுரைகள் வருவதில்லை. அதை நீங்கள் உணர்கிறீர்களா.
 
திருந்திவிட்டேனா?
கடைசியாக மகனுடன் பார்த்த திரைப்படம் ..?

எனக்கும்  என் ஷ்யாமுக்கும் பிடித்த திரையரங்கம் ...Brookfield ....தான் ...

காக்க முட்டை ...எந்த தொந்தரவும் இல்லாமல் என்னுடன் அமர்ந்து கேள்விகேட்டு கொண்டு ..நான் பதில் அளித்துக்கொண்டு பார்த்த படம் ..மனநிறைவான திரைப்படம் ..ஷ்யாமை முதன் முதலாக தனியாக அழைத்துச்சென்று பார்த்த படம் விஜயின் ..துப்பாக்கி படம் .. ..படத்தை பார்த்ததைவிட ஷியாமைதான் அதிகம் பார்த்து கொண்டு இருந்தேன் .ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்ததுபோன்று திருப்தி ..ஆனால் முன்னால் உட்கார்ந்து பார்த்தவரின் பின்சீட்டில் உதைத்த உதை அவரின் முதுகு வழித்து இருக்கும் ...திரும்பி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை ..புன்சிரிப்புடன் படம் பார்த்துவிட்டு எழுந்துஇருக்கும் போது ...நீங்கள் கொடுத்துவைத்தவர் ..ஷ்யாமின் தலையை கோதிவிட்டு,அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்தங்கம் புன்சிரிப்புடன் சென்றார் ..
எழுத்தாளர் சிவா வா ? அறக்கட்டளை சிவா வா ?.உங்களின் இதயம் ,மூச்சு காற்று ..எது ?
 
  அறக்கட்டளை தான் Trust ...தான் ....ஆனால் எழுத்துதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை.
தலைமுடி வளரனும்னு ஏதாவது ட்ரை பண்ணிருக்கீங்களா?
 
கரடி ரத்தத்தைத் தேய்த்தால் முடி வளரும் என்றார்கள். கொசு ரத்தம் என்றாலாவது முயற்சித்துப் பார்த்திருப்பேன்.
 
இந்த மாதிரி கேள்விகள் கேட்டு...நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொண்டால் ..நாளை எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் பக்குவப்பட்டு பதில் அளிப்பதற்கு வாழ்க்கையில் ஏதுவாக இருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக