உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் நான்காம் கட்ட நேர்காணல் கடந்த 23.08.2015 ஞாயிறன்று தேனியில் நீதியரசர் தங்கராசு அவர்களிடம் நடத்தப்பட்டது.
இவர் தளி எத்தலப்பனைப் பற்றி முனைவர் முத்தையா அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் செய்வதாக அறிந்தோம்.
அதன்படி உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் சிவகுமார் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நீதியரசர் எத்தலப்ப மன்னர் குறித்தும் அவரின் வீர வரலாறு குறித்தான பதிவுகளை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி எத்தலப்பன் வரலாற்றினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையில் இவ்வாறுதான் அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் ஒரு ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட காரணத்தினாலேயே அவரது வரலாறு முற்றும் முழுதுமாகதிட்டமிட்டு மறைக்கப்பட்டதைத் தெளிவுபடுத்தினார். எத்தலபபன் பற்றிய விரிவான தகவல்களை தாம் வெளிக்கொணருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 20.09.2015 உடுமலை வரலாற்றுத் திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ளவும் உறுதி அளித்தார்.
பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்
இவர் தளி எத்தலப்பனைப் பற்றி முனைவர் முத்தையா அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் செய்வதாக அறிந்தோம்.
அதன்படி உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் சிவகுமார் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நீதியரசர் எத்தலப்ப மன்னர் குறித்தும் அவரின் வீர வரலாறு குறித்தான பதிவுகளை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி எத்தலப்பன் வரலாற்றினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையில் இவ்வாறுதான் அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் ஒரு ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட காரணத்தினாலேயே அவரது வரலாறு முற்றும் முழுதுமாகதிட்டமிட்டு மறைக்கப்பட்டதைத் தெளிவுபடுத்தினார். எத்தலபபன் பற்றிய விரிவான தகவல்களை தாம் வெளிக்கொணருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 20.09.2015 உடுமலை வரலாற்றுத் திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ளவும் உறுதி அளித்தார்.
பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக