திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா (20-08-2017)



வணக்கம் ...

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா (20-08-2017)

இனிதாக எதுலப்ப மன்னனின் ஆசியுடன் தூரல் மழையுடன் ஆரம்பித்து கன மழையுடன் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை சொந்தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ...

தலமையேற்று நடத்திக்கொடுத்த.    மதிப்புமிகு கௌரவ
தலைவர் வழக்கறிஞர் ச .முருகராஜ் அவர்களுக்கும்

ஓராண்டு வளர்ச்சிப்பணிகள் குறித்து விளக்கவுரை வழங்கிய திரு .கார்த்திகேயன் (திருப்பூர் பின்னலாடை )செயலாளருக்கும்

நிதி நிலையை மேம்படுத்த நீதி கொடுத்த திரு .தமிழரசன் ,பொருளாளருக்கும்

சிறப்புடன் பங்குகொண்டு சிந்தனைதூண்டிய நம் சிறப்பு அழைப்பாளர் .சுக்காம்பட்டி ஜமீன் .திரு .ராஜபாண்டியன் -நிலக்கோட்டை
 கிழக்கும் ,மேற்கும் இருக்கும் சொந்தங்கள் நம் இந்த அறக்கட்டளையின் மூலம் இணையவேண்டிய அவசியத்தை அழகாக எடுத்துரைத்த திரு .சேகர் பொம்மையா -கணினி பொறியாளர்
 சொந்தங்களுக்கும்

அடைமழை பாரது ஆதரவுக்கரம் நீட்டி அனைத்துதவியும் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்

பண்பாடு காத்தநமது இந்திய பீரங்கி படை வீரர் சக்திவேல் பயிற்சியின் போது வீர மரணம் அடைந்த படைவீரருக்கும் ,
நம் எதுலப்ப மன்னனின் வீர வரலாற்றை எடுத்துரைத்த பாவலர்பழனிசாமி அவர்களும்
மவுனாஞ்சலி செலுத்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும்

வளர்ச்சிக்கு வித்திடும் வார்த்தைகள் வழங்கிட்ட நமது வழக்கறிஞர் திரு .ச .முருகராஜ்
வழக்கறிஞருக்கும் ,
இன்றைய தலைமுறையினருக்கு நல்ல முன்னேற்ற கருத்துக்களையும் வழங்கிய தளி ஆசிரியர் .திரு .மாரிமுத்து அவர்களுக்கும்
நம் சொந்தம் இந்திய பணித்துறைக்கு முதன்முறையாக தேர்வாகி உள்ள திரு .நந்தகோபால் அவர்களுக்கும் .அவர் கூறிய முன்னேற்ற கருத்துக்கள் ,என்னால் முடிந்த உதவிகளை நம் வரும் தலைமுறைக்கு ஆலோசனைகள் அளிப்பேன் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி .

எந்த கூட்டத்துக்கும் வராத நம் சமுதாய பெண்செல்வங்களும்  கலந்துகொண்டது பெருமையக்குரிய து ..முன்னேற்றத்துக்கான அறிகுறிமுதன் முறையாக ..தனது கன்னிப்பேச்சால் சூளுரைத்து திரு .திருப்பதி தேவராஜன் ,பெரியகோட்டை .திரு .யோகராஜ் ,கோவை சகதிவேல் ,

அவர்களுக்கும் ...

விழாவினை அழகாக சுவாரிஸ்யமாக தனது சிரித்த முகத்துடன் நடத்திய திரு .டிஜிட்டல் போட்டோ கலைஞர் .திரு .ராஜேந்திரன் அவர்களுக்கும் (எப்படி இத்தனை ஆற்றல் மனிதர் தனுக்குள்ளே ஒளித்துவைத்துள்ளார் )
















விழாவிற்கு ..உணவினையும் ,இடத்தையும் சரியாக தேர்வு செய்த திரு .செந்தில்குமார் -கொடிங்கியம் ,
எப்பொழுதும் ,எழுத்திலும் சரி ,பேச்சாற்றலும் ,தன் சரிவெடியாக வெளுத்து வாங்கும் திரு .கார்த்தி .SR அவர்களுக்கும்
என் நன்றிகள் .

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ...சிறிய ஊக்கதொகையை ..முகம் அறிய பெண்செல்வத்துக்கும் .ஒரு மாணவச்செல்வத்துக்கும் அளித்தது ..மிகுந்த மனநிறைவை அளித்தது .இது ஒரு நம் கம்பள இளைய சமுதாயத்தால் மட்டுமே முடிந்தது ..இது ஒரு தனிப்பட்ட ஒருவருடைய முயற்சி கிடையாது ..இந்த பணி இளைஞர்களால் மட்டுமே முடிந்தது ..  
விருட்சத்தின் தலைவன் என்ற முறையில்
விளங்க முடியா காவியத்தின் கதநாயகன் வேடமிட்ட
கலச்சார காவலனின்
மட்டில்லா மகிழ்ச்சிகளையும்
மாசற்றபாராட்டு களையும் 
மனமார வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ..சிவக்குமார் ...தலைவர்... கம்பள விருட்சம் அறக்கட்டளை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக